Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோலைமலை இளவரசி
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சோலைமலை இளவரசி
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] |
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] |
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] |
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] |
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] |
ஈகரை | தமிழ் | களஞ்சியம் |
Last edited by சிவா on Thu Aug 20, 2009 1:07 am; edited 2 times in total
Re: சோலைமலை இளவரசி
கடைசியாக அவன் அடங்கா ஆவலுடன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிட்டியது. தானே அவனைத் தேடி வந்தது என்று சொல்ல வேண்டும். ஹைகோர்ட்டில் கேஸ் முடியும் வரையில் அவனையும் அவனுடைய சகாக்களையும் வைத்திருந்த சிறையிலிருந்து அவர்களை வேறு சிறைக்கு மாற்றிக் கொண்டு போனார்கள். பலமான பந்தோபஸ்துடனே பிரயாணம் ஆரம்பமாயிற்று. எந்த ஊர்ச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆயினும் ரயிலில் போகும்போது தனக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும் என்று குமாரலிங்கம் எண்ணினான். கட்டாயம் கிடைத்தே தீரும் என்று நம்பினான். இத்தனை காலமும் மாறனேந்தல் உலகநாதத் தேவருக்கு நேர்ந்தது போலவே எல்லாச் சம்பவங்களும் தன் விஷயத்திலும் நேர்ந்திருக்கின்றன அல்லவா எனவே இறுதிச் சம்பவமும் அவ்விதம் நேர்ந்தேயாக வேண்டுமல்லவா
அவன் எண்ணியதற்குத் தகுந்தாற்போல் வழியில் ரயில் பிரயாணத்தின் போது சிற்சில சம்பவங்கள் ஏற்பட்டு வந்தன. அவனுடன் சேர்த்துக் கொண்டு வரப்பட்ட மற்றக் கைதிகளை அங்கங்கே இருந்த ஜங்ஷன்களில் பிரித்து வேறு வண்டிகளுக்குக் கொண்டு போனார்கள். கடைசியாகக் குமாரலிங்கமும் அவனுக்குக் காவலாக இரண்டே இரண்டு போலீஸ் சேவகர்களுந்தான் அந்த வண்டியில் மிஞ்சினார்கள். இரவு பத்து மணிக்குக் குமாரலிங்கம் சாப்பிடுவதற்காக அவனுடைய கை விலங்கைப் போலீஸார் எடுத்து விட்டார்கள். சாப்பிட்ட பிறகு விலங்கை மறுபடியும் பூட்டவில்லை. ஏதேதோ கதை பேசிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள் சிறிது நேரத்துக்கெல்லாம் கண் அசந்தார்கள். உட்கார்ந்தபடியே தூங்கத் தொடங்கினார்கள். ஒருவன் நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கினான்.
குமாரலிங்கம் தன்னுடைய விதியின் விசித்திர கதிதான் இது என்பதை உணர்ந்தான். விதி அத்துடன் நிற்கவில்லை; அடுத்து வந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சற்றுத் தூரத்தில் கை காட்டிக்குப் பக்கத்தில் ரயில் நிற்கும்படி செய்தது. குமாரலிங்கம் வண்டியின் கதவைத் தொட்டான். தொட்டவுடனே அக்கதவு திறந்து கொள்ளும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.
அது தறந்தபோது ஆச்சரியமாய்த்தானிருந்தது. போலீஸார் இருவரையும் மறுபடி ஒரு தடவை கவனமாகப் பார்த்தான். அவர்கள் தூங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ஒருவன் அரைக் கண்ணைத் திறந்து "இது என்ன ஸ்டேஷன் அண்ணே" என்று கேட்டுவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டான். அவ்வளவு தான்; திறந்த ரயில் கதவு வழியாகக் குமாரலிங்கம் வெளியில் இறங்கினான். ரயில்பாதையின் கிராதியைத் தாண்டிக் குதித்தான். இதெல்லாம் இவ்வளவு சுலபமாக நடந்துவிட்டது என்பதை நம்ப முடியாமல் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றான். ரயில் என்ஜின் 'வீல்' என்று கத்திற்று. உடனே ரயில் நகர்ந்தது. நகர்ந்தபோது சற்று முன்னால் திறந்த வண்டிக் கதவு மறுபடியும் தானே சாத்திக் கொண்டது.
அவன் எண்ணியதற்குத் தகுந்தாற்போல் வழியில் ரயில் பிரயாணத்தின் போது சிற்சில சம்பவங்கள் ஏற்பட்டு வந்தன. அவனுடன் சேர்த்துக் கொண்டு வரப்பட்ட மற்றக் கைதிகளை அங்கங்கே இருந்த ஜங்ஷன்களில் பிரித்து வேறு வண்டிகளுக்குக் கொண்டு போனார்கள். கடைசியாகக் குமாரலிங்கமும் அவனுக்குக் காவலாக இரண்டே இரண்டு போலீஸ் சேவகர்களுந்தான் அந்த வண்டியில் மிஞ்சினார்கள். இரவு பத்து மணிக்குக் குமாரலிங்கம் சாப்பிடுவதற்காக அவனுடைய கை விலங்கைப் போலீஸார் எடுத்து விட்டார்கள். சாப்பிட்ட பிறகு விலங்கை மறுபடியும் பூட்டவில்லை. ஏதேதோ கதை பேசிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள் சிறிது நேரத்துக்கெல்லாம் கண் அசந்தார்கள். உட்கார்ந்தபடியே தூங்கத் தொடங்கினார்கள். ஒருவன் நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கினான்.
குமாரலிங்கம் தன்னுடைய விதியின் விசித்திர கதிதான் இது என்பதை உணர்ந்தான். விதி அத்துடன் நிற்கவில்லை; அடுத்து வந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சற்றுத் தூரத்தில் கை காட்டிக்குப் பக்கத்தில் ரயில் நிற்கும்படி செய்தது. குமாரலிங்கம் வண்டியின் கதவைத் தொட்டான். தொட்டவுடனே அக்கதவு திறந்து கொள்ளும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.
அது தறந்தபோது ஆச்சரியமாய்த்தானிருந்தது. போலீஸார் இருவரையும் மறுபடி ஒரு தடவை கவனமாகப் பார்த்தான். அவர்கள் தூங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ஒருவன் அரைக் கண்ணைத் திறந்து "இது என்ன ஸ்டேஷன் அண்ணே" என்று கேட்டுவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டான். அவ்வளவு தான்; திறந்த ரயில் கதவு வழியாகக் குமாரலிங்கம் வெளியில் இறங்கினான். ரயில்பாதையின் கிராதியைத் தாண்டிக் குதித்தான். இதெல்லாம் இவ்வளவு சுலபமாக நடந்துவிட்டது என்பதை நம்ப முடியாமல் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றான். ரயில் என்ஜின் 'வீல்' என்று கத்திற்று. உடனே ரயில் நகர்ந்தது. நகர்ந்தபோது சற்று முன்னால் திறந்த வண்டிக் கதவு மறுபடியும் தானே சாத்திக் கொண்டது.
Re: சோலைமலை இளவரசி
அடுத்த கணத்தில் ஒரு பெரிய தடபுடலைக் குமாரலிங்கம் எதிர்பார்த்தான். போலீஸ் சேவகர் இருவரும் விழித்தெழுந்து கூச்சல் போடுவார்கள் என்றும் பளிச்சென்று அடித்த நிலா வெளிச்சத்தில் தன்னைப் பார்பார்கள் என்றும் உடனே அவர்களும் ரயிலிலிருந்து கீழே குதிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தான். தான் ஒரே ஓட்டமாய் ஓட அவர்கள் தம் முதுகை நோக்கிச் சுடுவார்கள் என்றும் நினைத்தான்.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்த உடனே கொஞ்சமும் வலிக்காது என்றும் குண்டு பாய்ந்ததே தெரியாது என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். எனவே கொஞ்ச தூரம் ஓடிய பிறகு தான் ஸ்மரணை இழந்து கீழே விழுவது வரையில் கற்பனை செய்து கொண்டான். ஆனால் அவ்வளவும் கற்பனையோடு நின்றது. நகர்ந்த ரயில் நகர்ந்ததுதான். மூடிய கதவு மூடியதுதான். ஆர்ப்பாட்டம் சத்தம் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றுமேயில்லை. அந்தக் காலத்தில் சோலைமலையில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பொன்னாம்மாவின் நினைவு குமாரலிங்கத்துக்கு வந்தது.
இது ஏதோ கடவுளின் செயல் சோலைமலை முருகனின் அருள் பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்திக் கொள்ளாவிட்டால் தன்னை விட நிர்மூடன் உலகில் யாருமே இருக்க முடியாது. அவ்வளவுதான்; குமாரலிங்கம் நடக்கத் தொடங்கினான். வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துத் திசையைத் தெரிந்து கொண்டு விரைவாக நடக்கத் தொடங்கினான். தன் உள்ளங் கவர்ந்த பொன்னம்மாளைக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுடைய கால்களுக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு சக்தியையும் விரைவையும் அளித்தது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்த உடனே கொஞ்சமும் வலிக்காது என்றும் குண்டு பாய்ந்ததே தெரியாது என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். எனவே கொஞ்ச தூரம் ஓடிய பிறகு தான் ஸ்மரணை இழந்து கீழே விழுவது வரையில் கற்பனை செய்து கொண்டான். ஆனால் அவ்வளவும் கற்பனையோடு நின்றது. நகர்ந்த ரயில் நகர்ந்ததுதான். மூடிய கதவு மூடியதுதான். ஆர்ப்பாட்டம் சத்தம் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றுமேயில்லை. அந்தக் காலத்தில் சோலைமலையில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பொன்னாம்மாவின் நினைவு குமாரலிங்கத்துக்கு வந்தது.
இது ஏதோ கடவுளின் செயல் சோலைமலை முருகனின் அருள் பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்திக் கொள்ளாவிட்டால் தன்னை விட நிர்மூடன் உலகில் யாருமே இருக்க முடியாது. அவ்வளவுதான்; குமாரலிங்கம் நடக்கத் தொடங்கினான். வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துத் திசையைத் தெரிந்து கொண்டு விரைவாக நடக்கத் தொடங்கினான். தன் உள்ளங் கவர்ந்த பொன்னம்மாளைக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுடைய கால்களுக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு சக்தியையும் விரைவையும் அளித்தது.
Re: சோலைமலை இளவரசி
20. கதை முடிந்தது
குமாரலிங்கம் ரயிலிருந்து தப்பிய ஏழாம் நாள் சுமார் 250 மைலுக்கு மேல் கால்நடையாக நடந்து சோலைமலை மணியக்காரர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மணியக்காரர் அவனைப் பார்த்ததும் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஊர் சுற்றும் பிச்சைக்காரன் என்று நினைத்தார்.
"ஐயா என்னை அடையாளம் தெரியவில்லையா" என்று கேட்டதும் உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டார். "ஐயோ குமாரலிங்கமா இது என்ன கோலம் அடாடா இப்படி உருமாறிப் போய் விட்டாயே" என்று அலறினார். குமாரலிங்கம் அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் "ஐயா மெதுவாகப் பேசுங்கள் என் பெயரை உரத்துச் சொல்லாதீர்கள்" என்று சொன்னான்.
"அப்பனே ஏன் இப்படிப் பயப்படுகிறாய் ஏன் உன் பெயரை உரத்துச் சொல்லக்கூடாது என்கிறாய்" என்று கேட்ட மணியக்காரர் மறுகணம் பெருந்திகிலுடன் "விடுதலைக்குப் பிறகு இன்னும் ஏதாவது செய்து விட்டாயா என்ன" என்று பரபரப்புடன் கேட்டார். "விடுதலையா என்ன விடுதலை" என்று ஒன்றும் புரியாத திகைப்புடன் குமாரலிங்கம் கேட்டான். "என்ன விடுதலையா உனக்குத் தெரியாதா என்ன பின் எப்படி இங்கே வந்தாய்" என்று மணியக்காரர் கேட்டது குமாரலிங்கத்தின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று.
"ஐயா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லையே என்னை சென்னைச் சிறையிலிருந்து கண்ணனூர்ச் சிறைக்கு ரயிலில் கொண்டு போனபோது வழியில் தப்பித்து ஓடி வந்தேன். இதை விடுதலை என்று சொல்ல முடியுமா விடுதலை எப்படி நான் அடைந்திருக்க முடியும் பிரீவியூ கவுன்ஸில் அப்பீல் இன்னும் தாக்கல் கூட ஆகவில்லையே அப்படி அப்பீல் தாக்கல் ஆன போதிலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது.
எந்தக் கோர்ட்டிலே எவ்வளவு தடவை அப்பீல் செய்தால்தான் என்ன பிரயோஜனம் தலைவிதியை மாற்ற முடியுமா" என்றான் குமாரலிங்கம்."தலை விதியாவது ஒன்றாவது அட அசட்டுப் பிள்ளை இப்படி யாராவது செய்வார்களா சர்க்காருக்கும் காங்கிரஸ¤க்கும் சமரசம் ஏற்பட்டு அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்துவிட்டார்களே தேசமேல்லம ஒரே கொண்டாட்டமாயிருக்கிறதே உனக்கு ஒன்றுமே தெரியாதா ரயிலிலிருந்து நீ என்றைக்குத் தப்பித்துக் கொண்டாய்" என்று பரபரப்புடன் பேசினார் மணியக்காரர்.
குமாரலிங்கத்தின் மனநிலை அச்சமயம் எப்படியிருந்தது என்று அவனாலேயே சொல்ல முடியாது. அதை நாம் எப்படிச் சொல்ல முடியும் அதிசயமும் ஆனந்தமும் அவமானமும் அவநம்பிக்கையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு அவன் உள்ளத்தில் கொந்தளித்தன.
"ஐயா தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது இந்த துரதிர்ஷ்டம் பிடித்தவனைத் தாங்களும் சேர்ந்து பரிகாசம் செய்கிறீர்களா" என்று கேட்டான். மணியக்காரர் அவனுடைய கேள்விக்குத் தாமே பதில் சொல்வதற்குப் பதிலாகப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பத்திரிகைகளை எடுத்துக் காட்டினார்.
அந்தப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த விவரங்கள் மணியக்காரர் சொன்ன விஷயங்களை எல்லாம் உறுதிப்படுத்தின. அதாவது காங்கிரஸ¤க்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதென்றும் அதன் காரணமாக அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு பத்திரிகையில் இருந்தது.
மறுநாள் பத்திரிகையில் இன்னின்ன கேஸைச் சேர்ந்தவர்கள் விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்டிருந்த விவரமான ஜாபிதாவில் 'தளவாய்ப் பட்டணம் கலகக் கேஸ் கைதிகள்' என்றும் குறிப்பிட்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டுக் குமாரலிங்கம் சிறிது நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். ரயிலிலிருந்து தப்பியது முதல் அவனுடைய கால்நடைப் பிரயாணத்தின் போது கண்டு கேட்டு அநுபவித்த பல சம்பவங்களுக்கு இப்போதுதான் அவனுக்குப் பொருள் விளங்கிற்று.
Re: சோலைமலை இளவரசி
உதாரணமாக வழியில் பல இடங்களில் தேசீயக் கொடிகளைக் கம்பீரமாகப் பிடித்துக் கொண்டு 'வந்தேமாதரம்' 'ஜய்ஹிந்த்' முதலிய கோஷங்களைப் போட்டுக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலம் வந்த காட்சிகளை அவன் தூரத்திலிருந்து பார்த்தான். அம்மாதிரிக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் 'ஏது இவ்வளவு அடக்கு முறைக்குப் பிறகும் நாட்டில் சுதந்திர இயக்கம் பலமாக நடக்கிறதே இந்தியா தேசத்துக்குக்கூட விடுதலை உண்டு போலிருக்கிறதே' என்று அவன் எண்ணினான்.
உண்மையில் அந்த ஆர்ப்பட்டங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்பது இப்போதுதான் அவனுக்கு மிகவும் நன்றாய்த் தெரிந்தது. இன்னும் பல இடங்களில் போலீஸாரைக் கண்டு அவன் அவசரமாக மறைந்து ஒளிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டன். ஆயினும் அவன் பேரில் அவர்கள் சந்தேகப்படவும் இல்லை; பிடிக்க முயலவும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் களைத்துப் போய்ச் சாலை ஓரத்துச் சாவடி ஒன்றின் தாழ்வாரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு போலீஸ்காரர்கள் சமீபத்தில் வருவதைப் பார்த்துவிட்டு சட்டென்று திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் அவன் பாசாங்கு செய்தான்.
போலீஸ் ஜவான்கள் இருவரும் அவன் அருகில் நெருங்கியதும் அவர்களில் ஒருவன் "இவனைப் பார்த்தாயா குமாரலிங்கத்தின் சாயலாகத் தோன்றுகிறதல்லவா" என்றான். அதற்கு இன்னொருவன் "குமாரலிங்கம் இங்கே எதற்காக வந்து திக்கற்ற அநாதையைப் போல் சாவடியில் படுத்திருக்கிறான் மேளமும் தாளமும் தடபுடல் படாதா இத்தனை நேரம் அவனுக்கு" என்றான்.
இவர்களுடைய பேச்சு குமாரலிங்கத்துக்கு ஒரு மர்மப் புதிராயிருந்தது. வேறு எந்தக் குமாரலிங்கத்தைப் பற்றியோ பேசுகிறார்கள் என்று எண்ணினான். தன்னைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது உறுதிப்பட்டது. "ஐயா இந்தச் செய்தி ஒன்றும் எனக்கு உண்மையில் தெரியாதுதான் சாவதற்கு முன்னால் சோலைமலைக்கு எப்படியாவது ஒரு தடவை வரவேண்டும்; தங்களையும் தங்கள் குமாரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் ரயிலிலிருந்து தப்பித்து வந்தேன். போலீஸார் என்னுடைய சொந்த ஊரிலே கொண்டு போய் என்னை விட்டு விடுதலைச் செய்தியைச் சொல்ல எண்ணியிருந்தார்கள் போலிருக்கிறது. இந்த ஒரு வாரமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அவ்வளவும் வீண் என்று இப்போது தெரிகிறது. என்னைப் போல் மூடன் வேறு யாரும் இருக்கமுடியாது" என்றான் குமாரலிங்கம்.
"அப்பனே போனதைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்பட வேண்டும் எப்படியோ நீ இங்கு வந்து சேர்ந்தாயே அதுவே பெரிய காரியம்" என்றார் மணியக்காரர். "ஐயா பொன்னம்மாள் எங்கே அவளைப் பார்த்து விட்டு நான் போகவேண்டும்" என்றான் குமாரலிங்கம்.
"அவ்வளவு அவசரம் வேண்டாம் தம்பி பொன்னம்மாள் அந்த பாழடைந்த கோட்டையிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். சதாசர்வ காலமும் அங்கே தான் அவளுக்கு வாசம். குளித்துச் சாப்பிட்டுவிட்டு அவளைப் போய்ப் பார்க்கலாம்" என்று மணியக்காரர் சொன்னார். உடனே ஊர் நாவிதரையும் அங்கு அழைத்துக் கொண்டு வரும்படி செய்தார். அவர் விருப்பத்தின்படியே குமாரலிங்கம் க்ஷவரம் செய்துகொண்டு ஸ்நானம் செய்து புதிய உடை உடுத்திக் கொண்டான்.
அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுக் கோட்டைக்குப் புறப்பட்டான். மணியக்காரரும் அவனோடு கிளம்பிச் சென்றார். போகும்போது "அப்பா குமாரலிங்கம் உன்னைப் பிறிந்த துயரம் பொன்னம்மாளை ரொம்பவும் பீடித்திருக்கிறது திடுதிப்பென்று அவள் முன்னால் தோன்றிப் பயப்படுத்தி விடாதே படபடப்பாகப் பேசாதே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்" என்று மணியக்காரர் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை எல்லாம் எதற்காக என்று அப்போது குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக விளங்கவில்லை. பொன்னம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகுதான் விளங்கிற்று. மணியக்காரரும் குமாரலிங்கமும் வந்ததைப் பொன்னம்மாள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவர்களைப் பார்த்ததும் பாராதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உண்மையில் அந்த ஆர்ப்பட்டங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்பது இப்போதுதான் அவனுக்கு மிகவும் நன்றாய்த் தெரிந்தது. இன்னும் பல இடங்களில் போலீஸாரைக் கண்டு அவன் அவசரமாக மறைந்து ஒளிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டன். ஆயினும் அவன் பேரில் அவர்கள் சந்தேகப்படவும் இல்லை; பிடிக்க முயலவும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் களைத்துப் போய்ச் சாலை ஓரத்துச் சாவடி ஒன்றின் தாழ்வாரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு போலீஸ்காரர்கள் சமீபத்தில் வருவதைப் பார்த்துவிட்டு சட்டென்று திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் அவன் பாசாங்கு செய்தான்.
போலீஸ் ஜவான்கள் இருவரும் அவன் அருகில் நெருங்கியதும் அவர்களில் ஒருவன் "இவனைப் பார்த்தாயா குமாரலிங்கத்தின் சாயலாகத் தோன்றுகிறதல்லவா" என்றான். அதற்கு இன்னொருவன் "குமாரலிங்கம் இங்கே எதற்காக வந்து திக்கற்ற அநாதையைப் போல் சாவடியில் படுத்திருக்கிறான் மேளமும் தாளமும் தடபுடல் படாதா இத்தனை நேரம் அவனுக்கு" என்றான்.
இவர்களுடைய பேச்சு குமாரலிங்கத்துக்கு ஒரு மர்மப் புதிராயிருந்தது. வேறு எந்தக் குமாரலிங்கத்தைப் பற்றியோ பேசுகிறார்கள் என்று எண்ணினான். தன்னைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது உறுதிப்பட்டது. "ஐயா இந்தச் செய்தி ஒன்றும் எனக்கு உண்மையில் தெரியாதுதான் சாவதற்கு முன்னால் சோலைமலைக்கு எப்படியாவது ஒரு தடவை வரவேண்டும்; தங்களையும் தங்கள் குமாரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் ரயிலிலிருந்து தப்பித்து வந்தேன். போலீஸார் என்னுடைய சொந்த ஊரிலே கொண்டு போய் என்னை விட்டு விடுதலைச் செய்தியைச் சொல்ல எண்ணியிருந்தார்கள் போலிருக்கிறது. இந்த ஒரு வாரமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அவ்வளவும் வீண் என்று இப்போது தெரிகிறது. என்னைப் போல் மூடன் வேறு யாரும் இருக்கமுடியாது" என்றான் குமாரலிங்கம்.
"அப்பனே போனதைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்பட வேண்டும் எப்படியோ நீ இங்கு வந்து சேர்ந்தாயே அதுவே பெரிய காரியம்" என்றார் மணியக்காரர். "ஐயா பொன்னம்மாள் எங்கே அவளைப் பார்த்து விட்டு நான் போகவேண்டும்" என்றான் குமாரலிங்கம்.
"அவ்வளவு அவசரம் வேண்டாம் தம்பி பொன்னம்மாள் அந்த பாழடைந்த கோட்டையிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். சதாசர்வ காலமும் அங்கே தான் அவளுக்கு வாசம். குளித்துச் சாப்பிட்டுவிட்டு அவளைப் போய்ப் பார்க்கலாம்" என்று மணியக்காரர் சொன்னார். உடனே ஊர் நாவிதரையும் அங்கு அழைத்துக் கொண்டு வரும்படி செய்தார். அவர் விருப்பத்தின்படியே குமாரலிங்கம் க்ஷவரம் செய்துகொண்டு ஸ்நானம் செய்து புதிய உடை உடுத்திக் கொண்டான்.
அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுக் கோட்டைக்குப் புறப்பட்டான். மணியக்காரரும் அவனோடு கிளம்பிச் சென்றார். போகும்போது "அப்பா குமாரலிங்கம் உன்னைப் பிறிந்த துயரம் பொன்னம்மாளை ரொம்பவும் பீடித்திருக்கிறது திடுதிப்பென்று அவள் முன்னால் தோன்றிப் பயப்படுத்தி விடாதே படபடப்பாகப் பேசாதே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்" என்று மணியக்காரர் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை எல்லாம் எதற்காக என்று அப்போது குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக விளங்கவில்லை. பொன்னம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகுதான் விளங்கிற்று. மணியக்காரரும் குமாரலிங்கமும் வந்ததைப் பொன்னம்மாள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவர்களைப் பார்த்ததும் பாராதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
Re: சோலைமலை இளவரசி
இதைப் பொருட்படுத்தாமல் குமாரலிங்கம் அவள் அருகில் சென்று உட்கார்ந்து "ஏன் இவ்வளவு பாராமுகம் இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறேனே பிரியமாக வரவேற்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா ஒருவேளை என்னை மறந்து விட்டாயா அல்லது அடையாளம் தெரியவில்லையா" என்று மிக்க பரிவோடு கேட்டான். அவ்வளவு நேரமும் சும்மா இருந்த பொன்னம்மாள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து "நீங்கள் யார் அடையாளம் எனக்குத் தெரியத்தான் இல்லை" என்றாள். "நான் தான் குமாரலிங்கம். உனக்குக் கூட அடையாளம் தெரியாதபடி அவ்வளவு மாறிப்போய் விட்டேனா அல்லது உன் மனந்தான் மாறிவிட்டதா" என்றான் பொன்னம்மாளின் காதலன். "குமாரலிங்கமா அது யார் நான் அந்தப் பெயரைக் கேட்டதில்லையே" என்று பொன்னம்மாள் சொன்னபோது குமாரலிங்கத்துக்கு 'திக்' என்றது.
"பொன்னம்மா உண்மையாகத்தான் பேசுகிறாயா அல்லது விளையாட்டா குமாரலிங்கத்தை அவ்வளவு சீக்கிரமாகவா நீ மறந்துவிட்டாய்" "ஐயா குமாரலிங்கம் என்று நான் கேட்டதுமில்லை. என்பெயர் பொன்னம்மாளும் இல்லை வீணாக என்னை எதற்காகத் தொந்தரவு செய்கிறீர்கள்" குமாரலிங்கத்தின் குழம்பிய உள்ளத்தில் பளிச்சென்று ஓர் ஒளிக்கிரணம் தோன்றியது.
"பொன்னம்மாள் இல்லாவிட்டால் பின்னே நீ யார்" என்று கேட்டான். "என்னைப் பார்த்தால் தெரியவில்லையா சோலைமலை இளவரசி நான்; என் பெயர் மாணிக்கவல்லி." இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு பெரும் வேதனை உதித்தது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு தயக்கம் தொனித்த குரலில் "மாணிக்கவல்லி நான்தான் மாறனேந்தல் இளவரசன். என்னைத் தெரியவில்லையா" என்றான். "ஆ ஏன் பொய் சொல்கிறீர் மாறனேந்தல் இளவரசர் இப்படியா இருப்பார்" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பின் ஒலி குமாரலிங்கத்துக்கு உண்மையை தெளிவாக உணர்த்தியது. பொன்னம்மாளின் அறிவு பேதலித்து விட்டதென்றும் இனித் தன்னை ஒரு நாளும் அவள் அறிந்துகொள்ளப் போவதில்லையென்றும் உணர்ந்தான்.
அதே சமயத்தில் அவனுடைய இருதய வீணையின் ஜீவநரம்பு படீரென்று வெடித்து அறுந்தது. தமிழ்நாட்டில் உள்ள முருகனுடைய கோயில்களில் களைபொருந்திய முகத்துடன் கூடிய இளம்வயதுச் சாமியார் ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர் யார் என்று விசாரித்துப் பாருங்கள். 'சோலைமலைச் சாமியார்' என்று பதில் சொல்வார்கள். அதோடு அவர் உலகப்பற்றை அடியோடு ஒழித்த 'பாலசந்நியாசி' என்றும் 'பரமபக்த சிகாமணி' என்றும் பூர்வாசிரமத்தில் அவர் 'தேசத்தொண்டர் குமாரலிங்கம்' என்றுங்கூடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
"பொன்னம்மா உண்மையாகத்தான் பேசுகிறாயா அல்லது விளையாட்டா குமாரலிங்கத்தை அவ்வளவு சீக்கிரமாகவா நீ மறந்துவிட்டாய்" "ஐயா குமாரலிங்கம் என்று நான் கேட்டதுமில்லை. என்பெயர் பொன்னம்மாளும் இல்லை வீணாக என்னை எதற்காகத் தொந்தரவு செய்கிறீர்கள்" குமாரலிங்கத்தின் குழம்பிய உள்ளத்தில் பளிச்சென்று ஓர் ஒளிக்கிரணம் தோன்றியது.
"பொன்னம்மாள் இல்லாவிட்டால் பின்னே நீ யார்" என்று கேட்டான். "என்னைப் பார்த்தால் தெரியவில்லையா சோலைமலை இளவரசி நான்; என் பெயர் மாணிக்கவல்லி." இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு பெரும் வேதனை உதித்தது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு தயக்கம் தொனித்த குரலில் "மாணிக்கவல்லி நான்தான் மாறனேந்தல் இளவரசன். என்னைத் தெரியவில்லையா" என்றான். "ஆ ஏன் பொய் சொல்கிறீர் மாறனேந்தல் இளவரசர் இப்படியா இருப்பார்" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பின் ஒலி குமாரலிங்கத்துக்கு உண்மையை தெளிவாக உணர்த்தியது. பொன்னம்மாளின் அறிவு பேதலித்து விட்டதென்றும் இனித் தன்னை ஒரு நாளும் அவள் அறிந்துகொள்ளப் போவதில்லையென்றும் உணர்ந்தான்.
அதே சமயத்தில் அவனுடைய இருதய வீணையின் ஜீவநரம்பு படீரென்று வெடித்து அறுந்தது. தமிழ்நாட்டில் உள்ள முருகனுடைய கோயில்களில் களைபொருந்திய முகத்துடன் கூடிய இளம்வயதுச் சாமியார் ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர் யார் என்று விசாரித்துப் பாருங்கள். 'சோலைமலைச் சாமியார்' என்று பதில் சொல்வார்கள். அதோடு அவர் உலகப்பற்றை அடியோடு ஒழித்த 'பாலசந்நியாசி' என்றும் 'பரமபக்த சிகாமணி' என்றும் பூர்வாசிரமத்தில் அவர் 'தேசத்தொண்டர் குமாரலிங்கம்' என்றுங்கூடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
கல்கியின் சோலைமலை இளவரசி முற்றிற்று
Re: சோலைமலை இளவரசி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» சோலைமலை இளவரசி-கல்கி -மின்னூல்
» முற்றிலும் புதிய வடிவில் கல்கியின் சோலைமலை இளவரசி
» அழகர் கோவில் சோலைமலை முருகன்
» பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
» சோலைமலை இளவரசி-கல்கி -மின்னூல்
» முற்றிலும் புதிய வடிவில் கல்கியின் சோலைமலை இளவரசி
» அழகர் கோவில் சோலைமலை முருகன்
» பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|