Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
+2
ARR
நிசாந்தன்
6 posters
Page 1 of 1
இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
பென்னி குக்(முல்லை பெரியாறு) அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணைக் கட்டினாலோ கேரளத்துக்கு எந்த பொருளும் செல்லவிடாமல் நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடுவோம் என்று கேரள அரசுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது நேற்றைய அறிக்கை: தெந்தமிழகத்தின் 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு தண்ணீர் உரிமையை தமிழகம் நிரந்தரமாக இழக்கும் ஆபத்தும், விபரீதமும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகிறது. 1979ம் ஆண்டு கேரள அரசு, இடுக்கி அணையை கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளதாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி பிரச்சனையை உருவாக்கியது. அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு ஆதாரங்களை முன்வைத்தது. இதையடுத்து முல்லைப் பெரியாரில் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். இதில் கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்ட அளவை தீர்மானிக்கவும், அந்த அணையையும் செயலிழக்கச் செய்து உடைக்கவும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கேரள சட்டசபை கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 18ல் ஒரு சட்டத்தை நிறிவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழகத்தின் சாபக் கேடாக தேர்தலைல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக உரிமைகளை காவு கொடுத்துவிட்டது.
இதற்கிடையே கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் தூரத்தில் புதிய அணைக் கட்ட திட்டமிட்டு அதற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்தில் அனுமதி கேட்டு விண்னப்பித்தது. தமிழகத்தின் நலன் கருதி அந்த அனுமதியை மறுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அப்போதைய அமைச்சர்கள் இராசாவும், டி.ஆர்.பாலுவும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தனர். பின்னர் அந்தப் பொறுப்புக்கு வந்த செயரம் ரமேசு ஆய்வுக்கு அனுமதி அளித்தார். மத்திய அரசின் இந்த துரோகத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் கண்டன கூட்டத்தில் நானே பேசப் போகிறேன் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் பெக்ட்ரம் ஊழல் சிக்கலால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தார். மத்திய அரசின் வனத்துறை அனுமதி இல்லாமலேயே கேரள அரசு புதிய பாதைகளை அமைத்தும், மரங்களை வெட்டியும், ஆழ்துளைகளைத் தோண்டியும் தன்னிச்சையாக செயல்பட்டது. தமிழக அரசு இதனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு, கடந்த 20ம் தேதி தேனி மாவட்டத்துக்கு வந்தது. அவர்களை சந்தித்து முறையிடவோ, மனு கொடுக்கவோ தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அமைச்சர்கள் எவரும் முதல்நாள வரவுமில்லை. ஆனால் கேரள எல்லைக்குள் முழுவினர் சென்றபோது கேரள அமைச்சர் பிரேமச்சந்திரனும், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமோலும், கேரள மாநில விவசாயிகளும் ஐவர் குழுவை வரவேற்றைனர்.
திட்டமிட்டபடி புதிய அணையைக் கட்டபோவதாகவும், வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அணையை உடைப்பதற்கு கேரள அரசு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சட்டமும் போட்டுள்ளது. இந்த விபரீதமும் நேர்ந்துவிட்டால் தெந்தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாகும். பாலைவனமாக மாறும்.
கேரள மக்களுக்கு காய்கறி, அரிசி. பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் தமிழகம் தான் அனுப்புகிறது. பெரியாறு அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்லவிடாமல் நிரந்தப் பொருளாதார முற்றுகை போடுவோம் என கேரள அரசை எச்சரிக்கிறேன்.
கேரள மக்களை நேசிக்கிறோம். ஆனால், கேரள அரசின் போக்கு இரு மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை கேரள மக்கள் உணரவேண்டும். இந்த விபரீதம் நேர்ந்தால் இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அதுவே அச்சாரமாகிவிடும் என்று மத்திய அரசையும் எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து அவரது நேற்றைய அறிக்கை: தெந்தமிழகத்தின் 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு தண்ணீர் உரிமையை தமிழகம் நிரந்தரமாக இழக்கும் ஆபத்தும், விபரீதமும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகிறது. 1979ம் ஆண்டு கேரள அரசு, இடுக்கி அணையை கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளதாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி பிரச்சனையை உருவாக்கியது. அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு ஆதாரங்களை முன்வைத்தது. இதையடுத்து முல்லைப் பெரியாரில் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். இதில் கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்ட அளவை தீர்மானிக்கவும், அந்த அணையையும் செயலிழக்கச் செய்து உடைக்கவும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கேரள சட்டசபை கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 18ல் ஒரு சட்டத்தை நிறிவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழகத்தின் சாபக் கேடாக தேர்தலைல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக உரிமைகளை காவு கொடுத்துவிட்டது.
இதற்கிடையே கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் தூரத்தில் புதிய அணைக் கட்ட திட்டமிட்டு அதற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்தில் அனுமதி கேட்டு விண்னப்பித்தது. தமிழகத்தின் நலன் கருதி அந்த அனுமதியை மறுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அப்போதைய அமைச்சர்கள் இராசாவும், டி.ஆர்.பாலுவும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தனர். பின்னர் அந்தப் பொறுப்புக்கு வந்த செயரம் ரமேசு ஆய்வுக்கு அனுமதி அளித்தார். மத்திய அரசின் இந்த துரோகத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் கண்டன கூட்டத்தில் நானே பேசப் போகிறேன் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் பெக்ட்ரம் ஊழல் சிக்கலால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தார். மத்திய அரசின் வனத்துறை அனுமதி இல்லாமலேயே கேரள அரசு புதிய பாதைகளை அமைத்தும், மரங்களை வெட்டியும், ஆழ்துளைகளைத் தோண்டியும் தன்னிச்சையாக செயல்பட்டது. தமிழக அரசு இதனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு, கடந்த 20ம் தேதி தேனி மாவட்டத்துக்கு வந்தது. அவர்களை சந்தித்து முறையிடவோ, மனு கொடுக்கவோ தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அமைச்சர்கள் எவரும் முதல்நாள வரவுமில்லை. ஆனால் கேரள எல்லைக்குள் முழுவினர் சென்றபோது கேரள அமைச்சர் பிரேமச்சந்திரனும், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமோலும், கேரள மாநில விவசாயிகளும் ஐவர் குழுவை வரவேற்றைனர்.
திட்டமிட்டபடி புதிய அணையைக் கட்டபோவதாகவும், வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அணையை உடைப்பதற்கு கேரள அரசு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சட்டமும் போட்டுள்ளது. இந்த விபரீதமும் நேர்ந்துவிட்டால் தெந்தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாகும். பாலைவனமாக மாறும்.
கேரள மக்களுக்கு காய்கறி, அரிசி. பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் தமிழகம் தான் அனுப்புகிறது. பெரியாறு அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்லவிடாமல் நிரந்தப் பொருளாதார முற்றுகை போடுவோம் என கேரள அரசை எச்சரிக்கிறேன்.
கேரள மக்களை நேசிக்கிறோம். ஆனால், கேரள அரசின் போக்கு இரு மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை கேரள மக்கள் உணரவேண்டும். இந்த விபரீதம் நேர்ந்தால் இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அதுவே அச்சாரமாகிவிடும் என்று மத்திய அரசையும் எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
இந்த வைகோ அண்ணாச்சி மொத்தம் 2 சீடிதான் கைவசம் வச்சிருக்காருங்ணா..
1. ஈழம்.. 2. முல்லைப் பெரியார்..
ரண்டையும் மாத்தி மாத்திப் போட்டுகிட்டே இருப்பாருங்ணா..
1. ஈழம்.. 2. முல்லைப் பெரியார்..
ரண்டையும் மாத்தி மாத்திப் போட்டுகிட்டே இருப்பாருங்ணா..
Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
திறமை மிக்கவர்தான் ... ஆனால் அரசியலில் சோடை போனவ்ர்... என்ன செய்வது... பாவம் கோபாலசாமி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
எனக்கு அவரது பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும்.
அவர் பிழைக்கத் தெரியாதவர். ராஜா மாதிரி...ஹி..ஹி..![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவர் பிழைக்கத் தெரியாதவர். ராஜா மாதிரி...ஹி..ஹி..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
ஆமா இந்த ஆளு கையில இருக்கராதே இரண்டு ஆயுதம்தான்,
ஒண்ணு ஈழ பிரச்சினை, மற்றது முல்லை பெரியார் பிரச்சினை.
ஆனா இரண்டு பிரச்சினையா வச்சு இவரலா அரசியல் மட்டும்தான் பண்ணமுடியும்.வேற எதுவும் இவரால செய்யமுடியாது
ஒண்ணு ஈழ பிரச்சினை, மற்றது முல்லை பெரியார் பிரச்சினை.
ஆனா இரண்டு பிரச்சினையா வச்சு இவரலா அரசியல் மட்டும்தான் பண்ணமுடியும்.வேற எதுவும் இவரால செய்யமுடியாது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை
தமிழனுக்கு இப்பொழுது இருக்கும் இரண்டு மிக முக்கிய பிரச்சனைகள் முல்லைப் பெரியாரும், ஈழமும் தான். அவை இரண்டும் வாழ்வாதாரப் பிரச்சனைகள். அதைப் பற்றித்தான் முதலில் பேச வேண்டும். இதை விடுத்து வேறெதைப் பேச? வைகோ திறமைமிக்க அரசியல்வாதி. அவர் அடிக்கடி கட்சி மாறாமல் இருந்தால் அவர் தான் மிகப்பெரிய மனிதர். தமிழ்நாடு ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டது.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவே இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள்!-வைகோ
» தமிழகத்துக்கு சீனாவால் ஆபத்து: வைகோ எச்சரிக்கை
» கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
» முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை
» இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா?: வைகோ கவலை
» தமிழகத்துக்கு சீனாவால் ஆபத்து: வைகோ எச்சரிக்கை
» கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
» முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை
» இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா?: வைகோ கவலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|