ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி

Go down

அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி  Empty அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி

Post by Guest Mon 27 Dec 2010 - 12:51

ராமேஸ்வரம்: கீழக்கரை அருகே 13 பேரை பலி கொண்ட படகு விபத்துக்கு, சுழலில் படகு சிக்கியதும், அதிக ஆட்களுடன் சென்றதுமே காரணம் என்று விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது பெரியபட்டனம் ஜலாலியா நகர். மீனவர் பகுதியான இப்பகுதியைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். விடுமுறைக்காக அவர்கள் ஊர் திரும்பியிருந்தனர்.

நேற்று அப்பா தீவு, வாழைத் தீவு உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா செல்வதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகில் இரு குழுக்களாக சென்றனர். ஒரு படகில் ஆண்கள் ஏறிக் கொண்டனர். இன்னொரு படகில் பெண்களும், குழந்தைகளும் ஏறிக் கொண்டனர்.

இந்தப் படகு மன்னார் வளைகுடாப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென பெண்கள், குழந்தைள் வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

சீனி உருது என்பவரது மனைவி பாத்திமா (35) விபத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடன் பயணித்த அவரது மகள்களான தவ்பிகா(14), ஆசிகா(11) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இவர்கள் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்துக் கூறுகையில்,

எங்களது படகில் பெண்கள், குழந்தைகள் என 38 பேர் இருந்தோம். படகில் சமையலுக்கு தேவையான பொருட்களுடன், ஒரு ஆடும் ஏற்றப்பட்டு இருந்தது. கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் பெரிய அலை சீறி எழுந்தது.

அலையின் சுழலில் சிக்கிய படகு தள்ளாடியது. இதில் நாங்கள் அங்கும், இங்குமாக ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்தது. பொருட்களும், ஆட்களும் அதிகமாக இருந்ததாலேயே கடலுக்குள் படகு கவிழ்ந்தது.

இதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினோம். நீச்சல் தெரியாததால் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடித்து மயங்கினோம். பின்னர் கண்விழித்து பார்த்தபோது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தோம். எங்களது தாய் பாத்திமா பர்ஜானா என்ன ஆனார் என்று தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்தோம். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது என்றார்.

இந்த விபத்தில் கீழக்கரையை சேர்ந்த சீனிமுகமது, தனது மகன்கள் அப்துல் வகாப் (வயது 14) கலிலுர் ரகுமான்(12) ஆகியோரைப் பறி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சீனி முகமது கூறுகையில்,

எனது மூத்த மகன் அப்துல்வகாப் கீழக்கரை இஸ்லாமியா மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், 2-வது மகன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஏற்கனவே மனைவியை இழந்த நான் மகன்களுக்காவே வாழ்ந்து வந்தேன். பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டதால் பெரியபட்டினத்தில் உள்ள எனது உறவினர்களுடன் தீவை சுற்றிப்பார்க்க மகன்களை அனுப்பிவைத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் எனது மகன்கள் 2 பேரையும் பறி கொடுத்துவிட்டேன் என்று கூறி கதறி அழுதார்.

விபத்தில் சிக்கி கடலில் மூழ்கிய சிலரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட பகுதி சகதி நிறைந்ததாக உள்ளதால் உடல்கள் அதில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் தீவுப் பகுதிகளில் சில நாட்களில் உடல்கள் கரை ஒதுங்கலாம் எனத் தெரிகிறது.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கிக் காணப்படுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி  Empty Re: அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி

Post by Thanjaavooraan Mon 27 Dec 2010 - 15:49

இறந்த அனைவருக்கும் நமது அஞ்சலி உரித்தாகட்டும் அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி  154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum