Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
+18
தர்மா
யினியவன்
முரளிராஜா
baskars11
பிஜிராமன்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
ANTHAPPAARVAI
Aathira
அன்பு தளபதி
கலைவேந்தன்
பாலாஜி
Thanjaavooraan
கார்த்திக்
ரபீக்
ramesh.vait
உதயசுதா
balakarthik
22 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
First topic message reminder :
முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .
இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.
அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.
மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.
சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.
1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?
3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?
4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?
5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?
இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.
மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .
பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு
முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .
இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.
அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.
மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.
சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.
1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?
3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?
4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?
5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?
இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.
மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .
பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு
Last edited by balakarthik on Tue Dec 28, 2010 5:32 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
ரெஸ்யும் தயாரித்து விட்டீர்களா? இப்பொழுது எங்கு, எப்படி வேலைக்கு அப்ளை செய்யலாம் என்று பார்ப்போம்.அதற்கு முன்பு ஒரு சிறுவேலை. அனுபவம் குறைவாக இருப்பவர்களுக்கு கவலையில்லை. ஆனால் 10 வருடத்திற்கு மேல் அனுபவம் கொன்டவர்கள் தங்களைப் பற்றிய Brief profile ஒன்றை தயார் செய்து கொள்வது உத்தமம். முதலில் இந்த Brief profileஐ தந்து தேர்வான பின் விரிவான ரெஸ்யுமேவை தரலாம். மார்க்கெட்டில் உங்களது புரொஃபைல் எளிதில் கிடைத்தால் மதிப்பு குறையக்கூடும். இதில் உங்களின் கல்வித்தகுதி, வேலை அனுபவம், தனித்திறமைகள் பொன்றவற்றை மட்டும் கொடுத்தால் போதும்.புகைப்படம் ஒன்றை இணைப்பதும் நல்லது. இப்போது எங்கெல்லாம் வேலைக்கு அப்ளை செய்யலாம் என்பதை பார்ப்போம்
1) நிறுவனங்களின் இணையத்தளங்கள்:
பொதுவாக எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென பிரத்யேகமாக ஒரு இணையத்தளம் வைத்திருப்பார்கள். அதன் மூலமாகவே நமது ரெஸ்யுமேவை அவர்களுக்கு அனுப்பலாம். அல்லது அவர்கள் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். பன்னாட்டு நிறுவனங்கள் பொதுவாக இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும் இதன் மூலம் அனுப்பப்படும் ரெஸ்யூம்கள் மற்றவர்கள் கைகளில் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே வேலை தேடுவது என்று முடிவெடுத்த பின் உங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சென்று உங்கள் ரெஸ்யுமேவை சேர்த்துவிடுங்கள். இதன் மூலம் வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு எனினும் உங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்க இதுவே சிறந்த வழியாகும்.
2) ஜாப் போர்ட்டல்ஸ் (Job Portals) :
Naukri, Monster போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்களில் உங்களது ரெஸ்யுமேவை இணைப்பது மூலம் பலரின் பார்வைக்கு அது செல்லும். இன்றைய தேதியில் 50% வேலைகள் இது போன்ற இணையதளங்கள் வழியாகவே நிரப்பப்படுகின்றன. சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இது போன்ற தளங்களில் பதிவு செய்கிறார்களா என்று கண்காணிப்பதும் உண்டு. இது தேவையற்ற ஒரு பயம். ஏனெனில் எந்த நேரத்திலும் நம்மை வீட்டுக்கு அனுப்ப நிறுவனங்கள் தயாராக இருக்கும்போது நாமும் நமது வேலைக்காக பதிவு செய்வதில் எந்த தவறும் கிடையாது. இருந்தாலும் சில சின்ன நிறுவனங்கள் இதை ஒரு பெரிய தவறாக பார்க்கின்றன. அப்படிப்பட்ட இடத்தில் வேலை செய்கிறவர்கள் யோசித்து செயல்படுங்கள். ஃபேஸ்புக் போல புரஃபஷனல்ஸ்க்காக இருக்கும் இணையத்தளம் linkedin.com . இது பற்றி தனி அத்தியாயம் வர இருப்பதால் பின்னர் பார்ப்போம்.
3) வேலை முகவர்கள்: (Job Consultants)
ஜாப் போர்ட்டலை நம்ப முடியாதவர்கள் கன்சல்டன்ட்டை நம்பலாம். இவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினை உங்களுக்கு தேவை இருக்கும்போது உங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு அவர்களிடம் இருக்காது. ஆனால் நிச்சயம் அவர்களின் நெட்வொர்க்கில் என்றாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே முகவர்களிடம் ரெஸ்யும் தருபவர்கள் அவருடன் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்வது நல்லது. மாதம் ஒரு முறை ஃபோனிலே விவரங்கள் கேட்டுக் கொள்ளலாம். மேலும் இவர்கள் உங்களுக்கு வேலை தொடர்பான டிப்ஸ் தரும் வாய்ப்பும் உண்டு. உங்கள் அனுபவத்திற்கு ஏற்ற, நல்ல முகவர்கள் ஒருவராவது உங்களுக்கு அவசியம் தேவை. இவர்களை மருத்துவர்களை போன்றவர்கள் என்று சொல்லலாம். உங்களுக்கு தேவையான போது உதவுபவர்கள்.
4) எம்ப்ளாயி ரெஃபெரென்ஸ் (Employee Reference) :
ஐ.டி துறையில் இது பிரபலமான ஒன்று. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் நண்பர்கள் ரெஃபெர் செய்யலாம். இதனால் ரெஃபெர் செய்பவருக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கும். அவர் நண்பர்களும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ரெஸ்யுமேவை அனுப்பி அவர்கள் நிறுவனத்தில் ரெஃபர் செய்ய சொல்லலாம்.
5) செய்தித்தாள் விளம்பரங்கள் :
நீங்கள் வேலை தேடுகிறீர்களோ இல்லையோ, வாராவாரம் Hindu Oppurtunities போன்று வேலை தொடர்பான Supplement களை அவசியம் படியுங்கள். பலருக்கு இது சிறந்த வேலைகளை தந்திருக்கிறது. புதிய தலைமுறை இதழ் கூட தற்போது வேலை வாய்ப்பு செய்திகளை அதிகம் தந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வேலைக்கு ஏற்ற செய்திகள் தரும் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் எதுவென்று அறிந்து தொடர்ந்து கவனித்து வாருங்கள்.
மற்ற வழிகள் குறித்து இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.
தொடரும் ..............
1) நிறுவனங்களின் இணையத்தளங்கள்:
பொதுவாக எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென பிரத்யேகமாக ஒரு இணையத்தளம் வைத்திருப்பார்கள். அதன் மூலமாகவே நமது ரெஸ்யுமேவை அவர்களுக்கு அனுப்பலாம். அல்லது அவர்கள் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். பன்னாட்டு நிறுவனங்கள் பொதுவாக இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும் இதன் மூலம் அனுப்பப்படும் ரெஸ்யூம்கள் மற்றவர்கள் கைகளில் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே வேலை தேடுவது என்று முடிவெடுத்த பின் உங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சென்று உங்கள் ரெஸ்யுமேவை சேர்த்துவிடுங்கள். இதன் மூலம் வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு எனினும் உங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்க இதுவே சிறந்த வழியாகும்.
2) ஜாப் போர்ட்டல்ஸ் (Job Portals) :
Naukri, Monster போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்களில் உங்களது ரெஸ்யுமேவை இணைப்பது மூலம் பலரின் பார்வைக்கு அது செல்லும். இன்றைய தேதியில் 50% வேலைகள் இது போன்ற இணையதளங்கள் வழியாகவே நிரப்பப்படுகின்றன. சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இது போன்ற தளங்களில் பதிவு செய்கிறார்களா என்று கண்காணிப்பதும் உண்டு. இது தேவையற்ற ஒரு பயம். ஏனெனில் எந்த நேரத்திலும் நம்மை வீட்டுக்கு அனுப்ப நிறுவனங்கள் தயாராக இருக்கும்போது நாமும் நமது வேலைக்காக பதிவு செய்வதில் எந்த தவறும் கிடையாது. இருந்தாலும் சில சின்ன நிறுவனங்கள் இதை ஒரு பெரிய தவறாக பார்க்கின்றன. அப்படிப்பட்ட இடத்தில் வேலை செய்கிறவர்கள் யோசித்து செயல்படுங்கள். ஃபேஸ்புக் போல புரஃபஷனல்ஸ்க்காக இருக்கும் இணையத்தளம் linkedin.com . இது பற்றி தனி அத்தியாயம் வர இருப்பதால் பின்னர் பார்ப்போம்.
3) வேலை முகவர்கள்: (Job Consultants)
ஜாப் போர்ட்டலை நம்ப முடியாதவர்கள் கன்சல்டன்ட்டை நம்பலாம். இவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினை உங்களுக்கு தேவை இருக்கும்போது உங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு அவர்களிடம் இருக்காது. ஆனால் நிச்சயம் அவர்களின் நெட்வொர்க்கில் என்றாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே முகவர்களிடம் ரெஸ்யும் தருபவர்கள் அவருடன் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்வது நல்லது. மாதம் ஒரு முறை ஃபோனிலே விவரங்கள் கேட்டுக் கொள்ளலாம். மேலும் இவர்கள் உங்களுக்கு வேலை தொடர்பான டிப்ஸ் தரும் வாய்ப்பும் உண்டு. உங்கள் அனுபவத்திற்கு ஏற்ற, நல்ல முகவர்கள் ஒருவராவது உங்களுக்கு அவசியம் தேவை. இவர்களை மருத்துவர்களை போன்றவர்கள் என்று சொல்லலாம். உங்களுக்கு தேவையான போது உதவுபவர்கள்.
4) எம்ப்ளாயி ரெஃபெரென்ஸ் (Employee Reference) :
ஐ.டி துறையில் இது பிரபலமான ஒன்று. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் நண்பர்கள் ரெஃபெர் செய்யலாம். இதனால் ரெஃபெர் செய்பவருக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கும். அவர் நண்பர்களும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ரெஸ்யுமேவை அனுப்பி அவர்கள் நிறுவனத்தில் ரெஃபர் செய்ய சொல்லலாம்.
5) செய்தித்தாள் விளம்பரங்கள் :
நீங்கள் வேலை தேடுகிறீர்களோ இல்லையோ, வாராவாரம் Hindu Oppurtunities போன்று வேலை தொடர்பான Supplement களை அவசியம் படியுங்கள். பலருக்கு இது சிறந்த வேலைகளை தந்திருக்கிறது. புதிய தலைமுறை இதழ் கூட தற்போது வேலை வாய்ப்பு செய்திகளை அதிகம் தந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வேலைக்கு ஏற்ற செய்திகள் தரும் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் எதுவென்று அறிந்து தொடர்ந்து கவனித்து வாருங்கள்.
மற்ற வழிகள் குறித்து இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.
தொடரும் ..............
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
மிகவும் பயனுள்ள பதிவு பாலா... நன்றி பாலா... அப்புறம் ...எங்க போயிருந்தே இத்தனை நாளும்... சொல்லவே இல்ல...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
கொஞ்சம் சீரியஸ் மேட்டர் பேசுவோமா?
பொதுத் தேர்வுகள் நடக்கும் காலமிது. முடிவுகள் வந்த பின் என்ன செய்யலாம் என்ற எண்ணங்களை மாணவர்கள் ஓரங்கட்டிவிட்டு தேர்வுக்கு தயராவதே சரியான செயல் ஆகும். ஆனால் பெற்றோர்களும், மாணவர்களின் நலம் விரும்பிகளும் அதைப் பற்றி எப்போதோ யோசித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இப்போதாவது தொடங்க வேண்டும். இன்றையப் பதிவு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் பலரின் மனதில் நிழலாடுவது டிப்ளொமா. வெகு சீக்கிரம் சம்பாதிக்க தொடங்கலாம். படிப்பு செலவு குறைவு என பல காரணங்களால் கீழ்நடுத்தர மக்களாலும், வசதி குறைந்த குடும்பங்களாலும் டிக் செய்யபடுவது பாலிடெக்னிக்குகள்தான். உண்மையில் பட்டய படிப்பு சரியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குமா? என்னைக் கேட்டால் டிப்ளொமா வேண்டாம் என்றுதான் சொல்லுவேன், ஏன்?
முதலில் சந்தை நிலவரத்தை பார்த்துவிடுவோம். இன்றைய தேதியில் டிப்ளோமா முடிப்பவர்களுக்கு சராசரி வருமானம் 4000 ரூபாய்தான். அதுவே கணிணி அல்லது மின்னனுவியல் துறையில் பயின்றவர்களுக்கு 10000 ரூபாய் வரை கிடைக்கிறது. Central polytechnicபோன்ற தரமான கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு அதற்கு மேலும் கிடைக்கிறது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், டிப்ளொமா படிக்கும் மாணவர்களில் 5-10% குறைவான மாணவர்களுக்கே இந்த சம்பளம் கிடைக்கும். மீதியிருப்பவர்கள் எல்லோரும் சிபாரிசிலும், குறைந்த சம்பளத்திற்கும் வேலையில் சேர்ந்து தங்களை நிரூபித்து நல்ல நிலைக்கு வர பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்றும் TCS போன்ற பல நிறுவனங்கள் டிப்ளொமா முடித்தவர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என்ற முடிவில் தான் இருக்கிறார்கள். அப்படியே சேர்த்தாலும் பதவி உயர்வு, அப்ரைசல் போன்றவற்றில் மட்டம் தட்டப்படுகிறார்கள்.
இரண்டாவது வயது. நம் கல்வி திட்டப்படி 14 வயது முடிந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம். அப்படியென்றால் 17 வயது முடிந்தாலே டிப்ளோமா பெறலாம். அதவாது 18 வயது ஆகும் முன்னரே வேலைக்கு சேரலாம். போதிய முதிர்ச்சி இல்லாமலே வேலைக்கு செல்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனக்கு அந்தக் கொடுமை நடந்தது. கேம்பஸ் இண்டெர்வியூவில் சிங்கப்பூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பாஸ்ப்போர்டுக்கு விண்ணப்பித்தால் பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு பாஸ்போர்ட் இருந்தால் தான் எனக்கு கிடைக்குமாம். அதுவும் மைனராகத்தான்.அதுவரை வேலைக்கு செல்லலாமே என்று ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, அங்கு நடந்த அரசியலை புரிந்துக் கொள்ள கூட முடியாமல் ஓடி வந்துவிட்டேன்.
இதையெல்லாம் விட டிப்ளோமா வேண்டாம் என நான் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்றிருக்கிறது. இப்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதும், அங்கேயே செட்டில் ஆவதும் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஐரோப்பா நாடுகளான சுவீடன், நார்வே, ஜெர்மனி மற்றும் சில நாடுகளில் மாஸ்டர்ஸ் படிப்பது எளிதான ஒன்று. வங்கிகளில் கல்விக்கடன் வாங்கி நம் செலவிலே இதை படித்து முடித்து விடலாம். இந்த கோர்ஸ் எல்லாமே ஒரு ஆண்டுதான். டிப்ளோமா முடித்தவர்கள் அங்கே பட்டப்படிப்புதான் படிக்க முடியும். அது மூன்று ஆண்டுகள் என்பது மட்டுமில்லாமல், கட்டணமும் அதிகம். இப்போதைய சூழ்நிலையை வைத்து நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்றே பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. இன்றைய தேதியில் பி.இ. முடித்து எல்லோருமே எளிதில் ஐரோப்பாவில் செட்டில் ஆக முடியும்.
அடுத்த முக்கிய காரணம், வளர்ச்சி. ஒரு பட்டதாரியை விட நல்லபடியாக வேலை செய்தும், தனது தகுதியை வளர்த்துக் கொண்டு இருந்தாலும் பட்டய படிப்பு முடித்தவர்கள் ஒரு நிலையைத் தாண்டி செல்வது என்பது மிகவும் அரிதானது. இந்தியாவில் இருக்கும் 99% நிறுவனங்களும், மேலதிகாரிகளும் டிப்ளொமவை மட்டம் தட்டியே பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அது சரியா இல்லையா என்ற வாதத்திற்குள் நாம் போக வேண்டாம். இதுதான் நிதர்சனம் என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்வோம்
எனவே, இந்த ஆண்டு 10வது முடிக்கும் மாணவர்களில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து அவர்களை 12வது படிக்க சொல்லுங்கள். பொறியியல் படிக்க வசதி இல்லாதவர்கள் கூட 12வது முடித்து நேரிடையாக டிப்ளொமா இரண்டாம் வருடம் சேரலாம். ஆனால் இன்றைய சூழலில் 12வது படிக்காமல் இருப்பது அவரது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள்.
பிற்சேர்க்கை:
வலையுலக நண்பர் இவர். உற்பத்தி துறையில் 20 வருட அனுபவம் உடையவர். பெரிய நிறுவனத்தில் கூட GM ஆக அனைத்து தகுதியுமுடையவர். ஆனால் இவர் டிப்ளோமா என்ற காரணத்திற்காக இவரால் ஒரு நிலைக்கு மேல் செல்ல முடியவில்லை. இவரிடம் வேலை செய்த பட்டதாரிகள் பலர் இவரை விட மேற்பதவிகளுக்கு சென்றுவிட்டனர், விஷயம் அதிகம் இல்லாமலே. இவரின் ரெஸ்யுமை வைத்துக் கொண்டு தினமும் நானும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
பொதுத் தேர்வுகள் நடக்கும் காலமிது. முடிவுகள் வந்த பின் என்ன செய்யலாம் என்ற எண்ணங்களை மாணவர்கள் ஓரங்கட்டிவிட்டு தேர்வுக்கு தயராவதே சரியான செயல் ஆகும். ஆனால் பெற்றோர்களும், மாணவர்களின் நலம் விரும்பிகளும் அதைப் பற்றி எப்போதோ யோசித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இப்போதாவது தொடங்க வேண்டும். இன்றையப் பதிவு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் பலரின் மனதில் நிழலாடுவது டிப்ளொமா. வெகு சீக்கிரம் சம்பாதிக்க தொடங்கலாம். படிப்பு செலவு குறைவு என பல காரணங்களால் கீழ்நடுத்தர மக்களாலும், வசதி குறைந்த குடும்பங்களாலும் டிக் செய்யபடுவது பாலிடெக்னிக்குகள்தான். உண்மையில் பட்டய படிப்பு சரியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குமா? என்னைக் கேட்டால் டிப்ளொமா வேண்டாம் என்றுதான் சொல்லுவேன், ஏன்?
முதலில் சந்தை நிலவரத்தை பார்த்துவிடுவோம். இன்றைய தேதியில் டிப்ளோமா முடிப்பவர்களுக்கு சராசரி வருமானம் 4000 ரூபாய்தான். அதுவே கணிணி அல்லது மின்னனுவியல் துறையில் பயின்றவர்களுக்கு 10000 ரூபாய் வரை கிடைக்கிறது. Central polytechnicபோன்ற தரமான கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு அதற்கு மேலும் கிடைக்கிறது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், டிப்ளொமா படிக்கும் மாணவர்களில் 5-10% குறைவான மாணவர்களுக்கே இந்த சம்பளம் கிடைக்கும். மீதியிருப்பவர்கள் எல்லோரும் சிபாரிசிலும், குறைந்த சம்பளத்திற்கும் வேலையில் சேர்ந்து தங்களை நிரூபித்து நல்ல நிலைக்கு வர பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்றும் TCS போன்ற பல நிறுவனங்கள் டிப்ளொமா முடித்தவர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என்ற முடிவில் தான் இருக்கிறார்கள். அப்படியே சேர்த்தாலும் பதவி உயர்வு, அப்ரைசல் போன்றவற்றில் மட்டம் தட்டப்படுகிறார்கள்.
இரண்டாவது வயது. நம் கல்வி திட்டப்படி 14 வயது முடிந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம். அப்படியென்றால் 17 வயது முடிந்தாலே டிப்ளோமா பெறலாம். அதவாது 18 வயது ஆகும் முன்னரே வேலைக்கு சேரலாம். போதிய முதிர்ச்சி இல்லாமலே வேலைக்கு செல்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனக்கு அந்தக் கொடுமை நடந்தது. கேம்பஸ் இண்டெர்வியூவில் சிங்கப்பூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பாஸ்ப்போர்டுக்கு விண்ணப்பித்தால் பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு பாஸ்போர்ட் இருந்தால் தான் எனக்கு கிடைக்குமாம். அதுவும் மைனராகத்தான்.அதுவரை வேலைக்கு செல்லலாமே என்று ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, அங்கு நடந்த அரசியலை புரிந்துக் கொள்ள கூட முடியாமல் ஓடி வந்துவிட்டேன்.
இதையெல்லாம் விட டிப்ளோமா வேண்டாம் என நான் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்றிருக்கிறது. இப்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதும், அங்கேயே செட்டில் ஆவதும் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஐரோப்பா நாடுகளான சுவீடன், நார்வே, ஜெர்மனி மற்றும் சில நாடுகளில் மாஸ்டர்ஸ் படிப்பது எளிதான ஒன்று. வங்கிகளில் கல்விக்கடன் வாங்கி நம் செலவிலே இதை படித்து முடித்து விடலாம். இந்த கோர்ஸ் எல்லாமே ஒரு ஆண்டுதான். டிப்ளோமா முடித்தவர்கள் அங்கே பட்டப்படிப்புதான் படிக்க முடியும். அது மூன்று ஆண்டுகள் என்பது மட்டுமில்லாமல், கட்டணமும் அதிகம். இப்போதைய சூழ்நிலையை வைத்து நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்றே பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. இன்றைய தேதியில் பி.இ. முடித்து எல்லோருமே எளிதில் ஐரோப்பாவில் செட்டில் ஆக முடியும்.
அடுத்த முக்கிய காரணம், வளர்ச்சி. ஒரு பட்டதாரியை விட நல்லபடியாக வேலை செய்தும், தனது தகுதியை வளர்த்துக் கொண்டு இருந்தாலும் பட்டய படிப்பு முடித்தவர்கள் ஒரு நிலையைத் தாண்டி செல்வது என்பது மிகவும் அரிதானது. இந்தியாவில் இருக்கும் 99% நிறுவனங்களும், மேலதிகாரிகளும் டிப்ளொமவை மட்டம் தட்டியே பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அது சரியா இல்லையா என்ற வாதத்திற்குள் நாம் போக வேண்டாம். இதுதான் நிதர்சனம் என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்வோம்
எனவே, இந்த ஆண்டு 10வது முடிக்கும் மாணவர்களில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து அவர்களை 12வது படிக்க சொல்லுங்கள். பொறியியல் படிக்க வசதி இல்லாதவர்கள் கூட 12வது முடித்து நேரிடையாக டிப்ளொமா இரண்டாம் வருடம் சேரலாம். ஆனால் இன்றைய சூழலில் 12வது படிக்காமல் இருப்பது அவரது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள்.
பிற்சேர்க்கை:
வலையுலக நண்பர் இவர். உற்பத்தி துறையில் 20 வருட அனுபவம் உடையவர். பெரிய நிறுவனத்தில் கூட GM ஆக அனைத்து தகுதியுமுடையவர். ஆனால் இவர் டிப்ளோமா என்ற காரணத்திற்காக இவரால் ஒரு நிலைக்கு மேல் செல்ல முடியவில்லை. இவரிடம் வேலை செய்த பட்டதாரிகள் பலர் இவரை விட மேற்பதவிகளுக்கு சென்றுவிட்டனர், விஷயம் அதிகம் இல்லாமலே. இவரின் ரெஸ்யுமை வைத்துக் கொண்டு தினமும் நானும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............
என்ன மிக்ஸ்ஸிங்க் சரி இல்லயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
உங்களுக்கு அதிகமாகிடிச்சுனு நினைக்கிறேன் நான் அறிவ சொன்னேன்Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
balakarthik wrote:Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............
என்ன மிக்ஸ்ஸிங்க் சரி இல்லயா
எங்க மனதுல பதிந்த கலக்கல் காமெடி பாலா மிஸ்ஸிங்..
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
balakarthik wrote:உங்களுக்கு அதிகமாகிடிச்சுனு நினைக்கிறேன் நான் அறிவ சொன்னேன்Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............
ஆமா ராவா ஊற்றிக்கொடுத்துட்டு அதிகமாகிடுச்சுன்னு பேச்சு வேற.
இணைய இணைப்பு வேகம் இல்லாததால் அதோடு மல்லுக்க்ட்டி பதிவு செய்யறதுக்குள்ள போதும் போதும் என்றாகிவிட்டது. அதனால்தான் மூன்று முறை பதிவாகிவிட்டது. இப்பதிவுக்கு 45 நிமிடங்கள் ஆகியுள்ளன. நீங்க சொன்ன மாதிரி அதிகம் ஆகும்தானே....
Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
Aathira wrote:balakarthik wrote:Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............
என்ன மிக்ஸ்ஸிங்க் சரி இல்லயா
எங்க மனதுல பதிந்த கலக்கல் காமெடி பாலா மிஸ்ஸிங்..
இப்போ உங்களுக்கு என்ன பிரச்சண எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
» பயோ எனர்ஜி ஸ்டவ்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?
» எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா?
» பயோ எனர்ஜி ஸ்டவ்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?
» எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா?
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|