புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
284 Posts - 45%
heezulia
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_m10புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 7:13 am

(ஆங்கில வருடப்பிறப்பு.கொஞ்சம் நகைச்சுவை+ கோபம் கலந்தது.)

தெள்ளுத் தமிழ்வாழும் தீம்பொழில் கொள்ளொரு
தேனிசைநாட்டினிலே
அள்ளிமதுரமென் றாசைகொள்ளத்தமிழ்
அன்புகொள் வீட்டினிலே
நள்ளிரவிலொரு கள்ளனைப் போல்வரும்
நங்கை புதுவரவை
கொள்ளி யெடுத்துக்கொண் டோடினான் சின்னவன்
கொண்டாடவாம் வெளியே

சட்டுசடுவெனத் துப்பாக்கி போலொரு
சத்தம் நிறைந்திருக்க
கிட்டப் போகாதேடா ஓடுஒடுவென்று
கத்திச் சிலரும்நிற்க
விட்ட புகைதனில் மூச்சுத் திணறிட
விரைந்து மூக்கழுத்த
சொட்டுவிழிகளில் நீர்தளும்பப் புதுச்
சுந்தரி ஆண்டு வந்தாள்

விண்ணி லதிர்ந்தன வேடிக்கையாய் பல
வண்ண மலர்வெடிகள்
எண்ணம் நிறைந்திடக் கண்ணைக் கவர்ந்திடும்
இன்ப ஒளிச்சிதறல்
மண்ணிலே மாந்தரும் எண்ணியஎண்ணங்கள்
மற்றும் சுதந்திரங்கள்
கண்களின் முன்னே வெடித்துத்சிதறின
போலும் சிதறினவாம்

பொன்னெனும் நாளினில் பூமிவருமெங்கள்
புத்தம் புதுவரவே!
இன்பமெனஎண்ணி ஏழைமகிழ்ந் திடும்
ஆண்டு புதிய வளே
என்னவிழைத்திட எண்ணமெடுத்தனை
இந்த உலகமதை
உன்னத மாக்கிடுவாயோ? உள்ளவரின்
உயிரை வாங்கிடவா?

தேருதல் வந்திட தேசம் மகிழ்ந்திடும்
தென்றலும் பாட்டிசைக்கும்
மாறுதல் கொண்டிட ஆளுபவர் இடம்
மாறிப் புதுமைகொள்ளும்
ஆறுதல் என்பது ஏழை தனுக்கில்லை
ஆட்சியில் கொள்ளையிடும்
கூறுகள் போட்டுப் பிரிக்குமொருசில
கூட்டத்துக்கே மகிழ்வு

பத்துகள் போய்ப்பதி னொன்றுவருகுது
பாரினில் மாறுதல்கள்
எத்தனைதானோ நிகழ்ந்திடுமோ இது
எங்களுக் கானதில்லை
சொத்துக்களும் அந்ததேசத்தை ஆண்டிடும்
சிங்கம் கழுகுகளும்
மொத்தமும் என்னது உன்னது என்றிட
மொய்யெழுதும் வரைபு

புத்தாண்டே நீயுமே போய்வரும்மாறுதல்
புதிய வாழ்விடுமோ?
புத்தனின் மைந்தர்கள் போடும்சதிகளும்
பூவையர் கொன்றதுமாய்
நித்தம் அடைந்திடும் நீசக்கொலைகளை
நின்றிடச் செய்துவிடு
இத்தரை மீதினில் உன்வரவை எங்கள்
உள்ளத்தில் போற்றிடுவோம்

கையெடுப்போம் உந்தன்கால்விழுவோமெங்கள்
கன்னத்தில் போட்டிடுவோம்
மெய்யுருட்டிப் பெருந் தேரிழுத்து உன்னை
தெய்வமெனத் தொழுவோம்
பொய்யை விரட்டியோர் பாதைவகுத்துமே
எம்மவரை உலகில்
உய்துவிட வெங்கள்ஈழ மமைத்திட
ஓர்வழி செய்துவிடு!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 21, 2010 9:16 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) Logo12
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Dec 21, 2010 11:11 am

அருமை ஐயா...... பாடகன் பாடகன் பாடகன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 3:45 pm

அன்போடு பாராட்டிய இருவருக்கும் நன்றி

இன்னொரு கவி


ஆனந்த வேளைகள்

மெல்லக் கறுத் ததுவானம்
மேளமடித்தது மேகம்
சொல்லியழுவதுபோலும்
சிந்தியதாம் மழைநீரும்
சில்லென்று வீசிடும் காற்றும்
சேர்ந்துபறந்த தூவானம்
வல்லமனதிலும் இன்பம்
வந்துஇருந்திடச் செய்யும்

காலைமலர்ந்திடும் பூவும்
காற்றிலெழுந்திடும் வாசம்
கோல மயில்கொள் குமரன்
கும்பிடும் சன்னதி, கோவில்
நாலும் தெரிந்தவ ரோதும்
நான்மறை யின் ஒலியாவும்
சீலமுடன் உளம் மேவும்
சென்றுதுயர் தனைப் போக்கும்


மாலை மஞ்சள்வெயில் ஆகும்
மன்னவ ரெண்ணியே மோகம்
சேலை இடைதனில் நோகும்
செய்வதும்ம றந்து போகும்
வாலைக் குமரியின் நெஞ்சம்
வாலிபர் கொஞ்சிடச் சொல்லும்
காலைவிடிந்திடக் காணும்
கற்பனைகள் சுகம் காணூம்

கோபம் கனலென வீசும்
கொண்டவரின் மனம் தீயும்
தாபம்கரையத் தவழும்
தங்கச்சிலையெனும் சேயும்
தூய மழலையும் பேசும்
தேனென காதினில் சேரும்
பாவசினங்கள் அழித்து
பஞ்சென உள்ளம் மிதக்கும்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 21, 2010 4:10 pm

எதையோ எழுதி குவிப்பதைக்காட்டுலும்
எண்ணங்களை வரிசைப்படுத்தும் உங்கள்
எழுத்தின்திறம் எம்மை வியக்கவைக்கிறது..

தொடரட்டும் உங்கள் தூயபணி... புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) 677196 புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) 154550

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 21, 2010 4:20 pm

Thanjaavooraan wrote:எதையோ எழுதி குவிப்பதைக்காட்டுலும்
எண்ணங்களை வரிசைப்படுத்தும் உங்கள்
எழுத்தின்திறம் எம்மை வியக்கவைக்கிறது..

தொடரட்டும் உங்கள் தூயபணி... புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) 677196 புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) 154550

இதில் ஒன்றும் உள்குத்து இல்லையே !!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 6:28 pm

Thanjaavooraan wrote:எதையோ எழுதி குவிப்பதைக்காட்டுலும்
எண்ணங்களை வரிசைப்படுத்தும் உங்கள்
எழுத்தின்திறம் எம்மை வியக்கவைக்கிறது..

தொடரட்டும் உங்கள் தூயபணி... புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) 677196 புதுவருடமே வருக +ஆனந்த வேளை (2 கவிதைகள்) 154550

பாராட்டுக்கள் மார்கழி மாதத்தில் நீரோடையில் குளித்ததுபோல்
ஜில் லென்றிருக்கவே
எப்போதும் பாராட்டும் தங்களுக்கும், மற்ற அனைவருக்குமாக


தூவும் மலர்கள் மீதிரு காலும்
தோளில்மாலை சூடுதல்போலும்
ஆவின்பாலில் தேனை ஊற்றி
அருந்தும் உணர்வும் பொங்கிப்பரவ
நாவில் தமிழும் பொங்கும் வண்ணம்
நல்கும் தங்கள் வாழ்த்தைப் போற்ற
பாவில்பாட வார்த்தை போதா
பணிவோடன்பைப் பதிலாய் ஈந்தேன்



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 6:39 pm

கோபம் கனலென வீசும்
கொண்டவரின் மனம் தீயும்
தாபம்கரையத் தவழும்
தங்கச்சிலையெனும் சேயும்
தூய மழலையும் பேசும்
தேனென காதினில் சேரும்
பாவசினங்கள் அழித்து
பஞ்சென உள்ளம் மிதக்கும்



கிரிகசன் அவர்களே உங்களின் அழகான சொல்லோட்டம்
கவிதையில் மிளிர்கிறது. பாராட்டுக்கள்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 22, 2010 2:38 am

Kaa Na Kalyanasundaram wrote:கோபம் கனலென வீசும்
கொண்டவரின் மனம் தீயும்
தாபம்கரையத் தவழும்
தங்கச்சிலையெனும் சேயும்
தூய மழலையும் பேசும்
தேனென காதினில் சேரும்
பாவசினங்கள் அழித்து
பஞ்சென உள்ளம் மிதக்கும்



கிரிகசன் அவர்களே உங்களின் அழகான சொல்லோட்டம்
கவிதையில் மிளிர்கிறது. பாராட்டுக்கள்.

தங்களுக்கு மிகுந்த நன்றிகள் ஐயா!

இதோ தங்களுக்கும், அனைவருக்குமாக.


வெள்ளி மலர்களை வானவெளியினில்
கிள்ளி யெடுத்துவந்து
அள்ளியே தோரணம் கட்டிவைத்து அங்கு
ஆடிடும் ஊஞ்சல்வைத்து
தள்ளி யசைத்திடத்தோன்றும் வயிற்றினில்
மெல்லிய தோர்பிசைவு
துள்ளுகிறேன் உணர்வோடு அனைவரும்
சொல்லிடும் வாழ்த்ததற்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக