புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_m10கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனியில் தமிழ் வளந்தது எவ்வாறு?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 16, 2010 7:13 am

இந்த நூற்றாண்டின் பயன்பாட்டுக்கு வந்த 'கம்பியூட்டரு'ம் 'இன்டர்நெட்'டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது. கம்பியூட்டருக்குப் பின்னர், காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த மூலையையும் அவனால் பார்க்க முடிந்தது. எந்த முகவரிக்கும் அடையாளம் காட்ட முடிந்தது.

இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கம்பியூட்டர் வழித் தொடர்பு அனைத்து தடைகளையும் தகர்த்தது.

ஒவ்வொரு மனிதனும், தன் மொழி கம்பியூட்டரில் வர வேண்டும் என எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினான். உலகம் முழுவதும் பரவி இருந்த தமிழ்ச் சமுதாயம் இந்த முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. பரவிக் கிடந்த தமிழர்கள் ஆங்காங்கே அவரவர் ஆர்வத்தில் தமிழைக் கம்ப்யூட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்கள்.

இதனால் பல்வேறு வகைகளில், நிலைகளில் அவர்களின் முயற்சிகள் இருந்தன. இந்த முயற்சிகள், தமிழ்ச் சமுதாயத்தினைப் போலவே, ஒருங்கிணைந்த முயற்சியாய் இல்லாமல், தெருவீதிக் கோவில்கள் போல, பலவகை வெளிப்பாடுகளாய் வெளிச்சத்திற்கு வந்தன.

1980 ஆம் ஆண்டுவாக்கில், கம்பியூட்டர் பயன்பாடு பெருகத் தொடங்கிய காலத்தில், 'டாஸ்' இயக்கம் செழிப்பான ஒரு நிலையை அடைந்த காலத்தில், கனடாவில் வசித்த தமிழரான சீனிவாசன், 'டாஸ்' இயக்கத்தில் 'ஆதமி' என்ற சிறிய தமிழ் எடிட்டரைக் கொண்டு வந்தார். இலவசமாக அனைவருக்கும் விநியோகித்தார்.

அப்போதே, 'வேர்ட் லார்ட்' என்ற 'டாஸ்' இயக்க 'வேர்ட் சாப்ட்வேர்' மூலம் பல மேல்நாடுகளில் பிரபலமான, பெங்களூர் 'சாப்ட்வேர்' நிறுவனம், தமிழுக்கு பாரதி என்றொரு தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்பினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தியது.

விண்டோஸ் புழக்கம்..

தினமலர் ஆசிரியர் தன் சொந்த முயற்சியில், 'புனே மொடுலர்' நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார். 'விண்டோஸ்' புழக்கத்திற்கு வந்த பின்னர் சீனிவாசன் ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து 'ஆதவிண்' என்றொரு தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்பினை உருவாக்கி இலவசமாகத் தந்து உதவினார்.

இதே காலக் கட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரினைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் 'துணைவன்', 'கணியன்' மற்றும் 'முரசு அஞ்சல்' ஆகிய தொகுப்புகளைக் கொண்டு வந்தனர்.

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாலா பிள்ளை 'தமிழ் நெட்' என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழர்களிடையே இந்த முயற்சிகளுக்கான ஒரு இணையத் தளத்தை உருவாக்கினார்.

தமிழில் மின்னஞ்சல்கள் உருவாவதில் இவரின் முயற்சி முதலாவதாகவும் முன்னுதாரணமாயும் இருந்தது. பின்னர் சிங்கப்பூர் மாகோ உருவாக்கிய 'குளோபல் தமிழ்', மலேசிய ஜேபி அமைத்த அகத்தியர், சிங்கப்பூர் பழனி கட்டமைத்த 'தமிழ் உலகம்' ஆகிய மின்னஞ்சல் குழுக்களை, தமிழ் மின்னஞ்சல் குழுக்களின் முன்னோடிகள் எனலாம்.

இப்போது இணையத்தில் தமிழ் பயன்படுத்தும் குழுக்கள் பல இயங்குகின்றன. எந்த அஞ்சல் குழுவிலும் எந்த மொழியையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

மலேசிய கம்பியூட்டர் ஆராய்ச்சியாளர் முத்து நெடுமாறன் உருவாக்கிய 'முரசு அஞ்சல்' என்னும் தொகுப்பு இலவசமாக, இணையம் வழியாக வழங்கப்பட்டது. இது கம்பியூட்டர் மற்றும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இதன் எளிமை, திறன், பயன்படுத்த வழங்கப்பட்ட இடைமுகம் அனைத்தும், தமிழ் மக்களைக் கவர்ந்திட, அதுவே தமிழின் 'சாப்ட்வேர்' தொகுப்பாக உலகத் தமிழரிடையே உலா வந்தது. இன்றும் முன்னேறிய நிலையில் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு இத்தொகுப்பினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். இணையத்தில் மட்டுமின்றி மின் அஞ்சல்களிலும், 'இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்க'ளிலும் தமிழைக் கொண்டு வந்த பெருமை முரசு அஞ்சலையே சேரும். இதனை அடுத்து இணையத்தில் பயன்படுத்த வந்த தொகுப்புகளில், கனடாவைச் சேர்ந்த கலையரசன் உருவாக்கி, இலவசமாகத் தந்த, குறள் தமிழ்ச் செயலி பலராலும் மின்னஞ்சல்கள், மற்றும் பிற பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

'சாப்ட்வேர்' தொகுப்புக்கள்..

தொடர்ந்து பல தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்புகள் தமிழகத்திலிருந்தும், மற்ற நாடுகளிலுருந்தும் வெளியாகின. இந்திய அரசின் 'சி�டாக்' நிறுவனம், வட இந்திய மொழிகளுக்கான கட்டமைப்பில், தமிழையும் கொண்டு வந்தது. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

வர்த்தக ரீதியிலும் பல நிறுவனங்கள் தமிழ் 'சாப்ட்வேர்' தொகுப்புகளை வெளியிட்டன. இதில் புனேயைச் சேர்ந்த மொடுலர் நிறுவனத்தின் 'லிபி' சொல் தொகுப்பு, தமிழை அச்சுப் பணிகளில் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருந்தது; இருந்து வருகிறது.

ஆனால் இவற்றிற்கிடையே எழுத்து வகை, அதனை கம்பியூட்டருக்கென அமைக்கப்படும் 'என்கோடிங்' எனப்படும் கட்டமைப்பு வகையில் ஒற்றுமை இல்லாததால், தமிழில் அமைக்கப்பட்ட ஆவணங்கள், தாங்கள் உருவாக்கப்பட்ட எழுத்து வகைகளுடன் வந்தால் தான் படித்து அறிய முடியும் என்ற நிலை தொடர்ந்து தமிழுக்கான தடுப்புக் கட்டையாக இருந்து வந்தது.

தமிழ்நெட் 99..

1999 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதி அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட இணைய மாநாடு 'தமிழ்நெட் 99'. இதற்கு ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அந்த மாநாட்டுக் கருத்தரங்கத்தில் அமைக்கப்பட்ட குழு, 'டாம்' மற்றும் 'டாப்' என்னும் கட்டமைப்பில் உருவான எழுத்துவகைகளைப் பரிந்துரை செய்தது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களால்,'திஸ்கி' என்ற வகையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் இருந்தது. ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாத தமிழ் உலகத்தினர் தொடர்ந்து தாங்கள் கொண்டிருந்த எழுத்து வகைகளிலேயே, இணைய தளங்களை உருவாக்கி, அவற்றைப் படிக்க தங்களின் எழுத்துருக்களை இறக்குவதனைக் கட்டாயமாக வைத்திருந்தனர்.

தொடர்ந்து வந்த கம்பியூட்டர் அறிவியல் வளர்ச்சி, இந்த சிக்கல்களுக்குத் தானாக ஒரு முடிவினைக் கண்டது. இது உலகின் அனைத்து மொழிகளுக்குமான ஒரு தீர்வாக இருந்தது. அதுவே 'யூனிகோட்' ஆகும். ஏற்கனவே இருந்த எழுத்து கட்டமைப்புகள் எல்லாம் '8 பிட்' என்னும் குறுகிய அமைப்பில் இருந்து வருகையில், 'யூனிகோட் 32 பிட்' கட்டமைப்பில் உருவானதால், எழுத்துக்களை நாம் விரும்பிய வகையில் அமைக்கின்ற வசதி, நமக்குக் கிடைத்தது.

தமிழ் யூனிகோட்..

இதில் கிடைத்த தமிழ் எழுத்து அமைப்பு முறை, பலரால் குறை சொல்லப்படும் வகையில் இருந்தாலும், இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்பியூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற 'வலைமனைகள்' என்னும் 'பிளாக்கு'களே இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும்.

'கூகுள்', 'யாஹூ'சேவைகள்..

மேலும் 'கூகுள்', 'யாஹூ' போன்ற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழைத் தங்கள் வலையகங்களில் பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றன. தமிழிலேயே தங்களின் தளங்களைத் தந்துள்ளன. பயன்படுத்துபவர்கள் தமிழைப் பயன்படுத்த இடைமுகங்களை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

தமிழக அரசு, கம்பியூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்பியூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்பியூட்டர் பாடங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது. இதற்கானப் பாட நூல்களை தமிழக அரசின் பாட நூல் கழகம் தமிழில் 1996 முதல் வெளியிட்டு வருகிறது.

தமிழில் பல கம்பியூட்டர் நாளிதழ்கள் வெளி வந்தன. முதன்முதலாக கம்பியூட்டர் பயன்பாட்டினை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன், 1992 முதல் கம்பியூட்டர் குறித்து,'தினமலர்' நாளிதழ், தமிழில் கட்டுரைகளைத் தந்தது.

கம்பியூட்டர் இன்று உலக மக்களை நேயத்துடன் இணைக்கும் பாலமாக மாறி வருகிறது. அதில் தமிழ் பயன்படுத்தப்படுகையில், கம்பியூட்டர் தமிழ் தனது மக்களைப் பாசத்துடன் சேர்க்கும் கருவியாக மாறுகிறது.

இனி கம்பியூட்டர் என்பது தமிழ் மக்களுக்குத் தமிழில் தான் அமையும் என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த முயற்சியில் இப்போது நடைபெற்று வரும் செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகள் நிச்சயம் கை கொடுக்கும்.

கம்பியூட்டரில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்ட, தொடர்ந்து உழைத்துவரும் ஆர்வலர்கள் அனைவருக்கும் உற்சாகம் தந்து உரமூட்டுவோம்.

tamil25




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 9:44 am

அருமையான தகவல் நன்றி தாமு......

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Thu Dec 16, 2010 10:03 am

நன்றி. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக