ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித்

Go down

எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Empty எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித்

Post by தமிழ்நேசன்1981 Fri Dec 24, 2010 2:27 pm

December 24, 2010





எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Ajith91

நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை
மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன்
கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல்
வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற செய்தி
சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில்
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை ‌நம்பத்தகுந்த
‌செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான
ரசிகர்கள் உள்ளனர். இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு
எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு அஜித் மீது
ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள். தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு
இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே
1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது
ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும்
அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி
வருகிறார்கள். இதனை வலியுறுத்தும் வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம்
நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள் அறிவித்திருந்தனர். இதுபற்றி நடிகர்
அஜித்துக்கு தகவல் கிடைத்ததும் ‌ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு
அரசியல் பிடிக்காது ; நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என்
பொழுதுபோக்கு… இந்த இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது.
அவர்களுடன் செலவிடவே நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது
ரசிகர்கள் தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என
நினைத்தார். அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை
வெளியாகியிருப்பதாக விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Ajith52

அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார். ரசிகர்களை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நான் எனது 50வது படமான மங்காத்தா
படப்பிடிப்பில் இரவு – பகலாக மும்முரமாக ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில
கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. எனது ரசிகர்கள்
கண்ணியமானவர்கள், என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என்
கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை
ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக, ஒரு
சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின்
சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த
வண்ணம் உள்ளன.

மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள்
எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் என்றுமே அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான
நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள்
அறிவார்கள். இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் –
ஒழுங்கு சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என்
கட்டளையை மீறி செயல்பட்டால், என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை
கலைக்கவும் தயங்கமாட்டேன்.

இவ்வாறு அஜித் கூறியுள்ளார். அஜித்தின்
இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். அதேநேரம்
ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ என்ற அச்சமும் ரசிகர்களை
தொற்றிக் கொண்டுள்ளது.



எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Ajith-pressrelease

நன்றி: ajithfans.com
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum