புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_lcapஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_voting_barஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_lcapஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_voting_barஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
இன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_lcapஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_voting_barஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_lcapஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_voting_barஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
இன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_lcapஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_voting_barஇன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் நட்பு... எதெல்லாம் தப்பு?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 1:13 am

First topic message reminder :

ஒரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை

ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக, கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது.

தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ் பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும்.

உலகில் எத்தனை பேனா நண்பர்கள் இருந் தனர் என்ற புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இ-மெயில் தொழில்நுட்பம் இதைப் பெருமளவு குறைத்திருக்கும். இ-மெயில் என்பது மனிதர்களுக்கு இரண்டு கைகள்போல மாறி விட்டது. 'இது என்னோட போன் நம்பர். ஆனா, இ-மெயில்தான் பெஸ்ட் பிரதர்' என்று சொல்லும் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

எஸ்.எம்.எஸ் என்ற குறுஞ்செய்தித் தொழில்நுட்பம் இ-மெயில் போலத்தான் என்றாலும், சுருக்கமான தகவல்களைத் தொடர்ந்து முன்னும் பின்னும் பகிர்ந்துகொள்ள வசதியானது. இ-மெயிலுக்கு அடுத்து கலக்கலாக வந்த சாட் தொழில்நுட்பம் இன்னும் அற்புதம். ஆன்லைனில் இருக்கும் நண்பனிடம், 'டேய், என்னடா பண்ற?' என்று கேட்க முடிகிறது.

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை மேற்கண்ட பல தொழில்நுட்பக்கூறுகளை ஒன்றாகத் தொகுத்துக் கொடுக்கிறது. இதனால் நட்பு வட்டத்துடன் தொடர்பில் இருக்கவும், புதிய தோழமைகளைக் கண்டறியவும் பெருமளவில் இந்தச் சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன.

பலதரப்பட்ட நட்புகளை நிர்வகிப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ்:

முதலில் இ-மெயில்...

50 சதவிகித இ-மெயில்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. முக்கியமாக, ஆங்கிலத்தில் எழுதும்போது முழு வாக்கியங்களையும் UPPER CASE எழுத்துக்களில் எழுதுவதைத் தவிருங்கள். அது நீங்கள் எழுத்தில் கத்துவது போன்ற உணர்வைக் கொடுக்கலாம். வார்த்தைகளின் தொனியில் கவனமாக இருங்கள். எழுதிய வார்த்தைகளில் கோபமும் எரிச்சலும் உங்களை அறியாமலேயே இருப்பதைக் கண்டறிய டோன்செக் (http://www.tonecheck.com/) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். நினைவிருக்கட்டும்... ஆறாதே இ-மெயிலால் சுட்ட வடு.

வதவதவெனக் கண்ணில் கிடைக்கும் பொன்மொழிகளையும், புகைப்படங்களையும், ஜோக்குகளையும் அனுப்பாதீர்கள். அது உங்களது நேரத்தையும், அவரது நேரத்தையும் சேர்த்துக் காலி செய்யும். அவசியம் தவிர, நண்பர் ஒருவருக்கு ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு இ-மெயில் மட்டுமே அனுப்புங்கள். இதன்மூலம், அவரது இ-மெயில் பெட்டி நிறைந்து வழியாமல், கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நீங்கள் மானாவாரியாக அனுப்பும் இ-மெயில்களால் கடுப்பாகி, உங்கள் இ-மெயில் விலாசத்தையே 'குப்பை' ( Spam ) என நட்பு வட்டம் குறித்து வைக்கக்கூடும். காரணம், அதிகமானவர்கள் அப்படிக் குறித்துவைத்தால், gmail, hotmail போன்ற இ-மெயில் சேவை தொழில்நுட்பங்கள் உங்கள் இ-மெயிலைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடிவிடும் முகாந்தரம் உண்டு.

பல நண்பர்களுக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, எல்லோருடைய விலாசங்களையும் To அல்லது CC (Carbon Copy) பகுதியில் கொடுப்பது விவேகமான செயல் அல்ல. யார் யாருக்கு அவர்கள் உங்களது மெயிலை ஃபார்வர்ட் செய்வார்கள் என்பது தெரியாது. இ-மெயில் விலாசங்களைச் சேகரித்து சகட்டு மேனிக்கு மார்க்கெட்டிங் செய்பவர்கள் கையில் அனைவரின் இ-மெயில் முகவரிகளும் கிடைத்து, நண்பர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம். அதற்குப் பதிலாக, உங்களுடைய இ-மெயில் விலாசத்தையே To பகுதியிலும் போட்டு, BCC (Blind Carbon Copy) பகுதியில் மற்ற அனைவரின் இ-மெயில் விலாசங்களும் கொடுங்கள். இப்படிச் செய்தால், எந்தக் கொம்பனாலும் இ-மெயில் விலாசங்களைத் திருட முடியாது.

இ-மெயில் அனுப்பிய உடனே, போனிலும் அழைத்து 'மச்சான், இ-மெயில் பார்த்தியா? என்ன அனுப்பியிருக்கேன்னா...' என்று ஆரம்பித்து, இ-மெயில் முழுவதையும் வாசித்துக் காட்டுவது அநாவசியம் + அநியாயம்.

இ-மெயிலின் கீழ்ப் பகுதியில் உங்களது மற்ற தொலைபேசி, வீட்டு முகவரி போன்ற தொடர்பு தகவல்களைக் கொடுப்பது சிறந்தது.

சமூக ஊடக வலைதளங்களில் தொடர்புகளை நிர்வகிப்பது எப்படி?

உங்களுக்குத் தெரியாதவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் முன்னால், அவர் வில்லங்கமான ஆசாமியா, அல்லது போலியான profile போன்றவற்றை தீரப் பரிசோதித்து இணையுங்கள். நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைவரும் பார்ப்பது மட்டுமன்றி, அவை நகல் எடுக்கப்பட்டு பல இடங்களில் சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக மிக மிகக் கவனம் தேவை. அதிபர் ஒமாபா இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவதை இந்த உரலியில் பாருங்கள் [You must be registered and logged in to see this link.]

உருப்படி இல்லாத தகவல்களை, புள்ளிவிவரங்களை ஃபேஸ்புக் சுவரில் எழுதிவைப்பதைத் தவிர்க்க முயலுங்கள். நீங்கள் எழுதுவது எல்லாம், உங்கள் நண்பர்களின் பக்கங்களிலும் வரும் என்பதால், இதிலும் கவனம் அவசியம்.

பார்க்கும் தகவல்கள் ஏதாவது சுவாரஸ்யமானதாக இருந்தால், 'Like' செய்வது தவறு அல்ல. ஆனால், பார்க்கும் எல்லாவற்றையும் 'Like' செய்வது நல்லதல்ல.

பின்னூட்டங்கள் இடும்போதும் கவனத்துடன் இடுங்கள். கிண்டலாகவும் கோபமாகவும் பின்னூட்டங்கள் இடுவது தவறு என்று சொல்ல மாட்டேன். நீங்கள் பின்னூட்டம் இடும் குறிப்பிட்ட நண்பருடன் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கலாம். ஆனால், நீங்களும் உங்கள் நண்பரும் தனி அறை யில் இல்லை என்பதை மனதில்கொள்ளுங்கள். அவரது நட்பு வட்டத்தில் உங்களைத் தெரியாத நபர்கள் இருக்கலாம். உங்களது நட்பு வட்டத்தில் அவரைத் தெரியாத நண்பர்கள் இருக்கலாம். உங்களது பின்னூட்டங்கள் உங்களைப்பற்றியோ, அல்லது நண்பரைப்பற்றியோ தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு இதில் லேசாகச் சந்தேகம் இருந்தால் அவருக்கு நேரடியாக பிரத்யேக மெயில் அனுப்புங்கள்.

இணைய நட்பை நிர்வகிப்பது எப்படி?

'முகநக நட்பது நட்பன்று' வள்ளுவம் சொல்கிறது வாழ்க்கை முழுதும் தொடரும் நட்பின் இலக்கணத்தை. பள்ளி, கல்லூரி, அலுவலகம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் நட்பு என்பது சமூக அமைப்பில் ஓர் உறவு என்ற அடையாளத்தைத் தாண்டி, சமூக குணநலனாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் நட்பு இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி மக்களுடன் நெருங்கிப் பழகாமல் ஒட்டுதல் இல்லாமல் இடைவெளிவிட்டு ஒதுங்கி வாழ்பவர்களை 'ஆஸ்பர்ஜெர்' என்று வரையறுக்கிறது உளவியல்.

கை குலுக்கி, கன்னம் கிள்ளி, முதுகு தட்டி, கண்ணாமூச்சி ஆடி, சிறு வயதில் தோன்றுகிற நட்பு காலப்போக்கில் காலாவதியாகிவிடுகிறது. இப்போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க முடியாத பணிச் சூழலில் குறுஞ்செய்திகள், இ-மெயில்கள்தான் நட்பைக் காக்க உதவுகின்றன. முகத்துக்கு முகம் பார்த்து, தோள் தாங்கி, மடி சாய்ந்து, சிரித்து வளர்த்த இந்த நட்பையே நம்மால் சரியாக நிர்வகிக்க முடியாதபோது, உலகின் எங்கோ ஒரு மூலையில் இணை யம் என்ற கலங்கிய குட்டையில் தன் முகம் மறைத்து நண்பன் என்று நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனிதர்களையும், உண்மையிலேயே அன்புக்காக ஏங்கும் இணைய இதயங்களையும் எப்படி இனம் கண்டுகொள்வது?

பொதுவாக, இணைய நட்பு என்பதை உண்மையான நண்பர்கள், பிசினஸ் அசோஸியேட்ஸ், க்ளையன்ட்கள் - நேற்று, இன்று, நாளை, முன்னாள் நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள், சர்க்கிள் ஆஃப் ஸ்பியர், தெரியாதவர்கள், பொது விருப்பங்கள் என்று எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஒவ்வொரு இணைய நட்பு வட்டத்தையும் எப்படி நிர்வகிக்கலாம்?

உண்மையான நண்பர்கள்

உங்களைப்பற்றி அறிந்தவர்கள் என்ற பெர்சனலான எல்லைக்குள் வருபவர்கள். அவர்களைப்பற்றி நீங்களும் முழுவதுமாக அறிந்திருப்பீர்கள். தினமும் ஒரு முறையாவது இவர்களுக்கு நலம் விசாரித்தோ, பணிபற்றி விசாரித்தோ, குடும்பம்பற்றியோ அக்கறையுடன் நலம் விசாரித்து மெயில்கள் அனுப்புவது நலம்.

கவனிக்க...

இவர்கள் நெருக்கமான நண்பர்கள். ஆதலால் ஃபார்மலாக மெயில் அனுப்புவது தேவை இல்லை. அவரை நேரில் சந்தித்தால், எப்படி உரையாடுவீர்களோ அந்தத் தொனியிலேயே மெயில்கள் இருப்பது உங்கள் அன்பு மனதை அவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.

பிசினஸ் அசோஸியேட்ஸ்

வியாபாரம் சம்பந்தமாக உங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவர்கள். ஒரு நாளில் மிக அதிகமாக இ-மெயில் பரிவர்த்தனை இவர்களுடன்தான் நடக்கும் என்பதால், ஒவ்வொரு இ-மெயில் அனுப்பும் போதும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் இன்றி சிறு தவறு நடந்தாலும் உங்கள் உறவு பாதிக்கப்படும். விளைவாக பிஸினஸும் பாதிக்கப்படும்.

கவனிக்க...

ஒவ்வொரு முறை மெயில் அனுப்பும்போதும் விளித்தல் முறை சரியாக இருக்க வேண்டும். ஃபார்மலாக இருப்பது மிகவும் முக்கியம்.

பெயர், பதவி சரியாகக் குறிப்பிட வேண்டும்.

அவ்வப்போது ஃபாலோ-அப் மேற்கொள்வது நல்லது.

முக்கியமான விஷயங்கள் தாமதமானால் 'ரிமைண்டர்'கள் அனுப்புவது நலம்.

க்ளையன்ட்டுகள் - நேற்று, இன்று, நாளை

எப்போதும் க்ளையன்ட்டுகளுடன் சுமுக உறவுடன் இருப்பது முக்கியம். காரணம், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள், நேற்று இருந்த வாடிக்கையாளர்கள் மூலம் வந்தவர்கள். நாளை வரப்போகும் வாடிக்கையாளர்கள், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் வருபவர்கள்.

கவனிக்க..

நம்மோடு வியாபாரத்தில் இருந்த முந்தைய நிறுவனங்களில் சில அதிகாரிகள் இடம் மாறியிருக்கலாம். தொடர்புகள் அற்றுப்போய் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்புகொள்ளும்போது அவர்களின் பதவியை மட்டும் பொதுவாகக் குறிப்பிட்டு, இ-மெயில்கள் அனுப்பலாம்.

உங்கள் நிறுவனத்தில் யார் யார், எங்கெங்கே என்ன பதவியில் இருக்கிறார்கள் என்பதை இன்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும்விதமாக 'இன்ஃபர்மேஷன் போர்ட்டல்'கள் வைத்திருப்பது உங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

தகவல் கேட்டு மெயில் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் விவரங்களை அனுப்பிவைப்பது நன்று.

முன்னாள் நண்பர்கள்

சில காலம் பழகிவிட்டு, சூழ்நிலைகளால் நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள். இவர்கள் எல்லோரும் இந்த வகை வட்டத்தில் வருபவர்கள்.

கவனிக்க...

உங்கள் நட்பின் ஆழத்தைப் பொறுத்து மெயில்கள் அனுப்பலாம்.

அவர் என்றோ ஒருநாள் உங்களுக்கு இழைத்த தவறை நினைவுபடுத்தும்விதமாக இ-மெயில்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

இவ்வளவு நாள் ஒரு போன்கூட செய்யாதவர் திடீரென்று உங்கள் இ-மெயில் கேட்டால், அலுவலகப் பயன்பாட்டுக்கு உள்ள இ-மெயில் முகவரியைத் தருவதைவிட பெர்சனல் இணைய முகவரியைத் தருவது நலம்.

சமூக வலைதள நண்பர்கள்

ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்கட் என சமூக வலைதளங்களில் உலவும் நண்பர்கள் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. உங்கள் நண்பர், அவருடைய நண்பர், நண்பரின் நண்பர் என்று உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களும் கைகுலுக்குவதால் இந்த நட்பு வட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கவனிக்க...

முகம் தெரியாத நண்பர்களுடன் வெகு நேரம் சாட் செய்ய வேண்டாம்.

நீங்கள் இடும் தகவல்கள் அனைவராலும் உடனுக்குடன் படிக்கப்படும் என்பதால், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அதேபோல ஒரு நண்பரைப்பற்றி இன்னொருவரின் 'ஸ்கிராப்'பில் போஸ்ட் செய்ய வேண்டாம்.

சர்க்கிள் ஆஃப் ஸ்பியர்

இதை இப்படியும் சொல்லலாம். தெரிந்தவர்கள், ஆனால் நண்பர்கள் அல்ல. ஏதோ ஒரு விழாவில், அல்லது பிசினஸ் மீட்டிங்கில் அல்லது காலேஜ் கல்ச்சுரல்ஸில் சந்தித்திருப்பீர்கள். டைம்பாஸுக்காகப் பேச்சு வளர்ப்பீர்கள். சும்மானாச்சுக்கும் 'உங்கள் இ-மெயில் ஐ.டி-யைக் கொடுங்களேன்' என்பீர்கள். அவரும் தருவார். நீங்களும் தருவீர்கள். உங்களுக்கு அவரைத் தெரியும். அவருக்கு உங்களைத் தெரியும். ஆனால், 'உண்மையில்' ஒருவரைப்பற்றி ஒருவர் ஆழமாகத் தெரிந்துவைக்காமல் இருப்பீர்கள்.

கவனிக்க...

ஒன்றுக்கும் உதவாத மெயில்களை 'ஜஸ்ட் லைக் தட்' ஃபார்வேர்டு செய்வார்கள். அதை நீங்களும் ஃபார்வேர்டு செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

தெரியாதவர்கள்

எல்லா விளம்பர நிறுவனங்களிடத்திலும் உங்களின் இ-மெயில் முகவரி இருக்கும். இதை வாங்கிக்கொள்ளுங்கள், அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மெயில்களை அனுப்புவார்கள். இவர்கள் இந்த வகைக்குள் வருபவர்கள்.

கவனிக்க...

முடிந்தவரை இப்படிப்பட்ட இ-மெயில்களுக்குப் பதில் அனுப்பாமல் இருப்பது நல்லது.

பொது விருப்பங்கள்

ஷகிராவின் பாப் பாடல்களில் உங்களுக்கு விருப்பம் இருக்கலாம். அல்லது நேஷனல் ஜியாக்ரஃபியின் போட்டோக்களுக்கோ ரசிகராக இருக்கலாம். உங்களைப் போன்றே இதே அலைவரிசையில் இருக்கும் நபர்கள் இணையத்தில் இருப்பார்கள். இவர்களை எல்லாம் 'கம்யூனிட்டி' என்பதற்குக் கீழே கொண்டு வர முடியும்.

கவனிக்க...

இத்தகைய கம்யூனிட்டிகளில் இணைவது உங்களுக்குத் துறை சார்ந்த நெட்வொர்க்கை அதிகமாக்கும்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 1:42 pm

யாரு அந்தப் பையன் உதுமான் போட்டோவில்?



[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 1:47 pm

Aathira wrote:யாரு அந்தப் பையன் உதுமான் போட்டோவில்?

என் மகன் உமர் பாரூக். உங்கள் மருமகன் தான் அக்கா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 1:51 pm

உதுமான் மைதீன். wrote:
Aathira wrote:யாரு அந்தப் பையன் உதுமான் போட்டோவில்?

என் மகன் உமர் பாரூக். உங்கள் மருமகன் தான் அக்கா.
செல்லம் சுவ்வீட்டா இருக்கான்... என் மருமகன் அழகு..
படிக்கிறானா? எந்த வகுப்பு? ரொம்ப சந்தோஷமா இருக்கு உதுமான்.

இன்னொரு திரியிலும் கேட்டு இருந்தேன். நீங்க கவனிக்கவில்லை போல இருக்கு.



[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 1:59 pm

Aathira wrote:
உதுமான் மைதீன். wrote:
Aathira wrote:யாரு அந்தப் பையன் உதுமான் போட்டோவில்?

என் மகன் உமர் பாரூக். உங்கள் மருமகன் தான் அக்கா.
செல்லம் சுவ்வீட்டா இருக்கான்... என் மருமகன் அழகு..
படிக்கிறானா? எந்த வகுப்பு? ரொம்ப சந்தோஷமா இருக்கு உதுமான்.

இன்னொரு திரியிலும் கேட்டு இருந்தேன். நீங்க கவனிக்கவில்லை போல இருக்கு.

4 ஆம் வகுப்பு படிக்கிறான். 2 குழந்தைகள் எனக்கு. உமர் பாரூக் மற்றும் அமீரா அலீமா.
[You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 2:17 pm

மருமகளும் அழகி...
அந்த அரை முகம் தெரிகிறதே.. அந்த முகத்தின் பதிப்பு அந்த சின்ன முகம்..
நன்றி உதுமான்.... கேட்டதும் என் உறவுகளை அறிமுகப்படுத்தியதற்கு...



[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 29, 2010 2:36 pm

அறிமுகத்திற்கு நன்றி

கட்டுரை படிக்கவில்லை அது பற்றி பிறகு......



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 29, 2010 2:41 pm

'reduce this image' என்பதை கிளிக் கினால் முழு முகம் தெரிகிறதே
ஆதிரா புன்னகை

நன்றி உதுமான் , கட்டுரை கும் , உங்கள் குடும்ப புகைபடத்துக்கும் புன்னகை
அழகான குடும்பம் புன்னகை உங்கள் செல்வங்களுக்கு என் அன்பு [You must be registered and logged in to see this image.]
உங்கள் மனைவிக்கு அன்பு விசாரிப்புகள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 29, 2010 2:45 pm

காலத்திற்கு ஏற்ற நல்ல காட்டுரை பதிவிற்கு நன்றி உதுமான்



[You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 29, 2010 3:47 pm

மிகவும் பயனுள்ள பதிவு...பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 3:54 pm

சிறந்த குடும்பம் உதுமான்... சீர்பெற்று எல்லா நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக