புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
19 Posts - 3%
prajai
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முயன்றால் முடியும் Poll_c10முயன்றால் முடியும் Poll_m10முயன்றால் முடியும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்றால் முடியும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 6:04 pm

“முயற்சி திருவினையாக்கும்” என்பதும் “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் “ என்பதும் எமது வள்ளுவப் பெருந்தகை ஏற்கனவே முயற்சி பற்றிய விடயங்களையும் அதன் பலாபலன்களையும் எமக்கு எடுத்தியம்பியவை முற்றிலும் உண்மையே! ஏனெனில் ஒரு காரியத்தை நாம் முயற்சிக்காமல் விட்டால் அது நமக்கு முடியாததாகின்றது. முயன்றால் அது நமக்கு முடிந்து விடும்.

எண்ணங்கள்தான் மனிதர்களை ஆழ்கின்றது. ஏனெனில் ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் எண்ணங்களே எண்ணம் என்னும் விதையை நாம் உள்ளம் என்னும் நிலத்தில் நட்டு முயற்சி, உழைப்பு என்னும் நீரையும், ஆர்வம் என்னும் உரத்தையும் இட்டு வளர்க்கும் போதுதான் ஒரு விதை பெரிய மரமாக வளர்கிறது. அதுபோல ஒரு எண்ணம் மனிதனை உயர்த்துகின்றது.

ஒருவர் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என நினைக்கக் காரணம் இந்த “எண்ணங்களே”தாழ்வான எண்ணங்களை உடையவர்களுக்கு உயர்ந்த இலட்சியங்கள் இருக்காது. எனவே அந்த இலட்சியங்களை அடைவதற்கு அவர் முயற்சிக்கவும் மாட்டார். தாழ்ந்த மனமானது உறுதியானதாகவும், வலிமையானதாகவும் அமையாது. மனதில் வலிமையும் ,உறுதியும் இல்லையெனில் எதையும் சாதிப்பதற்கு தேவையான ஆற்றலும் இருக்காது.எனவே எண்ணங்களை நாமே கட்டியாள வேண்டும் ,எண்ணங்கள் நம்மைக் கட்டியாளாத வகையில் செயற்படப்பழகிக் கொள்ள வேண்டும்.

மேலும் தனக்கென்று ஓர் இலட்சியத்தினை ஏற்படுத்திக்கொண்டு அந்த இலட்சியத்தை அடைவதற்கு வேண்டிய தகுதிகளையும், வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொள்ள முயன்று கடுமையாக உழைத்து வருபவன் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் படி தன்னை உயர்த்திக்கொள்வான்.

எண்ணங்களை என்னினால் மட்டும் போதாது அதற்கேற்றது போல் செயற்படவும் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் தான் மனிதர்களை உருவாக்கின்றன. என்பது ஒரு முழுமையான உண்மையல்ல. ஊக்கமும் வலிமையும் மிகுந்த ஒரு மனதில் உயர்ந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தகைய மனதுடையவர்கள் உயர்வடைவார் என்பதுதான் உண்மை.

இவ்வாறான முயற்சியையே துணைகொண்டு வாழ்ந்தவர்களில் எடிசன்,நெப்போலியன், என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.”இளமைக் காலத்திலே அரைவயிற்றுச்சோறு கிடைக்காமல் திண்டாடிய “தோமஸ்அல்வா எடிசன்” புகழ் பெற்ற விஞ்ஞானியானதும்,” படடினியாலும், காசநோயாலும் பாதிக்கப்பட்டு தோல்வி கண்ட “அலுஜாக்ஸன்” பிற்காலத்தில் புகழ் பெற்ற நடிகனானதும்”, இளமையிலே வறுமையின் பிடியிலே சிக்கித் தத்தளித்த “நெப்போலியன்பிரான்ஸின்” தளபதியானதும் இவர்களது விடாமுயற்சியே என்று கூறுவது சாலவும் பொருத்தமானதே.

வாழ்கையில் நாம் எதைச் செய்ய வேண்டும் என விரும்பனாலும் அதற்காக முயற்சிக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். தகுந்த முயற்சியும் உழைப்பும் இல்லாமல் யாரும் முன்னேற முடியாது.சிலர் நான் படும் கஸ்டத்தில் வாழ்கையில் முன்னேறுவது பற்றி எப்படி யோசிக்க முடியும் ? என்று சிலர் அங்கலாய்ப்பதனைக் காண்கின்றோம்.” வுhழ்க்கையின் சங்கடங்கள் எல்லாம் தீர்ந்தால் தான் வாழ்க்கையில் உயர்வது பற்றிச் சிந்திக்க முடியும் என்று ஒருவர் கூறுவது கடல் அலைகள் ஓய்ந்த பிறகுதான் கடலில் நீராடுவேன் என்று கூறுவதனை ஒக்கும். எனவே இதனை எல்லாம் தவிர்த்து முயற்சிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன கிடைக்கின்றது என்பதனைப் பற்றி கவலைப் படாதீர்கள் உங்களுக்கு தேவையானவற்றை அடையும் முயற்சியில் ஈடுபடுங்கள் மற்றவர்கள் உங்களுக்கு உற்சாகம் கொடுத்து ஊக்குவிப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் ஏமாறத்தான் வேண்டியிருக்கும் .சோர்வு கண்ட சமயங்களில் தனக்குத்தானே உற்சாகமூட்டிக்கொண்டு தொடர்ந்து உழைத்து வருபவன் தான் வெற்றி வீரனாகத்தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.

எந்த முயற்சிலும் ஈடுபடாமல் வெறுமனே கனவுலகில் மிதந்து கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எத்தகைய உயர்வினையும் பேறுவதில்லை. உயர்ந்த முயற்சிலும் உழைப்பிலும் ஈடுபடுவாகள் தான் மனித இனத்திற்கு முழுமையாகப் பயன்பட்டு சரித்திர நாயகர்களாத் தங்களை உயர்த்திக்கொள்கின்றனர்.சமுதாயத்தில் எத்தகைய நிலையில் இருப்பவர்களாயினும் சரி பணக்காரனாக அல்லது ஏழையாக இருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று உயர்ந்த இலட்சியத்தினை வைத்துக கொண்டுஅதனை அடைவதற்கு தொடர்ந்து கடுமையான முயற்சிலும்,உழைப்பிலம் ஈடுபட்டு வந்தால் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்கையில் உயரமுடியும்.

Suhailahmed இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 6:04 pm

சோதனைகள்,தோல்விகள்,ஏமாற்றங்மள் போன்றவற்றைக்கண்டு கண்டு முயற்சினை பாதியில் கைவிட்டு ஓடி ஒளிந்து கொள்பவன் வெற்றியின் பலனை அனுபவிக்க முடியாது.அத்தகையவர்களை உலகம் மதிக்காது.உண்iயில் இதுபோன்ற சோதனைகளும் ,ஏமாற்றங்களும் ,எதிர்ப்புகளும்தான் ஒருவனுக்கு அவனுடைய திறமைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கின்றன. ஒருவர் அவருடைய முழுத்திறமைகளையும் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பமும் இதுவே.ஒருவர் அவரை மறந்து அவருடைய வேலையில் மூழ்கிவிடும் போது எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும,தோல்விகளும் தடுத்து நிறுத்துவதற்கு சக்தியற்றவைகளாகி விடுகின்றன. வாழ்க்கையில் உயர்வடைய விரும்பும் ஒருவர் தன்னம்பிக்கையோடு செயற்படவேண்டும்.

இன்று அநேகமான மனித மனங்களில் ஒரு செயலைச் செய்வதற்கான முயற்சிக்கு தடையாக இருப்பவை பற்பல எண்ணங்களே அதைச செய்தால் மற்றவர்கள் நம்மை எப்படி எல்லாம் விமர்சிப்பார்களோ என்னும் அச்சம் ஒன்றைச் செய்தால் நன்றாகச் செய்ய வேண்டும் இல்லையெனில் அதனைச செய்யாமல் இருப்பதே சிறந்தது, என்னும் நம்முடைய எண்ணம் ,நமக்கெல்லாம் இது சரிபட்டு வராது என்னும் தாழ்வுமனப்பான்மை, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தல் இவைகளே நமது முயற்சிக்குத் தடையாக அமைபவை.

எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் ,எத்தனை இடையுறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலல் இலட்சியந்தான் முக்கியம் என்று எண்ணி அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்கவேண்டும் . இது ஒவ்வொருவரும் தங்களது மனங்களை தயார் செய்து கொண்டால் மற்றவற்றினை அந்த மனமே பார்த்துக்கொள்ளும்.

இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம் யாராவது ஒருவர் ஒருகாரியத்தினை முன்வந்து செய்யப்போனால் சபையில் விமர்சிப்பதற்கு ¾ பங்கினர் இதற்கென்றே அச் சபையில் காத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் எதற்கும் உதவாத உதவாக்கரைகள் இவர்கள் போன்றோர்களாளேயே இன்று நம் நாடு மாத்திரமின்றி ஏனைய சில நாடுகளும் முன்னேறாததற்கு மூல காரணமாகும் என்று கூறுவது சாலப் பொருத்தமானதே .

நித்தமும் கவலை கொண்டு

ஒடுங்கிய மனத்தால் ஓரமாய்

உட்கார்ந்து இருக்கும் ஏழைமானிடா

விடியும் என விடிவெள்ளியை எதிர்பாராதே

வடியும் கண்ணீரில் வாழ்வு ஏதடா

உனக்கு கீழே இருப்பவர் ஒரு கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி பெற்று

முயன்றிடு முயற்சியில்



எனவே இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏறவேண்டிய உயரம் சட்டென்று செங்குத்தான பாறையாக அமைந்து விடலாம், கடக்க வேண்டிய பாதை தீடீரென்று நீளமாகி விட்டதனைப் போல தோன்றலாம் இவ்வாறான சூழ்நிலையிலும் நாம் நமது முயற்சியிலேயே கண்ணாக இருந்து விட்டால் நமது குறிக்கோள் வெற்றியில் முடியும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லையே……

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக