ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு

Go down

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு Empty ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:10 pm

பெட்ரோல் விலையை பிப்.,22 ல் ரூ.,3.01, ஏப்.,1 ல் 54 காசு, ஜூன் 26 ல் ரூ.,3.79 , செப்.,8 ல் 10 காசு, செப்.,29 ல் 29 காசு, அக்.,15 ல் 78 காசு, நவ.,8 ல் 35 காசு, டிச.,15 ல் ரூ.,2.95 என ஓராண்டில் எட்டுமுறை படிப்படியாக மொத்தம் ரூ.,11.88 காசை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு, ஜூனில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஜூன் முதல் தற்போது வரை ஆறு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஆனால் விலை ஒரு போதும் விலை இறங்கவில்லை. பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.2.95 அதிகரித்துள்ளதையடுத்து, மதுரையில் அந்நிறுவன பங்க்குகளில் ரூ.60.70 க்கு விற்பனையாகிறது. பிற பெட்ரோலிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்க உள்ளன. ஆட்டோ காஸ் விலை சில தினங்களுக்கு முன் ரூ.,33.16 லிருந்து ரூ.,34.36 ஆக (ரூ.,1.20) உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுமையை தாங்க முடியாமல் விழிபிதுங்கும் மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல் இதோ....

சரவணன் (டூவீலர்-தனியார் நிறுவன ஊழியர், விராட்டிபத்து): பெட்ரோல் விலை முன்பு 45 ரூபாய் இருந்தபோது ஒரு ரூபாய், 50 காசு என உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் என்பது மிக அதிகம். இதனால், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எங்களுக்கு லிட்டருக்கு 50 ரூபாய்தான் "அலவன்ஸ்' தருகின்றனர். கூடுதல் தொகையை, சம்பளத்திலிருந்துதான் சமாளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளதால், மெதுவாகத்தான் செல்ல முடியும். இதனால் எரிபொருள் விரையமாகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு Empty மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல் இதோ....

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:11 pm

சரவணன் (டூவீலர்-தனியார் நிறுவன ஊழியர், விராட்டிபத்து): பெட்ரோல் விலை முன்பு 45 ரூபாய் இருந்தபோது ஒரு ரூபாய், 50 காசு என உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் என்பது மிக அதிகம். இதனால், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எங்களுக்கு லிட்டருக்கு 50 ரூபாய்தான் "அலவன்ஸ்' தருகின்றனர். கூடுதல் தொகையை, சம்பளத்திலிருந்துதான் சமாளிக்க வேண்டியுள்ளது. மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளதால், மெதுவாகத்தான் செல்ல முடியும். இதனால் எரிபொருள் விரையமாகிறது.

சுப்பிரமணி (டூவீலர், தனியார் நிறுவன ஊழியர், மேலமாசி வீதி): பால், டீ என தினசரி வீட்டுச் செலவு 30 ஆக இருந்தால், இனி 60 ரூபாயாக அதிகரிக்கும். விலைவாசிக்கேற்ப, சம்பள உயர்வு கிடையாது. இதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. பெட்ரோல் விலையை, மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.

பால்ராஜ் (ஆட்டோ டிரைவர், பெத்தானியாபுரம்): ஏற்கனவே, ஆட்டோ வாடகை அதிகம் என பயணிகள் புலம்புகின்றனர். இனி குறைந்தபட்ச கட்டணம் 20 க்கு பதிலாக 40 ரூபாய் வசூலித்தால்தான், எங்களுக்கு கட்டுபடியாகும்.

முருகேசன் (கார்-தொழிலதிபர், எல்லீஸ் நகர்): அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை, நம்மை விட மிகக்குறைவு. அதேபோல், நம்நாட்டில் வழங்குவதில் என்ன சிரமம்? எங்களைப்போல் தொழில்புரிவோரின் வருவாய் நிலையில்லாதது. ஆட்டோ காஸ், பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க மாற்றுவழி தெரியவில்லை.

வித்யா (ஜவுளிக்கடை உரிமையாளர், எல்லீஸ் நகர்): அனைத்து பொருட்களின் விலையும் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இனி, மேலும் உயரும். மக்கள் அனைத்து வழிகளிலும் அதாவது பொருளாதார ரீதியாகவும் சிக்கனத்தை கடைபிடித்தால்தான் சமாளிக்க முடியும். நாம் கார், டூவீலர்களுக்கு மாற்றாக, பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியதுதான் சிறந்த வழி. இந்த விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு Empty பெட்ரோலை சேமிக்க என்ன வழி?

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:12 pm

* அபார்ட்மென்டுகளில் வசிப்போர், ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தால், யாராவது ஒருவரின் வாகனத்தில் சேர்ந்து செல்லலாம். மற்றவர்களின் வாகனத்தையும் மாறி மாறி பயன்படுத்தலாம்.

* வீட்டின் அருகில் "ஷாப்பிங்' செல்ல வேண்டி இருந்தால், முடிந்த அளவு நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது சைக்கிளை பயன்படுத்துங்கள். உடலுக்கும் நல்லது.

* டவுன் பஸ் வசதி உள்ளோர், அதையும் பயன்படுத்தலாம்.

* மாணவ பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு டூவீலர் வாங்கித் தருவதை தவிர்த்து, சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவியுங்கள்.

* தனி நபராய், கார் பயன்படுத்துவதையும் குறைக்க முயற்சிக்கலாம். குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தால் மட்டுமே, காரை எடுங்கள்.

* மிக பழைய வாகனங்களை மாற்றி விடுங்கள். இவை பெட்ரோலை அதிகம் குடிக்கும்.

* வாகனத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கி விட்டால், குறைந்தது 50 மீட்டர் தூரத்திலேயே இன்ஜினை அணைத்து விடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பெட்ரோல் செலவு இல்லாமலேயே வாகனம் அடைந்து விடும். இப்படி 20 முறை செய்தால் கூட ஒரு கி.மீ., தூரத்திற்கு செல்ல வேண்டிய பெட்ரோல் மிச்சம் ஆகும்.

* ஒரு இடத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு, மீண்டும் திரும்ப வேண்டி இருந்தால், வண்டியை ஸ்டார்ட் செய்யாமலேயே திருப்பி விட்டு, பின்னர் இன்ஜினை ஸ்டார்ட் செய்தாலும் பெட்ரோல் மிச்சம் ஆகும். இதுபோன்ற வழிகளை பின்பற்றினால், வீட்டுக்கும் நாட்டுக்கும் சேமிப்பு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு Empty பெட்ரோலை சிக்கனப்படுத்தி வாகனம் ஓட்டுவது எப்படி?

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:12 pm


* குறைந்த தூர பயணம் மற்றும் அடிக்கடி வாகனத்தை நிறுத்துவதை குறைக்க வேண்டும்.

*வாகனம் நின்றுக்கொண்டிருக்கும் போது இன்ஜினை ஓடவிடக்கூடாது. 10 நிமிடம் இன்ஜின் ஓடினால் 100 மி.லி., பெட்ரோல் வீணாகும்.

* அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* 40 கி.மீ., வேகத்தை தாண்டினால் "டாப் கியரில்' சென்றால் பெட்ரோல் மிச்சமாகும்.

* டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என வாரம் ஒருமுறை "செக்கப்' செய்வது நல்லது.

* பழுதடைந்த "கிளட்ச்', சரியில்லாத இன்ஜின், டியூனிங், தூசி போன்றவை பெட்ரோலை "குடிக்கும்'.

* தேவையில்லாமல் இன்ஜினை "ரைஸ்' செய்யக் கூடாது.

* திடீர் திடீரென வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

* அடிக்கடி பிரேக், கிளட்ச் பிடித்து வாகனம் ஓட்டக்கூடாது.

* சிக்னல்களில் 20 வினாடிகளுக்கு மேல் நிற்க நேர்ந்தால், இன்ஜினை அணைப்பது நல்லது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு Empty "கியருக்குரிய' கி.மீ., தெரியுமா?

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:13 pm

இரு சக்கர வாகனங்கள் 10 கி.மீ., வேகத்தில் முதல் மற்றும் 2வது "கியரிலும்', 20 கி.மீ., வேகத்தில் மூன்றாவது "கியரிலும்', 30 கி.மீ., வேகத்தில் 4வது "கியரிலும்', 40 கி.மீ.,க்கு மேலே 5வது "கியரிலும்' "பறக்கலாம்'.

அரசின் கவனத்திற்கு சாலைகளை குண்டும் குழியுமாக இல்லாமல் மாற்றினால், எரிபொருள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது.

கவனிப்பார்களா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு Empty Re: ஓராண்டில் 8 முறை உயர்ந்த பெட்ரோல் : பொதுமக்கள் கொதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒசூர் அருகே தண்ணீர் கலந்த டீசல் விற்பனை பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
» பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!
» 6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
» ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்
» பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum