ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 
VENKUSADAS
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 

Top posting users this month
heezulia
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 
VENKUSADAS
அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Empty அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Post by சிவா Wed Dec 15, 2010 9:34 pm

First topic message reminder :

உள்ளே நுழைந்ததும், தேவர் ஒரு கணம் தமது துக்கத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டார். சூடாவின் புன்னகை அவருடைய சோகத்தை மாற்றிவிட்டது. கோடையால் தாக்குண்டவன் இளநீர்ப் பருகியதும், இன்பம் பெறுவது போன்றது சூடாவின் புன்சிரிப்பு. ஆம்! இன்று மட்டுமா, என்றுமேதான். அந்தச் சிரிப்பு அவனுக்குக் களிப்பூட்டிற்று. அவனுடைய கோழைத்தனத்தை மாற்றியதும், கட்டுப்பாடு, பொதுஜன எதிர்ப்பு என்று எவை எவையோ அவனை மிரட்டியபோது, அவைகளை ஒரே நொடியிலே ஓட்டியதும், அந்த ஒய்யாரியின் சிரிப்புதான். வாழ்க்கையிலே அவனுக்கேற்பட்ட சலிப்பு, திகைப்பு, யாவும் அந்த ஒரு அற்புதச் சக்தியினால் விரட்டி அடிக்கப்பட்டது.

“சூடா!...” என்று துவக்கினார் தேவர். “ஒரு கப் காப்பி!” என்று, அதே குரலிலே கூறினாள். சூடா, “குறும்பு செய்யாதே! நான் மிக வேதனையுடன் இருக்கிறேன்” என்று தேவர் கூறினார், நாற்காலியில் சாய்ந்தபடி. “வேதனை விருத்தத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்திருங்கள். இன்று வெகு சிரமப்பட்டுத் தயாரித்திருக்கிறேன் காப்பி. அதைச் சாப்பிட்டுவிட்டு என் திறமையைப் பாராட்டி விட்டுப் பிறகு சுந்தரகாண்ட பாராயணம் செய்யும்” என்று கூறிவிட்டு, மானென ஓடினாள் மான்விழியாள். மனவேதனையுடனிருந்த தேவர், கண்களை மூடிக்கொண்டு, சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

“பால்க்காரன் இருக்கிறானே! அவனுக்கு உலகப் பொருளாதார நெருக்கடியே தெரிவதில்லை. அப்பேற்பட்ட இங்கிலாந்தே அமெரிக்காவிடம் கடன்பட்டிருக்கிறதே. இப்படிப்பட்ட காலத்திலே, இந்தக் குடும்பம் நம்மிடம் கடன்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமாகுமா? என்று துளிகூட நினைப்பதில்லை. எப்படி நினைப்பான்! அவன் ‘தேசவீரன்’ படிப்பவனா?” என்று பேசிக் கொண்டே காப்பி ஆற்றினாள், காதலன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு.

“பால்காரன் என்று ‘க்’ ஒன்று வைக்கிறாயே, நீ என்ன அந்த ரிப்போர் ஷாப் இலக்கணப் பேர்வழிகளை ஆதரிக்கிறாயா?” என்று தேவர் கேட்டார்.

“ஏன் ஆதரிக்கக் கூடாது? ‘தேசவீரன்’ அதைக் கண்டித்து எழுதுவதாலேயே நானும் கண்டிக்க வேண்டுமா? என்று ராஜம் அண்ணா அதை ஆதரித்திருக்கிறார்” என்று கூறினாள் சூடா, காப்பியைக் கொடுத்துவிட்டு! வெட்டி விவாதத்திலே ஈடுபட இஷ்டமில்லை தேவருக்கு. காப்பியை மௌனமாகவே சாப்பிட்டு முடித்துவிட்டார். “அடுத்த புரோகிராம் என்ன?” என்று கேட்டாள் சூடா.
“அடுத்த புரோகிராமா? அதைத்தான் நானும் உன் அண்ணனைக் கேட்கலாமென்று இருக்கிறேன்” என்று தேவர் கூறினார் கொஞ்சம் கோபத்துடன்.

“அண்ணா புராணம் ஆரம்பமாகி விட்டதா! சரி. இனி அது ஓய்வதேது, நாம் உலாவப் போவதேது!” என்று சூடா சொல்லிவிட்டு, வீட்டு வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

“சூடா! சமையல் நிதானமாகவே செய்யலாம். நானும் உதவிக்கு வருகிறேன் சமையற்கட்டுக்கு” என்று தேவர் கூறினார். சூடா சிரித்தாள். “உதவிக்கு என்று சொல்வானேன். உபத்திரவத்திற்கு என்று சொல்லுங்கள் ஆபீஸ் பாஷையை வீட்டிலே உபயோகிக்கக் கூடாது என்று ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேனே” என்று கூறிவிட்டுத் தேவரின் மடிமீது உட்கார்ந்தாள் சிறு குழந்தைபோல்.

“சூடா! நான் கூறப் போவதைக் கேட்டுக் கோபிக்கக் கூடாது. துக்கப்படக் கூடாது. சலித்துக் கொள்ளக் கூடாது. என்ன விஷயம் தெரியுமோ?” என்று ஆரம்பித்த தேவர், அந்தச் சுந்தரியின் கூந்தலைக் கோதிய தன் கரங்கள், விரைந்து கன்னத்திலே உறவாடி, அதரத்தை நெருங்கக் கண்டு, பேச்சை நிறுத்திவிட்டு சிறிதளவு செயலில் இறங்கினார். அப்படியொன்றும் ஆபத்தான செயலல்ல! முத்தமிட்டார்! அவள் எதிர்பார்த்ததும் அதுதானே!! அந்த இன்பமயக்கத்தால் இருவருக்கும் ஒரு நொடி புது உலகப் பிரவேசம் கிடைத்தது!

“பீடிகை பலமாக இருக்கிறதே! என்ன விஷயம்?” என்று கேட்டாள் சூடா.

“நான் வேலையை ராஜிநாமாச் செய்துவிட்டேன்” என்றார் தேவர். அவளுடைய உதடுகள் கொஞ்சம் பிரிந்தன. முகத்திலே தவழ்ந்து கொண்டிருந்த நகை மறைந்தது. “ஏன்?” என்று சற்றுச் சோகக் குரலிலே கேட்டாள்.

“ஏனா! உன் அண்ணனால்!” என்றார் தேவர்.

“அவர் என்ன செய்தார்?” என்று பயந்து கேட்டாள் சூடா.

“வழக்கமாகச் செய்வதைத்தான்! என் வாழ்வைக் கெடுக்கிற காரியத்தைதான் இப்போதும் செய்தான். எப்போதும் எதைச் செய்வானோ அதையேதான் செய்தான்! அந்தக் குணம் எப்படிப் போகும்?” என்று ஆத்திரமாகப் பேசினார் தேவர்.

“விஷயத்தைச் சொல்லுங்கோ, பிரசங்கம் வேண்டாம்” என்று சூடா கேட்க, தேவர், ‘என்ன இருக்கிறது விஷயம். இன்று எழுத வேண்டிய தலையங்க விஷயமாகத் தகராறு எனக்கும் முதலாளிக்கும்! உன் அண்ணனைப் பாராட்டி எழுதும்படி முதலாளி சொன்னார். அதாவது கட்டளையிட்டார். நான் முடியாது என்றேன். எழுதத்தான் வேண்டும் என்றார். அந்த மிரட்டல் என்னிடம் நடவாது, வேறு ஆசிரியரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். வார்த்தை முற்றிவிட்டது. ராஜிநாமாவைத் தந்துவிட்டு வந்துவிட்டேன்” என்று தேவர், கூறிவிட்டுப் பெரும் பாரத்தைக் கீழே தள்ளிவிட்டு வந்துவிட்டேன்” என்று தேவர், கூறிவிட்டுப் பெரும் பாரத்தைக் கீழே தள்ளிவிட்டவன் நிம்மதி அடைவது போலச் சில நிமிஷம் நிம்மதியும் அடைந்தான்.

சோகமாக இருக்கும் கணவனுக்கு ஆறுதல் கூற வேண்டியது துணைவியின் கடைமைதான். ஆனால் அந்தக் கடமையைச் செய்வதற்காக, “என்ன காரணம்! ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது?” என்னிடம் சொல்லக் கூடாதோ?” என்று துவக்கி, “நான் எது கேட்டால்தான் நீங்கள் உள்ளத்தைக் கூறுகிறீர்கள்? என்னைத்தான் நீங்கள் வீட்டு வேலைக்காரியை விடக் கேவலமாக மதிக்கிறீரே” என்று வளரச் செய்து, “எவளை நினைத்துக் கொண்டு ஏக்கமோ, யார் கண்டார்கள்” என்ற பொறாமைப் பேச்சிலே போய்விடும் “சம்சாரங்கள்” உண்டு. அவர்களின் தொல்லைக்குத்தான் போலும் சம்சாரம். சாகரம் என்று பெயரிட்டார்கள்! சூடாமணி சூட்சம புத்தியுள்ளவள். மனக்கலக்கம் மிகுந்திருக்கும் நேரத்திலே குறுக்குக் கேள்வியும் மறுப்புப் பேச்சும், புண்ணிலே முள் போலாகும் என்று தெரிந்து, தேவர் தமது வேலையை ராஜிநாமச் செய்து விட்டதாகக் கூறிய சொல்லிலே ஆழப் பாய்ந்திருந்த சோகத்தை உணர்ந்து கொண்டு வேறு விதமாகப் பேசி, எந்த விஷயம் தேவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்ததோ அதை மாற்றத் தொடங்கினாள். சூடாவின் புத்தி கூர்மையைக் கண்ட தேவர் மகிழ்ந்தார். சமயமறிந்து சம்பாஷிக்கவோ, விஷயமுணர்ந்து விவாதிக்கவோ தெரியாதவர்களே அதிகம். சூடா போன்றவர்கள் மிகக் குறைவு என்பது தேவருக்குத் தெரியும். அந்நாளிலேயே அழகாலே மட்டுமல்ல; லலிதமான சுபாவத்தாலேதான், சூடா, தேவரை வெற்றி கொண்டாள். அந்த மான்விழிக்குத் தேவர் ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் அவளுடைய மதுர மொழி அவரைச் சொக்கும்படி செய்தது. எந்த விஷயத்தையும் தெளிவாகப் பேசவும், குறிப்பறிந்து நடக்கவும் சூடாவுக்குத் தெரியும். “பொறுக்க முடியவில்லை. ஒரே புழுக்கம். காற்றே இல்லை” என்று விருந்தாளி கூற, “ஆமாம். அதை ஏன் சொல்கிறீர் போங்கள், தாங்க முடியாத வெப்பம். மருந்துக்கும் காற்றே கிடையாது” என்று சேர்ந்து பேசுவது பலருக்கு வழக்கமே தவிர, புழுக்கம் என்ற சொல் கேட்டதும், முதலிலே அதை ஒரு அளவுக்கேனும் குறைத்துக் கொள்ள விசிறி கொடுத்துவிட்டுப் பிறகு பேசுவோம் என்ற கூர்மையான புத்தியுள்ளவர்கள் குறைவு. வேலை போனது பிரமாதமானதல்ல; ‘இதற்காக விசாரப்பட வேண்டாம். இந்த வேலை போனால் வேறு வேலையா கிடைக்காது. ஏதோ நமக்குப் போறாத வேளை! பொழுது புலராமலா போகும்’ என்ற முறையிலே தைரியமூட்டி, ஆறுதலளிக்கும் ஆரணங்குகள், சோகத்தைக் கிளறிவிடும் சுந்தரிகளைவிட ஒருபடிமேல்! சூடா அதற்கும் ஒருபடி மேலாக இருந்தாள்.

“எடிடர் சார்! எழுந்திருங்கள். இனி வேறு வேலைக்கே போக வேண்டாம். சமையல் டிபார்ட்மெண்ட் சார்ஜ் இனி உங்களிடந்தான்” என்று வேடிக்கை பேசி, இன்று ரவாதோசை போட வேண்டும். ரசகுல்லா மட்டும் ஓட்டலிலே இருந்து தருவித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போடுவதுமாக இருந்தாள். வேலையிலிருந்து தேவர் விலகிவிட்டார் என்ற செய்தியே தெரியாத மாதிரியே நடந்து கொண்டாள். தேவர் களித்தார். இப்படிப்பட்ட இங்கிதமறிந்த இளம் பெண்ணை விதவைக் கோலத்திலே விம்மிக் கிடக்கச் செய்தானே ‘அந்த வெறியன்’ என்று பழைய கதையை எண்ணிக் கொண்டார்.

“சூடா! தமிழ்நாடே கண்டு திடுக்கிடும்படியான கதை ஒன்று எழுதப் போகிறேன்” என்றார் தேவர்.
“கதை எழுதுங்கள்; நிச்சயம் தமிழ்நாடு திடுக்கிட்டுத்தான் போகும்; சந்தேகமே வேண்டாம்” என்றாள் அந்த வேடிக்கைக்காரி.

“அப்படி என்றால்...” என்று கேட்டார் தேவர்.

“எப்படி உங்களாலே கதை எழுத முடியும் என்று நான் கேட்கிறேன் என்று அர்த்தம்” என்று மேலும் குறும்பு பேசினாள் அந்தக் கோமளம்.

“போ, சூடா! போய் பேப்பர் பென்சில் எடுத்துவா. நான் கதை கூறிக்கொண்டு வருகிறேன். நீ எழுது” என்றார் தேவர். சூடா சிரித்துக் கொண்டே ஓடினாள். நொடியிலே வந்து சேர்ந்தாள். பேப்பர் பென்சிலுடன்.

“ஆரம்பிக்கலாம் சார்!” என்றாள். தேவர், சொல்ல ஆரம்பித்தார். “எழுது சூடா, தெளிவாகவே இருக்கட்டும் எழுத்து” என்று பீடிகை போட்டுவிட்டுக் கூறத் தொடங்கினார்.

“நான் ஓர் விதவை. இளமையும் எழிலும் என்னிடம் இருந்தது. சமுதாயக் கட்டுப்பாடு என்ற இரும்புக் கரத்திலே நான் சிக்கித் தவித்தேன்” என்று கூறிவிட்டு, ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தார். பிறகு “சூடா! எழுதிவிட்டாயா? சரி, ஏதோ படி” என்றார்.

“நான் ஓர் விதவை. என் போல் எண்ணற்றவர்கள்! இளமையும் எழிலும் என்னிடம் இருந்தது. காமப்பித்தமும் கள்ளக்கருத்தும் கொண்டுள்ள சமுதாயத்தைக் கண்டேன். சமுதாயக் கட்டுப்பாடு என்ற இரும்புக் கரத்திலே நான் சிக்கித் தவித்தேன்” என்று படித்தாள் சூடா.

“என்ன இது! உன் இஷ்டம்போல ஏதேதோ சேர்த்துக் கொண்டாய்” என்று ஆசிரியர் குரலிலே பேசினார் தேவர். “என்ன சேர்த்தேன். கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தேன்” என்றாள் சூடா. பேப்பரும் பென்சிலும் கீழே சிதறின. கதை கூறுவதும், எழுதுவதும் நின்றுவிட்டது. கொஞ்சுதலும் குழைதலும் ஆரம்பமாயின. கதை கூறுவதை ஆசிரியர் நிறுத்திக் கொண்டதும், சூடா தொடங்கினார் கதையை. “அந்த விதவையின் கட்டுகளை உடைத்தெறிந்து அவளைக் காதல் உலகிலே குடியேறச் செய்தார் ஒரு கட்டழகர்! அவருடைய நெட்டையான உருவத்தைக் கண்டு அவள் பயந்ததுண்டு! ஆனால், அவருடைய அணைப்பிலே அவள் கண்ட சுகம்! அச்சத்தை ஓட்டிவிட்டது.” என்று கூற, “ஆமாம்! கண்ணே! ஆயிருரே! இன்பமே!” என்று இன்பமான இடைச்செருகலிலே தேவர் ஈடுபடுவதுமாகக் காட்சி மாறிவிட்டது.

“இது என்ன கதை?” என்று கேட்டாள் சூடா, தேவரின் பிடியிலிருந்து விலகி.

“இதுவா? எந்தக் கதைக்கும் இருந்து தீரவேண்டிய கட்டம். இன்பபுரியின் வாயிற்படி, அன்பின் அறிகுறி, காதலின் கனிவு....” என்று அடுக்கினார் தேவர். வார்த்தைக்கு வார்த்தை முத்தங்களே முற்றுப்புள்ளிகளாயின! அந்த நேரம்போல் எந்த நேரமும் இருக்கக் கூடாதா என்று இருவரும் எண்ணினர்! யாருக்குத்தான் இராது அந்த எண்ணம்!

“இந்தத் தேன் குடத்தை அந்தத் தேள் காவல் புரிந்து வந்ததே” என்றுரைத்தார் தேவர்.

“எந்தத் தேள்?” என்று கேட்டாள் சூடா.

“உன் அண்ணன்” என்றார் தேவர்.

“அப்பாயடினால் நானும் தேள்தானே?” என்று கேட்டாள் சூடா.

“யார் இல்லை என்றார்கள்?” என்று பதிலுரைத்தார் தேவர். “தேன் என்றீரே” என்றாள் சூடா.

“இரண்டுந்தான்! மாதரின் மைவிழியிலே விஷம் உண்டு; தேனும் கிடைக்கும்” என்றார் தேவர்.
“கிடைக்கும், கிடைக்கும்” என்று பாவனைக் கோபத்தைக் காட்டினாள் சூடா.

“இன்பமே! கோபியாதே! உண்மையிலேயே, நமது வாழ்வை நினைக்கும்போது ஆனந்தவல்லியாகிய உன்னை விதவைக் கோலத்திலே இருக்கும்படி சமுதாயக் கட்டுப்பாடு கூறிற்றே! அதன் கொடுமையை என்னென்று கண்டிப்பது என்ற எண்ணமே மேலிடுகிறது” என்று கூறினார் தேவர்.

“எனக்கு மீட்சியளித்த தேவரல்லவா தாங்கள்!” என்று அடி மூச்சுக் குரலிலே அவள் பேசினாள்.

“தேவி!” என்று தழதழத்த குரலிலே கொஞ்சினார் தேவர்.

“நினைவிருக்கிறதோ?” என்று கேட்டாள் சூடா. “எது” என்று கேட்டார் தேவர்.

“முதன் முதல் என்னை நீங்கள் அணைத்துக் கொண்டது எந்தச் சந்தர்ப்பத்திலே என்பது நினைவிலிருக்கிறதா?” என்றுகேட்டாள் சூடா. “எப்படிக் கண்ணே, அதை மறப்பேன். அன்று நல்ல நிலவு! நானும் உன் அண்ணனும் நெடுநேரம் விவாதத்திலே ஈடுபட்டிருந்தோம். இலட்சியங்களைப் பற்றி இடிமுழக்கம் செய்கிறாயே தவிர, காரியத்திலே காட்டக் காணோமே என்று கூறி இடித்தேன் உன் அண்ணனை.”

“என்ன பித்தம் இவருக்கு! கொள்கைப்படி நடக்கவில்லை என்று நமது அண்ணனைக் கோபித்துக் கொள்கிறாரே இவர்! இவர் மட்டும் மகாயோக்யரா, கண்ணால் தாக்குகிறார்; கடமையை மறக்கிறாரே, என்று நானுந்தான் உங்களைப் பற்றி மனதிலே இடித்துரைத்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் கிடக்கட்டும். அவர் கொள்கைக்கும் குடும்பப் பொறுப்புக்கும் போர் மூண்டது. அவரால் சமாளிக்க முடியவில்லை. போதிய தைரியமில்லை.உறுதியில்லை. அது தவறுதான். ஆனால் நீங்களுந்தான் என் நெஞ்சிலே நினைப்பை ஊறச் செய்தீர். ஆனால் தைரியமாக என்னை விடுவிக்கத் தெரியாது திண்டாடினீர்” என்று சூடா, அந்த நாள் நிலைமையை விளக்கினாள்.

“அண்ணனை விட்டுக் கொடுக்க மாட்டாய் போலிருக்கிறதே” என்று கேட்டார் தேவர்.

“நானா? நிஜமாகவா கேட்கிறீர், அந்தக் கேள்வியை. நமக்குள் நிகழ்ந்த காதல் விளையாட்டின் ஆரம்ப நாளன்றே, நான் என் அண்ணனை மட்டுமா, அன்னையை, குலத்தை, குடும்பத்தை, உமக்காக விட்டுக் கொடுத்தேனே” என்று கொஞ்சினாள் அந்தக் குமரி. கூந்தலைக் கோதியபடி, அந்தக் கோமளத்தைத் தன் மார்பிலே சாய்த்துக்கொண்டு, “அன்பே! உண்மைதான்! எனக்காக நீ எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறாய், அன்றிரவு, நீ...” என்று மீண்டும், பழைய நிகழ்ச்சியைக் கூறலானார் தேவர்.

“ஏது, அண்ணனுடன் சண்டையிட்டு விட்டுப் போய் விடுகிறாரே, மீண்டும் இங்கே வருவாரோ வரமாட்டாரோ என்ற திகில் எனக்கு, அதனால்தான்...”

“வேகமாக வெளியே சென்ற என்னை, “ஒரு வார்த்தை சற்று நில்லுங்கள்” என்று சொன்னாய்.

அவ்வளவுதான் நான் சொன்னது. அந்தச் சிறு தவறுக்காக என்னைக் கட்டிப் பிடித்து, அப்பப்பா! என்ன இருந்தாலும், போக்கிரித்தனமாகத்தான் நடந்து கொண்டீர்கள் அன்றிரவு.”

“எது போக்கிரித்தனம்? என் உரிமையைப் பெறுவதா போக்கிரித்தனம்? என் காதலியைக் கட்டி அணைத்து முத்தமிடுவதா போக்கிரித்தனம்.”

“அண்ணா பார்த்துவிட்டிருந்தால்?”

“ஆண்டவனே பார்த்திருந்தால்தான் என்ன? இருவரும் குருடர்கள்! உன் இளமையையும் எழிலையும் உன் அண்ணன் கண்டானா? கண் இருந்து என்ன பயன்? உன்னைப் போன்ற இளம் பெண்களின் இன்னல் நிறைந்த வாழ்வைத்தான் கண்டாரா ஆண்டவன்! இருவரும் கண்கெட்டவர்கள்.”

இந்த உரையாடலிலே உல்லாசமாகப் பொழுது கடத்திய காதலர் இருவரும் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நேரிட்டது. அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரொருவர் சில கான்ஸ்டேபிள்களுடன் தடதடவென்று உள்ளே நுழைந்தார். காதல் உரையாடலில் களித்துக் கொண்டிருந்தவர்கள். இந்தத் திடீர்ப் பிரவேசத்தால் திடுக்கிட்டுப் போயினர்.

“மிஸ்டர் தேவர்! மன்னிக்க வேண்டும்! என் கடமை, நான் என்ன செய்யட்டும்” என்று கூறினார் இன்ஸ்பெக்டர்.

“என்ன சார் விஷயம்?” என்று பயத்துடன் தேவர் கேட்டார். சூடாவின் கன்னத்திலே கண்ணீர் புரண்டது.

“கோபிநாதர் கோயில் கொள்ளை சம்மந்தமாக உம்மைக் கைது செய்கிறேன்” என்றார் போலீஸ் அதிகாரி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Empty Re: அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Post by சிவா Wed Dec 15, 2010 9:40 pm

மதியாதார் வாயிலை மிதியாதிருப்பதே மானங்காக்கும் வழி என்பதை அறியாதவளா சூடா? இல்லை. சூழ்நிலை சில நேரங்களில் எத்தகைய முன் அனுபவங்களையும் முரண்படச் செய்து விடுகிறது. தன் வாழ்க்கையிலேயே அதனைப் பலமுறை கண்டிருக்கிறாள். இப்போது தன் கணவரது வாழ்வில் அது விளையாடிக் கொண்டிருக்கிறது!

வழக்காம் வழக்கு! வழக்கு மன்றத்திலே குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்கள் வீட்டிலே வந்து நான் நிற்கிறேனே! இதற்குப் பெயர் விதியா? சூழ்நிலையா? எதுவாகவுமிருந்து விட்டுப் போகட்டும்!

அதோ! அந்த வம்புக்காரன் ஒரு பம்பரம்! வரதன் ஒரு பம்பரம்! யார் அந்த ஜெமீன்தார்? அவனும் ஒரு பம்பரமா? அல்ல பம்பரக் கயிறா? சிந்தனைத் தடுமாற்றத்தோடு ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தாள் வீதியில், வக்கீல் சங்கரய்யர் வீட்டுக்கு! தன் தோழி ஊரிலிருந்து வந்திருப்பாள்; விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறலாம்; அவளது உதவியுடன் உடனே விடுதலைக்கு ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்து கொண்டிருந்தாள்.

பல சந்தர்ப்பங்களில் நம்பிக்கைகள் பொய்த்துப் போவதுண்டு. எதிர்பார்ப்பவை, சில நேரங்களில் எதிர்பார்ப்பதைப் போலவே நிறைபெற்று விடுவதும் உண்டு. முன்னதைத்தான் இதுவரையிலே சூடா அனுபவித்திருக்கிறாள். இப்போது?

எதிர்பாராத வகையில் வாசலிலேயே நின்று யார் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜா. தேவருக்கு விடுதலையே கிடைத்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது சூடாவுக்கு.

இந்த முறையும் அவள் கணவன் தனக்கு உதவ மறுக்க முடியாது என்ற நம்பிக்கை பிறந்தது. தேவரது நிலைமை பற்றி ஏற்கெனவே, தன் கணவன் மூலம் கேள்விப்பட்டிருந்த பங்கஜா ஒரே ஒரு ‘அச்சச்சோ’வுடனேயே பிரச்னையிலிருந்து விடுபட்டுவிட்டாள்.

யாருக்காகவோ காத்திருந்த அவள் முன்னே அலங்கோலமான நிலையில் சூடா வந்து நின்றதும் ஒரு கணம் பதறிப் போனாள். அடுத்த கணமே நிதானமடைந்தாள். தேவரைப் பற்றிய நினைவும் வந்து அமர்ந்து கொண்டது.

இரண்டு படிகள் கீழே இறங்கி வந்து சூடாவை அணைத்துக் கொண்டாள் பங்கஜா. “கேள்விப்பட்டேன். சூடா! நானே உன் வீட்டுக்கு வரவேண்டும் என்றுதான் இருந்தேன். உள்ளே போகலாம்!” என்று ஆறுதலாகச் சொல்லி வைத்தாள்.

தீச்சூடுகளின் கொடுமைக்கு மட்டுமே இதுவரையில் தன்னை ஒப்படைத்திருந்த சூடாவுக்கு இந்த ஆறுதல்மொழிகள் இன்பத் தேனாய் இனித்தது. என்றாலும் இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமையின் பளுவைத் தாங்க மாட்டாதவைகளாக அவள் கண்கள் ‘பொல பொல’வென்று நீரைப் பொழியத் தொடங்கிவிட்டன.

ஹாலில் வந்து அமர்ந்த உடனேயே சூடா “பங்கஜம்! என் நிலைமையைப் பார்த்தியா!” என்று தொடங்கினாள். விம்மலும் கூடவே தொடங்கியது.

“எல்லாம் நேக்குத் தெரியும் சூடா! நான்கூட ஆத்துக்காரன்டே சண்டை போட்டேன். இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே நீங்க சூடாவைக் கைவிட்டிருக்கக் கூடாதுன்னு சொன்னேன்!” என்றாள்.

அந்த வார்த்தைகள் இதமாக இருந்தன. “அதெல்லாம் போகட்டும் பங்கஜம்! இப்ப உன் ஆத்துக்காரர் எங்கே?” என்றாள். கேள்வி தடுமாற்றத்தோடு வந்தாலும், குரலில் பதட்டம் இருக்கக் கண்டாள் பங்கஜம்.

“கோபிநாதர் கோயில்லே, காமகோடி பீடம் பிரசன்னமாகி இருக்கார். இன்னைக்கு சாயரட்சை புறப்பட்டு திருத்தணிக்குப் போறாராம். அதனாலே அவரைப் பார்த்து சேவிச்சுண்டு வரப் போயிருக்கார். இப்ப வந்துடுவார்!” என்றாள் பங்கஜம்.

“பங்கஜம்! நான் அவசரமாக அவரைப் பார்க்கணும். அவர் வந்து, அவர்கிட்டே சொல்றதுக்குள்ளே காரியம் எப்படி எப்படியோ நடந்துடுமே, என்ன பண்றது” என்றாள் சூடா.

“என்கிட்டே சொல்லேண்டி சூடா! அவர் வந்ததும் நான் சொல்லிடறேன்.”

“பைத்தியமே! நீ சொல்லிப் புரியவைக்கிற விஷயமா அது? இப்பவே நான் அவரைப் பார்க்கணும். கோபிநாதர் கோயில்லே கொள்ளை அடிச்ச கொடியவன் யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேண்டி! நான் கண்டுபிடிச்சுட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

“உட்கார், சூடா! ரொம்பவும் பதட்டமா இருக்கே! முக்கியமான விஷயம்தான்! இப்ப வந்துடுவார். யார் அந்தத் கொடியவன்? என்கிட்டே சொல்லக் கூடாதா?” என்றாள் நளினமாக.

“யாரு அது! சூடாவா! வாம்மா! என்னடி பங்கஜம்! உன்கிட்டே சொல்லக் கூடாதுன்னு எதை மறைக்கிறா சூடா?” என்று கேட்டுக் கொண்டே வந்த சங்கரய்யர், கோட்டைக் கழற்றி பங்கஜத்திடம் கொடுத்து விட்டு அருகே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

வக்கீலின் குரல் கேட்டு எழுந்து நின்ற சூடா, அவரைப் கண்டவுடனேயே மறுபடியும் கண்களில் நீரைக் கொட்டிவிட்டாள்.

“ஏண்டி இப்படி அழுது தொலைக்கிறே! உன் அண்ணன் - அந்த சாஸ்திரிதான் எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக்கிட்டிருக்கான்னா, நீ அந்த விக்டரைக்கூட வழக்காட வேண்டாம்ன்னு சொல்லிட்டியாமே” என்று தொடங்கினார் சாவதானமாக!

சூடாவின் இதயத் துடிப்பு நின்றுவிடும்போல இருந்தது. தன் இதயத்திலிருப்பவைகளை உடனே இறக்கி வைக்காவிட்டால், அது வெடித்துச் சிதறி விடுமோ என்று அஞ்சினாள். அந்த அவசரம் அய்யருக்குப் புரியுமோ! “ஏண்டி சூடா! பாரிஸ்டர் விக்டரை நீ ஏன் கேஸ் நடத்த வேண்டாம்னு சொன்னியாம்!” என்றார் மறுபடியும்.

‘வக்கீல் வாழ்க்கையே இப்படித்தானா?’ - என்று கோபம் குமுறிக் கொண்டு வந்தது. வந்து? கோபத்தைக் கொட்ட முடியுமோ! பணக்காரன் அடிக்கும் கொள்ளையைப் பற்றியும், கோலாகல வாழ்க்கையைப் பற்றியும் வாய் வலிக்கப் பேசித் திரியும் வஜ்ரவேல், எவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தானோ; அவனே எதிரில் வரும்போது மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல் இளித்து நிற்பதுதான் உலக நியதியாயிற்றே! பேசிய பேச்சில் நூறில் ஒரு பங்கையாவது அவன் எதிரில் கொட்டிக் காட்ட முடிகிறதா? மனித வாழ்க்கை முறை, அந்த வகையில் அமைக்கப்பட்டிருந்ததால்தான் உலகப் பிரச்னைகளில் முக்காலே மூன்று வீசம் தானாகத் தீர்ந்து போய்விடுமே!

“வந்து... அந்த விக்டர்...” என்று நா தழுதழுக்க பதில் சொல்லத் தொடங்கினாள் சூடா. ‘அதுதான் நானே சொன்னேனே, அந்த விக்டரைவிட அவன் குமாஸ்தா மேலுன்னு! இருந்தாலும் கேசை அவனே நடத்தணும்னு உன் அண்ணன் நினைக்கிறபோது, நீ ஏன் அதைத் தடுக்கணும்னுதான் நான் கேட்கிறேன்” என்றார் குறுக்கிட்டு.

பங்கஜத்துக்குக்கூட கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. அவளே பேச்சில் குறுக்கிட்டாள்: “நீங்க அதைப் பற்றியெல்லாம் எதுக்கு அலட்டிக்கிறேள். சூடா, கொள்ளைக்காரன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாளாம்! அதைச் சொல்லத்தான் ஓட்டமா ஓடிவந்திருக்கா. அதைக் கேட்காமே...” என்றாள் சற்றுக் கடுமையான குரலில்.

இதைக் கேட்டவுடனேயே சங்கரய்யர், நாற்காலியை விட்டுத் துள்ளி எழுந்தார்! “அப்படியா சூடா! என்னடி பைத்தியம் நீ! அதையில்லியோ முதல்லே சொல்லி இருக்கணும்! யாருடி? யார் அவன்! சொல்லு” என்று சூடாவின் அருகில் வந்து நின்று கொண்டார்.

தன் அண்ணன் வீட்டில் கேட்ட செய்திகளில் எந்தப் பகுதியை முன்னே சொல்வது? எதனை அப்புறம் சொல்வது என்ற திகைப்பும் தவிப்பும் சில வினாடிகள் வரையில் அவளைப் பேச விடவில்லை.

“சொல்லேண்டி! ஏன் பிரம்மிச்சு நின்னூட்டே” என்றார் சங்கரய்யர்! “என்னடி சூடா! என்கிட்டே அவ்வளவு பரபரப்புக் காட்டினே! இப்போ, தயங்குறியே” என்றாள் பங்கஜம்.

எந்த ஒன்றை, எவரிடம் சொல்லிவிட வேண்டும்; சொல்லி, தன் கணவனின் விடுதலைக்கு வழி விட வேண்டும் என்பதற்காக, ஓடோடி வந்தாளோ, அந்த ஒன்றை, அந்த ஒருவரிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் சூடா.

சூடா என்ன செய்வாள்? பாவம்! சொல்லத்தான் நினைக்கிறாள்; முடியவில்லை. உணர்ச்சிகள் ஒரேயடியாகச் செயல்படத் தொடங்கும்போது, அறிவு முடக்கம் ஏற்பட்டுவிடும் என்ற கருத்தை அப்போது நிரூபித்துவிட்டாள் அவள்.

“என்ன சூடா! உனக்குச் சித்த பிரமைப் பிடிச்சுண்டுடுத்தா?” என்ற கேள்வியைக்கூட சங்கரய்யர் கேட்டுவிட்டார். அவருக்கென்ன தெரியும், சூடாவின் மனம் படும்பாடு?

“இப்போ என் அண்ணா வீட்டிலே இருந்துதான் வரேன். அங்கே... அங்கே...” முடிக்க முடியாமல் மீண்டும் குழம்பினாள். “அங்கே என்னடி! உன் ஆம்படையான் சாஸ்திரியின் காலைக் கட்டிப் பிடிச்சுண்டு, என்னை மன்னிச்சுடுங்கோ”ன்னு கேட்டுக்கிட்டிருந்ததைக் கண்டியா! பைத்தியக்காரி! விஷயத்தைச் சொல்லேண்டி” என்றார் மீண்டும்.

தனக்குப் பைத்தியம் பிடித்துவிடவில்லையே என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவள் ஆளாகி இருந்தாள். விழிகளில்கூட மிரட்சி ஏற்படத் தொடங்கியது.

“நீதான் அந்தக் கொள்ளையை நடத்தினவ மாதிரி இருக்கயேடி! உன் அண்ணன் வீட்டிலே என்ன நடந்தது? நீ அவனை வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னதுபோல் அவனும் சொன்னானா?” என்றார் வக்கீல். இப்போது அவருக்குக்கூட கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.

“என் அண்ணாதான் அந்தக் கொள்ளையை நடத்தினதுன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் தடுமாற்றத்தோடு. அவளது நிலை பரிதாபத்துக்குரியதாக ஆகிவிட்டது என்பதை வக்கீல்புரிந்து கொண்டார். இனி தன் வக்கீல் வேலை மூலமாகத்தான் அவளிடமிருந்து விஷயங்களைக் கிரகிக்க வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Empty Re: அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Post by சிவா Wed Dec 15, 2010 9:41 pm

“சாஸ்திரிதான் கொள்ளை அடிச்சான்னு நீ எப்படித் தெரிஞ்சுண்டே” என்றார் வக்கீல் சங்கரய்யர்.

இந்தக் கேள்விக்குரிய பதிலில்தான் சூடாவின் கணவனது எதிர்காலம் அடங்கி இருக்கிறது. சாஸ்திரியைப் பற்றிச் சொல்லப் போன அனைத்தும், அவன் வீட்டில் அவள் கேட்டுக் கொண்டிருந்த விஷயங்களிலிருந்து அவளாக யூகித்துக் கொண்டவைதான்! மைக்கண்ணனது பேச்சும், சாஸ்திரியின் பதிலும் அப்படித்தான் தெளிவாகத் தெரிவித்தன. வக்கீலின் கேள்வி, விஷயத்தை நேராகவே தொட்டுவிட்டது. பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.

பாரிஸ்டர் விக்டரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது பதக்கம் பற்றி முன்பின் தெரியாத ஒருவன் கூறியதிலிருந்து விஷயத்தைச் சொல்ல நினைத்தாள்.

“அண்ணாதான் அதுக்குக் காரணம் என்று நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கியதும் வக்கீல் மறுபடியும் சென்று உட்கார்ந்து கொண்டார். பங்கஜத்துக்குக்கூட சூடாவின் மீது அருவருப்பு ஏற்பட்டது. என்றாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், “சூடா! சுருக்கமாகச் சொன்னாத்தானே நன்னா இருக்கும்?” என்றாள்.

சூடா காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ பிதற்றப் போகிறாள் என்ற எண்ணத்தோடு உள்ளே போனாள் பங்கஜா.

சுருக்கமாகவே, நீட்டி நிமிர்த்தியோ சூடா பதக்கம் தொடர்பான அனைத்தையும் சொல்லி இறுதியில் மைக்கண்ணனிடம் அதைக் கொடுத்ததையும், அவனை, அந்தப் பதக்கத்தோடு அண்ணன் வீட்டில் சந்தித்ததையும், அங்கே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைப் பற்றியும் ஒருவாறு சொல்லி முடித்தாள்.

சாஸ்திரி வீட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையும், பதக்கம் தொடர்பானவைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட வக்கீலும், “சபாஷ் சூடா! மிகச் சாமர்த்தியமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாய்! பாராட்டுகிறேன்! வரதன் என்றாயே, யார் அவன்? பதக்கத்தைப் பறித்துக் கொண்டு உன் அண்ணன் வீட்டுக்குப் போனவன் பெயர் என்ன? அவன் எங்கே இருக்கிறான்?” என்றார், மிடுக்குடன்.

“அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றாள் சூடா, பதட்டம் தணிந்த குரலில்!

“நான் ஒரு வக்கீல்தான் சூடா; துப்பறியும் நிபுணன் அல்லவே” என்று கூறினார் வக்கீல். “என்றாலும் முயற்சிக்கிறேன். போய் வா!” என்று கூறிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.
* * *

நாடக நடிகையாக இருந்து, பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு, ஜெமீன்தார் செல்லப்பனின் ஆசைநாயகியாகிவிட்ட ஸ்வர்ணா, நாகப்பதக்கம் காணவில்லை என்று ஜெமீன்தார் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அந்த அதிர்ச்சியால் ஜெமீன்தார் தாக்கப்பட்ட அளவுக்கு, ஸ்வர்ணா தாக்கப்படவில்லை; காரணம், எண்ணத் தொலையாத அளவுக்குச் சொத்துடையவரின் ஒரு பொருள் காணமாற் போய்விட்டால் அதனால் அவர் குடி ஒன்றும் முழுகிப் போகாது என்பதை அவள் எண்ணிக் கொண்டதால்தான்.

ஆனால், நாகப்பதக்கத்தைக் காணவில்லை என்றதும், தான் அதனை எடுக்கவில்லை என்று கூறியது கேட்டதும், ஜெமீன்தார் ஏன், கொதிக்கும் எண்ணெய்பட்டவராகத் துடிக்கிறார்? கெம்பீரமான அந்த உருவம் ஏன் இப்படிக் கூனிக் குறுகிவிட்டது? முகம் கருத்துச் சுருங்கத் தொடங்கிவிட்டது எதனால்?

ஸ்வர்ணாவினால் இவைகளைப் பற்றி எண்ணிக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நாகப் பதக்கம் - சமீபத்திலேதான் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. ஜெமீன்தார் அதனைக் கொடுக்கும்போதே, ஸ்வர்ணாவிடம் சொன்னார்! “ஸ்வர்ணா, இது மிக உயர்ந்த ஒரு பதக்கம்!” இதோ, இந்த நாகத்தலையின் உச்சியிலே ஜொலிக்கிறது பார்! இதுதான் மாணிக்கம் என்று கூறப்படுவது. நல்லபாம்பின் நஞ்சுதான் இப்படி கண்ணாடிக் கல்லாக மாறி இருக்கிறது. விலை மதிப்பே கிடையாது இதற்கு. இந்தக் கண்களில் இருக்கிறது பார் சிகப்புக் கல் - அசல் இரத்தினம் இது. இந்த இரண்டு கற்கள் மட்டுமே இருபதாயிரத்துக்கு மேல்! தலையின் விளிம்பைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருக்கும் வெள்ளைக் கற்கள் அனைத்தும் வைரமாகும். கல் ஒன்று கால் லட்சமாகிறது. எவ்வளவு பத்திரமாக இதனை வைத்திருக்க வேண்டுமோ, அவ்வளவு பத்திரமாக இது இருக்க வேண்டும். உன்மேல் உள்ள காதலால்தான் நான் இதனை உன்னிடம் கொடுத்து வைக்கிறேன். பத்திரம், பத்திரம்” என்று பல தடவைகள் சொல்லிவிட்டு, அவள் கையில் கொடுத்தார்!

அடுத்த வேளை உணவுக்கே, வழி என்ன என்ற ஏக்கத்திலிருந்த ஸ்வர்ணா, ஜெமீன்தாரின் தொடர்பு கிடைத்த பிறகுதான் வயிற்றின் நிரந்தரப் பசியைப் போக்கிக் கொண்டாள். வயிற்றுப் பசியை மட்டுமே தணிக்க முடிந்த ஜெமீன்தாரால், அவளது மனப்பசியைத் தணிக்க முடியவில்லை!

தன்னால் தணிவிக்கப்படுகிறதா இல்லையா என்றெல்லாம்கூட அவர் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. ஸ்வர்ணாவின் அழகு அவரை அவளிடத்தில் அடைக்கலமாக்கி வைத்திருக்கிறது; அவளது வறுமைக்கோலம் அவளை, அவரிடத்திலே குடியேறச் செய்திருக்கிறது. அவ்வளவுதான்!
ஸ்வர்ணா, எந்த நேரத்திலும் தன்னை விட்டு விலகி விடக்கூடும் என்பதை அவர் நினைத்துப் பார்ப்பது உண்டு! இவள் போனால் இன்னொருத்தி! எத்தனையோ மலர்கள்!! என்கிற முறையிலே, அவளை, அவரால் மதிப்பிட முடியவில்லை. சுவர்ணாவின் இடத்தில் அவளுக்கு முன்பு, எத்தனையோ பேர் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்! அதிகமாகப் போனால் ஓர் ஆறு மாதம்! பைங்கிளிகள் பறந்து போய்விடும்! ஸ்வர்ணா விதிவிலக்கு. ஐந்து ஆண்டுகளாக இருக்கிறாள். இருக்கிறாள் என்று மட்டுந்தானே கூற முடியும்? எனவே இல்லாமற் போய்விடுவாளோ என்ற நிலை ஏற்படாமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து வைத்திருக்கிறார்! அந்த ஏற்பாடுகளில் ஒன்றாகத்தான் நாகப் பதக்கம் என்றும் அவளிடம் கூறினார். அதன் மதிப்பையும் கூறி, அது இருக்க வேண்டிய பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார்.

எனவே, அவ்வளவு சிறப்புக்குரிய அந்தப் பதக்கம் காணவில்லை என்று கூறக் கேட்டவுடன், உண்மையிலே பதைத்துத் துடிக்க வேண்டியவள் ஸ்வர்ணா. இருக்க வேண்டிய அளவுக்குப் பதைப்பு இல்லை அவளிடம். எல்லப்பன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு, ஏகாம்பரம் பதறித் துடித்தானா? ஏன் அப்படி? எல்லப்பனுக்கும் ஏகாம்பரத்துக்கும் இருந்த தொடர்பு அதுபோல், எல்லப்பனை அடுத்து, தன்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுமே போலீஸ் படை என் அச்சம்!

அப்படித்தான் துடித்தார் செல்லப்பர், பதக்கம் காணவில்லை என்றவுடனே! “இப்பொழுது என்ன வந்துவிட்டது என்று இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். பொருட்கள் களவு போவது இயற்கை என்பதால்தானே, களவாடியவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ்காரர்களை வைத்திருக்கிறார்கள்” என்றாள் ஸ்வர்ணா.

“போலீஸ்” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ஜெமீன்தாருக்கு நாடி ஒடுங்கியது. “ஆமாம்! போலீசுக்குச் சொல்லிட வேண்டியதுதான்! ஆனால் ஸ்வர்ணா...” என்று எதையோ சொல்ல வாயெடுத்தார். “ஆனாலாவது, கோனாலாவது! பல லட்சம் என்றீர்கள். அதனாலேயே நான்கூட அதனை அணியாமல், பெட்டியிலே கொண்டுபோய் வைத்தேன்! வைத்த அன்றைக்குப் பார்த்ததுதான் அதனை! அப்புறம் அதுபற்றி மறந்துகூடப் போய்விட்டேன்! போசாமல் போலீசுக்குப் போன் செய்யுங்கள்” என்றாள்.

“கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது ஸ்வர்ணா! நம் தேசவீரன் பத்திரிகை முதலாளி சாஸ்திரி இருக்கானே, அவனிடம் இதுபற்றி முதலில் சொல்ல வேண்டும்” என்றார் பதட்டத்தோடு.
“என்ன! அந்த டம்பாச்சாரி சாஸ்திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தமாம்! நீங்கள் பேசாமல் இருங்கள்! என் நகையைக் காணவில்லை என்று நானே போன் செய்கிறேன்” என்றாள். கூறிவிட்டு, போன் இருக்குமிடத்துக்கும் நகரத் தொடங்கினாள்.

“இரு ஸ்வர்ணா! அவசரப்படாதே! யோசித்துச் செய்ய வேண்டும்! உன்னிடம் பதக்கம் கொடுத்ததாகவே நீ நினைக்க வேண்டாம்! அது காணாமற்போய் விட்டதென்றும் நீ கவலைப்பட வேண்டாம்! பதைப்பையும், கவலையையும் என்னிடம் விட்டுவிடு’ என்று எழுந்து சென்றுஅவளது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார் செல்லப்பர்!

ஸ்வர்ணாவால் எப்படி சும்மா இருக்க முடியும்? பல லட்சம் பெறுமானம் என்றார்! எவ்வளவு பத்திரமாக இருக்க வேண்டுமோ! அவ்வளவு பத்திரமாக அது இருக்க வேண்டும் என்றார். இப்போது காணாமற் போய்விட்டது என்றதும் துடியாய்த் துடித்தார்! போலீசுக்குத் தகவல் தருவது என்றதும் தயங்குகிறாரே! ஏன் என்ற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு!

“ஏன்! போலீசுக்குச் சொல்ல எதற்குத் தயக்கம் காட்ட வேண்டும்? எதற்காகச் சாஸ்திரியை இதிலே இழுக்க வேண்டும்.” என்றாள் சற்றுக் கோபமாகவே. அதற்குள் டெலிபோன் மணி அடித்தது. ஸ்வர்ணாவே எழுந்து சென்று ரிசீவரைக் கையிலெடுத்து, ‘ஹலோ’ என்றாள்.

“நான் சாஸ்திரி பேசுகிறேன்! யார் பேசறது அங்கே?” என்ற குரல் கேட்டு, இந்தாங்க! நீங்க எதிர்பார்த்த சாஸ்திரி பேசறாராம்!” என்று ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு, வந்து அமர்ந்து கொண்டாள்.

சாஸ்திரி பேசுகிறார் என்றதும், பாய்ந்தோடி சென்று ரிசீவரை எடுத்துக் கொண்டார் செல்லப்பர். கைகள் நடுங்கின; ரிசீவரைப் பிடிக்கக்கூட பலம் இல்லையோ என்று நினைக்கும்படி இருந்தது அந்தக் காட்சி! ஸ்வர்ணாவுக்கு அது வேடிக்கையாகவும், அதே நேரம் ஆத்திரமாகவும் இருந்தது.
“ஹலோ! நான்தான் பேசுறேன்! என்ன விஷயம்!” என்றார் செல்லப்பர் போனில்.

“நான் சாஸ்திரி பேசுகிறேன்! உடனே உங்களைச் சந்திக்க வேண்டும்! நீங்கள் இங்கே வருகிறீர்களா? நானே அங்கு வரட்டுமா?” என்று குரல் கேட்டது எதிர்ப்பக்கமிருந்து.

“நீங்களே வாருங்கோ சாஸ்திரியாரோ!”

“சரி! வீட்டிலேயே இருங்க! இதோ வந்துடறேன்.!!”

ரிசீவரை வைத்துவிட்டு, ஸ்வர்ணாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஜெமீன்தார். “என்ன சொன்னான் அந்த சாஸ்திரி!” என்றாள் ஸ்வர்ணா. “இங்கே இப்போ வர்ரானாம்!” என்றார் அவர். “பதக்கம் சம்பந்தமாக நீங்க எதுவும் சொல்லலையே!” என்றாள் அவள். “அவன்தான் இங்கே வர்ரானே! நேரிலேயே சொல்லிடலாம்” என்று கூறினார். “ஸ்வர்ணா! கொஞ்சம் எலுமிச்சம் பழம் ஜூஸ் பிழிஞ்சு எடுத்துக்கிட்டு வா!” என்றார்.

ஸ்வர்ணா உள்ளே போனாள், ஜூஸ் பிழிந்து எடுத்து வர. அதே நேரத்தில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏழெட்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களுடன் உள்ளே நுழைந்தார்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Empty Re: அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Post by சிவா Wed Dec 15, 2010 9:41 pm

போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜபதி நாயுடு, கோயில் கொள்ளை சம்பந்தமான எல்லா தஸ்தாவேஜிகளையும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தார். தேசவீரன் பத்திரிகை ஆசிரியர் தேவர் மீது குற்றம் சுமத்தத்தக்க ஆதாரங்களை மறுபடியும் படித்துப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டருக்குக்கூட, தேவர் மீது ஒருவித பக்தி உண்டு. அவர் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார் என்பதற்காக அல்ல; நாடு, மக்கள், மொழி, இனம் என்பதற்காக இரவு, பகல் பாராது மழை, வெய்யில் கருதாது பாடுபடுகிறாரே என்பதற்காக! பொதுத்தொண்டு என்று கூறி, கிடைத்தவரையில் சுருட்டிக் கொண்டு, ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கக் கற்றுக் கொண்டிருக்கும் நம்நாடு அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், பேச்சும் மூச்சும் கடமை கடமையென்றே அலைந்து கொண்டிருக்கிறாரே, அதற்காக!

மேடையேறி பேசக் கற்றுவிடுவதனாலேயே ஒருவன் அரசியலில் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுகிறான்! தொடராகக் கூட அல்ல; விஷயங்களை நிரல்படக்கோத்து எடுத்துத் தரும் பாங்குகூட அற்றவர்கள், மேடைக்கு முன்வந்து நின்று நான்கு வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டுப் போய் விடுவதனாலேயே பெரிய பேச்சாளர் என்ற பட்டத்தை ஏந்திக் கொண்டு, அதிகார எந்திரத்தை எந்தெந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறார்கள் சில பேர்! தேவர் அப்படி அல்லர்! தேர்ந்த பேச்சாளி! எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்து அணுவளவும் பிறழாது, அது பற்றிய விளக்கங்களை எத்தனை எத்தனை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவார்! நுண்ணறிவுவோடு நூலறிவும் நிரம்பியவர் அவர்! எந்த ஒன்றைப் பற்றியும் தீவிரமான சிந்தனைக்குப் பின்னர், சரியான வழியில் செயல்படுபவர் அவர்! இதெல்லாமாகச் சேர்ந்துதான் அவர்மீது, இன்ஸ்பெக்டருக்கு மதிப்பை உண்டாக்கி வைத்திருந்தது.

கோபிநாதர் கோயிலிலே கொள்ளை நடந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும், எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தாரோ அந்த அளவுக்கு, அதனை நடத்தியவர் தேவர்தான் என்றும், அதற்கு இவை இவையெல்லாம் ஆதாரங்கள் என்றும் தகவல் கிடைத்தபோதும் அதிர்ச்சி அடையத்தான் செய்தார்!

கஜபதி நாயுடு முதலில் நம்பத்தான் இல்லை. தேவரா? என்ற வினாக்குறியை விடுத்துவிட்டு திகைத்து நின்றார். நின்று? ஆதாரங்கள் அடுக்கடுக்காக எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்போது திகைப்பும், தயக்கமும் எத்தனை நேரத்துக்கு நீடித்திருக்கும்?

வேதனையுடன் சென்றுதான் கைது செய்தார். கைது செய்யும்போது கூட அவருக்கு கலக்கமாகத்தான் இருந்தது. ஆதாரங்கள் யாவும் பொய்யானதாக இருக்கக் கூடாதா? என்றுகூட மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்.

இப்போது அந்தப் பரிவுணர்ச்சி முற்றிலும் மறைந்துவிட்டது. ஆதாரங்களிலும், சாட்சியங்களிலும் இருக்கின்ற ஓட்டை, உடைசல்கள் மூலம் தேவர் தப்பித்துவிடக் கூடாதே என்பதற்காகக் கவனத்துடன் பரிசீலனை செய்து கொண்டிருந்தார்.

நேற்றுவரையில் யோக்யனாக இருந்தவன், இன்றைக்குச் சட்டத்தின் முன் எவ்வளவு பெரிய மோசடிக்காரனாக ஆகிவிடுகிறான்! ஆகிவிடுகிறானா அல்லது ஆக்கப்படுகிறானா என்பதெல்லாம் வேறு விஷயங்கள், இன்றைக்கு சட்டத்தின் முன்னே அவன் குற்றவாளியாகக் கொண்டுவரப்பட்டு விட்டான்!

நேற்றைய பசு - இன்றைக்குப் புலி; இன்றைய பசு - நாளைக்கு? உண்மைப் பசு எது? தோல் போர்த்த புலி எது? கண்டறிய முடியாதவாறு திறமை செயல்பட்டிருக்கிறது. கண்டறிவதுதான் தன் கடமை! அதற்காகத்தான் அரசு ஊழியம்! இந்த வகையிலே ஓடிக்கொண்டிருந்தது கஜபதி நாயுடுவின் எண்ண ஓட்டங்கள்.

அப்போது டெலிபோன் மணி அடித்தது. எண்ண இழைகள் அறுபட்டதும், இன்ஸ்பெக்டரின் கை இயந்திரம் போல ரீசிவரை எடுத்தது. ‘யெஸ் பிளீஸ்’ என்ற வார்த்தைகளை உதிர்த்தன அவரது உதடுகள்.

எதிர்த் திசையிலிருந்து “இங்கே நான் வக்கீல் சங்கரன் பேசுகிறேன். இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா? என்ற ஒலி கேட்டது. ‘நான்தான் பேசுகிறேன். என்ன விஷயம்’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘முக்கியமான ஒரு விஷயம். நேரில் பேச வேண்டும்’ என்றார் சங்கரய்யர். ‘வாருங்கள் பேசலாம்!’ என்று சொல்லிவிட்டு ரிசீவரை வைத்தார் கஜபதி நாயுடு.

வக்கீல் நம்மைத் தேடிக் கொண்டு வருவானேன்? சங்கரய்யர் பிரபலமான வக்கீல்! முன்போர்முறை உத்தமானந்தர் மீது போடப்பட்ட பலாத்காரப் புணர்ச்சி தொடர்பான வழக்கில் கீழ்க்கோர்ட் அவருக்கு ஆறு வருடம் சிட்சை அளித்திருந்ததையே, இந்த வக்கீல் மேல்கோர்ட்டில் ஆஜராகி, கேசையே உடைத்துத் தள்ளிவிட்டார்! இப்போது எதற்கு இங்கு வரவேண்டும் என்பன போன்ற எண்ணங்களுக்கு இடையே, கைகள் தாமாகப் பைல்களைப் புரட்டிக் கொண்டிருக்க, கண்களை மூடி, யோசனையில் மூழ்கத் தொடங்கிவிட்டார்!

“நமஸ்காரம் இன்ஸ்பெக்டர்!” என்ற குரல் கேட்டு, விழிகளை திறந்த கஜபதி நாயுடு, எதிரே சங்கரய்யர் நின்று கொண்டிருந்ததைக் கண்டு, பதில் வணக்கம் செய்துவிட்டு, அமரச் சொன்னார்.
சங்கரய்யர் அமர்ந்து கொண்டே, ‘கொஞ்சம் தனியா பேசணும்; டைம் இருக்கோ!’ என்றார். ‘இங்கேயே நீங்கள் எதையும் பேசலாம்! விஷயத்தைச் சொல்லுங்களேன்’ என்றார் இன்ஸ்பெக்டர்.
“நம்ம தேவர் கேஸ் விஷயமா சில விஷயங்களைச் சொல்லணும்” என்ற உடனேயே, இன்ஸ்பெக்டர், “எல்லாம் ரெக்கார்டு ஆயிட்டுதே; இன்னைக்கோ நாளைக்கோ கேஸ், பைல் ஆயிடுமே” என்றார்.

“எனக்குக் கிடைத்த சில விஷயங்களை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். தெரியப்படுத்த வேண்டியது என் போன்றவர்களது கடமை.”

“சொல்லுங்கள்!”

“இப்போது நீங்கள் நான் சொல்லப் போவதனைக் கேட்டு திடுக்கிடுவீர்கள். நீங்களும், உங்கள் இலாகாவினரும் கொஞ்சம் சிரமப்பட்டால், கொள்ளை வழக்கு திசை திரும்பிப் போய்விடும்.”

“அப்படியா! தேவர் குற்றவாளி அல்ல என்று நீங்கள் எடுக்கும் முடிவிலிருந்து பிறக்க வேண்டும். எனக்கு நீங்கள் முதலில் ஒரு உதவி செய்ய வேண்டும். அதாவது நம் ஊர் கேடிப் பட்டியலைப் பார்வையிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும். உடனிருந்து உதவி செய்ய வேண்டும்.”

“விஷயத்தைச் சொல்லாமல் இப்படிக் கேட்டால்?”

“உதவி செய்வதாகச் சொல்லுங்களேன்”

“உங்கள் விளக்கத்தைப் பொறுத்துச் சொல்ல வேண்டியதல்லவா அது?”

“சொல்கிறேன் இன்ஸ்பெக்டர்! நீங்கள் திடுக்கிடக் கூடிய செய்தி! திகைப்புடன் கேட்க வேண்டிய செய்தி அது. அதாவது கோயில் கொள்ளை வழக்கில் தேவர் மீது வழக்குப் போட, எவர் எவர் உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் மீதே நீங்கள் சந்தேகப்பட வேண்டியிருக்கும் நிலைமை.”

என்றதும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த கஜபதி நாயுடு, நிமிர்ந்து உட்கார்ந்தார். விழிகள்கூட அகல விரிந்தன.

மெல்ல சிரித்துக் கொண்டே அவர், ‘இதுகூட உத்தமானந்தர் கேஸ் என்று நினைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். இகழ்ச்சிக் குறிப்பு தொனித்தது அவர் குரலில்.

“நான் தேவர் விஷயமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் உள்ள கேடிகளின் பட்டியலைத் தந்தால் நான், முதலில் என் யூகங்களை உறுதிபடுத்திக் கொண்டு, உங்களுக்கு விளக்கம் தரமுடியும்.” என்றார் சங்கரய்யர்.

விஷயம் புரிந்த ஒரு வக்கீல், பிரபலமானவர் இவ்வளவு தூரம் சொல்வதால், ஏதாவது புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், ஒரு போலீஸ்காரரை அழைத்து, ரெக்கார்டு அறையிலிருந்து, குறிப்பிட்ட பைலைக் கொண்டு வரக் கூறினார்.

போலீஸ்காரன் பைலைக் கொண்டு வந்து கொடுத்ததும், முதலில் கஜபதி நாயுடுவே ஒரு முறைப் புரட்டி விட்டு, அதை வக்கீலிடம் நீட்டியபடியே “இந்தப் பட்டியலிலிருந்து சிலரைக் குறிப்பிடப் போகிறீர்கள்” என்றார்.

“பட்டியலைக் கேட்கிறேன் என்கிறபோதே, உங்கள் யூகம் அப்படித்தானே இருக்க முடியும்?” என்று சொல்லிக் கொண்டே புரட்டத் தொடங்கினார் வக்கீல். புரட்டிக் கொண்டே, “இன்ஸ்பெக்டர், கல்யாண சாஸ்திரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இப்போது போலீஸ்காரர் யாராவது இருக்கிறாரோ?” என்றார்.

“ஏன், ஒரு போலீஸ்காரர்கூட இந்தக் கொள்ளையில் பங்கேற்றிருக்கிறார் என்று கூறப் போகிறீர்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுவிட்டுச் சிரித்தார். “நீங்கள் திறமைமிக்க வக்கீல் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக உங்கள் திறமையை, போலீசுத் துறையின் மீதே களங்கம் கற்பிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்றார் கஜபதி நாயுடு. தொடர்ந்து ‘தேவர் வழக்குச் சம்பந்தாக புலன் விசாரணையின் ஒரு பகுதியாக சிலர் போய் வந்திருக்கக் கூடும்” என்றார்.

“நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது இன்ஸ்பெக்டர்! நாம் முதன் முதலாக யாரையும் ஒருவனைக் குற்றவாளிதான் என்று தீர்மானித்து விடுவதில்லை. முதலில் சந்தேகப்படுகிறோம்; சந்தேகத்துக்குரிய தடயங்களுக்கு ஆதரவாக விஷயங்களைத் தேடுகிறோம். புலனாய்வில் கிடைக்
கின்றவைகளைக் கொண்டுதான் வழக்கு என்று தொடர்கிறோம். இல்லையா!” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் சட்டென்று, கேடிப் பட்டியலின் மீது கண்ணோட்டத்தை நிறுத்தி, “இன்ஸ்பெக்டர்! இந்த ஆறுகமும், வரதனும் எப்படிப்பட்டவர்கள் என்று கொஞ்சம் கூற முடியுமா?” என்று கேட்டார்.

“பெயர் எந்தப் பட்டியலிலிருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின்னரும், ஒரு புகழ்பெற்ற வக்கீல் கேட்கும் கேள்வியா இது?” என்று கூறிவிட்டு, பட்டியலை வாங்கி இன்ஸ்பெக்டர் கவனித்தார்.

ஆறுமுகம், வரதன் இவர்களைப் பற்றிய விவரங்களையும், அவர்கள் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்த குற்றங்கள் பற்றியும் கண்டறிந்து கொண்டு, இன்ஸ்பெக்டர், “ஏன் வக்கீல், இவர்கள்தான் இந்தக் கொள்ளையை நடத்தினார்கள் என்று கூறுகிறீரா? எனக் கேட்டுவிட்டு குற்றவாளியின் முகத்தைக் கூர்ந்து கவனிப்பதுபோல், வக்கீலின் முகத்தையும் ஆராயத் தொடங்கினார்.

முகத்தின் மேலும் கீழும் பார்வையைக் செலுத்திக் கொண்டே கஜபதி நாயுடு, “நீங்கள் தேவரை நிரபராதியாக்க முயற்சிக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“உண்மைதான் இன்ஸ்பெக்டர்! தேவர் நிரபராதிதான் என்பதை என் வரையில் முடிவுக்கு வந்துவிட்டேன். என் முடிவின் பக்கம் இனி உங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் முயற்சிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, இன்ஸ்பெக்டரின் மிக அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டு, காதோடு காதாக சில விஷயங்களைச் சொன்னார்.

சங்கரய்யர் சொல்லச் சொல்ல, இன்ஸ்பெக்டரின் விழிகள் விரியத் தொடங்கின. உண்மையாகவா! அப்போது முதலில் அவர்களைக் கைது செய்துவிட்டால் முக்கால் பகுதி விஷயம் வெளியாகிவிடும். இல்லையா?” என்றார் மகிழ்ச்சி பொங்க. “நான் தேவர் மீது நல்ல நம்பிக்கையுடையவன்! அவரது அறிவாற்றலையும், நாட்டுப்பற்றையும் பாராட்டுபவன்! இப்படி ஒரு வழக்கு அவர் மீது வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கேள்விப்பட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்தவன் நான்தான்! நல்ல தகவல்களைத் தந்தீர்கள்!” என்று தொடர்ந்து கூறிக் கொண்டே எழுந்தார்! “சரி, விரைவில் உங்களைச் சந்திக்கிறேன், விடை கொடுங்கள்!” என்று கூறினார்.

“நன்றியுடன், நம்பிக்கையுடன் செல்கிறேன்! மாலையில் நானே வந்து சந்திக்கிறேன்” என்று கூறி இடம் விட்டகன்றார் சங்கரய்யர்.

அவர் போனதும், இன்ஸ்பெக்டர் பரபரப்படைந்தார். ஜவான்கள் செயல்படத் தொடங்கினர். போலீஸ் வேன் ஒன்றில் ஏறிக் கொண்டனர் அனைவரும்; வேன் புறப்பட்டது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Empty Re: அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Post by சிவா Wed Dec 15, 2010 9:42 pm

எந்த இன்ஸ்பெக்டர் கஜபதி நாயுடு, தேவரின் வீட்டுக்குள் புகுந்து, சூடா கதறிக் கதறி அழும்படியாக சந்தேகத்தின் பேரில் தேவரைக் கைது செய்து கொண்டு போனாரோ, அதே இன்ஸ்பெக்டரே, சிறை வாயிலுக்குச் சென்று தேவரை வரவேற்றார். இன்ஸ்பெக்டரின் சார்பில் ஒருவர் தேவருக்கு மாலையிட்டார். பெரிய மனிதர் என்ற பட்டியலிலே இடத்தைப் பதித்துக் கொண்டிருந்த பலரும் கூடவந்து மாலையிட்டு மரியாதை தெரிவித்துக் கொண்டார்கள்.

கைது செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டவுடனேயே, காரியுமிழ்ந்து, “சீ, இப்படிப்பட்ட மோசக்கரனா அவன்?” என்று நாலு பேர் காதில் விழும்படியாகவே பேசியவர்கள்கூட, “தேவர் நிரபராதி - குற்றவாளி அவர் அல்லர்” என்று போலீசுத் தரப்பில் கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டவுடனேயே, விழுந்தோடிச் சென்று வரவேற்றனர், அதுவும் முன்னணியிலிருந்து.

உயர்வும் சரி, தாழ்வும் சரி, அது ஒருவனை அடைவதற்கு, அவனவன் மேற்கொள்ளும் காரியங்களே காரணங்களாயமைந்துவிடும் என்று குறள் கூறும் கருத்துக்குக் கோணம் கோணம் அலசி ஆராய்ந்து அரிய பல கட்டுரைகளை தேசவீரன் பத்திரிகையிலே எழுதியிருக்கிறார் தேவர். என்றாலும் தனக்கு இப்படியொரு அபவாதம் ஏற்படும்படியாகத்தான் என்ன செய்தோம் என்பதை, சிறையிலடைப்பட்டிருந்த நேரத்திலே யோசனை செய்ததுண்டு. தன்னுடைய கூடாநட்பே கூட இதற்குக் காரணமாக இருக்குமோ என்றுகூட அவர் யோசித்திருக்கிறார். பணியாற்றுவதற்குக்கூட, பொருத்தமான மனமொத்த இடமாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தமது பணிபுரியும் இடத்தைத் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளாததாலேயே இந்த இடர்களைச்சந்திக்க நேர்ந்ததென்றும் முடிவு செய்து வைத்திருந்தார். அந்த முடிவை, அவர் மேற்கொண்டபோதுதான், சிறை அதிகாரிகள், அவரிடம் வந்து அவர் குற்றமற்றவர் என்று போலீஸ் தரப்பு கருதுவதாகவும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று, கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் கேட்டால், தேவருக்கே அதிர்ச்சி ஏற்படுமென்றும் கூறி, சிறைக்கதவைத் திறந்துவிட்டு விட்டார்கள்.

சுதந்திரப் பறவையாகப் புறப்பட்ட தேவர், சிறைவாயிலுக்கு வரும்போதே அவர் வியப்படையும் அளவுக்குப் பெருங்கூட்டமே கூடியிருந்தது. இன்ஸ்பெக்டரே தன்னை வரவேற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சூடாவுக்குக்கூட முதலிடம் கிடைக்கவில்லை. நெருக்கி முன்னேறிய கூட்டம் சூடாவைப் பின்னே தள்ளிவிட்டது. என்றாலும், தன் கண் முன்னாலேயே தேவருக்கு ஏற்படுத்தப்படும் சிறப்பை, பெருமையாக அவள் மனம் ஏற்றுக் கொண்டுவிட்டதால், தான் பின்னாலே தள்ளப்படுவதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஆயினும், ஒருவாறாக வான் பிளக்க எழுந்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையே வரவேற்பு வைபவம் கோலாகலமாக முடிவுற்ற பிறகு, தேவரின் கண்கள் தேடுவதைப் போலவே, இன்ஸ்பெக்டரின் கண்களும் அலைந்து திரியத்தான் செய்தன சூடாவைத் தேடி!

கைது செய்யப்படும்போது ஏற்றியது போலவே, இப்போதும் தேவர் போலீஸ் வானிலேயே ஏற்றப்பட்டார். அப்போதுõன் இன்ஸ்பெக்டரின் பார்வையில் சூடா புக முடிந்தது. மிகுந்த ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கோடு, அவரையும் அழைத்து வண்டியிலேற்றி தேவரின் அருகே அமர வைத்தார் இன்ஸ்பெக்டர். “மன்னித்து விடுங்களம்மா. உங்களை அன்று பிரித்த நான், மீண்டும் சேர்த்து வைக்கப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்றார்.

சூடா, விழிகளாலேயே நன்றி தெரிவித்தாள் இன்ஸ்பெக்டருக்கு. ஆயினும் தேவரும் சூடாவும் பிரிந்தவர் கூடினால் என்ற சொற்றொடருக்கு இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளையெல்லாம் கடந்து இலக்கியம் படைத்துக் கொண்டார்கள், உணர்ச்சிகளால்!

போலீஸ் வான் தேவரின் வீடு சேர்ந்ததும், இன்ஸ்பெக்டர் முதலில் இறங்கி, தேவரையும் சூடாவையும் இறங்க உதவி செய்து உள்ளே அழைத்துச் சென்றார்.

தேவர் வீட்டுக்குள் நுழையும்போது அது எந்த அளவு அலங்கோலத்தோடு இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் கொண்டு, அந்த அளவுக்கு சூடா பாடுபட்டிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டார்.
உள்ளே சென்று அமர்ந்ததும், இன்ஸ்பெக்டர், தேவரிடம், “இந்த அம்மாள் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியினால்தான் இந்த வழக்கு திசை மாறிப் போயிற்று” என்று கூறிவிட்டு, சூடாவைப் பார்த்தார்.

சூடா நாணமடைந்து, தலை கவிழ்ந்தவள், தான் அங்கே இருப்பது நாகரிகமாகாது என்றெண்ணிக் கொண்டு, உடனே புறப்பட்டாள். அதற்குள், ஒவ்வொருவராக தேவருக்கு வாழ்த்துக் கூறுதல் என்ற பெயரை வைத்துக் கொண்டு அங்கே வரத் தொடங்கினார்கள். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.

“அன்றைக்குச் சங்கரய்யர் வந்து விவரங்களைக் கூறியதும் எனக்கே அதிர்ச்சியேற்பட்டுவிட்டது மிஸ்டர் தேவர்! உடனே ஓடினேன் பேட்டையின் பக்கம். ஆறுமுகத்தையும் வரதனையும் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியுமாகையால், முதலில் ஆறுமுகத்தை வளைத்துப் பிடித்தேன். குடிகாரனை நம்பியதால் அவருக்கு இவ்வளவு பெரிய கேடு வந்து சூழ்ந்தது என்று அவர் என்னிடம் சொல்லும்போது எனக்கே சிரிப்பு வரத்தான் செய்தது. நிரம்பிய போதையிலிருந்த ஆறுமுகத்திடம், கொள்ளையில் சம்பந்தப்பட்ட கல்யாண சாஸ்திரியும், ஜாமீன்தார் செல்லப்பரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொய்யைச் சொன்னவுடனேயே, அவன் உண்மைகளையெல்லாம் கக்கத் தொடங்கிவிட்டான்.

கல்யாண சாஸ்திரி அவனை நேரில் வந்து அழைத்து, அவனுக்கு ராஜயோகம் வந்திருப்பதாயும், இனி அவன் அந்த இழிந்த வாழ்க்கை வாழத் தேவையில்லையென்றும் சொல்லி, கோயில் தொடர்பான எல்லா விவரங்களையும் கூறினாராம்.

கோயில் குருக்கள், கோயிலின் கருவறையைக் களவாட தடையெதுவும் இல்லாத அளவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டாராம். அவரது துணை ஆசிரியர்கள் இருவரும் செல்ல வேண்டியது என்றும், அவர்களுக்குத் துணையாக ஆறுமுகம் செல்ல வேண்டியது என்றும் ஏற்பாடாம்.

கொள்ளையடிக்கப் பட்டுவரும் பொருள்களில் பெரும் பகுதியும் ஜமீன்தார் செல்லப்பருக்கும், கல்யாண சாஸ்திரிக்கும் என்று ஏற்பாடாம். ஒருபகுதி துணையாசிரியர்களுக்கும், இன்னொரு பகுதி ஆறுமுகத்துக்கும் என்று பேசிக் கொண்டார்களாம்.

பழகிப் போன பழக்கம் ஆகையால், ஆறுமுகம் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறான். என்றாலும், துணை போவதைவிட, தனக்குத் துணையாக அவர்கள் வந்தால் போதுமென்றும் கேட்டுக் கொண்டானாம். ஆறுமுகத்தின் நாணயத்தில் இருந்த நம்பிக்கைக் குறைவால், அவன் மற்றவர்களுக்குத் துணைபோனால் போதும் என்று சொல்லி விட்டாராம் சாஸ்திரி.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜமீன்தார் செல்லப்பரும் அங்கு வந்தாராம். ஏதாவது வழக்குக் கிழக்கு என்று வந்தால், தன் சொத்து முழுவதையும் செலவு செய்தாவது அவனைக் காப்பாற்றுவதாகச் சொன்னாராம்.

இன்னும் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், நாளை நடுநிசிக்கு வந்து தன்னை அழைத்துப் போவதாகவும் கூறிவிட்டு இருவரும் புறப்பட்டுப் போய்விட்டார்களாம்.

ஆறுமுகத்துக்கு உண்மையிலேயே ராஜயோகம்தான். அவனுக்குத் தரப்பட்ட பங்கினை, அவன் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருந்ததால், இவ்வளவு பெரிய சதியினை நடத்திக் கொண்டிருந்த சாஸ்திரியே, அதற்கும் ஒரு வழி செய்து வைத்திருந்தார். குறிப்பிட்டபடியே, குருக்கள், கோயில் பணியாட்கள் இவர்களது உதவியோடு கொள்ளை நடைபெற்று முடிந்து, சாஸ்திரியின் வீட்டிலேயே பங்கு பிரிக்கப்பட்டுவிட்டது.

ஜெமீன்தார் செல்லப்பர் புறப்பட்டுப் போன பின்பு, அவனுக்குச் சில நகைகளைக் கொடுத்தாராம் சாஸ்திரி. அதனை அவன் கையில் வைத்துக் கொண்டு புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாஸ்திரி கேட்டாராம். “ஆறுமுகம், இவைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறாய்” என்று. ஏதோ ஒரு தொகையை அவனுக்குப் புரிந்த அளவுச் சொல்லி இருக்கிறான்.

“இரண்டாயிரமா? ஆறுமுகம்! மூவாயிரம் ரூபாய் ரொக்கமாய்த் தருகிறேன். நகைகள் உன்னிடம் இருக்க வேண்டாம். தொல்லைகள் ஏதாவது வந்துவிடும்” என்று சொன்னாராம் சாஸ்திரியார். அவனுக்கும் அது சரியென்றே பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு குடிபோதை வேறு ஏற்றப்பட்டிருந்தது.

மூவாயிரத்தையும் பெற்றுக் கொண்டு, அவன் புறப்பட்டு வீடு புறப்படும்போது வேறு, அவனுக்கு அளவுக்கும் மீறி மது வழங்கப்பட்டிருக்கிறது.

பணத்தைக் கையில் கொடுத்து, துணையாக யாரையாவது அனுப்பட்டுமா என்று சாஸ்திரி கேட்டிருக்கிறார். துணையா, ஆறுமுகத்துக்கா என்று கேட்டுவிட்டு, தள்ளாடிக் கொண்டே புறப்பட்டிருக்கிறான் ஆறுமுகம்.

“அவன் வீடு சென்று சேர்வதற்குள், சாஸ்திரியின் முன் ஏற்பாட்டின்படி ரூபாய் ஆறுமுகத்திடமிருந்தே பறிக்கப்பட்டு விட்டது என்பதை அவனேகூட அறியவில்லையாம்!” என்று சொல்லிவிட்டுச் சிறிது நிறுத்தினார்.

யார் யாரோ ஏழெட்டுப் பேர் அங்கே வந்திருந்தார்கள். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, வீட்டின் கதவைத் தாழிட்டுக் கொண்டுவந்து மீண்டும் அமர்ந்தார் தேவர்.

‘நல்லதொரு நாவலுக்கு வேண்டிய கருவையே சாஸ்திரி உருவாக்கி இருக்கிறாரே’ என்று கேட்டுவிட்டு, ‘அப்புறம்’ என்று கேட்டு நிறுத்தினார் தேவர்.

சிறிது தூரத்தில் சூடாவும் வழிந்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தாள். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.

“பல கொள்ளைகளுக்கும், கொடுமைகளுக்கும் இந்தப் போதை பயன்பட்டிருக்கிறது. எனவேதான் ஆறுமுகம் மறுநாள் விடிந்ததுமே தன் பணம் கொள்ளை போனதை உணர்ந்திருக்கிறான். தெரிந்து கொண்டதும் ஓடிப்போய் சாஸ்திரியிடம் சொன்னதும், “பரவாயில்லை ஆறுமுகம்! பணம்கூட உன்னிடத்திலிருக்க வேண்டாம் என்று பகவான் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. போனால் போட்டும். உனக்கு ஏதாவது எப்போதாவது செலவுக்கு வேண்டுமென்றால் என்னிடம் வந்து கேட்டு வாங்கிக் கொள் என்று கூறி வெறுங்கையுடன் அனுப்பிவிட்டாலும், எப்போதாவது ஒரு ஐந்து பத்து என்று சென்று கேட்டு வாங்கிக் கொள்வானாம்.

“சில நாட்களுக்கு முன்பு, தலையங்கம் எழுதுவது எதைப் பற்றி என்ற தகராறு ஏற்பட்டவுடன் அவர் மூளை சுறுசுறுப்படைந்திருக்கிறது. கொள்ளைப் பழியை உங்கள் மீதுபோட்டு, ஒழித்துக் கட்டிவிட்டால், தங்கை சூடாவால் ஏற்பட்ட அவமானமும் தீரும், தனக்கும் ஒரு தொல்லை விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். உடனேயே செயல்படத் தொடங்கி, ஆறுமுகத்தைக் கூப்பிட்டனுப்பி, தன் திட்டத்தைக் கூறியிருக்கிறார். காசுதானே அவனுக்குப் பிரதானம்! மற்றெல்லாவற்றையும் இனி அந்த அம்மாவே சொல்வார்! என்று கூறி விட்டு இவர்களுக்குத் தெரியாததை மட்டும் நான் கூறிவிடுகிறேன் என்று கூறவிட்டு, தொடர்ந்து, ஆறுமுகத்தை ஒரு வியாபாரியாக வேடம் போடச் செய்து, செல்லப்பர் வீட்டுக்கே அழைத்துப் போனார் சாஸ்திரி. அங்கே மாறுவேடத்தில் அவனைக் கண்டதும் அடையாளம் புரிந்துகொள்ள முடியவில்லை ஜெமீன்தாருக்கு” என்று கூறினார்.

தொடர்ந்து ஜெமீன்தார் வீட்டில் நடந்தவைகளையும், சூடா வீட்டில் கொண்டு போய் நாகப்பதக்கம் சேர்க்கப்பட்டது பற்றியும், அதை அறிந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மைக்கண்ணன், அதை அபகரித்துச் சென்றதும், அதைக் காட்டி சாஸ்திரியிடம் அவன் பணம் பறிக்க முயன்றது பற்றியும் கூறிவிட்டு, “மைக்கண்ணன் கெட்டிக்காரன்! போலீஸ்காரனாக இருந்தானல்லவா! கற்பனையாகவே சொல்லியிருக்கிறான். கொள்ளையிட்ட ஆறுமுகத்தைக் கைது செய்துவிட்டதனால், அவன் உண்மைகளை முன்னதாகவே தெரிவிக்கத்தான் போலீஸ் தடயத்தையே எடுத்துக் கொண்டு வந்து காட்டுவதாகவும் கூறி, உடனே ஊரைவிட்டு ஓடிப் போய் விடும்படிச் சொல்லி, அவன் பங்குக்கு வேறு ஐயாயிரம் பறித்துக் கொண்டு போயிருக்கிறான் என்று விளக்கினார்.

பெருமூச்சை உதிர்த்துவிட்டு, இன்ஸ்பெக்டரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் தேவர். இன்ஸ்பெக்டர் செல்லப்பரும், சாஸ்திரியாரும், துணை ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். பல நகைகள் மீட்கப் பட்டுவிட்டன. வெளியூருக்கும் கொஞ்சம் போய்விட்டிருக்கிறது. இரண்டொரு நாட்களில் அவையும் மீட்கப்படும் என்று கூறிவிட்டு, மைக்கண்ணன் நாகப் பதக்கத்துடன் தலைமறைவாகி விட்டிருப்பதையும் சொன்னார்.

“ரொம்பவும் நன்றி இன்ஸ்பெக்டர்?” என்று எழுந்து இன்ஸ்பெக்டரைக் கட்டித் தழுவிக் கொண்டார். “நீங்கள் எவ்வளவோ பேச வேண்டியிருக்கும். நான் போய் வருகிறேன். அப்புறம் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் கஜபதி நாயுடு. வாயில் வரையில் வந்து வழியனுப்பிவிட்டு, மீண்ட தேவர், சூடாவை வாரி அப்படியே தழுவிக்கொண்டார்.

பல நிமிடங்கள் வரையில் ஒருவர் வாயிலிருந்தும் ஒரு சொல்கூட வெளிப்படவில்லை. வெகுநேரத்துக்குப் பிறகு தேவர், ‘ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறாய் சூடா! உன்னால்தான் நான் மீண்டேன் என்று கூற வேண்டும்!’ என்று சொல்லிவிட்டு இதழோடு இதழ் சேர்த்தார்.

“இல்லவே இல்லை. பங்கஜத்தின் கணவர் சங்கரய்யரால்தான்!” என்றாள் அவள். “சரி, இருவராலும்தான்” என்றார் தேவர்.

வெளியே கதவு தட்டப்பட்டது. சூடா சென்று கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சங்கரய்யரும் பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

மரியாதையுடன் வணங்கி, வரவேற்று, “நாங்களே அங்கு வர இருந்தோம். அதற்குள் நீங்களே...” என்றாள் சூடா. அதற்குள் வாசல் பக்கம் வந்துவிட்ட தேவரும் கைகூப்பி வணங்கி, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

“நன்றியாவது ஒண்ணாவது தேவர்! ஏதோ போறாத வேளை இப்படியொரு அபகீர்த்தி ஏற்பட்டது. மனசில் வைச்சுக்க வேண்டாம். இதோ பாருங்க. சாஸ்திரியே கழுவாய் தேடிண்டுட்டான். அவன் சொத்தையெல்லாம் சூடாவுக்கு எழுதி வைச்சுட்டான். நானே எழுதினேன். ‘தேசவீரன்’ பத்திரிகைக்கூட இனி நீங்களே நடத்தணுமாம்! உங்க இஷ்டம் போல இருந்திடலாமாம்!” என்று சொல்லி, வைத்திருந்ததை தேவர் முன் நீட்டினார் வக்கீல்.

தேவரின் கண்களில் நீர் மல்கி நின்றன. “ஆண்டவன் தான் அவ்வப்போது அவதாரங்கள் எடுப்பார் என்று புராணங்கள் போதிக்கின்றன. மனிதர்கள்கூட அவதாரமெடுப்பதுண்டா?” என்று வாய்விட்டே கேட்டார் தேவர் வக்கீலைப் பார்த்து.

“புரிகிறது! சாஸ்திரிகூட இப்படியெல்லாம் ஆக முடியுமா? சூடாவுக்குச் சொத்து தருவதா என்றுதானே கேட்கிறீர்கள்! பாருங்களேன்! வயதான காலத்தில் அந்த ஜெமீன்தாரின் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போகணும்! எல்லாம் கிரகதோஷம்தான்!” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“எங்கேயும் போகக் கூடாது! இன்று எங்க ஆத்திலேயே சாப்பிட்டுத்தான் போகணும்” என்று குறுக்கே வந்து நின்றாள் சூடா. தேவரின் முகமும் மலர்ந்தது.

விருந்து தயாராகிக் கொண்டிருந்தது, அடுக்களையில். அதுபோலவே, மனித அவதாரங்களைப் பற்றிய கற்பனையும் சமைந்து கொண்டிருந்தது தேவரின் இதய உலையில்.

முற்றும்

‘திராவிட நாடு’ 1945


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் தசாவதாரம் - Page 2 Empty Re: அறிஞர் அண்ணாவின் தசாவதாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum