ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்றால் முடியும்

Go down

முயன்றால் முடியும் Empty முயன்றால் முடியும்

Post by சிவா Thu Aug 20, 2009 6:04 pm

“முயற்சி திருவினையாக்கும்” என்பதும் “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் “ என்பதும் எமது வள்ளுவப் பெருந்தகை ஏற்கனவே முயற்சி பற்றிய விடயங்களையும் அதன் பலாபலன்களையும் எமக்கு எடுத்தியம்பியவை முற்றிலும் உண்மையே! ஏனெனில் ஒரு காரியத்தை நாம் முயற்சிக்காமல் விட்டால் அது நமக்கு முடியாததாகின்றது. முயன்றால் அது நமக்கு முடிந்து விடும்.

எண்ணங்கள்தான் மனிதர்களை ஆழ்கின்றது. ஏனெனில் ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் எண்ணங்களே எண்ணம் என்னும் விதையை நாம் உள்ளம் என்னும் நிலத்தில் நட்டு முயற்சி, உழைப்பு என்னும் நீரையும், ஆர்வம் என்னும் உரத்தையும் இட்டு வளர்க்கும் போதுதான் ஒரு விதை பெரிய மரமாக வளர்கிறது. அதுபோல ஒரு எண்ணம் மனிதனை உயர்த்துகின்றது.

ஒருவர் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என நினைக்கக் காரணம் இந்த “எண்ணங்களே”தாழ்வான எண்ணங்களை உடையவர்களுக்கு உயர்ந்த இலட்சியங்கள் இருக்காது. எனவே அந்த இலட்சியங்களை அடைவதற்கு அவர் முயற்சிக்கவும் மாட்டார். தாழ்ந்த மனமானது உறுதியானதாகவும், வலிமையானதாகவும் அமையாது. மனதில் வலிமையும் ,உறுதியும் இல்லையெனில் எதையும் சாதிப்பதற்கு தேவையான ஆற்றலும் இருக்காது.எனவே எண்ணங்களை நாமே கட்டியாள வேண்டும் ,எண்ணங்கள் நம்மைக் கட்டியாளாத வகையில் செயற்படப்பழகிக் கொள்ள வேண்டும்.

மேலும் தனக்கென்று ஓர் இலட்சியத்தினை ஏற்படுத்திக்கொண்டு அந்த இலட்சியத்தை அடைவதற்கு வேண்டிய தகுதிகளையும், வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொள்ள முயன்று கடுமையாக உழைத்து வருபவன் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் படி தன்னை உயர்த்திக்கொள்வான்.

எண்ணங்களை என்னினால் மட்டும் போதாது அதற்கேற்றது போல் செயற்படவும் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் தான் மனிதர்களை உருவாக்கின்றன. என்பது ஒரு முழுமையான உண்மையல்ல. ஊக்கமும் வலிமையும் மிகுந்த ஒரு மனதில் உயர்ந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தகைய மனதுடையவர்கள் உயர்வடைவார் என்பதுதான் உண்மை.

இவ்வாறான முயற்சியையே துணைகொண்டு வாழ்ந்தவர்களில் எடிசன்,நெப்போலியன், என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.”இளமைக் காலத்திலே அரைவயிற்றுச்சோறு கிடைக்காமல் திண்டாடிய “தோமஸ்அல்வா எடிசன்” புகழ் பெற்ற விஞ்ஞானியானதும்,” படடினியாலும், காசநோயாலும் பாதிக்கப்பட்டு தோல்வி கண்ட “அலுஜாக்ஸன்” பிற்காலத்தில் புகழ் பெற்ற நடிகனானதும்”, இளமையிலே வறுமையின் பிடியிலே சிக்கித் தத்தளித்த “நெப்போலியன்பிரான்ஸின்” தளபதியானதும் இவர்களது விடாமுயற்சியே என்று கூறுவது சாலவும் பொருத்தமானதே.

வாழ்கையில் நாம் எதைச் செய்ய வேண்டும் என விரும்பனாலும் அதற்காக முயற்சிக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். தகுந்த முயற்சியும் உழைப்பும் இல்லாமல் யாரும் முன்னேற முடியாது.சிலர் நான் படும் கஸ்டத்தில் வாழ்கையில் முன்னேறுவது பற்றி எப்படி யோசிக்க முடியும் ? என்று சிலர் அங்கலாய்ப்பதனைக் காண்கின்றோம்.” வுhழ்க்கையின் சங்கடங்கள் எல்லாம் தீர்ந்தால் தான் வாழ்க்கையில் உயர்வது பற்றிச் சிந்திக்க முடியும் என்று ஒருவர் கூறுவது கடல் அலைகள் ஓய்ந்த பிறகுதான் கடலில் நீராடுவேன் என்று கூறுவதனை ஒக்கும். எனவே இதனை எல்லாம் தவிர்த்து முயற்சிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன கிடைக்கின்றது என்பதனைப் பற்றி கவலைப் படாதீர்கள் உங்களுக்கு தேவையானவற்றை அடையும் முயற்சியில் ஈடுபடுங்கள் மற்றவர்கள் உங்களுக்கு உற்சாகம் கொடுத்து ஊக்குவிப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் ஏமாறத்தான் வேண்டியிருக்கும் .சோர்வு கண்ட சமயங்களில் தனக்குத்தானே உற்சாகமூட்டிக்கொண்டு தொடர்ந்து உழைத்து வருபவன் தான் வெற்றி வீரனாகத்தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.

எந்த முயற்சிலும் ஈடுபடாமல் வெறுமனே கனவுலகில் மிதந்து கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எத்தகைய உயர்வினையும் பேறுவதில்லை. உயர்ந்த முயற்சிலும் உழைப்பிலும் ஈடுபடுவாகள் தான் மனித இனத்திற்கு முழுமையாகப் பயன்பட்டு சரித்திர நாயகர்களாத் தங்களை உயர்த்திக்கொள்கின்றனர்.சமுதாயத்தில் எத்தகைய நிலையில் இருப்பவர்களாயினும் சரி பணக்காரனாக அல்லது ஏழையாக இருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று உயர்ந்த இலட்சியத்தினை வைத்துக கொண்டுஅதனை அடைவதற்கு தொடர்ந்து கடுமையான முயற்சிலும்,உழைப்பிலம் ஈடுபட்டு வந்தால் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்கையில் உயரமுடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Suhailahmed இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

முயன்றால் முடியும் Empty Re: முயன்றால் முடியும்

Post by சிவா Thu Aug 20, 2009 6:04 pm

சோதனைகள்,தோல்விகள்,ஏமாற்றங்மள் போன்றவற்றைக்கண்டு கண்டு முயற்சினை பாதியில் கைவிட்டு ஓடி ஒளிந்து கொள்பவன் வெற்றியின் பலனை அனுபவிக்க முடியாது.அத்தகையவர்களை உலகம் மதிக்காது.உண்iயில் இதுபோன்ற சோதனைகளும் ,ஏமாற்றங்களும் ,எதிர்ப்புகளும்தான் ஒருவனுக்கு அவனுடைய திறமைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கின்றன. ஒருவர் அவருடைய முழுத்திறமைகளையும் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பமும் இதுவே.ஒருவர் அவரை மறந்து அவருடைய வேலையில் மூழ்கிவிடும் போது எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும,தோல்விகளும் தடுத்து நிறுத்துவதற்கு சக்தியற்றவைகளாகி விடுகின்றன. வாழ்க்கையில் உயர்வடைய விரும்பும் ஒருவர் தன்னம்பிக்கையோடு செயற்படவேண்டும்.

இன்று அநேகமான மனித மனங்களில் ஒரு செயலைச் செய்வதற்கான முயற்சிக்கு தடையாக இருப்பவை பற்பல எண்ணங்களே அதைச செய்தால் மற்றவர்கள் நம்மை எப்படி எல்லாம் விமர்சிப்பார்களோ என்னும் அச்சம் ஒன்றைச் செய்தால் நன்றாகச் செய்ய வேண்டும் இல்லையெனில் அதனைச செய்யாமல் இருப்பதே சிறந்தது, என்னும் நம்முடைய எண்ணம் ,நமக்கெல்லாம் இது சரிபட்டு வராது என்னும் தாழ்வுமனப்பான்மை, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தல் இவைகளே நமது முயற்சிக்குத் தடையாக அமைபவை.

எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் ,எத்தனை இடையுறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலல் இலட்சியந்தான் முக்கியம் என்று எண்ணி அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்கவேண்டும் . இது ஒவ்வொருவரும் தங்களது மனங்களை தயார் செய்து கொண்டால் மற்றவற்றினை அந்த மனமே பார்த்துக்கொள்ளும்.

இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம் யாராவது ஒருவர் ஒருகாரியத்தினை முன்வந்து செய்யப்போனால் சபையில் விமர்சிப்பதற்கு ¾ பங்கினர் இதற்கென்றே அச் சபையில் காத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் எதற்கும் உதவாத உதவாக்கரைகள் இவர்கள் போன்றோர்களாளேயே இன்று நம் நாடு மாத்திரமின்றி ஏனைய சில நாடுகளும் முன்னேறாததற்கு மூல காரணமாகும் என்று கூறுவது சாலப் பொருத்தமானதே .

நித்தமும் கவலை கொண்டு

ஒடுங்கிய மனத்தால் ஓரமாய்

உட்கார்ந்து இருக்கும் ஏழைமானிடா

விடியும் என விடிவெள்ளியை எதிர்பாராதே

வடியும் கண்ணீரில் வாழ்வு ஏதடா

உனக்கு கீழே இருப்பவர் ஒரு கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி பெற்று

முயன்றிடு முயற்சியில்



எனவே இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏறவேண்டிய உயரம் சட்டென்று செங்குத்தான பாறையாக அமைந்து விடலாம், கடக்க வேண்டிய பாதை தீடீரென்று நீளமாகி விட்டதனைப் போல தோன்றலாம் இவ்வாறான சூழ்நிலையிலும் நாம் நமது முயற்சியிலேயே கண்ணாக இருந்து விட்டால் நமது குறிக்கோள் வெற்றியில் முடியும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லையே……
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum