புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_m10சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமியா அப்படி என்றால் என்ன? மாண்டவர்களை மறந்துபோனத் தமிழினம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 27, 2010 1:53 am

ஆழிப்பேரலை அழிவு நடந்து இன்றோடு 6 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. தம்மை தேசிய இணையங்கள், அல்லது ஊடகங்கள் என அடையாளப்படுத்தும் எத்தனை ஊடகங்கள் இன்று இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளது ? இல்லை லண்டனில் எத்தனை இடங்களில் இரங்கல் நிகழ்வுகள் நடைபெறுகிறது ? கிறிஸ்மசுக்கு அடுத்த நாள் எங்கே மலிவு விலையில் உடுப்பை சேல் போடுவார்கள் அங்கு போய் வாங்கலாம் என்று அலையும் தமிழர்களையே நாம் காணக்கூடியதாக உள்ளது.

சுனாமி ஞாபகார்த்த நிகழ்வுகள் இன்று எங்கே நடக்கிறது என்றுகேட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களிலேயே நடக்கிறது எனலாம்
.


இன்று ஆழிப்பேரலை நிகழ்ந்து 6 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. லண்டனில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை உருக்கியுள்ளது எனலாம், என்னைப் பொறுத்தவரை எம்மை வெட்கி நாணிக் குறுகும் வகையில் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. தான் அடிக்கடி இலங்கை சென்றுவரும்போது தமிழர் ஒருவரை தனது நண்பனாக்கிக் கொண்டுள்ளார் ஒரு வெள்ளைக்கார மூதாட்டி. ஆனால் அவரோ 2004ம் ஆண்டு சுணாமியால் இறந்துபோகவே, அவர் நினைவாக மறக்காமல் ஒவ்வொரு வருடமும் அவர் தனது வீட்டில் அஞ்சலி செலுத்தி வந்துள்ளார்
.

தனது உறவினர்களையும் அயலவர்களையும் கூட்டி வீட்டில் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 26ம் திகதியும் அவர் அஞ்சலி செலுத்தி வந்துள்ளார். இம் முறையும் அவர் மறக்காமல் அதனைச் செய்துள்ளார். இதனை தற்செயலாகப் பார்த்த பக்கத்துவீட்டுத் தமிழர் ஒருவர் என்ன விசேஷம் நடகிறது என்று கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி இன்று உன் இன மக்கள் அதிகம் கொல்லப்பட்ட நாள், நினைத்துப்பார், மறந்துவிட்டாயா எனக் கோபமாகக் கேட்டுள்ளார். ஏன் எமது இனம் இவ்வாறு இருக்கவேண்டும் ? சில வருடங்கள் ஓடிப் போனால் அனைத்தையும் மறந்துவிடும் ஒரு இனம் எது என்று கேட்டால், விடை: தமிழினம் என்று சொல்லுமளவுக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோமா ? அன்று சுணாமியால், தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் குழந்தைகளை இழந்த தாய் தந்தையர் என எத்தனை பிஞ்சுகளை நாம் பறிகொடுத்தோம் ? எத்தனை பெண்கள் கணவனையும், எத்தனை ஆண்கள் தமது மனைவி பிள்ளைகளை இழந்து தவித்தனர். இதனை எல்லாம் நாம் மறந்து வாழலாமா
?

அப்படி என்றால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் இன்னும் சில ஆண்டுகளில் தமிழன் மறந்துவிடுவானா ? அப்போது எனக்கு என்ன என்று நாம் எம் வேலையைத் தான் பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறோமா ? நாம் மாறவே மாட்டோமா ? என்ற கேள்விகள் என் இதயத்தை துளைக்கின்றன. யூதர்களை எடுங்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் தமது இன அழிப்பை நினைவு கூறுகின்றனர், பாலஸ்தீனத்தை எடுத்தால் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டாலும் ஊரே கூடி அஞ்சலி செய்கின்றது, கொசவோவை எடுத்துப் பாருங்கள், இல்லை சேபியர்களை எடுத்துப்பாருங்கள். எமது இனம் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கிறது
?

2004
ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் திகதி அதிகாலை, உலகையே உலுக்கிய சம்பவமாக அது கருதப்பட்டது. இந்தோனேசியாவின் யாவா மற்றும் சுமத்திரா தீவுகளுக்கு அருகாமையில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாக அங்கு ஏற்பட்ட ஆழிப்பேரலை, 5000 மைல்கள் பயணித்து இலங்கைத் தீவை தாக்கியது. அதிலும் தென்னிலங்கையை விட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளையே அது தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. பி.பி.சி, சி.என்.என் தொலைக்காட்சி என்று எங்கு பார்த்தாலும் சுணாமியைப் பற்றியே பேசினார்கள். இதில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களை தொலைக்காட்சியில் பார்த்த வேற்றின மக்களும் மேலைத்தேய மக்களும் பலர் பண உதவிகளை தொண்டு நிறுவனங்களுக்குச் செய்தனார். உடனடியாகவே பில்லியன் கணக்கில் பணம் சேர்க்கப்பட்டது. முல்லைத்தீவு, திருகோணமலை என தமிழர் தாயகம் எங்கும் கடல் நீர் உள்ளே புகுந்து, பின்னர் கடலை நோக்கிச் செல்லும் போது எமது உறவுகளையும் உள்ளே இழுத்துச் சென்றது
.

அப்போது உலகத் தமிழர்கள் அனைவரும் கதறினார்கள், கண்ணிர் மல்கினர், தம்மாலான நிதியுதவிகளைச் செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் பெருநிலப்பரப்பு புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு நாட்டில் அனர்த்தம் நடந்தால் பல உலகநாடுகள் உதவிசெய்யும், ஆனால் தமது தாயகப் பகுதிகளில் நடைபெற்ற அனர்த்தத்தைப் புலிகள் தனியாளாக நின்று கையாண்டனர். வேறு நாடுகளின் உதவியோ இல்லை இலங்கை அரசின் உதவிகளோ இன்றி, காயப்பட்ட மக்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுதல், இறந்த உடல்களை அப்புறப்படுத்துதல், வடிகாலமைத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் உணவுகளை வழங்குதல் என்பன விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே
.

புலிகளைப் பொறுத்தவரை அவர்களும் பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்தாலும் அதை எவற்றையும் அவர்கள் வெளிக்காட்டவில்லை. அதுமட்டுமா திருகோணமலையில் பலம்பெருந்திய நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத்தளம் இருந்தது. அதி நவீன ராடர் வசதிகளைக் கொண்டு இயக்கப்படும் அத் தளத்தினுள் திடீரென தண்ணீர் புகுந்து பல உபகரணங்களை அடித்துச் சென்றது. தாக்குதலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பல அதிவேகப் படகுகள் நொருங்கிச் சின்னாபின்னமானது. ஆழிப்பேரலை தமிழர்களையும், தமிழர் போராட்டத்தையும் அழிப்பதற்கு இயற்கையால் அனுப்பப்பட்ட தூதுவர்போலச் செயல்பட்டதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. பல இழப்புக்களை புலிகள் சந்தித்திருந்தாலும் அவர்கள் போராடும் திறன் குறைந்துவிடவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகளையே அவர்கள் யோசித்தனர்
.

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் நடக்கும், அல்லது நடந்த பேரழிவுகளையும், அனர்த்தங்களால் கொல்லப்பட்ட மக்களை நினைத்து உடனே குரல்கொடுப்பதும் பின்னர் சில வருடங்கள் ஆனபின்னர் அதனைப் பற்றி பேசாது விடுவதையும் முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். சுமார் 30,000 பேருக்கு மேல் இறந்துபோன இந்த அனர்த்ததை புலம்பெயர் தமிழ் மக்கள் எவ்வாறு மறப்பது, இதுவும் இன்னெரு முள்ளிவாய்க்கால் தான் என்பதை தமிழர்கள் எப்போதும் நினைவுகூரவேண்டும், புலம்பெயர் தேசங்களில் இயங்கும் அனைத்து தமிழ் ஊடகங்களும், வருடம்தோறும் இத் துயர் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும். இதனூடாகவே தமிழர் ஒற்றுமை ஓங்கும். தமிழர் இறையாண்மை பாதுகாக்கப்படும். எரிந்துகொண்டுஇருக்கும் விடுதலைத் தீ அணையாது இருக்கும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக