ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும்

Go down

ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Empty ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும்

Post by Guest Sat Dec 25, 2010 5:45 pm

“இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட இந்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட உதவுவேன்” என்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களை அழித்தொழித்த ராஜபக்ச அரசிற்கு முழு ஆதரவையும் தந்து, போரை நடத்து முழுவதுமாக உதவி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கத் துணை நின்றதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது ‘ஆலோசனை’யில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும்தான் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிதிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் ராகுல் பேசியிருக்க மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம்.

அந்த அளவிற்கு இலங்கைத் தமிழர் பிரச்சனையை அறிந்துவராக ராகுல் இருந்திருந்தால், இந்நேரம் அது தொடர்பான உண்மைகளைப் புரிந்துகொண்டு, அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதுபோல் பேசியிருப்பார். “சிறிலங்கா நமது நட்பு நாடு, தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம். அதனை அதிபர் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்குள்ளது” என்று கூறியிருப்பார்.

ஆனால், ராகுல் அவ்வாறெல்லாம் பேசாததில் இருந்தே, அவர் டெல்லி அரசின் ‘பங்கை’ அறிந்திருக்கவில்லை என்பது புரிகிறது. அது மட்டுமல்ல, தமிழர்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடி வழங்கியுள்ளது என்றும், தமிழர்களுக்காக 80 ஆயிரம் வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது என்று புள்ளி விவரம் அறியாமல் பேசியிருக்கவும் மாட்டார்.

தமிழர்களுக்கு எதிரான போர் நடத்தப்பட்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்தவராக ஒருபோதும் ராகுல் காட்டிக்கொண்டதில்லை. இந்தியாவின் மற்ற மாநிலத்து மக்கள் போல், அவரும் ஏதுமறியா அப்பிராணியாகவே இருந்தார். அதனால்தான் ஈழப் போருக்குப் பிறகு தமிழகம் வந்தபோது, அது தொடர்பான கேள்விகள் எதுவும் அவருக்கு விளங்கவில்லை. பதில் சொல்வதைத் தவிர்த்தார்.

ஆனால் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களுக்கு இங்குள்ள தமிழர்களின் உணர்வு நன்றாகவே புரிந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் டெல்லி அரசின் உதவிகளும், அதில் சோனியா வகித்த பங்கும் ஐயத்திற்கிடமின்றி அவர்கள் அறிந்துவைத்துள்ளனர். ‘நான் இந்தியாவின் போரை நடத்தினேன்’ என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கூறியதை டெல்லி அரசு மறுக்கவில்லையே!

ராஜபக்ச அரசு போர்க் குற்றங்களை புரிந்துள்ளது என்று ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் சுவீடன் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதனை எதிர்த்துப் பேசியவர் இந்தியாவின் தூதரான கோபிநாத் அச்சங்கரே அல்லவா? அத்தோடு நின்றாரா? சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்து, அது தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவும், அதன் ‘எதிரி’ நாடான சீனாவும் ஒன்றிணைந்து நிறைவேற்றித் தந்தன அல்லவா?

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூட கேட்டாரே, எப்போதெல்லாம் சிறிலங்க அரசிற்கு எதிரான மனித உரிமை பிரச்சனை எழுப்பப்படும்போதெல்லாம், இந்தியா முன்னால் வந்து தடுக்கிறதே? இந்தியா மறைப்பதற்கு (any skeleton in the cub board for India to hide?) ஏதுவும் உள்ளதா? என்று.

“இந்திய அரசை தாக்கிப் பேசாதீர்கள். இந்தியாவின் ஆதரவு இருந்திருக்காவிட்டால் இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்நாட்டிற்கு நன்றிடன் நாம் இருக்க வேண்டும்” என்று சிறிலங்க நாடாளுமன்றத்திலேயே அந்நாட்டு அமைச்சர் அபயவர்த்தன கூறினாரே?


கொழும்பு ஆனந்தா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சவின் தம்பியும், அந்நாட்டு பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபக்ச, “நான், பசில், ராஜபக்சவின் செயலர் ஆகிய மூவரும், இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சிங்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் கலந்தாலோசனை செய்தே இந்த போரை இறுதி வரை நடத்தினோம்” என்று பேசியது லங்கா.எல்கே என்கிற அவர்களுடைய இணையத்தளத்திலேயே வெளியிடப்பட்டதே? மறுத்ததா டெல்லி?இதெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாத உண்மைகளா?

எனவே, ஈழத் தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அழித்ததில் டெல்லியின் பங்கு அளவற்றது. ஆனால்தான் இதுவரை டெல்லி அரசு இதையெல்லாம் மறுத்துப் பேசவில்லை. இதற்கு மேலும் மறுத்துப் பேச முடியாது. அதனால்தான் எல்லா திசைகளிலும் சீனாவிற்கு ராஜபக்ச கதவைத் திறந்துவிட்டாலும், இந்தியாவால் அதனைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அதனால் ராஜபக்சவை தட்டிக்கேட்க முடியாது. தட்டிக் கேட்கும் மனதும் டெல்லிக்கு இல்லை.

இதெல்லாம் ராகுல் அறிந்திருக்க மாட்டார். ஏதோ ஒரு திட்டத்துடன் அவரை முன்னிறுத்துகிறார் சோனியா. அவருக்கு ஊடகங்கள் பெரிதாக இடம் தருகின்றன. அதற்கான விளம்பரங்களைப் பெறுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியினருக்கும், ராகுலுடன் உரையாடிய புத்தி ஜீவிகளுக்கும் ஈழத் தமிழர் பிரச்சனையின் தாக்கம் காங்கிரஸ் கட்சியை ஒரு வழி செய்துவிடும் என்பதை அறிந்தவர்கள். எனவே அவர்கள் சில யோசனைகளை கூற, அதனை ராகுல் பேசியுள்ளார்.

டெல்லி செல்வார். பிரதமருடன் பேசுவார். அது நடக்கும். பொதுவாக ஈழப் பிரச்சனை குறித்து எது பேசினாலும் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக மெளன விரதம் கடைபிடிப்பார். இது ராகுலுக்குத் தெரியும்.

அதனால்தான் தன்னிடம் பேசியவர்களிடம் ராகுல் கடைசியாக இவ்வாறு கூறியுள்ளார், “ஒரு அளவு உள்ளது, அதனைத் தாண்டி என்னால் போக முடியாது”. என்ன காங்கிரஸ் அன்பர்களே, ஏதாவது புரிகிறதா?

அதுதான் டெல்லி அரசியல்.

மானங்கெட்ட .... கூ...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum