ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

3 posters

Go down

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Empty ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

Post by krishnaamma Tue Dec 21, 2010 1:02 pm

திருவாதிரை கொண்டாட்டம் ஏன் ?மார்கழி மாதம் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜரின் திருநடனம் புரியும் கோயில்களில் இந்த விழா சிறப்பு. ஏன் தெரியுமா?

சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார்சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.

அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி . திருவாதிரை நட்சத்திரம். வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார். ""தினமும் தயிர்ச்சாதமும், புளி சாதமும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தாங்கள் அளித்த களி மிகப் பிரமாதம்!'' என்றார். தம்பதியர் ஆனந்தம் கொண்டனர்.

மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போயினர்.நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர்.அன்றுமுதல் நடராஜப்பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று. திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.

மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை 3மணிக்கே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை காலை 4 மணிக்கு கண்டு களிக்கலாம்."ஆதிரை' என்ற பெண்மணி திருமணத்தன்றே கணவனை இழந்தாள். அவள் சிவனிடம் வேண்டி, கணவனின் உயிரை மீட்டாள். அவளது பெயராலேயே "திருவாதிரை' விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கதை வழங்கப்படுகிறது. திருவாதிரை நாளில் நடராஜர் நடனம் கண்டு, வாழ்வில் செல்வம் பெறுவோம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Empty Re: ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

Post by krishnaamma Tue Dec 21, 2010 1:04 pm

தென்னக நடராஜர்கள் : சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அவற்றைக் காண, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும்.இந்த நான்கு கோயில்களுக்குமே ஒரே வரலாறு தான். உத்தரதேச மன்னன் சிங்கவர்மன், கொடுங்கோல் ஆட்சி செய்தான். பிற்காலத்தில் மனம் திருந்திதவமிருக்க காட்டிற்குச் சென்றான்.

அந்த காட்டில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இறைவன் திருநடனக்காட்சி அருளினார். அந்தக்காட்சியை சிங்கவர்மனும் கண்டான். முனிவர்களின் அறிவுரைப்படி நடராஜருக்கு சிதம்பரத்தில் கோயில் எழுப்பினான். நடராஜர் சிலை செய்யும்படி சிற்பிகளை பணித்தான்.

அவர்கள் தாமிரத்தால் ஒரு சிலையை செய்தனர். அதைப்பார்த்த அரசன் தாமிர சிலையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், தங்கத்தால் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தான்.தலைமை சிற்பியான நமச்சிவாய முத்து ஸ்தபதியிடம் ஏராளமான பொன் கொடுத்து சிலை செய்ய உத்தரவிட்டான். சிலை தயாரானது. ஆனால், அது தாமிரமாக மாறிவிட்டது. சிற்பிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மன்னனுக்கு தகவல் சென்றது.

அவன் சிற்பியை சிறையில் அடைத்தான்.அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தான் தங்கமாக இருக்க விரும்பவில்லை என்றும், எனவே தாமிர சிலையாக மாறியதாவும் கூறினார். இதையடுத்து சிற்பி விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து, அந்த சிலையை சிதம்பரம் கோயிலில் அமைத்தனர். முதலில் செய்யப்பட்ட தாமிர சிலையை சிவனின் உத்தரவுப்படி தென்புறத்திற்கு நமச்சிவாய ஸ்தபதி தூக்கி வந்தார். எந்த இடத்தில் ”மை அதிகமாகிறதோ, அங்கே வைத்துவிட வேண்டும் என் சிவன் சொல்லியிருந்தார். தாமிரபரணி கரையில் செப்பறை என்ற இடத்திற்கு வரும் போது சிலை கனத்தது. அந்த இடத்திலேயே சிலையை வைத்துவிட்டார்.

ராமபாண்டியன் என்ற மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டினான். நடராஜருக்கு தனி சந்நிதி அமைத்தான்.ராமபாண்டியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆண்ட சிற்றரசனான வீரபாண்டியன், செப்பறையில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டான். அதேபோல் தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது.

சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான்.இதேபோல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான்.

ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான்.இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது.

கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னைவிட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Empty Re: ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 1:14 pm

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Antique-Nataraja

ஆருத்த்ரா தரிசனம் காண அழைத்த கிருஷ்ணம்ம அவர்களுக்கு நன்றி.

'திருவாதிரை ஒரு வாய் களி' என்று சொல்வார்கள்.
சிதம்பரம் நடராஜப் பெருமானின் திருநடனம் மனத்தைக் கொள்ளைகொண்டது.

மார்கழித் திருவாதிரைத்திருநாளில் தில்லை அம்பல நரரசனின் அருள் பெறுவோம் வாரீர்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Empty Re: ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

Post by krishnaamma Tue Dec 21, 2010 2:53 pm

கட்டுரை முழுவதையும் ஒரே போட்டோ வில் போட்டுவிடிர்களே !
நன்றி கல்யாணசுந்தரம் அவர்களே. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Empty Re: ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

Post by அன்பு தளபதி Tue Dec 21, 2010 2:58 pm

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Shiva_dance5
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Empty Re: ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum