புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 9:53 am

First topic message reminder :

காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி

இரண்டாவது மாநில மாநாடு -
பொதுச் செயலாளர், நாவலர் நெடுஞ்செழியன்

தம்பி!

"கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர - மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே'' - என்றெல்லாம் கேட்டிருக்கிறாய், - கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லிவிட்டா நான் வெளிநாடு பயணமாவேன் - உன்னிடம் கூறாமலா - என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின் "அனுமதி' பெறாமல், வெளிநாடு போகத்தான் முடியுமா?

ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய் - பத்திரிகைகளில் தலைப்புப் போடுவதும் - படம் போடுவதும் எளிது - பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணுகிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு "பாஸ்போர்ட்' கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம் வேண்டும். "பாஸ் போர்ட்' போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கிறோம்'' என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய் - ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளிநாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு!

ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை!

ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட்சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டு விட்டிருக்கிறது.

நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து - இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர்தல் குறித்துக் கலந்தாலோசித்து. பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு - இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்!

எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும் - வேடிக்கையாகப் பார்த்துக் கொள்ளலாம்!

நடைபெற்றாகிவிட்ட பிறகு, சர்வசாதாரணமாகத் தோன்றும்; ஆனால் சிறிது எண்ணிப் பார்த்தால்தான், நாம் எவ்வளவு அருமையான "கட்டம்' வந்திருக்கிறோம் என்பது விளங்கும்.

நாவலர் நெடுஞ்செழியன், இப்போது நமக்குப் பொதுச் செயலாளர்!

தஞ்சையிலும் மதுரையிலும் நான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, புயலே கிளம்பிற்று - எனக்குச் சிறிது சீற்றம் கூடப் பிறந்தது. ஆனால் மெள்ள மெள்ள ஆனால் வெற்றிகரமாகச் சபலத்தைக் கடந்து விட்டோம் கழகம் புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறது - நாம் வலிவும் பொலிவும் கொண்டதோர் அமைப்புப் பெற்றிருக்கிறோம் என்கிற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டுவிட்டது பெருமைக்குரிய செய்தி.

தோழர் நெடுஞ்செழியன் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இரண்டாண்டுக் காலமாகவே என் உள்ளத்திலே வளர்ந்த வண்ணம் இருந்த எண்ணம்.

ஓராண்டுக்கு முன்பு இலங்கை "சுதந்திரன்' ஆசிரியர் சென்னை வந்திருந்த போது, அவரிடம் கூறினேன் - அவர் தமது இதழில் வெளியிட்டிருந்தார்.

நான் மட்டுமல்ல, நமது கழகத்திலே பெரும்பாலானவர்கள் புதிய பொதுச் செயலாளராகத் தோழர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர்.

இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள்தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்குவப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல்லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்! சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு - எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண்டால்தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக் கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூதுவிடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் "சைவத்' தைத் தாங்கிக் கொண்டிருந்தேன்!!

அவரிடம் நேரடியாகக்கூட பிரச்னைகளைப்பற்றிப் பேசுவதில்லை - பிரச்னைகளை நான் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் உடன் இருப்பார்! மிக முக்கியமான கட்டங்களின் போது, புன்னகையாவது பிறக்கும், புருவத்தையாவது நெறிப்பார்! இவ்வண்ணம் இரண்டாண்டுகள்.


துவக்கத்திலே நான் கொண்ட நம்பிக்கை வளர்ந்து, கனியாகி விட்டது. நமது கழகத்தை அதன் கண்ணியம் கெடாத வகையில் மட்டுமல்ல, வளரும் வகையில், நமது புதிய பொதுச் செயலாளர்
நடத்திச் செல்வார் என்ற உறுதியை என்னால் நிச்சயமாக அனைவருக்கும் அளிக்க முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.

உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை!

அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்ற மளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்,தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அதுபோல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள்!!

என்ன செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்!!

தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மனதிலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழக மேடையில் பேசத் தொடங்கியதும்.

கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெரியாரும் இருந்தார் - தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து - ஆயினும் என்ன செய்வது?

நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!!

நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்.

என்னிடம் இல்லாத - நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் - ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது.

என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் - ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது - பொதுப் பிரச்னை களைப்பற்றி. தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார்.

சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் - அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் - ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல "கனவுகள்' - விழித்தபடி - நான் கண்டு கொண்டி ருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார்.

இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்து கொள்ள வேண்டும்.

என்னிடம் சில குறைபாடுகள் உண்டு - குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன் - அதிலே ஒன்று தான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக் கொண்டு சிரித்துக் கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத்துதான்! பெரியாரின் "சர்டிபிகேட்டே' உண்டு இதற்கு.

திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு - அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம், நானும் சம்பத்தும் - பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படுகிறார் - தொல்லைப் படுகிறார். நானும் சம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம், சிரிக்கிறோம், பாடுகிறோம்.

(யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! பெரியாருக்குக் கோபம் பொங்கி வழிந்தது! எப்படிப்பட்ட சமயம்! இந்த இரண்டு பசங்களும் சிரித்துக் கொண்டு இருக்கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒரு பெரிய மாநாடு நடக்கவேண்டும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல், தின்பதும், திரிவதும், ஆடுவதும், பாடுவதும், செச்சே! - என்று பேசினார்.

அப்போது நான் செல்லப் பிள்ளை! இகழப்பட்ட போதும் பழிக்கப்பட்ட போதும், அன்பு காட்ட வேண்டிய வர்கள் பகைக்கும்போதும் சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என் முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. "விளையாட்டுப் பிள்ளைகள்' என்று இதனைக் கொண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடியவில்லை. எனவே, டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்!

சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்குப் பொதுவாழ்க்கை யிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். விளையாட்டுத்தனமல்ல, அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்பமடைந்து போகாமலிருக்க, அது தகுந்த முறையாக அமைந்திருந்தது.

குறைபாடுகள் என்று இவைகளைக் கருதலாம் - விவரம் கூறப்படா முன்பு.

தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்து பார்த்தார் - அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை.

அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.

அவருக்குக் கிடைத்திருக்கும் கழகமோ, சாமான்யமான தல்ல!

ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள்!

இடைவிடாத பொதுமக்கள் தொடர்பு கொண்ட இயக்கம்.

களம் கண்ட காளைகள், தியாகத் தழும்பேற்ற தீரர்கள், கண்ணியத்தைக் காப்பாற்றும் பண்பினர் எண்ணற்றவர்கள்.

விழியில் நீர் வழிய வீதியில் விரட்டப்பட்டோம் - இன்று நமக்கென்று ஒரு தலைமை நிலையம், நம்முடையது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளத் தக்க ஒரு அச்சகம், நாம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ளத் தக்க செயல் பட்டியல் - இவைகளைப் பெறுகிறார் தோழர் நெடுஞ்செழியன் - பன்மடங்கு இந்த வனப்பை, வலுவை, அதிகமாக்கிக் காட்டப் போகிறார்.

நமக்கென்று ஒரு தலைமை நிலையம், என்றேன் - மகிழ்கிறீர்கள் - நானோ, அந்த இடத்தில் சில பகுதி கலனாகி வருவதையும், ஆகவே கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான செலவினையும் எண்ணிக் கவலைப் படுகிறேன். தோழர் நெடுஞ்செழியனை, அந்த இடத்திலே அழைத்துக் கொண்டுபோய் அமர்த்திவிட்டோம். அவருடைய "நாட்களில்' நிலையம் புதிய உருவும் எழிலும் பெற வேண்டும் - அதற்கான வசதியை நாம் அவரிடம் தேடித் தர வேண்டும்.

நமக்கென்று ஒரு அச்சகம் என்று பெருமையுடன் பேசுகிறோம் - ஆனால் நான் எவ்வளவு முயன்றும் "நம் நாடு' பெரிதாகி விடவில்லை. அந்தப் பொறுப்பும், அவரிடம், இப்போது, அதற்கான ஆதரவு திரட்டி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது, நமது கடமை.

மாநில மாநாடு! மிகப் பெரிய பொறுப்பு, நம்மை எல்லாம் அறைகூவி அழைக்கிறது. அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு நமது பொதுச் செயலாளருக்கு நாம் துணை நிற்கவேண்டும்.

இவைகளையும் இவை போன்ற வேறுபல கடமைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தால்தான், நமது பொதுச் செயலாளர் மூலம் நமது கழகம் பெறவேண்டிய புதிய பொலிவுக்கும் வலுவுக்கும் வழி செய்தவர்களாவோம்.

நேற்றுத்தான், கண்ணீருடன் வெளிவந்தது போல் இருக்கிறது.

இதற்குள் என்னென்ன கட்டங்கள்!! எவ்வளவு எதிர்ப்புகளைத் தாண்டி, இந்தக் கட்டம் வந்திருக்கிறோம்!

இதுகளாவது - கட்சி நடத்துவதாவது - என்ற ஏளனம் ஈட்டி போலக் குத்திற்று. இதோ இரண்டாவது பொதுச் செயலாளர் - இரண்டாவது மாநில மாநாடு!!

இதுகளாவது ஒன்றுகூடி வாழுவதாவது - என்ற சாபம் மிரட்டிற்று.

ஒன்றுகூடி வாழ்வது மட்டுமா - ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக் கொண்டோம் - தனி மனிதர்களைவிட ஒரு அமைப்பே முக்கியம் என்ற தத்துவம். நடைமுறைக்கு வந்து விட்டது. வளர்ச்சி சாதாரணமானதல்ல!!

ஏ! அப்பா! பாரேன், இதுகளுக்குள் மூண்டுவிடப் போகிற வம்பு வல்லடிகளை, போட்டி பொறாமைகளை, பூசல் ஏசல்களை என்று கருவினர் - இதோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து உடனிருந்து பணியாற்றுகிறோம், புதிய பொதுச் செயலாளருடன்.

தம்பி! நான் இந்த மகிழ்ச்சியிலே திளைத்திருக்கிறேன்.

வெளிநாடு போகும் திட்டம் பற்றி எண்ணிக் கொண்டில்லை.

ஒரு திங்கள் ஓய்வு கொடு - பிறகு மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டி வைத்துக் கொண்டு, எந்தப் பட்டி தொட்டிக்கு வேண்டுமானாலும் கூப்பிடு, வருகிறேன்.

ஓய்வு எடுத்துக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்தவா, உள்ளத்திலே ஓராயிரம் ஈட்டிகள் குத்துவது போல, மாற்றார் நடந்து கொண்டதைச் சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும், கழகத்தை அமைத்து, இந்தக் கவர்ச்சிகரமான கட்டத்திற்கு வந்திருப்பது! கழகம் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள வெளிநாடு சென்று தெரிந்துகொண்டு வந்து பணியாற்ற வேண்டிய கட்டம் இது அல்ல - இப்போது உள்ள கட்டம், நமது நாட்டை முழுதும் நாம் பார்த்துப் பாடம் பெறும் கட்டம். அந்தக் கட்டத்தில், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி உன் சீரிய யோசனையைக் கூறுவதுடன் - சிறிதளவு பணமும் சேர்த்துத் தர வேண்டுகிறேன், மாநில மாநாட்டுக்கு, புதிய கட்டம், புதிய பொதுச் செயலாளர், அவர் தலைமையில் இரண்டாவது மாநில மாநாடு - அதைச் சிறப்புற நடத்தித் தருவதிலேதான், கழகத்தின் மற்றோர் கட்டம் மலர இருக்கிறது.

அணிவகுத்து நின்று, நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள் - பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும்.

புதிய பொதுச் செயலாளரின் திறத்தையும் அருங் குணத்தையும் கழகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும், முயற்சி எடுக்க வேண்டுமென்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,
தம்பி! முயற்சி எடுத்தால் போதும்; முடித்தே காட்டுவீர்கள் என்பதை அனுபவத்தில் கண்டவனல்லவா நான், அதனால்தான்.

சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலே கூடியது போல, குறைந்தது இரட்டிப்பு மடங்கு மக்கள் கூடுவர், திருச்சியில் - நடு நாயகமல்லவா, அதனால்.

அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திக் கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்தில், காகிதக் கப்பலின் மீது கவனம் செலுத்தலாகாது; மாநாட்டுக்கான யோசனைகளை நண்பர்களுடன் கலந்து பேசி, தலைமை நிலையத்துக்குத் தெரியப்படுத்து. மாநில மாநாட்டிலே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இப்போதிருந்தே உள்ளூர்க் கிளைக் கழகத்தில் கலந்து பேசுங்கள் - திட்டம் தயாரித்து அனுப்புங்கள் - தம்பி! - பணமும் அனுப்பு!


அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Anna_sign
05-08-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:08 am

அக்ரமம், இன்னும் வெளிப்படையாகவே தெரிகிறது தம்பி, அந்த அறிக்கையில்.

பம்பாய் - கல்கத்தாவுக்கு மட்டும் வாகன்கள் தேவையான அளவு ஒதுக்கப்பட்டு சென்னை புறக் கணிக்கப்படுகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

பதவியைச் சுவைத்திடும் மகிழ்ச்சியில், "கனம்' இங்கு நம்மீது காய்கிறார். பாய்கிறார்!

தம்பி! "கனம்' சைவரோ, சுவையும் சத்தும் தேவை என்பதற்காக "அன்னிய பதார்த்தம்' சாப்பிடுகிறவரோ, எனக்குத் தெரியாது - சைவராக இருந்தால் சிறிது நெடியாக இருக்கும்; இல்லையானால் நாவில் நீர் ஊறும், இப்போது தரப்போகும் சம்பவத்தைக் கவனித்தால்.

ராட்டு என்கிறார்கள் - இறா என்பார்கள் - அந்தக் கடற்கனி ஏராளமாகப் பர்மாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, திருவிதாங்கூர் கொச்சிப் பகுதியிலிருந்து, பெரும் அளவில். இதை நம்பி வாழும் மீனவர்கள் ஏராளம் - வியாபாரிகளும் உளர். இப்போது பர்மா சர்க்கார், இதற்கான அனுமதி வழங்கும் முறையிலே நட்டுத் திட்டம் கடுமையாக ஏற்பத்திவிட்டி ருக்கிறது; இந்த ஏற்றுமதி சிதைந்துவிட்டது. இதன் பயனாக இலட்சக்கணக்கான சிறியதல்ல குடும்பங்கள் அல்லற் படுகின்றன. பிரச்சினை சிறியதல்ல தம்பி! பண்டம் வேண்டுமானால், சாதாரணம் என்பர். எட்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. மூன்று கோடி ரூபாய் பெருமானமுள்ள பண்டம் தேங்கிக் கிடக்கிறது. அஜீத் பிரசாத் ஜெயின் எனும் வடநாட்டு மந்திரியிடம்தான் முறையிட்டுக்கொள்ள வேண்டிஇருக்கிறது. பர்மா போன்ற வெளிநாட்டுச் சர்க்காரிடம் பேசவும், வசதி வாய்ப்பு, சலுகை உரிமை இவைகளைப் பெறவும் இங்கே உள்ள அமைச்சர் அவைக்கு அதிகாரம் ஏது? எல்லாம் டில்லியப்பன்தானே! எதற்கும் டில்லியப்பன் துணையும் தயவும் இருந்தால்தான் நடக்கும். எனவே, அஜீத் பிரசாரத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படுகிறது, "ஐயனே! மீனவரைப் பாரீர்! அவர் குறை தீர்த்திட வாரீர்! பட்டினியால் வாடுகிறோம், பண்டம் பாழாகிறது, பிழைப்பிலே மண் விழுகிறது'' என்று கெஞ்சுகிறார்கள். "அப்படியா, உமக்குற்ற குறை பற்றி நாம் இனி எண்ணிப் பார்த்திடுவோம். எமது அண்டை நாடாம் பர்மாவின் இந்தப் போக்குக்க உள்ள காரணம் யாவை என ஆராய்ந்த பின், யாது செய்திடல் முறை என்பது பற்றி எண்ணித் துணிவோம்!'' என்று பேசுகிறார் அஜீத்! அவரா பேசுகிறார், வடநாட்டு ஆதிக்கம் பேசுகிறது!! திருச்சியில்பாருங்கள், திரிலோகமும் புகழும் சுந்தரன்! வீரன்! சூரன்! யானே.'' என்று கனம் பாடுகிறார்.

ராஜா சிதம்பரனார்,

"ஆமாம! இதை அறியேன் முன்னாலே.

"ஆகவே என் பிழை பொறுத்து ஆதரிக்க வருவீர், ஐயே!'' என்று "ட்யூட்' பாடுகிறார்!

செக்கிழுத்தார் சிதம்பரனார் என்ற நெஞ்சை நெக்குருகச் செய்யும் சேதியை எடுத்துச் சொல்லிச் சொல்லி, பெரும் பலன் கண்டனர் காங்கிரசார். "கப்பலோட்டிய தமிழன்'' வாழ்க்கைக் கலம் சுக்கு நூறாயிற்று. அந்தச் சோகக் காதையைக் கூறிக்கூறி, இன்று அரசியல் உல்லாசப் படகினிலே ஒய்யாரமாகச் செல்கின்றனர் பலர்! இதோ கேள், தம்பி, ஒரு கப்பலின் கதை கூறுகிறேன்.

சென்னை-ரங்கூன் செல்லும் கப்பலொன்று, சிந்தியா கம்பெனியார் நடத்தி வந்தனர்.

முன்பு வெள்ளைக்காரக் கம்பெனி நடத்திவந்த தொழில், சுதேசி இயக்க தத்துவம் காரணமாக, சிந்தியாவுக்குக் கிடைத்தது.

சிந்தியா கப்பல்விட ஆரம்பித்ததும், வெள்ளைக்காரக் கம்பெனி விலகிக்கொண்டது.

இருபது நாட்களுக்கு ஒரு முறை சிந்தியா கப்பல் செல்லும்.

இதிலே இங்கிருந்து, ஏழை எளிய மக்களே ஏராளமாகச் செல்வர் - கட்டணம் அதற்குத் தகுந்தபடி இருந்து வந்தது.

பர்மாவுக்கு இங்கிருந்து பண்டங்கள் போகும்.

பர்மாவிலிருந்து தேக்கு முதலிய பண்டங்கள் இங்குவரும்

மொத்தத்தில், தென்னாட்டவருக்கு வசதியானது இந்தக் கப்பல் போக்குவரத்து.

நஷ்டம் என்று காரணம் காட்டியும், கப்பல் பழசு பழுதாகிவிட்டது. புதுப்பிக்கப் பெரும் பொருள் செலவாகும், என்று கூறியும், சிந்தியா இப்போது இந்தக் கப்பலை நிறுத்திவிட்டது.

ஏழைக்கு இடி! சென்னை-ரங்கூன் வியாபாரத் தொடர்புக்குத் தாக்குதல் - கண்டனம் கிளம்பி இருக்கிறது.

இனி, சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குக் கப்பலில் சென்று, அங்கிருந்து பர்மாவுக்குக் கப்பல் தேட வேண்டும்.

அந்தக் கப்பலில், ஏழைகளுக்கான "மேல் தட்டு' பிரயாணவசதி மலிவான கட்டண வசதி - அதிகம் கிடையாது.

இப்போது செலவாவது போல இரட்டிப்புச் செலவாகும்.

பண்டங்களை அனுப்புவதிலும், பாரம் ஏறும்.

பாரம் ஏறினால், வடக்கே வங்கம், வங்கத்துக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து கிளம்பும் சரக்குடன், தென்னகத்துச் சரக்கு போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது.

இவ்வளவு இன்னல் இருக்கிறது! ஏன் என்று கேட்கவோ, சிந்தியா போனால் என்ன, இதோ ஒரு விந்தியா என்று கூறிக் காரியமாற்றவோ, சென்னையால் முடியாது! டில்லி கண் திறக்க வேண்டும்!

நஷ்டஈடு தந்து சிந்தியாவைத் தொடர்ந்து கப்பலை நடத்தச் சொல்லலாம்.

புதிதாகக் கப்பல் உதவலாம், அல்லது பழுது பார்க்க வசதி செய்து தரலாம்.

எதையாவது இந்திய சர்க்கார் செய்ய வேண்டும்.

தினமணியின் அழுகுரல் கேட்கிறது இதுபோல ஜுன் 23இல். ஏன் சிதம்பரனாரின் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் புனித புரியாக்கப்பட்டுள்ள தென்னகத்துக்கு, அந்த அவல நிலை, என்று நாம் கேட்கிறோம்? வடநாடு தென்னாட்டை அடிமைப் படுத்திற்றா? யார் சொன்னது? இதோ என்னைப் பாருங்கள், என்று கேட்கிறார். அமைச்சர் சுப்பிரமணியனார், "பார்க்கிறேன்! பெருமூச்சு எறிகிறேன்! பாவியேன் இந்தப் "பரிசு' கிடைக்குமா கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறேன்! கனமாகும் காலத்தை, கடவுளே! சீக்கிரம் தாருமே'' என்று மலைபோன்ற உடலை வில்போல வளைத்தபடி, வரம் கேட்கிறார். வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் "இன்சால்வென்ட்' போட்டிடும் போக்கில், தேர்தலின்போது மக்களிடம் அளித்திட்ட வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, சேற்றை வாரியும் நம்மீது வீசிட முற்பட்டிருக்கும் ராஜா சிதம்பரனார்! அந்தச் சிதம்பரனார் பிறந்த அதே நாட்டில் இப்படியும் ஒரு சிதம்பரனார்!

தம்பி! நமது கழகத்துக்கு நாட்டிலே வளர்ந்து வரும் செல்வாக்குக் கண்டு, ரோஷம் பொங்கி இப்படிப் பேசுகிறார் போலிருக்கிறது இந்த "கனம்' - ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் - துவக்கத்திலேயேதான் சொல்லிவிட்டாயே, காரணம் எனக்கும் தெரிந்ததுதானே - ரோஷக்காரராக இருந்திருந்தால் இவர் ஆச்சாரியாருடைய தொண்டரடிப்பொடி ஆழ்வாராக இருந்தபோது புகுத்திப் போற்றிப் பாராட்டிய குலதர்மக் கல்வித் திட்டத்தை, காமராஜர் கட்டளையிட்டதும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுச் சுடலைக் காசுபோலப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பாரா? "என் திட்டம் இல்லையா. அப்படியானால் நான் பதவியில் இரேன். நான் ரோஷக்காரன், கொங்கு வேளாளர் குடிப்பிறந்த எவரும், இப்படிக் குட்டக் குட்டக் குனிந்து கொடுத்து, எட்டுக் குட்டுக்கு ஆறணா எடு, ஆறுôறு முப்பத்தாறு இரண்டேகால், ரூபா. என்று கேட்கும் போக்கில் இருக்க மாட்டார்கள். அதற்கு வேறு ஆளைப் பாருமய்யா. நான் இதோ பதவியை விட்டுப் போகிறேன். கோர்ட் அழைக்கிறது, கொங்கு நாடு அழைக்கிறது, மானம் கட்டளையிடுகிறது, ரோஷம் குத்திக் குடைகிறது'' - என்று கூறியல்லவா, வெளி ஏறியிருந்திருக்க வேண்டும். மந்திரியாகத்தானே இருக்கிறார்.

"அவர் கட்டிய தாலியை இதோ அறுத்தெரிந்துவிட்டேன், சுவரேறிக் குதித்து வந்த சுந்தரனே! கட்டுதாலி உன்கையாலே! அதற்கும் விருப்பம் இல்லையேல், அதுவும் வேண்டாம், வேளைக்குச் சோறு, சாயம் போகாச் சேலை, சாயந்திரத்தில் மல்லி, சாய்ந்துகொள்ள மெத்தை. . .'' என்று பட்டியல் கூறிடும் கண்வெட்டுக்காரி, மன்றம் ஏறிவாழும் வழி பற்றிப் பேசிடுவ தில்லை; அமைச்சரல்லவா, பேசுகிறார்! பேசட்டும் தம்பி! பேசட்டும்! பூர்ணகும்பம், அர்ச்சகர் சங்க வரவேற்பு, நிலப்பிரபுவின் விருந்துபசாரம். இது கூடவா, பேசக் கூடாது? பேசட்டும் தம்பி, பேசட்டும். நமது வேலையை இந்தப் பேச்சும் ஏச்சும், துளியும் பாதிக்காது.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Anna_sign
3-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:09 am

குருபீடம்

தோழர் என்.வி. நடராசன் அவர்களின் காங்கிரஸ் வாழ்க்கை-
காங்கிரசில் புதியதோர் நுழைவு-
செட்டி நாட்டு அரசர்.

தம்பி!

வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன். அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் - அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும். அதுவரையில் நமக்குத்தான் பொறுமை வேண்டும். நமக்கு நமது கொள்கையில் திடமான நம்பிக்கை இருக்கும் போது பயமென்ன? எப்படியும் இன்றுமாற்று முகாமில் உள்ளவர்களிலேயே பலர், நம்மோடு சேரும் நாள் வரத்தான் போகிறது! உனக்கு நமது நண்பர், ஓயாது உழைக்கும் என்.வி. நடராசன் தெரியுமல்லவா! அவரை என்ன வென்று எண்ணிக் கொண்டாய்!! ஏ! அப்பா! அதி தீவிரக் காங்கிரஸ் காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்தியமூர்த்தியின் பிரத்யேகப் பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டுக்காலம் இருந்தவர்! சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலே உறுப்பினர் எதிர்கால கார்ப்பரேஷன் மெம்பர் என்றும், ஒரு சான்சு அடித்தால் எம்.எல்.ஏ ஆகலாம் என்றும் கூறி வந்தனர் - சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த "எலும்பு மனிதர்' காங்கிரசல்லாத கட்சிகளின்மீது கண்டனம் பொழிவார்! வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை!! நான் கார்ப்பரேஷன் தேர்தலில் ஈடுபட்டபோது என்னைத் தோற்கடிக்க, முழுமூச்சாக வேலை செய்தவர். அப்போதெல்லாம், அவரிடம் "நாலாம் தமிழ்' நடமாடும்! நாலாம் தமிழ் என்றால், தெரியவில்லையா, இயல் இசை நாடகம் - முத்தமிழ்! வசை, நாலாம் தமிழ்!! என்ன அப்படி பிரத்யேகப்பெயரிட்டு அழைக்க வேண்டிய அளவுக்கு வசை இருந்தது, என்கிறாயா கேள், தம்பி; சொல்கிறேன்! நீ, எத்தனையோ விபூதி வில்வங்கள் ஏசிப் பேசக் கேட்டிருப்பாய், இதுபோலக் கேட்டதுண்டா சொல், பார்ப்போம்.

"நெஞ்சிலே இருக்கிற மஞ்சா சோறு வெளியே வரும் - ஆமாம்.''

இதற்கு நாலாம் தமிழ் என்று தனிச் சிறப்பு அளிக்காம லிருக்கலாமா, சொல்லு.

பொருள் என்ன தெரியுமோ இதற்கு - ஒரு தாக்குத் தாக்கியதும் கிறுகிறு என்று தலைசுற்றி, வாந்தி எடுக்க வேண்டி நேரிடும் - அப்போது உண்ட சாதம் மஞ்சள் மஞ்சளாக வெளியே வரும்! இது தான் பொருள்!

பேசினது - நம்ம நடராசன்! எனக்குத்தான் இந்த அர்ச்சனை! தேர்தல் காலம்! தேச பக்தி அவருக்குத் தலையில் ஏராளமான! தூபம் போட சத்தியமூர்த்திகள்; எனவே நாலாம் தமிழைத் தாராளமாகப் பொழிந்தார்; எனக்கு அவர் எப்படி அந்த நடையை இப்போது மறந்துவிட்டார் என்று கூடச் சில சமயங்களிலே ஆச்சரியமாக இருப்பதுண்டு.

நடை இது; உடை கதர்! படையும் உண்டு. மாலைக் கலகத்துக்கு ஆறணா; இரவுக் கலகத்துக்கு எட்டணா; நோட்டீசைக் கிழிக்க ஒரு ரூபாய்; சாணிவீச இரண்டணா; கனைத்துக்காட்ட ஒரு அணா; முண்டா தட்ட மூன்றணா; மூலை முடுக்கிலே நின்று வம்புச் சண்டை போட மூன்று ரூபாய் இப்படி "ரேட்' பேசிக் கொண்டு, பாரதமாதாவுக்குச் சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு! இத்தனைக்கும் எனக்கு அவர் அப்போதும் நண்பர்தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றாகவே வேலை செய்வோம். உன்னிடம் உண்மையைச் சொல்வதிலே தவறு என்ன, ஆங்கிலத்திலே ஏதாவது தொழிலாளர் சங்கத்துக்குக் கடிதம் வந்துவிட்டால்,என்னிடம்தான் கொண்டுவந்து காட்டுவார்!! காலையில் இது-மாலை வந்தாலோ "போலோ பாரத்மாதாக்கீ' யாகி விடுவார்!

அப்படிப்பட்டவர் இன்று, எவ்வளவு அரும்பணியாற்றி வருகிறார், திராவிடர் இயக்கத்தில், என்பதைப் பார்க்கிறாயல்லவா!

கட்டாய இந்தியை நுழைத்தார் ஆச்சாரியார்.

இந்தி எதிர்ப்புப் போர் துவங்கிற்று! நாம் பதறாமல் பகை வளர்த்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பு கெடாமல், கொள்கை வழுவாமல், குறிக்கோள் மறவாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், பணியாற்றினோம் - காங்கிரஸ் வட்டாரத்திலேயே நமக்கு ஆதரவு அரும்பிற்று; நடராசன் போன்ற பல காங்கிரஸ் நண்பர்கள். நாங்களும் தமிழர்களே! எங்களுக்கும் தமிழார்வம் உண்டு! நாங்களும் இந்திக்கு அடிமையாக மாட்டோம்' என்று பேசினர் - முதலில் நம்மவர்களைச் சந்திக்கும் போது - பிறகு தங்களுக்குள்ளேயே - அதற்கும் பிறகு காங்கிரஸ் மேடைகளிலேயே!!

இதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.

இந்தி எதிர்ப்பும் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்கியாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது, சத்தியமூர்த்திகளுக்கு.

சத்தியமூர்த்திகள் தடை விதித்தாலும் மீறி, தாய் மொழியைக் காக்கும் பணிபுரிந்தாக வேண்டும் என்ற கட்டம் வந்துவிட்டது, நடராசன் போன்றோருக்கு.

சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் பிரச்சினை கிளம்பிவிட்டது! நல்ல வார்த்தை சொல்லி நடராசனைக் கோட்டையில் பூட்டிவிடச் சத்தியமூர்த்தி திட்டமிட்டார்! தாய்மொழிப்பற்றுக்கு இடமளித்து விட்ட பிறகு, நடராசன் காங்கிரசின் கட்டுதிட்டத்தை உடைத்தெறிந்து விட்டு வெளி வந்து விடுவார் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது.

எனவே, சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெறும் நாளே, நான், நமது நண்பர்கள், சென்னை பெத்துநாயக்கன்பேட்டையில் நடத்தும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், காங்கிரசை விட்டு விலகிய என்.வி. நடராசன் பேசுவார் என்று துண்டு அறிக்கை அச்சிட்டு, காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் இடத்துக்கே நண்பர் கணேசன் மூலம் அனுப்பி விட்டேன்.

உள்ளே, கெஞ்சுதல், கொஞ்சுதல், மிரட்டல், சபித்தல் ஆகிய எல்லா ரசமான கட்டமும் நடந்தேறி, நடராசன் ராஜிநாமா செய்துவிட்டு வெளியே வந்தார் - அவரிடம் இந்த "நோடீஸ்' தரப்பட்டது - "எப்படி இதற்குள் அச்சிட்டு விட்டீர்கள்' என்று கேட்டார் - இது காலையிலேயே அச்சாகிவிட்டது. இதுபோலத்தான் நடக்கும் என்று தெரிந்து அச்சிடப்பட்டது என்று கணேசன் கூற, நடராசன், அப்படியா? என்று கேட்டுவிட்டு, நேரே, இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். அன்று துவக்கப்பட்ட அரும்பணி, நாளாகவாக, தரமும் திறமும் வளரும் வகையில் நடைபெற்றவண்ணம் இருக்கிறது, எனவே தான் தம்பி, "நான் சொல்வது, காங்கிரஸ் நண்பர்களிடம், நமது கொள்கையை எடுத்துக் கூறுவதிலே, பண்புவேண்டும் என்று அவர்கள் இன்று கோபம் கொண்டவர்களாக இக்கிறார்களென்றால், நாம் இன்னும் அவர்கள் உள்ளத்தில் புகத்தக்க விதமாக, நமது கொள்கையை எடுத்துரைக்கவில்லை என்று தான் பொருள்! நடராசர்கள், எங்கும் இருக்கிறார்கள் அவர்களை "நம்மவர்'களாக்கிக் கொள்ளும்திறமை நமக் கெல்லாம் வளரவேண்டும்!! அவர்கள் எப்போதும் எதிர் முகாமிலேயே இருந்து தீருவோர்கள் என்று எண்ணி, அவர்களைக் கண்டதும் முகத்தைச் சுளித்துக் கொள்வதும், அவர்கள் உருட்டு விழி காட்டினால் நாமும் அது போலாவதும் கூடாது. நாளாகவாக அவர்களுக்கு, காங்கிரஸ் இன்று யாருடைய கூடாரமாகி வருகிறது என்பது புரியத்தானே போகிறது! உழைக்க ஒரு கூட்டம், அரசியல் உல்லாச வாழ்வு நடாத்த வேறோர் கூட்டமல்லவா வந்துவிட்து! தடியடியும் சிறைவாசமும், முத்துராமலிங்கத் தேவருக்கு! மந்திரிப் பதவியும் அதனால் கிடைக்கும் மதிப்பும், ராமநாதபுரம் ராஜாவுக்கு - அதாவது ராஜாவாக இருந்தவருக்கு!! பட்டேல் வருகிறார் - பணப்பை ஜாக்கிரதை!! என்று லட்சக்கணக்கில் எச்சரிக்கை நோடீஸ், அபாய அறிவிப்புத்தாட்களை அச்சிட்டு வழங்கிய வட்டி வேந்தர்கள், காங்கிரஸ் வட்டாரத்திலே இன்று வட்டமிடுகிறார்கள். உண்மை ஊழியம் செய்து, காங்கிரசை ஊராளும் கட்சியாக மாற்றி அமைத்த காங்கிரஸ்காரர்களுக்கு இந்தக் காட்சி, பெருமையும் பூரிப்புமா தரும் என்றுஎண்ணுகிறாய்! அவர்களும் மனிதர்கள்தானே, தம்பி! மனம் படாதபாடு படத்தான் செய்யும்.

செட்டிநாடு அரசர் இன்று காங்கிரசுக்கு ஒரு செல்லப் பிள்ளையாக இருக்கிறார்! இது காங்கிரசின் வளர்ச்சியையா காட்டும்!! தியாகத் தழும்பேற்ற காங்கிரசார்களைப் பார்த்து, கேபேசும் கண்களல்லவா, செட்டி நாட்டரசருக்கு இருந்திடக் காண்கிறோம்! ஆளுங்கட்சிக்கு எந்நாளும் ஆதரவாளர் நாங்கள் - முன்பு வெள்ளையன் ஆண்டு வந்தான், வெண்சாமரம் வீசி நின்றோம். இடையே தமிழார்வம் ஓங்கி நின்றது, ஆட்சி தமிழரிடம் வந்து சேரும்போல் தோன்றிற்று, உடனே அவர்களோடு குலவினோம். செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏறிற்று, உடனே எங்கள் கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றிவிட்டோம் - எப்போதும் ஆளவந்தாரின் ஆதரவாளர் நாங்கள் என்று தானே செட்டி நாட்டரசரின் புன்னகை பேசுகிறது. இது காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியாதா!

கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டு, தமிழர் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டுக் கொண்டு ப்யூக்கும் செவர்லேயும் இருக்க, தங்கசாலைத் தெருவிலிருந்து, கடற்கரைவரையில் நடந்து வந்தார், இன்றைய செட்டி நாட்டரசர், அன்று குமாரராஜா. நாமாவது அவரை ஓரளவுக்கு வேலை வாங்கினோம் - மணிமாடத்துக்குச் சொந்தக்காரர். அவர், எனினும் மணல்மேடுகளுக்கு இழுத்து வந்தோம்! வியர்வை அரும்புமோ என்று எண்ணினாலே வெட்டிவேர் விசிறி கொண்டு வீசிட ஏழெட்டுபேர் எப்போதும் தயாராக இருந்தனர் அவருக்கு - கொட்டிடும் வியர்வையைத் துடைக்கவும் கூச்சப்பட்டுக் கொண்டு, கொடி பிடித்து ஊர்வலத்தில் நடந்தார் குமாரராஜா! நாம், குமாரராஜாவுடன் கூட்டுறவு வைத்துக் கொண்டதால், அவருக்கு ஏற்றபடி கொள்கையைக் குறுக்கிக் கொள்ளவில்லை, கொள்கையின் குணமும் மணமும் வளர்ந்தது - வளருகிறது - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது, அவர் அந்தப் பக்கம் திரும்பினார், அங்கு அழைப்புக் கிடைத்தது. சென்றார், வென்றார்; வென்றார் என்றால் உண்மைக் காங்கிரசைக் கொன்றார் என்று பொருள் - நாமோ, இருந்தார், சென்றார்; நாம் இலட்சியபுரி நோக்கி நடைபோடுவோம், என்று தொடர்ந்து நமது பணியினை ஆற்றி வருகிறோம் காங்கிரஸ் நண்பர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்! இவை தெரியாதது போல இருக்கிறார்கள் - ஆனால் நமது கழகம் மக்கள் மன்றமாகி விட்டதையும் காங்கிரஸ் சிங்காரச் சீமான்களின் மாளிகையாகிவிட்டதையும் அவர்கள் அறியாமலில்லை - அறிந்தோர் மனதிலே ஆயாசம் எழாமலில்லை! வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் - அதுவும் கொஞ்சகாலம் வரையில் தான்!

தம்பி! சென்ற கிழமை, காங்கிரசின் உண்மை உழைப்பாளியின் உள்ளன்பைப் பெற்று உயர்இடத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவப்படத்தை, மத்திய சர்க்கார் மந்திரி டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் திறந்து வைத்து, பாராட்டுரை வழங்கியிருக்கிறார், என்றோர் செய்தி வந்தது, பார்த்திருப்பாய். யார், இந்த, டி.டி.கி.? காமராஜர் வனவாசம் செய்த போது உடன் இருந்தவரா? இல்லை! இல்லை! அப்போது சுகவாசம் செய்து கொண்டிருந்தவர்! சிறையில் தோழரோ? இல்லை உப்புச் சத்தியாக்கிரகத்துக்கும் திட்டம் தீட்டிய தீரரோ? கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்ட கர்ம வீரரோ! அன்னியச் சாமான்களை பகிஷ்கரித்த ஆற்றல்மிக்க தேசபக்தரோ? இல்லை, தம்பி, இல்லை. சோப்புச் சீமான்; சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தவர், அன்னிய நாட்டு லக்சும், வினோலியாவும் அவருடைய கதர், கைராட்டை, காங்கிரசைத் தேர்தலிலே எதிர்த்து முறியடித்து, ஒரு முறை சென்னை சட்டசபையில் எதிர்க்கட்சியிலும் வீற்றிருந்தார். ஆகஸ்டுப் புரட்சி, செப்டம்பர் சத்தியாக்கிரகம், எதிலும் அவர் ஈடுபட்ட தில்லை. ஆனால் இன்று, அவர் மத்திய சர்க்கார் மந்திரியானார்! அவர் திருக்கரம் பட்டால் மதிப்பு, அவருடைய திருவாயால் புகழுரை சொரிந்தால் பெருமை என்று கருதும் வகையில் அவரைக்கொண்டு காமராஜரின் திருவுருவப்படத்தைத் திறக்கச் செய்தனர். அந்த நேரத்தில், அந்நாள் இந்நாள் நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உள்ளம் கொண்ட உண்மைக் காங்கிரஸ் காரர் வெட்கமும் வேதனையும் அடையாமலிருக்க முடியுமா? வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் - உள்ளத்திலே வேதனை அரித்தபடிதான் இருக்கும். அவர்களெல்லாம், ஒரு கொள்கை புனிதமானது, திட்டம் தேவையானது, என்று உணரும் வரையில்தான் நம்மீது காய்வர், பாய்வர். ஆனால் நாம் எடுத்துரைக்கும் கொள்கை நியாயமானது, திட்டம் தேவையானது என்று உணர்ந்து விட்டால், நிச்சயமாக, நம்மைப்பின்னணியில் தள்ளிவிட்டு, முன்னணியில் நின்று, வீரப்போர் புரியக்கூடியவர்கள்-இதை அவர்களிடம் பேச நேரிடும் போதெல்லாம் மட்டுமல்ல, நம்மைப் புரிந்து கொள்ளாததால் அவர்கள் நம்மை ஏசும் போதெல்லாம்கூட நினைவிலே வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:09 am

மேடை தவறாமல் நம்மை நிந்தித்துத்தான் வருகிறார்கள் - ஐந்தாண்டு திட்டத்தை நாம் கண்டிப்பது அக்ரமம் என்று பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் குற்றாலத்திலேகூடி என்ன தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா, தம்பி. தென்னாட்டிலே சில பெரிய கனரகத் தொழிற் சாலைகளையாவது அமைத்தாக வேண்டும் என்று, வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்கள்.

"இப்படியாவது ஒரு தீர்மானம் போடாவிட்டால் மக்களின் மனம் எரிமலையாகும்.''

"வடநாட்டாருக்கு, நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியாக வேண்டும்.''

"குட்டக் குட்ட குனிந்து கிடப்பது, அறிவுடைமையு மல்ல, ஆண்மையுமாகாது.''

"முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில்தான் துரோகம் செய்தனர்-ஏமாற்றப்பட்டோம்-இரண்டாவது திட்டத்தி லாவது நியாயம் கிடைக்கவேண்டும்''

"கழகக்காரர்கள் மானம்போகிற மாதிரிப் பேசு கிறார்கள் - அவர்கள் சொல்வதும் உண்மையாகதான் இருக்கிறது. வடநாடு, நம்மைக் கேவலமாகத்தான் நடத்துகிறது''

"கழகம் கிடக்கட்டும், சுதேசமித்திரன் கார்ட்டூனுக்கு என்ன சொல்கிறீர்கள்?''

"அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்; தூங்குபவன் துடையில் கயிறு திரிக்கத்தான் செய்வார்கள்''

இதுபோலவும், இதைவிடக் கடுமையாகவும் பேசினவர்கள், எத்துணை பேரோ, யார் கண்டார்கள்.

ஒரு தீர்மானம் போட்டாக வேண்டிய நிலைமை பிறந்திருக்கிறது - சாதாரணமென்றா இதற்குப் பொருள்!

குற்றாலத்துத் தீர்மானம், கண்களை இறுக மூடிக்கொண்டு, காதுகளையும் அடைத்துக் கொண்டு இருப்பதுபோலக் காணப்பட்டு வந்த காங்கிரஸ் நண்பர்கள், உண்மையில், நாம் கூறிவந்ததை மிகக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பதையும், நம்மைக் கண்டித்துப் பேசியவர்கள், அதேபோது உள்ளூர வடநாட்டு வஞ்சனையைப் கண்டித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும்தானே, காட்டுகிறது. இல்லையானால். இப்படி, ஒரு தீர்மானம் தீட்டவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன வந்தது? தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்ற உண்மை உள்ளத்தை உறுத்துவதாலேதான், இரண்டாவது திட்டதிலாவது நியாயம் கிடைக்கச் செய்யுங்கள் என்று கேட்கவேண்டி வந்தது. இல்லையானால் வீரதீரமாக, வடநாடு தென்னாட்டுக்கு ஐந்தாண்டுத்திட்டத்தில் துரோகம் செய்தது என்று கூறுவது தேசத்துரோகம்-என்று கனல் கக்கிடும், தீர்மானம் நிறைவேற்றி விட்டல்லவா மறு காரியம் பார்த்திருப்பார்கள்.

தம்பி! நம்மைவிட அடிக்கடி, வடநாடு போய் வருகிறவர்கள்தானே, காங்கிரஸ் தலைவர்கள்! அங்கே பொங்கிடும் வளமும், அதன் பயனாக ஓங்கிடும் கர்வமும் அவர்கள் காணாமலா இருக்கிறார்கள்! கண்டு வெட்கமும் வேதனையும் கொண்டு, பிறகு, கட்சி கட்டு திட்டம் இவைகளை எண்ணி விம்முகிறார்கள்! வீறுகொண்டெழும் காலம் வெகு தொலைவில் என்று கருதாதே - விரைவிலே வரக்கூடும். நீயும் நானும், அவர்களுடைய இதயத்தைத் தொடும் வகையில், விஷய விளக்கம் தரவேண்டும்.

எங்களுக்கும் தெரியும் - என்று ஆரம்பத்தில் ஆதீன கர்த்தா பாணியில் பேசுவர்.

எங்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கிறது - என்று அன்பாகப் பிறகு கூறுவார்.

எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதற்காவன செய்வோம் - என்று உறுதி அளிக்க முன்வருவார்கள் அடுத்த கட்டத்தில்.

நாம் ஒன்றுபட்டுக் கேட்டால்தான், வடநாடு வழிக்கு வரும்!

கொஞ்சியது போதும் - இனி கிளர்ச்சிதான்!

மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒருகை பார்த்தோம்; இந்த மார்வாடி ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதா முடியாத காரியம்!

விழித்தெழுவீர் விடுதலைப் போரில் ஈடுபடுவீர்!

திராவிடநாடு திராவிடருக்கே!

இவ்விதமெல்லாம், படிப்படியாகத்தான், பிரச்சினை உருவெடுக்கும்.

அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டியதுதான் நமது பொறுப்பு.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பாணி, தம்பி, உனக்குத் தெரியுமோ என்னமோ!

அவருடைய உள்ளத்தில் நன்றாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட வேண்டும். பிறகு, கேளேன் அந்த நாத இன்பத்தை! வீணையும் பிடிலும், குழலும், ஷனாயும், கோட்டும் பிறவும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு, வெளியே உலவி, கேட்போரின், மனமெல்லாம் இசைமயமாக்கி விடுகிறது. அவரிடம் உள்ள நாயனம் நமக்கு நல்ல இசை அமுது அளிக்க வேண்டுமானால், நமக்கு மகிழ்வளிக்க வேண்டும் என்று அவர் எண்ணினால்தானே! கால் ஆயிரம் தருகிறேன் காம்போதி வாசித்துக் களிப்பூட்டு; ஆயிரம் தருகிறேன், தோடி நடக்கட்டும்; மேலும் தருகிறேன், மோகனம் நடக்கட்டும், என்று கூறினால், இசையா கிடைக்கும்? கங்கிரசிலுள்ள உண்மை ஊழியர்கள், இதுபோலத்தான், அவர்களின் உள்ளம், நமது கோரிக்கைக்கு இடமளிக்கவேண்டும்-பிறகு பாரேன், அவர்களின் தீவிரத்தை! தீரத்தை! அந்த நிலையைப் பெற, நாம்தான், முறையாகப் பணியாற்ற வேண்டும்.

இழிமொழி, பழிச்சொல், ஈனத்தனமான தாக்குதல், இட்டுக்கட்டிப் பேசுவது, இல்லது புனைதல், ஏசல் வீசுதல், என்பன போன்ற எத்தகைய கணையும் நம்மை நிலை இழக்கச் செய்யக்கூடாது. இந்தப் பரிபக்குவம் நமக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் இல்லாமற் போகவில்லை - இருந்து விட்டு வந்த இடத்தில் நுழைந்து கொண்டு, நோட்டம் பார்க்கும் நண்பர் வீசும் நரகல் நடை நமக்கு வேறு எதற்குப் பயன்படுகிறது என்று எண்ணுகிறாய்! இந்தப் பரிபக்குவம் பெறத்தான்! ஒரே கலத்தில் உண்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளத்தக்க அளவுக்கு உறவு இருந்த இடத்திலிருந்தே நித்த நித்தம், குறி தவறினாலும் கவலைப் படாமல், ஏசல் பாணங்கள் சரமாரியாகக் கிளம்புகிறது - துவக்கத்தில் தம்பி, உன் போன்றவர்களுக்குக் கோபமாகக்கூட இருந்தது. இப்போது நாலு நாளைக்கு அவ்விதமான பாணம் கிளம்பாவிட்டால், ஐயோ பாவமே; என்ன உடம்புக்கு, என்று கேட்கும் பரிதாப உணர்ச்சி அல்லவா வருகிறது - அந்த தூற்றல் பாணங்களைப் பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, காங்கிரஸ் வட்டாராம் ஏவும் கண்டனக் கணை பிரமாத மானதாகத் தெரியக் காரணமில்லை. நம்மைப் புரிந்து கொள்ளாததால், காங்கிரஸ் வட்டாராம் கணைவிடுகிறது. நாம் பிரிந்துவிட்டதால் குருபீடம் கணைவிடுகிறது!! பொறுமை, அமைதி, கண்ணியம் எனும் அருங்குணத்தையும் பெறவும்; தூற்றலைத் தாங்கிக் கொள்ளும் மனத்திடத்தையும்; நோக்கத்தை மாற்ற முனைவோர் வீசும் நிந்தனையைப் பொருட்படுத்தலாகாது என்ற உள்ளப்பாங்கையும் நாம் பெற இப்போதும் குருபீடம் அருள் புரிகிறது!! இன்னும் நமக்கென்ன குறை!!

குருபீடத்தில் நாமெல்லாம் குற்றேவல் புரிந்துகொண்டு கேட்டறிந்த உபதேசத்தை மறவாமல், நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

என்னைப் பொறுத்த வரையில், தம்பி! நான் அங்கு இருந்தபோது கிடைத்த பாடத்தைவிட, அரும்பெரும் பாடத்தை, இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன். ஏசல் கணைகள் மூலம்-என் உள்ளம், தாங்கும் சக்தியை மிகத் திறம்படப் பெற்று வருகிறது. எனவேதான், என்னால் மாற்றுக் கட்சிக்காரரிடம் மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல், கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தேவைப்படும் வகையான பணியாற்றும்படி, உன்னைக் கேட்டுக் கொள்ளமுடிகிறது; அண்ணனுக்குக் கிடைத்துள்ள மனப்பாங்கு, தம்பிக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தான் இவ்விதம் கூறுகிறேன்.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Anna_sign
3-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:10 am

அங்கே பவனம் இங்கே படம்!

பம்பாயில் பீரஹத் பாரதிய சமாஜம்-
வெளிநாடு களில் திராவிடர் நிலை -
நம் நாட்டில் அகதிகள் உயர்நிலை.

தம்பி!

ஆறடுக்கு மாடிகொண்ட மாளிகை எழும்பப் போகிறது - பன்னிரண்டு இலட்ச ரூபாய் செலவில்!

சர்க்காரின் திட்டங்களிலே ஒன்று போலும் என்று எண்ணிவிடாதே தம்பி! ஒரு சமாஜம் கட்டப்போகும் அரண்மனை இது. அரண்மனை மட்டுமல்ல, ஆராய்ச்சிக் கூடமுங்கூட!

பீரஹத் பாரதிய சமாஜம் என்பது இதன் பெயர்-இதன் பணி, வெளிநாடுகளிலே சென்று தங்கியுள்ள இந்தியர்களுக்கும் இடையே தொடர்பு, தோழமை ஏற்படுத்தி வைப்பது. இது மட்டுமல்லாமல், வெளிநாடு சென்றோரின் வரலாறு பற்றிய நுணுக்கங்கள், செல்லவேண்டிய காரணம் என்ன, சென்றபோது அடைந்த சிரமம் எப்படிப்பட்டது, சென்று அங்கு கண்ட அனுபவம் எத்தகையது என்பன போன்றவைகளைக் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.

இத்தகைய நேர்த்தியான நோக்கத்துக்காக, அண்ணாந்து பார்ப்போரின் கழுத்து வலி எடுக்கும் அளவு உயரமாக, அன்னிய நாட்டினர் பார்த்து ஆச்சரியப்படத் தக்கவகையில், சமாஜக் கட்டிடம் சமைக்கப் போகிறார்கள்.

மாளிகை அமைக்க 12 இலட்சம், அதிலே மற்ற வசதிகள், ஒரு படிப்பகம் உட்படக் காண மற்றோர் நாலு இலட்சம்.

இதற்கு நிதி குவிகிறது.

இந்திய சர்க்காரிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் நன்கொடை எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தறிந்தால் போதாதா, நன்கொடை வாயு வேகம் என்கிறார்களே, அவ்விதம் வந்து சேரப்போகிறது.

பம்பாயில்! - இங்கா கட்டுவார்கள்! பம்பாயில்தான்.

கோடீஸ்வரர்களின் கோட்டத்தில்தானே, இத்தகைய கொலு மண்டபம் அமைக்க முடியும்; அமைக்கிறார்கள்.

இந்த பவனத்தில், வெளிநாட்டார் வந்து தங்க, வகை வகையான ஏற்பாடுகள்.

வெளியிலிருந்து இங்கு வரும் மாணவர்களுக்கு அறுசுவை உண்டி.

செவிச் சுவை உண்டு.

சிந்தனைக்கும் விருந்து தருவார்கள் - படிப்பக மூலம்.

இவைகளுக்கான நிதி திரட்டும் ஏற்பாடு, விமரிசையாகத் துவக்கப்பட்டு, வேகமாக வளர்ந்து, இப்போது வெற்றிக் கட்டத்தை நோக்கித் துரித நடைபோட்டுத் செல்கிறது.

வெளிநாடுகளிலே வதியும் இந்தியர்கள்! - என்ற சொற்றொடரைக் கவனித்தாயா, தம்பி. பொருள் எளிதாயிற்றே, இதை ஏன் கவனப்படுத்துகிறாய், என்று கேட்டுவிடாதே. பொருள் எளிதுதான், ஆனால் இதிலே புதை பொருளும் இருக்கிறது, அதைக் கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல.

இந்தியர்கள் என்ற பட்டியலில் நாமும் இருக்கிறோம்.

நம்மவர்கள் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள் - ஆமாம். பல இலட்சம்! வடக்கத்தியர்களும் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள். வெளிநாடுகளிலே சென்றுள்ளவர்களை, வடவர் திராவிடர் என்று இரு பிரிவாக்கிக் காட்டுவதற்குக் காரணமும் இருக்கிறது - அதிலே நாடு அறியவேண்டிய கருத்தும் நிச்சயமாக இருக்கிறது. வடவர் வெளிநாடுகள் சென்று வதிகிறார்கள் - திராவிடர் வெளிநாடு சென்று வதைபடுகிறார்கள்.. வெளிநாடு சென்றுள்ள வடவரில் பதினான்கணாபாகம், முதலாளிகளாய், நிலச்சுவான்தார்களாய், ஆலைகளின் சொந்தக்காரர்களாய் வாழ்கிறார்கள்.

அவர்கள் சென்று வாழும் இடங்களிலே, அரசியல் சூத்திரக் கயிறுகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

வெளிநாடு சென்றுள்ள வடவரிலும், கிழக்கு ஆப்பிரிக்கர் மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலே சென்று தங்கி, சீரும் செல்வாக்கும் பெற்றுள்ள வடவர்களுக்கு அங்கே உள்ள பிரச்சினை; சொத்துகள் வாங்க உரிமை தரப்படவேண்டும்; அரசியல் ஆதிக்கத்திலே கிடைக்கும் பங்கின் அளவு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்; வேறு வேறு நாட்டவரிடமிருந்து கிளம்பக்கூடிய வியாபாரப் போட்டிகளை வேரறக்களைவதற்கு இந்திய சர்க்கார் தக்க திட்டம் தயாரித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்; என்பவைகளாகும்.

கூலி போதவில்லை, கும்பி நிரம்பவில்லை, கொட்டும் குளிரைத் தாங்கிக் கொள்ளச் சக்தி இல்லை, கொடுக்கும் கசையடியால் பீறிட்டு வரும் குருதியைத் துடைக்கவும் நேரமில்லை, வேலையில் நிம்மதியுமில்லை. அது நிலைத்து இருக்கும் என்பதற்கும் உறுதி இல்லை, - இவைகளல்ல, பவனபுரியினருக்குள்ள பிரச்சினைகள்.

இந்தப் பிரச்சினைகளெல்லாம் நம்மவர்களுக்கு - நாடாண்ட இனம் என்று கூறுகிறோமே, அந்தத் திராவிட மக்களுக்கு - வெளிநாடுகளிலே வாழ்பவர்களுக்கு அல்ல - வதைபடுவர்களுக்கு!

பவனம் அமைகிறது, அவர்களுக்கு
படகு அழைக்கிறது, நம்மவர்களை!
பல்வேறு நாடுகளிலே பரங்கியர் போலாகி
விட்டுள்ளனர், அவர்கள்.
சென்ற இடமெங்கும் வறுமைச் செந்தேள்
கொட்டுகிறது, திராவிடரை.

தேயிலைத் தோட்டம் அமைக்கிறார்கள், மோட்டார் பஸ்கள் நடத்துகிறார்கள், பல சரக்குக் கிடங்குகள் அமைக்கிறார்கள், அவர்கள்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து, அட்டைக்கடி அரணைக்கடி பெற்று, ஆவி பிரியாதது ஒன்றுதான் பாக்கி என்று கூறத்தக்க அவல நிலையில் இருக்கிறார்கள், திராவிடர்!

ராஜாங்கத்திலே நாங்கள் ஏன் நடு நாயகர்களாக்கப் படக் கூடாது? என்று கேட்டு, புருவத்தை நெரித்துக் காட்டுகிறார்கள், அவர்கள்.

ரப்பர் பாலை எடுத்துவிட்டு, இராத்தூக்கமின்றி, கைகளைப் பிசைந்தும், கண்களைக் கசக்கிக்கொண்டும், கலங்கி நிற்கிறார்கள், திராவிட மக்கள்.

அவர்கள் எதிர்காலத்தை மேலும் எழிலுள்ளதாகவும், நிலையை ஏற்றமுள்ளதாகவும் செய்ய, பவனம்!

நம்மவர்களுக்கு, இந்த ஒரு வேளைக் கஞ்சியும் ஏன் தரவேண்டும் என்று சிங்களம் பேசிக்கொண்டு, சிங்கக் கொடி சர்க்கார் படகுகளைக் காட்டுகிறது, ஏறிச்செல்-எங்கள் நாட்டிலே இடமில்லை, போ, போ! என்று.

இவர்களுக்கு, ஒரு குடில் இல்லை இங்கு.

அவர்களுக்காக அக்கறை காட்டும் அன்பர் குழாம், ஆறடுக்கு மாடி கட்டுகிறது - ஆனந்தத்துடன் சிந்து பாடுகிறது!

ஏன்?

அவர்கள், ஆளும் இனத்தினர்! திராவிடர், அடிமை இனத்தவராக்கப்பட்டுவிட்டனர்!

வேங்கைக் காட்டிலேதான் நரி ஆட்சி நடக்கிறதே - நரிக்குத்தானே பிறகு, எல்லா வைபவமும் கிடைக்கமுடியும்.

திராவிடர்கள் இலங்கையில், பர்மாவில், மலாய் நாட்டில் எங்கும் இன்று இடர்ப்பட்டு, இழிமொழிகளைத் தாங்கிக் கொண்டு உள்ளனர். அவர்களின் வாழ்வு துலங்க, வகை என்ன, வழி என்ன என்பதற்கு, ஓர் அறிவியற்கூடம் இல்லை, ஆற்றல் அரங்கு காணோம். அங்கே ஆறடுக்கு மாடி அமைத்து அந்தப் பவனத்தில் ஆராய்ச்சி நடத்தப்போகிறார்கள், ஏன் சென்றனர்? எப்படிச் சென்றனர்? சென்று எவ்வகையில் அங்கு வாழ்வு பெற்றனர்? என்பன பற்றி! துரத்தி அடிக்கிறதே இலங்கை சர்க்கார், அந்தத் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் திராவிட மக்களுக்கு, மீட்சிக்கு மார்க்கமுண்டா, என்று கேட்க நாதியில்லை, கவனிக்க நேரமில்லை. கண் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது, ஆனால் இந்தப் பிரச்சினையைக் கவனிக்க அல்ல.

இலங்கை சர்க்கார், திராவிட மக்களைத் தேளெனக் கொட்டி, அம்மக்கள் தேம்பித்தவித்துக் கொண்டிருந்தபோது,விஜயலட்சுமி பண்டிட் அங்கு பவனி சென்றதும், அதுபோது ஆசியாவின் ஜோதியின் குடும்பக் குமரிகள், குதூகல விருந்திலே கலந்து கொண்டது மட்டுமல்ல, கொத்தலாவலையுடன் மேனாட்டு முறையில் நடனமாடி ரசித்ததும் தம்பி, நாடு கண்ட காட்சி! கண்ணீர் பொழிகிறான், காவிரிக் கரைக்காரன்; பன்னீரில் குளித்தெழுந்து, பரிமள கந்தம் பூசி, பட்டுப் பட்டாடை அணிந்து கொண்டு, பரங்கியர் முறையிலே "பால் டான்சு' ஆடினர், பண்டிதரின் இல்லத்துச் செல்வக் குமாரிகள் - படாடோபம் கூடாது - ஆர்ப்பாட்டம் ஆகாது - செல்வச் செருக்கு கூடாது - ஏழை மக்கள் புழுப் போலத் துடிக்கும் போது பணக்காரர்கள் பகட்டாக வாழ்ந்து காட்டுவது வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் பண்டிதர், இந்த அக்ரமத்தைக் கண்டித்தாரில்லை.

பிரான்சுப் புரட்சி வெடிக்கும் முன்பு இது போல நடை பெற்ற துண்டு - மாளிகையிலே மதுக்குடம் உருளும், இடை நெளியும், கடைசிவக்கும், கனவான்கள் கனகப் பந்துகளைப் பெறுவர் காரிகையர் கோலமயில் போலாடுவர், குயிலெனக் கூவுவர், சாகசச் சமரில் யாருக்கு யார் தோற்பது என்பதறிய முடியாதது பிரச்னையாகும், இந்த அநீதியைத் தடுத்திட "காய்கதிர்ச் செல்வனே! நீ யாவது முயன்று பார்'' என்று கூறிவிட்டு, நிலவு மங்கை மறைவாள். கோழி கூவும், கோகிலங்களின் குறட்டை கேட்டு அஞ்சும் - அதே நாட்டில், வயலில் செந்நீரும் கண்ணீரும் சேறாகும்; கருவுற்ற காரிகையின் கதறலொலியைக் கேட்கக் சகியாத கணவன், கர்த்தனின் ஆலயமணிச் சத்தத்தைக் கிளப்பி, சிந்தனையை வேறு பக்கம்திருப்பிட முயல்வான். சவுக்கடி ஒரு புறம், சகதியில் வீழ்தல் மற்றோர் புறம், பட்டினிச் சாவு ஒரு பக்கம், பயங்கர நோய் மற்றோர் பகுதியில், என்று இவ்வண்ணம் ஏழை எளியோர் வதைபடுவர்.

பவனம் அமைக்கிறார்கள், பம்பாயில், திருட்டுப் படகேறியா வந்தாய், திரும்பிப் போ, என்று துரத்துகிறார் கொத்தலாவலை, திரு இடத்தவரை.

வடநாட்டினன் என்றால் அவன் அகதியாகட்டும், அன்னிய நாடுகளில் வசிப்பவனாகட்டும், ஆளும் இனத்தவன் என்ற காரணத்தால், மதிப்பும் சலுகையும் பெறுகிறான்.

அகதிகளுக்காக இந்திய சர்க்கார் அள்ளித் தந்த பணம் கொஞ்சமா?



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:11 am

அகதிகளுக்கு இங்கு எல்லாவகையான வியாபாரமும் செய்து கொள்ள, வழியும், வசதியும் தரப்பட்டன.

புதிய அங்காடிகளே அமைக்கப்பட்டன.

அலுவலகங்களிலே நுழைவர் அகதிகள் -ஆடவனாக இருந்தால் ஆத்திரத்தோடு சொல்வான், நானோர் அகதி - என் சொத்து அத்தனையும் பாகிஸ்தானில் பறிபோய்விட்டது - பத்து ரூபாய் தருவாயா - என்று கேட்பான். இரண்டோ மூன்றோ கிடைக்கும், இவ்வளவு அற்பனா நீ, என்று கேட்பது போல, நம்மை முறைத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக் கொண்டு போவான் ஆரணங்குக்கோ இதழில் கீதம், கண்ணில் நடனம், - நம்மவர்களோ, நாலோ ஐந்தோ அதிகம் தர இயலவில்லையே என்ற கவலையுடன் தருவர். ஒரு நமஸ்தே, கிடைக்கும்; ஒரு பெருமூச்சுப் பிறக்கும்.

அகதிகளுக்காக ஆற்றோரத்தில் அழகு நகர்கள் உண்டாக்கப்பட்டன திராவிடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டன.

இதோ இலங்கையில் இடர்ப்படுகிறார்கள் திராவிடர் - நாட்டற்றவர்கள் என்று நையாண்டி செய்யப்படுகிறார்கள் - யார் அவர்களைக் காப்பாற்றக் கவலை கொள்கிறார்கள்?

இந்தப் பிரச்சினையைச் சென்னை சர்க்கார் கவனித்துக் கொள்ளும் என்று தேஷ்முக் தெளிவளிக்கிறார். எவ்வளவு திகைப்பூட்டும் பிரச்சினையையும் மிகச் சாதாரணமாகக் கருதி மிகத் தாராளமாக வாக்களித்துக் கொண்டு வரும் காமராஜரோ, இது ஒரு பிரச்சினையே அல்ல - இலங்கையிலிருந்து வருபவர்கள், தாங்களாகவே இங்கு வேலைதேடிக் கொள்வார்கள், பிழைத்துப் போவார்கள் என்று கூறிவிடுகிறார்.

பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படீல், கிழக்கு ஆப்பிரிக்கா சென்று, அங்கு வாழும் இந்தியர்களிடம் பல இலட்ச ரூபாய் வசூல் செய்து கொண்டு வந்திருக்கிறார் - இந்த பவனம் அமைக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இலட்சக் கணக்கிலே பணம் தந்து, பட்டீலை மகிழ்விக்கச் செய்ய முடிகிறது, வடவரால்,

கண்ணீரைத்தான் காண்கிறோம் இலங்கையில் இடர்ப்படும் திராவிடரிடம் - அதைக் காண வெட்கமும் வேதனையும் அடைகிறோம்.

அவர்களுக்கென்று இங்கோர் தாயகம் இருக்கிறது.

எல்லா வளமும் கொஞ்சும் நாடு.

எனினும், அவர்களுக்கு இங்கு ஒரு கவளம் சோறு இல்லை.

அவர்கள் படும் அவதியைத் துடைத்திடும் ஆற்றல் படைத்த ஒரு சர்க்கார் இல்லை.

அவர்கள் சொந்த நாட்டிற்கே அகதிகளாக வந்து சேரும் போது, விதவை மகளைக் கட்டித் தழுவி விம்மிடும் நலிவுற்ற தாய் போலாகிறது நாடு.

வாழ்கிறார்கள் வளமாக வெளிநாடுகளிலேயும், வடவர்; அந்த வசீகரத்தின் மெருகு கெடாதிருக்கச் செய்வதற்காக பம்பாயில் பவனம் கட்டுகிறார் படீல்.

"தாராவி எங்கே இருக்கிறது?-'' என்று நான் கேட்டேன் - என்னை அழைத்துச் சென்ற பெரியாரிடம். பம்பாய் சுயமரியாதை இயக்கத் தோழர்களின் அழைப்பின் பேரில் அங்கு போயிருந்தோம்.

"தாராவியா?...'' என்று கேட்டபடி, இப்புறமும் அப்புறமும் பார்த்தார். அவருடைய நாசி விரிந்தது, குவிந்தது,- என்ன இது என்று நான் கூர்ந்து கவனித்தேன். "இதோ அருகாமையில் தான் தாராவி - நாற்றமடிக்கிறதே, தெரியவில்லையா?'' என்று கேட்டார் - கேட்டுவிட்டு விளக்கமளித்தார். தோல் பதனிடுகிறார்கள், அந்தத் துர்நாற்றம் அடிக்கிறது. இப்படிப் பட்ட இடம்தானே நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும், அதனால் தான் தாராவி அருகாமையில் இருக்கிறது என்று கூறினேன் என்றார். உண்மையாகவே, தாராவியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

திராவிடர் வடநாடு ஆனாலும் இலங்கையானாலும், சென்று வாழ்கின்றார்கள் என்பதல்ல பொருள், வதைபடுகிறார்கள்.

கங்கைகொண்டான், இமயத்தில் கொடி பொறித்தான்' ஈழம் சென்றான், கடாரம் வென்றான், சாவகம் சென்றான், யவனம் கண்டான் என்றெல்லாம் ஆராய்ச்சி அறைகிறது - உண்மையிலேயே, நமது இதயத்திலே அறைவது போலத்தான் இருக்கிறது, ஆராய்ச்சியாளர் கூறும்போது. இன்றோ! பம்பாயில் பவனம் கட்டுகிறாôகள், பதினாறு இலட்சம் செலவிடுகிறார்கள் - பாண்டியன் பரம்பரை என்ற பட்டயம் பெற்றுள்ள திராவிடர்கள் "கள்ளத் தோணிகள்' என்று நிந்திக்கப்படுகிறார்கள்.

தொழிலெல்லாம் அங்கே, துரைத்தனம் அங்கே என்று ஆகிவிட்ட போது, ஒரு பவனம் தானா கட்ட முடியும்!

வடநாடு, தென்னாடு என்று பேதம் பேசாதே, பவனம் பம்பாயில் இருந்தால் என்ன, அதற்குச் சாக்கடை சுத்தம் செய்யும் மேஸ்திரி யார் தெரியுமா? நான் தான்; தெரிந்து கொள் - என்று நம்மை மிரட்டுகிறார் அழகேசனார். அவர்களின் கருத்திலே, இலங்கைத் திராவிடர் பிரச்சினை என்று ஒன்று இருப்பதாகக் கூடத் தெரிவதில்லை - பிரன்சுப் பிரபுக்களிடம் பில்லைச் சேவகம் பார்த்துப் பிழைத்து வந்தவர்கள், பிரபு போதை மிகுதியால் மயங்கிக் கிடக்கும் நேரத்தில், கோப்பையில் மிச்சமாக இருந்த பானத்தைப் பருகிவிட்டு, நானும் இப்போது பிரபுதான் என்று குளறுவராம். கேளுங்கள் கோவைக் கோமானை, விருதுநகர் அண்ணலை, சோப்புச் சீமானை, தண்ணீரில்லாத ஆறுக்கு இரும்பே சேராத பாலம் கட்டிப் பரவசப்படும் ஓமலூர் கனவானை - செச்சே! தொழில் எங்கே வளர்ந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில்தானே - என்ற சமரசம் பேசுகிறார்கள் - அதற்காகச் சம்பளமும் தருகிறார்கள்!

ரகுபதி ராகவ ராஜாராம் -
பதீத பாவன சீதாராம் -
கியாகர்ணா பகவான் -
வைஷ்ணவ ஜனதோ

இப்படிப் பஜனைப் பாடுகிறார்கள்; பகவத் நாமத்தைக் கூறுகிறார்கள் பாலகர்கள்.

பாபா! மாராஜ்! பாய்யோ! சேட்ஜீ! நமஸ்த்தே; நமஸ்த்தே! என்று கூவிப் பிச்சை எடுக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், மேற்குவங்கம் இங்கிருந்தெல்லாம், சிறார்களை ஒரு கயவாளிக் கூட்டம் ஏய்த்து அழைத்துக் கொண்டு போகிறதாம். உங்களுக்கு நல்ல சாப்பாடு; நல்ல துணிமணி, படிப்பு சொல்லித் தருகிறோம் எங்களோடு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை சொல்லி ஏழை எளியவர் வீட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகிறார்கள். தொலை தூரத்தில் அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்களை பிச்சையெடுக்கச் சொல்லிப் பயிற்சியளிக்கிறார்கள். பஜனை பாட,பல்லைக் காட்டிக் கெஞ்ச, நமஸ்த்தே சொல்ல, கண்ணீர் சிந்த - இத்தகைய பாடம் சொல்லிக் கொடுத்து, சிறார்களை பிச்சை எடுக்கச் செய்கிறார்கள். அந்தச் சிறுவர்கள், இம்சை தாளாமல், பிச்சைக்காரர்களாக, குழல் ஊதிக் கொண்டும், மேளம் கொட்டிக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும், உள்ளம் உருகச் செய்யும் பாடல்கள் பாடிக் கொண்டும், தெருத் தெருவாகப் பிச்சை எடுத்து, அந்தக் கயவர்களிடம் பணத்தைக் கொடுக்கிறார்களாம் - சோறு, கந்தல் - இவை கிடைக்குமாம் சிறுவர்களுக்க. ஓடிவிட முயன்றால, உதை, குத்து. பிச்சைக் காசு குறைந்தால் தலையில் குட்டு, கன்னத்தில் அறை, இப்படிக் கொடுமைகள்!

1400-சிறுவர்கள்; 147-சிறுமிகள் காப்பாற்றப்படும் ஒரு ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் - நீங்கள் தருகிற பணம் அந்த ஆசிரமத்துக்குத்தான் என்று புளுகிப் பிச்சை எடுக்கும்படி, சிறுவர்களை, அக் கயவர்கள் மிரட்டி வேலை வாங்கி வருகிறார்கள். போலீசுக்கு, இந்த அக்ரமம் தெரிந்து, இப்போது கயவர் சிலர் பிடிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

டில்லி சர்க்காரில் மந்திரி வேலை பெற்றுக் கொண்டு, இங்கே அடிக்கடி பவனிவந்து வடநாடு தென்னாடு என்று பேசுவது கூடாது, அகில பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவத்தைத் தாரகமாகக் கொள்ள வேண்டும் என்று இங்கு "பிரசங்கம்' செய்பவர்களின் மீது நினைவு சென்றது எனக்கு, இந்தச் செய்தியைப் படித்தபோது.

ஏய்த்துப் பிழைப்பவர்கள் ஏமாளிச் சிறுவர்களைப் பிச்சைக் காரர்களாக்கி, பணம் பறிக்கிறார்கள்.

பதவிக்குப் பல்லிளிப்போரை, பசப்பிடத் தெரிந்த வடநாட்டுத் தலைவர்கள், மந்திரி வேஷம் போடச் செய்து, தொண்டரடிப்பொடி ஆழ்வார்களாக்கி, திராவிடத்திலே "பஜனை' செய்யச் சொல்கிறார்கள்.

இங்கே வரி வசூலித்துத் தருகிறார்கள் - பஜனையும் நடத்துகிறார்கள் - பாதி தேங்காய் மூடியும் ஒரு பிடி சுண்டலும் கொஞ்சம் வெண் பொங்கலும் கிடைக்கிறது - உண்டு, உருசி உருசி! என்று கூவி ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள் இந்த அடிவருடிகள். இவர்களின் இனத்தவர், திராவிடர், வெளிநாடு சென்றாவது வாழ்வு நடத்துவோம் என்று கடல் கடந்து சென்றும், வறுமையையே கண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் சார்பாக வாதாடவும் வகையற்றுக் கிடக்கிறார்கள். - அதேபோது, வெளிநாடுகளிலே வியாபாரக் கோமான்களாகி வடவர் கொழுக்கிறார்கள் - வெளிநாடு சென்றுள்ளவர்களின் சீர்சிதையாதிருக்கப்பாதுகாப்புத் தேடப்படுகிறது, ஆறடுக்குப் பவனம் கட்டப்படுகிறது.

அங்கே பவனம்!
இங்கே?

தம்பி, அழகேசர்களின் கவனமெல்லாம், தங்களுக்கு அடுத்த முறை என்ன பதவி கிடைக்கும் என்று ஆருடம் பார்ப்பதிலும். நேருவின் தயவைப் பெற்றால் எங்காவது ஒரு ராஜபவனத்தில் கொலுவிருக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று ஏங்கிக் கிடப்பதிலும்தான் செல்லும். அவர்கள், ஏன் வடநாடு, தென்னாடு என்று பேசுவது பேதமை என்று கூறுகிறார்கள் என்ற சூட்சமம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது; எனவே, அவர்களின் பேச்சுப் பற்றிக் கவலைப் படாமல், நீ, வடநாட்டவர்கள் பவனங்களில் வாழ்வதை எடுத்துக் காட்டி, இது நியாயமா? ஏன் இதனை அனுமதிக்க வேண்டும்? எத்தனை காலத்துக்கு இதைச் சகித்துக் கொள்ள முடியும்? நமக்கென்று ஓர் நாடு இல்லையா? அது ஏன் அன்னியரின் வேட்டைக்காடாகி இருக்கிறது? என்று கேட்டுக் கேட்டு அவர்களின் முகம் கேள்விக் குறியாக மாறும்படி செய். தம்பி! பிறகு பார், இந்த அழகேசர்களின் நிலையை! ஆப்பசைத்த மந்தி கதை தெரியுமல்லவா - சிறுவனாக இருக்கும் போது சொல்வார்களே - அந்த நிலைதான்!

அங்கே பவனம், தம்பி, இங்கே படகுப் பயணம்.

அங்கே ஆறு அடுக்கு மாளிகை, இங்கே சேரி.

இதை எடுத்துக் காட்டு, தம்பி; நித்த நித்தம் எடுத்துக் காட்டு; தொடுக்கப்படும் தூற்றல் கணைகளைத் துச்சமென்று எண்ணி தூய உள்ளத்துடன் தாயக விடுதலைக்கான தன்னிகரற்ற தொண்டாற்றிக் கொண்டிரு. பிறகு பார், நாட்டிலே புதியதோர் பொலிவு பூத்திடுவதை; உன் பணியினால், நம் நாடு பொன்னாடு ஆகத்தான் போகிறது. ஒப்பற்ற பணியிலே தம்பி, நாம் ஈடுபட்டிருக்கிறோம்; உன் அருந்திறனை நம்பித்தான், மார்தட்டி நின்று மாற்றாரிடம் சொல்லி வருகிறேன், திராவிட நாடு திராவிடருக்கே என்று.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Anna_sign
17-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:12 am

போர்! போர்!!

பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டமும் தி.மு.க.வும்.

தம்பி!

போர்! போர்! போர்! - இப்போது உலகிலே ஒரு பயங்கரமான போர் மூண்டு, மனிதகுலமே அழிக்கப்பட்டுப் போய் விடுமோ என்று அறிவாளர்களெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தார்களே, அத்தகைய போர் எழாது, என்று தைரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கூறிக்கொள்ளக்கூடிய சூழ்நிலை மலர்ந்திருக்கிறது - துள்ளித் திரியும் குழந்தைகள், மொட்டுகள், பிஞ்சுகள். சமர்ச் சூறாவளியால் பாழாகா என்ற தைரியம் பிறந்திருக்கிறது.

இது, உலக நிலையைப் பொறுத்துக் காணப்படும், களிப்பூட்டும் செய்தி.

ஆனால் இங்கே, நமது மாநிலத்தில், போர்! போர்! போர்! என்ற முழக்கம், பல்வேறு முனைகளிலிருந்து கிளம்பி விட்டது. ஜல்லடம் கட்டி, சங்கம் ஊதி, கட்கமேந்தி, களம்குதித் தோட, கட்டளையை எதிர்ப்பார்த்துக் கொண்டு கணக் கற்றவர்கள் (போர் முடிவு பெற்ற பிறகுதானே கணக்குத் தெரிய முடியும்) உள்ளனர்.

போர்! போர்! எல்லையைக் காத்திடும் ஏற்புடையதோர் போராட்டம் வருகுது! தொல்லைகளைத் துடைத்திடுவோம், துடை தட்டிக்கொண்டு வாரீர், துந்துபி கேளீர், துரிதமாக வாரீர். . . என்றோர் புறமிருந்து முழக்கம் கேட்கிறது.

கோவா அட்டூழியத்தைக் காணீரோ! அந்த அக்ரமத்தை ஒழித்திட அனைவரும் ஒன்று சேரீரோ! என்று மற்றொருபுரம், முழக்கம் கிளம்புகிறது!

ஆலயங்களிலே அர்ச்சனை நம் அருந்தமிழ் மொழியிலன் றோ இருத்தல் வேண்டும், அத்திக அன்பர்காள்! அஞ்சாது போரிடவாரீர், அரன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெஞ்சமரில் ஈடுபட வாரீர், என்று வேறோர் போர் முழக்கம் கேட்கிறது.

பாட்டாளிகளின் துயர் துடைக்கும் போரன்றோ போர்! மற்றவை பேரளவு போர் என்ற பெயர் பெறுதலும் ஆகுமோ! ஆண்மையாளர்களே! அணிவகுத்து நில்லுங்கள்! அழைப்பைச் செவியில் கொள்ளுங்கள்! போர்! போர்! புத்துலகம் காணப் பெரும் போர்! புனிதப் போர் ஒரே போர்! ஒப்பற்ற போர்! - என்று கம்யூனிஸ்டுக் குரல் கணகணவென ஒலிக்கிறது.

பெரியாரின் ஆகஸ்ட்டுப் போர் பற்றிய அறிவிப்பும் வந்து விட்டது.

ஆகஸ்ட்டு முதல் நாளன்று தேசியக் கொடிகளைத் கொளுத்தி. அதன்மூலம் வடநாட்டுச் சர்க்காரை, திராவிடத்தின் மனநிலையை அறியும்படி செய்வது என்பது, போர்த் திட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கும் போக்கிலேயே பெரியார் சென்று கொண்டிருப்பார். திராவிட நாட்டுக்கான பிரச்சினைகளைக் காலாவதி ஆகும்படி செய்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போயிருப்பர், இந்தப் போர்த் திட்டம் கேட்டு. இந்தத் தீனா மூனா கானாக்களுக்கு அரசியல் நாகரீகமே தெரிய வில்லை-பெரியார், கம்யூனிஸ்டுகளை ஒழித்தாக வேண்டும் என்ற புனிதமான (!) கோட்பாட்டுக்காக, இடைத் தேர்தல்களில் காங்கிரசை ஆதரித்து வருகிறார் இது அல்லவா யூகம் அரசியல் கண்ணியம் - ஜனநாயகம் - என்றெல்லாம் பேரிகை கொட்டினர், காங்கிரசின் சின்னசாமிகள் அவர்கள் கண்டார்களா பெரியாரின் மனதிலே உருவாகிக் கொண்டுள்ள போர்த்திட்டம் பற்றி. இப்போது ஆகஸ்ட்டுப் போர்பற்றி அவர் அறிவித்ததும், அந்த வட்டாரம், திகைத்துப்போய்க் கிடக்கிறது.

தம்பி, நமது வட்டாரத்திலே என்ன கருத்து நிலவுகிறது என்பதைக் கேட்க ஆவலாக இருப்பாய்; கேள்.

(1) ஆகஸ்ட் கிளர்ச்சியில் ஈடுபடும்படி எல்லாக் கட்சிகளையும் அழைக்கிறேன் என்று பெரியார் கூறுவதன் பொருள் என்ன?

ஓஹோ! எல்லாக் கட்சிகளும் என்றதும், உனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது: சகஜந்தான்! எல்லாக் கட்சிகளும் என்றால், நாட்டிலே உள்ள கட்சிகள் எல்லாம் என்று பொருள் கொள்ளலாமா! பொருத்தமாக இராது! காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பிரஜா, இந்து மகாசபை, தமிழரசு ஆகிய கட்சிகள் யாவும், இந்தி விஷயமாகக் கொண்டுள்ள எண்ணம், இந்தி கூடாது என்பதல்ல; கட்டாயப்படுத்த வேண்டாம்; அவசரப் படுத்தவேண்டாம் என்பதுதான். பெரியார், இந்தி கூடாது, ஏனெனில் இந்தியாவின் ஆட்சிக்குள் திராவிடம் இருத்தல் கூடாது என்று கொள்கை வகுத்துக் கொண்டவர். எனவே இந்தியை எதிர்த்து பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சிகள் எதுவும் பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சிகள் எதுவும் ஈடுபடாது; அக்கரை காட்டாது.

(2) அப்படியானால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடக் கூடிய நிலையில் உள்ள கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தானே! ஏன், பெரியார், தி.மு.க.வுக்கு அழைப்பு என்று பேசவில்லை.

என்னைக் கேட்கிறாயே!

(3) கட்சிகள் பல ஒன்று கூடி, ஒரு கிளர்ச்சியில் ஈடுபடுவது உண்டா?

ஏன் இல்லை! உண்டு!! இலட்சியம் ஒரேவிதமாக இருந்தால், ஒன்று கூடுவது சாத்தியமே

(4) அதற்கு ஏதேனும் முறை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது! அந்தக் கட்சிகள் ஒன்றாகக் கூடிக் கலந்துபேசித் திட்டம் வகுத்துக்கொண்டு பிறகு செயலில் ஈடுபடுவது.

முன்பு ஒரு முறை நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கான திட்டமும் முறையும் வகுத்துக்கொள் வதற்காக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக ஒத்த கருத்தை வெளியிட்டு வந்த ம.பொ. சிவஞானம் அவர்களை அழைத்து, மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும் கலந்துபேசி, திராவிடர் கழகம் (அப்போது நாம் அங்கே தான்) பணியாற்றி - ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டி இருக்கிறது. ம.பொ.சி. அப்போதும் தமிழரசுக் கழகம் தான் நடத்திக் கொண்டிருந்தார்.

(5) பெரியார் அப்படி ஏதும் செய்யக் காணோமே?

தேவையில்லை என்று அவர் கருதியிருக்கலாம். தி.மு.க. பொதுச் செயலாளரை அழைத்துப் பேசி, திட்டம் வகுத்தால், ஒன்று கூடிக் கிளர்ச்சி நடத்தும் ஆர்வம் ஏற்படும் என்று கூட வேண்டுகோள் விடப்பட்டது.

(6) ஏன் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா?

(7) இப்போது, எல்லாக் கட்சிகளையும் அழைப்பதன் பொருள்?

நல்ல திட்டம் என்று நம்பி, வருவதானால் வரட்டும் என்பதுதான்.

(8) வராவிட்டால்?

வராவிட்டாலா! அழைத்தும் வரவில்லை, அற்பர்கள் என்று எப்போதும் ஏசுவோர் ஏசுவர்!

(9) வருவதானால்? வந்தார்கள் - என் திட்டத்தின்படி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்! வேறு வழி, இதுகளுக்கு? என்று குத்தல் பேச்சு கிளம்பும். அவ்விதமாக இந்தி எழுத்து அழிப்புப் போரில் ஈடுபட்டபோது ஏசினர் என்று நமது துணைச் செயலாளர் துயரத்துடன் கூறுகிறார்.

(10) அப்படியானால் என்ன செய்யலாம்? அதென்ன என்னைக் கேட்கிறாயே! உனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது-அது அழைக்கப்படவில்லை - ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் அவரை அழைக்கக் காணோம் - வேறொர் கட்சி, தன் நிர்வாகக் கமிட்டியில், தனக்கு சரியென்று பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி கிளர்ச்சி துவக்குகிறது - நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே - நீதான் சொல்லேன்-!

(11) அப்படியானால். . . . . . .

போர் நடைபெறப் போகிறது-இதிலே நாங்கள் காட்டப்போகும் அபாரமான ஆற்றலையும், அடையப் போகும் வெற்றியையும் அறிவிலிகாள்! ஆற்றலற்றதுகாள்; காண்மின், காண்மின்! - என்று கூறிவிட்டுக் களம் செல்லும் கர்ம வீரர்களைக் காண நேரிட்டால், நான் கைகூப்பித் தொழுவேன்!



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:12 am

போர் நடைபெறப் போகிறது - அதன் நோக்கம் இது - முறை இவ்விதம் இருக்கும் - இதிலே கலந்து பணியாற்ற வருவாயா, உனக்கு இந்த நோக்கமும் முறையும் புரிகிறதா, பிடிக்கிறதா என்று கேட்டால் கைகூப்பித் தொழுவது மட்டுமல்ல. காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, இது தான் கண்ணியமான முறை, காரிய சித்திக்கு ஏற்ற வழி, பகைவர் கண்டு திடுக்கிடத்தக்க வகையான திட்டம், போர் முறை பற்றிக் கலந்து பேசுவோம், என்று கூறி, ஆர்வத்துடன் பணிமனையில் நுழைவேன்.

இருவிதமுமின்றி, போர் போர்! போரிடும் ஆற்றலுள்ளவர் களெல்லாம், வரலாம்! வருவோர் சேர்த்துக் கொள்ளப்படுவர் - விளக்கம் கேட்போர், கலந்துரையாட வேண்டுமென்று கூறிடும் துணிவு கொண்டோர் தேவைப்பட்டார். கலந்து கொள்ளாத வர்கள், ஈனப்பிறவிகள், நாட்டுத் துரோகிகள் - அவர்கள் அழிக, அழிக அடியோடு அழிந்துபடுக! என்று சபித்துக் கொட்டினால், நான் என்ன செய்ய முடியும். நீயும்தான் என்ன செய்ய முடியும்.

(12) நெருக்கடியான சமயம் - இறுதியான போர் - தீவிரமான கிளர்ச்சி - இதிலே நாம் ஈடுபடாமலிருக்கலாமா?

நாமும் ஒரு கட்சிக்குப் பொறுப்பானவர்கள்! நாமும் பிறர் பார்த்து மெச்சத்தக்க கிளர்ச்சிகளை நடத்தி, கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கிறோம். அப்போது உதவிதர, உபசாரம் கூற, ஒரு சிறு புன்னகை காட்ட யாரும் வரவில்லை! மாறாக, அற்பமான கிளர்ச்சி - பயனற்ற வேலை என்று கேலியும் கண்டனமும் பிறந்தது. மேலும், ஆகஸ்ட்டு கிளர்ச்சியோடு எல்லாப் பிரச்னைகளும் முடிந்து விடுகின்றன என்றா பொருள்! எவ்வளவோ கிளர்ச்சிகள் கருவில்! ஒரே நோக்கம் கொண்ட இருவேறு அமைப்புகள் கலந்து பேசி ஒரு திட்டம் தீட்டி, தக்க விதமான கிளர்ச்சி நடத்தும் காலம் ஒன்று வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டியதுதான். அது வரையில் அந்தந்த அமைப்பும், அதனதன் சக்திக்கும் சுபாவத்துக்கும் ஏற்றவகையான கிளர்ச்சியில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. நாம் துவக்கிய மும்முனைப் போராட்டத்தின் போது "விடுதலை'யில் கிளர்ச்சிகள் என்ற அருமையான கட்டுரையில், இந்தக் கருத்துப்பட பெரியார் எழுதியுமிருக்கிறார்.

(13) போர்முறை பற்றி என்ன கருதுகிறீர்?

கொடி கொளுத்தும் போர் முறைபற்றித் தானே! அதுபற்றி நமது கருத்து என்ன, நமக்கு அது உடன் பாடானதா அல்லவா என்று எங்கே கேட்டார்கள் - எப்போது கேட்டார்கள்? பொதுச் செயலாளரை அழைத்துப் பேசியிருந்தால், அவர், திராவிட முன்னேற்றக் கழகம் இதுபற்றி என்ன கருதுகிறது என்று தெரிவித் திருக்கக்கூடும். பொதுவாக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக நடத்தப்பட்ட கிளர்ச்சிகளை எல்லாம் வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப்படுத்திவிட்டதால், இப்போது வடநாட்டு சர்க்கார் பரபரப்படையக்வடிய வகையில், கொடியைக் கொளுத்தப் போகிறோம் என்று அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்; இந்தி எதிர்ப்புக்கான கிளர்ச்சியை வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப் படுத்துவதை நாமும் கண்டிருக்கிறோம்; வடநாட்டுச் சர்க்காருடைய கவனத்தைக் கவரும்படி இருக்க வேண்டுமென்றுதான் நாம் இரயில் நிறுத்தக் கிளர்ச்சி நடத்தினோம்,. நாம் கலந்து பேச அழைக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்றால், இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ் காரர்களையும் நமது பக்கம் சேர்க்கும்படியானதாக இருக்க வேண்டும்; கொடி கொளுத்துவது போன்ற முறைமூலம், காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஓர் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்; எனவே வேறு முறையைக் கொள்வோம் என்று எடுத்துச் சொல்லி இருப்போம். இன்று நமது கருத்தினை ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் காங்கிரஸ் காரர்களே, நமது கோரிக்கையை உணர்ந்து, மனம் மாறி நமது இயக்கத்துக்கு ஆக்கம் தேடுவதற்கான உதவி அளிக்க முன்வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதாக நமது கிளர்ச்சி இருக்க வேண்டும். அவர்கள் கேட்டாலே வெறுப்பும் வேதனையும் அடையதக்க முறை சரியாகாது, அவர்களை நம்மோடு அழைத்துச் செல்லும் வழியு மாகாது, இந்தக் கொடி கொளுத்துவது என்பதை எடுத்துச் சொல்லி இருந்திருப்போம். நாம் இப்படிச் சொல்லக்கூடும் என்பதை அறிந்துதானோ என்னமோ கொடி கொளுத்தும் திட்டம் தீட்டும் கமிட்டிக்கு நமது பொதுச்செயலாளரை அழைக்க வில்லை. பிள்ளையார் உடைப்பின் போதே, நாம், நம்மோடு நாளாவட்டத்தில் வந்து சேர வேண்டியவர் களை, வீணாக வெறுப்படையச் செய்துவிடும் என்றதனால் தான், ஒதுங்கி இருந்தோம்.

(14) ஒதுங்கி இருந்தால் ஒழிந்து விடுவார்கள் என்று பேசுகிறார்களாமே!

திராவிட முன்னேற்றக் கழகம், போராட்டங்களை நடத்தி இருக்கிறது- தனித்து நின்று.

திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் துவக்கிய போராட்டம், தாங்கள் தீட்டிய திட்டத்துக்கு ஒத்ததாக இருந்த நேரத்தில், துணையாக இருந்திருக்கிறது.

வடநாட்டு மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டி, தடியடி, சிறை இவைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாங்கிக் கொண்டது. துணை யாரும் கிடையாது! அழைக்கவும் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், ஒதுங்கியும் இருந்திருக்கிறது.

144 தடையை மீறி, தடியடி சிறைமட்டுமல்ல, துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம் - தனியாகக் களத்தில் இறங்கி. இரயில் நிறுத்தம், ஆச்சாரியார் வீட்டின்முன் மறியல்-என்பவைகள், மாற்றுக் கட்சிக்காரரெல்லாம்கூட மறக்கமுடியாத சம்பவங்கள் - தனியாகத்தான் நடத்தி னோம் - சர்க்காரின் குண்டுகள் மட்டுமல்ல, ஏசலையும் தாங்கிக் கொண்டோம்; இரத்தம் பீறிட்டது; பிணமும் வீழ்ந்தது.

எனக்குத் தெரிந்த அளவில் நமது சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து கவனத்தில் வைத்துச் சொல்கிறேன், நாம் நடத்திய கிளர்ச்சியை ஒடுக்க சர்க்கார் துப்பாக்கியின் போதும், குன்றத்தூரில் தடை உத்தரவை மீறிய நேரத்திலும் தான்!

மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாட்டிலே துப்பாக்கிச் சத்தம் கேட்டது - அது நம்மை நோக்கி அல்ல, அக்ரமமாக நமது மகாநாட்டிலே தீ வைத்த காங்கிரஸ்காரரை நோக்கி.

எனவே, திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் வடிவம் கொண்ட பிறகு, நாம் ஒரே குடும்பமாக இருந்தபோது கண்டதைவிட, கடுமையும் கொடுமையும் மிகுந்த அடக்கு முறையைச் சந்தித்திருக்கிறோம்.

அதுபோலவே, அவர்கள் நடத்திய, இந்தி எழுத்து அழிப்புப் போரில் நாமும் ஈடுபட்டோம் - அதற்கான திட்டம் தீர்மான உருவில் நம்மிடம் ஏற்கனவே இருந்ததால்.

அதுபோலவே, அவர்கள் வடநாட்டுத் துணிக்கடை மறியல் செய்தனர்!

அதிலே அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்!

கலந்து கொள்ளாதவர்கள் கல்லாவர், மண்ணாவர், கால்தூசு ஆவர், என்று சாபம் கொடுத்தனர்.

இனி, இதுகள் இருக்குமிடம் தெரியாது ஒழிந்து போகும் என்று எச்சரித்தனர்.

எனினும், நாம் அந்தக் கிளர்ச்சியில் கலந்து கொள்ளவில்லை-மடிந்துபடவில்லை!!

அதுபோலவே, பிள்ளையார் உடைப்பு! நாம் அதிலே ஈடுபட்டோமில்லை! இனி இதுகள் செல்லாக் காசுகள் என்று அவர்கள் ஆருடம் சொல்லாமலில்லை! எனினும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தப் போக்கினால், வளர்ச்சி குன்றிப்போனதாக, அவர்களே கூறமுடியாது.

(15) இவர்கள் கொடி கொளுத்தும் கிளர்ச்சியில் ஈடுபடாவிட்டால் என்ன, நாங்கள் அதிலே வெற்றி காண்போம் கண்டு வெட்கப்படட்டும் என்ற பேசுகிறார்களாமே!

பேசட்டுமே, அதனால் என்ன; நம்மைக்கலந்து வகுக்கப்பட்ட திட்டமல்ல அது; அதை நடத்தும் முழுப் பொறுப்பும் அவர்களைச் சார்ந்தது; அதிலே வெற்றி கிடைத்து, கீர்த்தி கிடைத்தால், நமக்கு நிச்சயமாகப் பங்கு வேண்டாம்; அவர்களே அதற்கு உரியவர்கள் என்று நாமே கூறிவிடுவோம் - அவர்கள் களத்திலே, எல்லாத்திசைகளிலும் பாய்ந்து முன்னேறி வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் பெறும்பெற்றி எத்தகையது என்றால் இனிவேறு யாருக்கும் எந்தவகையான வேலையும் இல்லை என்று சொல்லத்தக்க வகையான முழுவெற்றி என்றே வைத்துக் கொள்வோம் அதனால் என்ன, நஷ்டம்; நமக்கென்ன கஷ்டம்? நந்தவனத்துக்கு நாள் பூராவும் நீர் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, கிணற்றடி போகிறான் - பெருமழை பெய்தால், என்ன கஷ்டகாலம்! நாம் நீர் பாய்ச்ச முடியாமல் போய்விட்டதே என்றா ஆயாசப்படுவான்? நமக்கு வேலை இல்லை, மழை வந்தது நல்லதாயிற்று, மழையே வாழி! என்று வாழ்த்துவான்; வெறென்ன!!

தம்பி! இவைகள் தானே நீ கேட்க விரும்புவாய்-நீ கேட்பதாக வைத்துக்கொண்டு நானே பதிலும் எழுதிவிட்டேன்.

இது போதாது! நமது கழகப் பொதுச் செயலாளரின் கருத்து என்ன என்று கேட்பாய். பொதுச் செயலாளரும் துணைச்செயலாளரும் இதே கருத்தினைத்தான் என்னிடம் கூறினார்கள்; நான் உன்னிடம் கூறிவிட்டேன்; நீ, தம்பி! மற்றவர்களுக்குச் சொல்லிவிடு!!

அன்பன்,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Anna_sign
24-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக