புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏமாற்று மன்னன் கைது  Poll_c10ஏமாற்று மன்னன் கைது  Poll_m10ஏமாற்று மன்னன் கைது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்று மன்னன் கைது


   
   
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 12:10 pm

சென்னையில் பல பெண்களை மணந்து, லட்சக்கணக்கில் நகை-பணத்தை சுருட்டிய பலே
திருமண மோசடி மன்னன் கைது செய்யப்பட்டார். பெண்களை வளைத்தது பற்றி அவர்
போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.





இளம்பெண் பத்மா

சென்னை சைதாப்பேட்டையை
சேர்ந்தவர் பத்மா (வயது 36 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சைதாப்பேட்டை
போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறி
இருப்பதாவது:-

நான் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். எனது
பெற்றோருக்கு ஒரே பெண். பி.எஸ்.சி. பட்டதாரியான எனது வாழ்க்கையில் ஏனோ 2
முறை விதி விளையாடி விட்டது. எனது தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
பெற்றோருக்கு நான் செல்லப்பிள்ளை. எனது விருப்பத்துக்கு பெற்றோர் குறுக்கே
நிற்க மாட்டார்கள்.

எனது முதல் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக
பிரிந்து சென்று விட்டார். அவர் மூலம் எனக்கு 3 வயதில் குழந்தை ஒன்று
உள்ளது. இந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய எனது பெற்றோர் என்னை
வற்புறுத்தினார்கள். இதனால் அதற்கு சம்மதித்தேன். நான் திருமணமாகி
விவாகரத்து பெற்றுள்ளேன். ஒரு குழந்தைக்கும் தாய். என்னைப்போல் விவாகரத்து
பெற்ற, படித்த நல்ல மாப்பிள்ளை தேவை என்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றில்
விளம்பரம் கொடுத்தேன்.

செந்தில்குமார்

எனது
விளம்பரத்தை பார்த்து செந்தில்குமார் (வயது 38) என்ற வாலிபர் எனது
வீட்டுக்கு நேரடியாக வந்து பெண் கேட்டார். அவரும் என்னைப்போல கருத்து
வேறுபாடால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இன்னொரு
திருமணத்துக்கு காத்திருப்பதாக தெரிவித்தார்.

எம்.சி.ஏ. படித்து
விட்டு, மாலத்தீவில் கம்ப்ïட்டர் `சாப்ட்வேர்' நிறுவனம் நடத்தி
வருவதாகவும், அதன் கிளைகள் தூத்துக்குடி உள்பட பல இடங்களில் இருப்பதாகவும்,
நல்ல வருமானம் வருவதாகவும் அவர் கூறினார்.

என்னை பெண் பார்த்து
விட்டு, என்னைப்போன்ற ஒரு பெண் அவருக்கு 2-வது மனைவியாக கிடைத்தால் தனது
வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷத்தை பார்ப்பேன் என்றும் கதை விட்டார். அவர்
சினிமா நடிகரைப்போல பார்க்க அழகாக இருந்தார். அவரது புறத்தோற்றம் மட்டும்
அழகாக இல்லை. அவரது பேச்சும் அழகாகத்தான் இருந்தது.

அவசர முடிவு

இதைப்பார்த்து
தான் என்னை அவருக்கு கொடுக்க அவசரப்பட்டு முடிவு செய்து விட்டேன். எனது
பெற்றோர், ஜாதகம் எல்லாம் பார்த்து முடிவு செய்யலாம் என்று சொன்னார்கள்.
நான் அதை ஏற்காமல், அவரை ஏற்க முடிவு செய்து விட்டேன். வரதட்சணை எதுவும்
வேண்டாம் என்று அவர் சொன்னது, அவரை நான் முழுமையாக ஏற்க தூண்டுகோல் ஆகி
விட்டது.

எங்களது திருமணம் முடிவாகி விட்டது. அவருக்கு சென்னை
நந்தனத்தில் வீடு வாடகைக்கு பார்த்து எனது செலவில் அவரை குடி வைத்தேன்.
அவரை மணக்கப்போகிறோமே என்ற சந்தோசத்தில் அவரோடு காரில் சுற்றினேன். ஆனால்
திடீரென்று அவர் ஒரு குண்டை தூக்கி போட்டார். அவருக்கு தொழிலில் திடீர்
நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால், திருமணத்தை தள்ளிப்போட சொன்னார்.

நகை-பணம்


அவர்
மீது உள்ள காதலால், அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எனக்கு ஏற்பட்டது போல்
உணர்ந்தேன். இதனால் அவருக்கு பண உதவி செய்ய முடிவு செய்தேன். எனது
பெற்றோருக்கு தெரியாமல் ரூ.4 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்தேன். பின்னர்
எனது நகைகள் 35 சவரனையும் கழற்றி கொடுத்தேன். தொழில் நல்ல முறையில்
வந்தவுடன், இதைப்போல் பல மடங்கு நகைகள் செய்து போட்டு, என்னை மணந்து
கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அவர் ஏமாற்றப் போகிறார் என்பது தானோ,
என்னவோ, அவரிடம் பணம், நகைகளை இழந்தாலும், கடவுள் அருளால் என்னை அவரிடம்
இழக்கவில்லை. அந்த ஒரு விசயத்தில் நான் கவனமாக இருந்தேன். அவர் பலமுறை
என்னை அடைய முயன்றாலும், சாமர்த்தியமாக திருமணம் முடிந்த பிறகு, என்னை
ஒப்படைக்கிறேன் என்று கூறி மறுத்து விட்டேன்.

ஓட்டம்

என்னிடம்
பணம்-நகைகளை வாங்கிய பிறகு, தொழிலை சரிகட்ட, மாலத்தீவு சென்று வருவதாக
செந்தில்குமார் கூறிச் சென்றார். போனவர், போனவர்தான். திரும்பி வரவில்லை.
அவரது செல்போனையும் `சுவிட்ச்ஆப்' செய்து விட்டார். அவரது சொந்த ஊர்
முகவரியையும் கோவை என்று சொல்லி ஒரு போலியான முகவரியை கொடுத்து விட்டார்.
அவர் என்ன ஆனார் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தபடி இருந்தேன்.

பெற்றோர்
எனது அவசர முடிவை சுட்டிக்காட்டி வருத்தப்பட்டார்கள். செந்தில் குமார்
ஏமாற்றி விட்டார் என்பதை உணர முடிந்தது. 6 மாதங்கள் அவரைப்பற்றி எந்த
தகவலும் இல்லாமல் தவித்தேன். இந்த நிலையில் அவரைப்பற்றி எனக்கு
அதிர்ச்சியான தகவல் ஒன்றை, சென்னை சவுந்தரபாண்டியனார் அங்காடி
(பாண்டிபஜார்) போலீசார் தெரிவித்தனர்.

பஞ்சாபி பெண்ணுடன் திருமணம்

எனது
கணவர் என்று கனவு கண்ட செந்தில்குமார் தியாகராயநகரில் வசிக்கும் பிரபல
பஞ்சாபி தொழில் அதிபர் ஒருவரின் மகளை காதலித்து, அழைத்து சென்று திருமணம்
செய்து விட்டு, அந்த பெண்ணை கோவையில் தவிக்க விட்டு ஓடி விட்டதாகவும், அந்த
பெண் தனது கற்பையும், நகை மற்றும் பணத்தையும் இழந்து விட்டதாகவும், அந்த
பெண்ணின் பெற்றோரின் புகாரின் பேரில் அவரை பிடித்து வைத்திருப்பதாக சவுந்தர
பாண்டியனார் அங்காடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனக்கு திருமண
ஆசைகாட்டி எனது நகை-பணத்தை சுருட்டிச் சென்ற செந்தில்குமார் மீது சட்டபூர்வ
நடவடிக்கை எடுத்து, எனது நகை-பணத்தையும் மீட்டுத் தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் பத்மா தெரிவித்து இருந்தார்.

கைது-ஜெயில்

அவரது
புகார் மனு மீது அடையாறு துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில்,
சைதாப்பேட்டை உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்
வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பஞ்சாபி தொழில்
அதிபரிடம், அவரது மகள் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். அவர் தனது புகாரை
வாபஸ் வாங்கிக் கொண்டு, தனது மகளின் திருமணம் விளையாட்டாக கனவு போல
நடந்ததாக நினைத்து கொள்வதாக கூறி விட்டு போய் விட்டார்.

இதனால்
சவுந்தரபாண்டியனார் அங்காடி போலீசார் வழக்கு எதுவும் போடாமல்,
செந்தில்குமாரை சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். பத்மா புகார்
அடிப்படையில், மோசடி சட்டப்பிரிவின் கீழ் செந்தில்குமாரை சைதாப்பேட்டை
போலீசார் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். ஆனால் அவரை
சவுந்தரபாண்டியனார் அங்காடி போலீசாரைப்போல வழக்கு எதுவும் போடாமல் விட்டு,
விடும்படி சிலர் சிபாரிசு செய்தனர். இதனால் இரவோடு, இரவாக போலீசார்
செந்தில்குமாரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைத்து விட்டனர்.

நகை மீட்பு

செந்தில்குமார்,
பத்மாவிடம் வாங்கிய ரூ. 4 லட்சம் பணத்தையும் ஊதாரித்தனமாக செலவு செய்து
விட்டார். நகைகளை வாங்கி ஒரு அடகு கடையில், அடமானம் வைத்திருந்தார். அந்த
நகைகள் மீட்கப்பட்டது. லேப்டாப் கம்ப்ïட்டர் கருவி ஒன்றும்,
எல்.சி.டி.டி.வி ஒன்றும் செந்தில்குமாரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

வாக்குமூலம்

செந்தில்குமார்
போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தான் பெண்களை வைத்து திருமண
விளையாட்டு விளையாடியது ஏன்? எப்படி? என்று போலீசாரிடம் பரபரப்பு
வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-

"கோவை
சவுரிபாளையம் எனது சொந்த ஊராகும். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை.
தந்தை விவசாயம் செய்கிறார். எனது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த முதல்
திருமணம் எனக்கு சரி இல்லாமல் முறிந்து போனது. முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்பது போல எனது திருமண வாழ்க்கை சரியாக அமைய வில்லை. எனது ஜாதகமும்,
பல பெண்களை மணக்கும் யோகம் எனக்கு இருப்பதாக சொன்னது. அதனால் நானும் இதை
வைத்து ஒரு மோசடி விளையாட்டு நடத்த முடிவு செய்தேன்.

பத்மாவை
மணப்பதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் போதே, உடற் பயிற்சி கூடம் ஒன்றில்
பஞ்சாபி ப்பெண் நீத்துவை(வயது 22-பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன்.
அவள் என்னிடம் காதல் வயப்பட்டாள். அதனால் ஒரே நேரத்தில் பத்மா, நீத்து
இருவரையும் மணந்து, நகை-பணத்தை பறித்துக் கொண்டு இருவருக்கும் அல்வா
கொடுக்க தீர்மானித்தேன். ஆனால் பத்மா போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் அவரை
திருமணம் செய்யாமலேயே நகை-பணத்தை மட்டும் சுருட்டினேன். நீத்து என்னோடு
ஓடி வர சம்மதித்ததால் அவரை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு, முதல்
இரவையும் உல்லாசமாக கழித்து விட்டு, அவரை கோவையில், ஒரு வீடு பார்த்து குடி
வைத்து விட்டு, தப்பி வந்து விட்டேன். எனது மோசடி பட்டியல் நீள்வதற்குள்
போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன்.''

இவ்வாறு செந்தில்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செந்தில்குமார்
மேலும் இது போல் பல பெண்களை மணந்து, மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார்
கருதுகிறார்கள். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க
முடிவு செய்துள்ளனர்.

tamilcnn.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 12:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏமாற்று மன்னன் கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 1:22 pm

நான் அவன் இல்லை பாகம் மூன்று போல... என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக