ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

2 posters

Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Empty ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 Thu Aug 20, 2009 1:29 am

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

By ராஜா ஆர்.எஸ்

முழுப் பொறுப்பையும் நம் தோள்மீதே சுமத்திக்
கொள்ளும்பொது, நாம் மேலும் உயர்ந்தவர்களாவோம், சிறந்தவர்களாவோம். நாம்
சாய்ந்துகொள்ள வேறு ஒருவரைத் தேடாமல் இருக்கும்போது, நம் பழியைச் சுமத்த
எந்தச் சாத்தானும் இல்லாதபோது, நம் சுமையைச் சுமக்க நமக்கென்று ஒரு
தனிப்பட்ட கடவுள் இல்லாதபோது, நாம் மட்டும் நமக்குப் பொறுப்பானவர்கள்
என்ற நிலையில் மட்டுமே நாம் உயர்ந்த நிலைக்கு வருவோம்,
சிறந்தவர்களாவோம். வாழ்க்கை என்பது கடினமானதொரு விஷயம். அதை தைரியமாகக்
கடந்து செல். அது எந்தச் சின்னக் கடவுள் மீதும் பொறுப்பைச் சுமத்துவதல்ல.
ஏனென்றால் நீயே உன் விதியைச் சமைக்கிறாய்.
- சுவாமி விவேகானந்தர்

சென்னையில், பாடி என்ற ஒரு ஊர். பாடியின் பழைய பெயர் திருவலிதாயம். அங்கே
பழைமையானதொரு சிவன் கோவில் இருக்கிறது. இறைவனின் பெயர் திருவல்லீஸ்வரர்,
இறைவி ஜகதாம்பிகை. அருமையான சிறிய கோவில். திருஞானசம்பந்தர் இந்தப்
பகுதிக்கு விஜயம் செய்தபோது அவரால் பாடல்பெற்ற பெருமை உடையது. அதனால்
‘பாடி’ என்று பெயர் பெற்றது என்று எனக்குச் சிறுவயதில் என் பாட்டி சொன்ன
ஞாபகம். வேறு ஒரு அறிஞர், “கரிகால் சோழன் பாடிவீடு (army camp) கட்டி
அங்குத் தங்கினான். அதனால் அந்தப் பெயர்” என்றும் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Guru_jupiter-150x150

எது எப்படியோ, இன்று அந்தக் கோவில் இந்தக் காரணங்களுக்காக அல்லாமல் ‘குரு
ஸ்தலம்’ என்ற பெயரில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது
ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அங்கு வசித்தபோது, அந்தக் கோவிலுக்கு
அப்படி ஒரு சிறப்பு இருந்ததாக எங்களுக்கே தெரியாது. இந்த பிராபல்யம்
தொடங்கியதெல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான். புதிதாக குருவுக்காக ஒரு
மண்டபமும் கட்டி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் ரயில் நிலயத்தில்
‘குரு ஸ்தலத்திற்குச் செல்ல இங்கே இறங்கவும்’ என்ற போர்டும்
மாட்டியாகிவிட்டது. இப்பொழுது பரிஹாரங்கள் செய்ய மக்கள் கூட்டம் படை
எடுத்துக் கொண்டிருக்கலாம். நான் அங்குச் சென்று சில வருடங்கள் ஆகிவிட்டன.
சரி, இதில் என்ன பிரச்சனை? பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு, பாடல்பெற்ற
சிவன் கோவில், திருஞானசம்பந்தரின் தொடர்பால் வெளி உலகிற்குத் தெரியவர
வேண்டிய தலம், ஜோதிடத்தின் மூலம் வேறு சாயம் பெற்றுவிட்டது.
கோவில்கள் வெறும் பரிஹார நிவர்த்தி நிலையங்களாக மட்டுமே பலரால்
அணுகப்படுகின்றன. “நான் இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதைச் செய்” என்று
வியாபாரம் மேலோங்கத் தொடங்கி விட்டது. அந்தச் சிவன் கோவிலில் முன்னொரு
காலத்தில் குரு வழிபாடு நடந்ததா என்ற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. பெரும்
தத்துவங்களை உணர்த்தும் சிவன், திருமால் போன்றவர்களை விட, அவர்களுக்குக்
கீழே இருக்கும் ஊழியர்களான நவகிரஹங்களுக்குச் செல்வாக்கு அதிகமாகி விட்டது
என்பது வருத்தத்திற்குரியது.


ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Dakshinamurthi1-231x300

ஒருநாள், மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, தக்ஷிணாமூர்த்தி
சன்னதி முன் யாரோ ஒருவர் ஒரு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.
பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சகர் திடீரென்று அதட்டலான குரலில் “ஓய்!
என்ன மந்திரம் சொல்றீர்? பிரைம் மினிஸ்டர் முன்னாலே நின்னுண்டு MLA-வைக்
கும்பிடலாமா? நீங்க சொல்ற மந்திரத்துக்கு உரியவர் அங்கே இருக்கார். அங்கே
போய்ச் சொல்லுமையா” என்று நவகிரஹ சன்னதியைக் காண்பித்தார். முதலில்
என்னவென்று யாருக்கும் விளங்கவில்லை. மந்திரம் சொன்னவர் ஒரு அசட்டுச்
சிரிப்பு சிரித்தார். பின்னர்தான் தெரிந்தது, அவர் நவகிரஹத்தில் ஒருவரான
குரு பிருஹஸ்பதி ஸ்தோத்திரத்தை தக்ஷிணாமூர்த்தி சன்னதியில்
சொல்லியிருக்கிறார். அந்த குருவுக்கும், இந்த குருவுக்கும் வித்தியாசம்
தெரியாத அளவுக்கு நம்மை ஜோதிடம் ஆக்கிரமித்துள்ளது.
தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ்
அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம். நவகிரஹ குரு
என்பவர் வேறு, இவர் வேறு. ஆனால் ‘குரு பெயர்ச்சிப் பலன்’ என்று புத்தகம்
போட்டாலும், அட்டைப் படத்தில் தக்ஷிணாமூர்த்தியைச் சித்தரிக்கிறார்கள்.
மௌனமாக உட்கார்ந்து ஞானதீட்சை அளிக்கும் சிவ மூர்த்தியை, ஜோதிடம் என்ற
சிறிய உலகாயத விஷயத்தில் அடக்கி விட்டார்கள். இது தவறு என்று
சுட்டிக்காட்ட, விஷயம் தெரிந்த ஜோதிடர்களாவது முன்வர வேண்டாமா?

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Navagrahas-198x300

நான் ஜோதிடத்தை வீணான விஷயம் என்று சொல்பவனல்ல. இங்கே நான் பேசுவது, ஆன்மீகத்தை மறைக்கும் அளவிற்குப் போய்க் கொண்டிருக்கும் ஜோதிட மயக்கத்தை பற்றித்தான்.
டி.வி.யிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, ஏதாவது ஒரு ஜோதிடர் “இந்த
ராசிக்காரர்கள், இந்த ஊரில் இந்தக் கோவிலில் உள்ள இந்த அம்மனுக்கு நெய்
விளக்கை ஏற்றி இந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்” என்று
கூறிவிடுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், அந்த கோவிலில் உள்ள
ஆட்களுக்கும் இவருக்கும் ஏதாவது உடன்படிக்கையோ என்றுகூடத் தோன்றி
விடுகிறது. ரியல் எஸ்ட்டேட்காரருக்கு இந்த கோவில், சாஃப்ட்வேர்
எஞ்சினியருக்கு இந்தக் கோவில் என்ற ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது
கதை.
ஜனவரி மாதம் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கோவில்களும் பரிஹார
மந்திரங்களும் என்கிறார்கள். இந்த விவகாரங்கள் எல்லாம் நம்
முன்னோர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது! பாவம். இல்லை என்றால்
ராமனும், பாண்டவர்களும் ‘லோ லோ’ என்று காட்டில் அலைந்திருப்பார்களா?
வாழ்க்கையில் சிலவற்றை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று ‘தப்புக்
கணக்கு’ போட்டு விட்டார்கள்..
நவரத்தின ராசிக்கற்கள் வியாபாரம் ஒரு பக்கம். பரமஹம்ச யோகானந்தர் என்ற
மகான், தன்னுடைய ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலில் ரத்தினக் கற்களைப்
பற்றிக் குறிப்பிடும் போது, இந்த கற்களின் அதிர்வு (vibration) நமக்குப்
பலனளிக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு காரட் எடை இருக்க வேண்டும்
என்கிறார். நம் மக்கள் பல பேருக்கு இதெல்லாம் இன்னும் தெரிய வரவில்லை.
நகைக்கடை வியாபாரிகளுக்குத் தெரிய வந்தாலும் ஆகப்போவது என்ன? ஒரு காரட்
வாங்கு என்றால் எவன் வாங்குவான்? சரி. அவன் வாங்குகிற அளவுக்கு, அதைக்
கடுகளவு சிறிய அளவில் மோதிரத்தில் பதித்து ‘வீடு கட்ட, திருமணம் நடக்க’
என்று, விதவிதமாகச் சொல்லி விற்க வேண்டியதுதான்.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Empty Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 Thu Aug 20, 2009 1:32 am

திருவண்ணாமலையில் கிரிவலம். முன்னர் பக்தி இருந்தது. அமைதி
இருந்தது. பரபரப்பு இல்லை. வியாபாரமும் இல்லை. இந்தக் கிழமையில் கிரிவலம்
செய்தால் இப்படி ஆகலாம் என்று இப்போது ஒரு பட்டியல் வேறு. கேட்டால் இந்த
விவரம் இந்தப் புராணத்தில் இருக்கு என்பார்கள். நமக்கேன் வம்பு? நண்பர்
ஒருவர் சொன்னார் “பௌர்ணமி என்றால் திருவண்ணாமலை போயிடுவேன் சார்.
அப்படித்தான் பாருங்க. ரெண்டு நாளுக்கு முன்னால் போனேன். கிரிவலம்
ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பௌர்ணமி டயம் வேற முடியப் போகுது.
இன்னும் பாதி தூரம் இருக்கு. ஒரே ஓட்டமா ஒடி மூச்சிரைக்க ஒருவழியா கிரி
வலத்தை முடித்தோம்.”
அடக் கடவுளே! எப்படி, கிரிவலம் என்பது வெறும் சடங்காகி விட்டது
பாருங்கள். ‘ஒரு நிறைமாத கர்ப்பிணியான மகாராணி நடப்பது போல கிரிவலம்
செய்ய வேண்டும்” என்றார் ரமணமகரிஷி.

வாழ்க்கையில் சில தருணங்களில் ‘என்ன செய்தால் இந்த துன்பத்திலிருந்து
விடுபடலாம். எத்தைத் தின்னால் பித்தம் தீரும்’ என்பது போன்ற நிலை வரும்.
அப்பொழுது ஜோதிட பரிஹாரங்களில் ஆறுதல் தேடுவது தவறாகாது. நான் மேலே
சுட்டிக் காட்டியவை அவையே ஆன்மீகம் என்று நினைத்து உழல்பவர்களுக்கு.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்று ஆன்மீகம் என்றாலே முக்கால்வாசி
ஜோதிடம்தான் என்ற நிலை.
நாயன்மார்களோ, ஆழ்வார்களோ, ஆதிசங்கரரோ, ஸ்ரீ ராமகிருஷ்ணரோ நாம்
படும் துன்பங்களுக்கு ஜோதிட பரிஹாரமா சொல்லிக் கொண்டிருந்தார்கள்?
வாழ்வென்று வந்துவிட்டால் இன்ப துன்பங்கள் நிச்சயம்; இரண்டிலிருந்தும்
விடுபட வழியைப் பார். துன்பம் வரும்போது இறைவனைச் சரணடை” என்றுதானே
போதித்தார்கள்.

திருஞானசம்பந்தர், ஒரு படி மேலே போய், தன்னுடைய கோளறு பதிகத்தில்
“சிவபெருமான் என் இதயத்தில் புகுந்து விட்டதால் ஒன்பது கிரஹங்களும்
நல்லவையே. அவை அடியவர்க்கு நல்லதையே செய்யும்”
என்று பாடி வைத்தார்!
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”
“எனக்கு மேலும் மேலும் துன்பத்தைக் கொடு. அப்பொழுதுதான் உன்னை
எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று கண்ணனிடம் வேண்டினாளாம்
குந்தி. அந்த அளவுக்கு நாம் இல்லையென்றாலும் கொஞ்சமாவது பக்திக்காக பக்தி
செலுத்தப் பழகிக்கொள்வோமே.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Empty ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 Thu Aug 20, 2009 1:35 am

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?
By நன்னிலம் V ராஜகோபால கனபாடிகள்

வேதம் என்னும் புருஷனுக்கு ஆறு அங்கங்கள் (உறுப்புகள்). அவைகளில்
ஜ்யோதிஷம் (ஜோதிடம்) என்பது நேத்ரம் (கண்) போன்றது. ஒரு மனிதனின் அனைத்து
உறுப்புகளிலும் கண்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ அவ்வாறே அனைத்து
சாஸ்திரங்களிலும் ஜ்யோதிஷ சாஸ்திரம் மிக முக்யமானதாகும். ஸூரியன் சந்திரன்
போன்ற கிரஹங்களின் ஸஞ்சாரத்தையும், அமைப்பையும், நக்ஷத்ரங்களின்
விபரங்களையும் தெரிவிக்கும் ஜ்யோதிஷ சாஸ்திரம், வானவெளியில் உலாவரும்
கிரஹங்களுக்கும், பூமியில் வாழும் உயிர்னங்களுக்கும் உள்ள தொடர்பை
விவரித்து அவற்றின் நன்மை தீமைகளையும் கூறுகின்றது.
நமது முன்னோர்கள், கிரஹங்களின் போக்கை தெரிந்துகொள்வதற்கும்
விரதம்-பண்டிகை-செய்யவேண்டிய நாட்களையும் - காலத்தையும் - அறிந்து
கொள்வதற்கும் மட்டுமே ஜோதிடத்தை உபயோகித்து வந்தார்கள். அவசியத் தேவை
ஏற்படும்போது மட்டும், எதிர்கால பலன்களை ஜோதிடம் மூலம் பரிசீலித்துத்
தெரிந்து கொண்டார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஜோதிடம் என்றாலே
எதிர்கால பலன்களைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்று பலர்
எண்ணுகிறார்கள். செய்யவேண்டிய அனுஷ்டானங்களின் (கடமைகளின்) காலங்களை
(பஞ்சாங்கங்கள் மூலம்) தெரிந்துகொள்ளவே நாம் ஜோதிடத்தை அதிகமாக உபயோகிக்க
வேண்டுமே தவிர, அடிக்கடி நமது எதிர்காலத்தை ஆராய ஜோதிடத்தை உபயோகிப்பதை
குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஜோதிஷ சாஸ்திரங்களில் கூறப்படும் பலன்கள் நிஸ்சயமற்றவை.
ஒருவரின் நல்ல-தீய-செயல்களால் பலன்கள் எதிர்காலத்தில் மாறலாம். ஆகவேதான்
பலன்களைக்கூறும் வராஹ மிஹிரர்கூட, பலன்களைத்தான் நாங்கள் கூறுகிறோமே
தவிர, பலன்களில் அதிகம்-குறைவு என்னும் பாகுபாட்டை ஸ்ருஷ்டி செய்த
ப்ருஹ்மதேவனால் மட்டுமே கூறமுடியும்
என்கிறார். மேலும் ஸ்தாஸானுக்ரஹா: க்ரஹா: என்பதாக எப்போதும் தனது கடமைகளைச் சரிவரச் செய்துவரும் நபர்களுக்கு அனைத்து கிரஹங்களும் ஒருபோதும் தீங்கு செய்யாது
எப்போதும் நன்மையையே செய்யும் என்றும் கூறுகிறார். பொதுவாக ஜாதகம்
(பிறப்பு) என்பது மிகவும் ரஹஸ்யமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. ஜாதகம்,
பிறந்த நக்ஷத்திரம்-பிறந்த லக்னம், ராசி, (சர்மா) பெயர், ஆகியவற்றை
மற்றவரிடம் காரணிமின்றி தெரிவிக்காமல் ரஹஸ்யமாக பாதுகாக்க வேண்டும்
என்கிறது சாஸ்திரம். ஆகவேதான் நமது முன்னோர்கள் அடிக்கடி ஜாதகங்களை
ஆராய்வதில்லை. கடமையை மட்டும் செய்து வந்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு
எப்போதும் நன்மை கிட்டியது.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Empty Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 Thu Aug 20, 2009 1:36 am

தற்காலத்தில் பலர் அடிக்கடி தாங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து
பலன்களைக் கேட்கிறார்கள். குறிப்பாக குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி,
வருடப்பிறப்பு போன்ற நாட்களில் எனது நக்ஷத்திரத்திற்கு எப்படி இருக்கும்?
நல்லதா? கெட்டதா? என்று கேட்கிறார்கள். இதை பயன்படுத்தி பத்திரிக்கை,
டி.வி. போன்ற மீடியாக்களும் தன் பங்கிற்கு விளம்பரங்கள் செய்கின்றன.
சிலர் ஜோதிடர் சொல்லும் பரிஹாரத்தை செய்கிறார்கள். பலர் மறுபடியும்
வேறு ஜாதகரிடம் சென்று அதே ஜாதகத்தைக் காண்பித்து மறுபடியும் பலனைக்
கேட்கின்றார்கள். மேலும் பலர் ஜோதிடர்கள் கூறும் பரிஹாரங்களை செய்யாமல்
விட்டுவிடுகிறார்கள். இதனால் பரிஹாரத்துக்குரிய கிரஹங்கள், தாங்கள்
ஏமாற்றப்பட்டதாக எண்ணிக்கொண்டு அதிகமான துன்பத்தைத்தர முயற்சிக்கின்றன.
ஜாதகத்தை பரிசீலிப்பதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று கிரஹங்களின்
ஸஞ்சாரத்தை ஆராய்ந்து சுப அசுபத்தன்மையை கண்டுபிடித்தல். இரண்டாவது
கிரஹங்களின் தோஷங்களுக்கான பரிஹாரங்கள். இவற்றில் முதலில் கூறப்பட்ட
பகுதியை அனைவரும் செய்யலாம். கம்ப்யூட்டர்கூட கிரஹ ஸஞ்சாரத்தைக்
கணக்கிட்டு (தோஷமுள்ள) கிரஹங்களை கண்டுபிடித்து விடுகிறது. ஆனால்
இரண்டாவதாக உள்ள பகுதியை அனைவராலும் செய்ய இயலாது. ஏனென்றால் கிரஹ
தோஷத்திற்கான பரிஹாரங்கள் அனைத்தும் வேத,சாஸ்திர, ஆகம-புராணங்களில்
அமைந்துள்ளன. ஜோதிடம்-வேதம் ஆகிய இரண்டையும் நன்றாக அறிந்தவர்களால்
மட்டுமே தோஷத்திற்கும் பரிஹாரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி பரிஹாரங்களைக்
கூற முடியும்.
ஆகவே அடிக்கடி நக்ஷத்ரங்களைச் சொல்லி பலனைக் கேட்கக்கூடாது. ஜாதகத்தை
மற்றவரிடம் காரனமின்றி காண்பிக்கவும் கூடாது. திருமணப்பொருத்தம் போன்ற
தேவையான நேரங்களில் வேதம்-சாஸ்திரம் கற்று ஆச்சாரத்துடன் இருப்பவர்களிடம்
மட்டும் ஜாதகத்தைக் காண்பிக்கலாம். இந்த மஹான்கள் ஜாதகத்தைக் கூடியவரை
ஆராய்ந்து, தனது வாக்கால் பலனைக் கூறி, தேவையென்றால் மட்டும்
சக்திக்குத்தக்கவாறு பரிஹாரமும் கூறுவார்கள். அந்தப் பரிஹாரமும் உடனேயே
பலனைத்தரும். ஆகவே, கூடியவரை பலனை எதிர்பாராமல் நமது கடமைகளை
ஸரிவரச்செய்து தெய்வ ஆரதனைகளை செய்து கொண்டிருக்கலாம். அடிக்கடி ஜாதகம்
பார்ப்பதையும் தகுதியற்றவர்களிடம் நமது நக்ஷத்ரத்தைச் சொல்லியும்,
ஜாதகத்தைக் காண்பித்தும் பலனைக் கேட்பதையும் தவிர்க்க முயற்சிக்கலாம்.
ஸ்ரீ பகவான் ரக்ஷிக்கட்டும்.

நன்னிலம் V ராஜகோபால கனபாடிகள்
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Empty Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by paarthaa077 Thu Aug 20, 2009 10:43 am

அருமை, ரம்யா அவர்களின் பதிவுகள் தொடர வாழ்துகள்.. மகிழ்ச்சி
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா? Empty Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum