Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் அழித்தாய் இறைவா?
4 posters
Page 1 of 1
ஏன் அழித்தாய் இறைவா?
(இது நடந்துமுடிந்த கோரத்தை எண்ணிப்பாடியது. சில மாதங்களின்முன்பு. பகிர்ந்து கொள்கிறேன்)
என்ன கோபம் எங்கள் மீது இறைவா
ஏது பிழை நாம் இழைத்தோம் இறைவா
சொன்ன மொழி செந்தமிழே தவறா- இதில்
சொல்லரிய குற்ற மென்ன தலைவா
வானமது ஏறி நடந்தோமா - உங்கள்
வானுலகில் தீது புரிந்தோமா
ஆனதொரு கோபுரங்கள் ஏதும்
அழித்திடித்து மோசம் விழைத்தோமா
வேலெடுத்து சூலம் பறித்தோமா -அங்கு
விளையாட உடுக்கை எடுத்தோமா
தேவர்களை கேலி புரிந்தோமா ஒரு
தேவமகள் கூந்தல் இழுத்தோமா
தாவி முகில்ஏறி நடந்தோமா - சிவன்
தலையிலுள்ள நிலவில் நடந்தோமா
ஏனிழைத்த குற்றமென்ன இறைவா நீ
எம் குலத்தை வேரறுத்தல் சரியா
ஏன் புரிந்தாய் சுடலை ஆடும் சிவனே உன
திருநடத்தால் செத்தது எம்இனமே
ஊன் உருகி சாம்பல் மேடு ஆச்சு- இனி
ஓடிவந்து அள்ளி மேனி பூசு
படைத்தவனோ பிரம்மன் பார்க்கவில்லை - கடல்
பள்ளிகொண்டான் எழுந்து காக்க வில்லை
அழித்துவிட்டாய் நீயும் தமிழ் மண்ணை. இப்போ
கொடுத்தென்ன புத்தனுக்கு மண்ணை
கால் மிதித்து கச்சை யுடுத்தாயே வேங்கை
தோல் உடுத்த கோபம் இன்னும் உண்டோ
வேல் விழித்த உமை கொடுத்த பாகா -உன்
கால் உதைக்க நாம் கிடைத்ததேனோ
பாழுமுயிர் தானெடுக்க எண்ணின் அது
பறித்தெடுக்க இது உனக்கு வழியா
ஊழி நடமாடி உயிர் கொள்ள - உனக்
கொருமுறையும் இது விடுத்து இலையா
ஆழிசூழ் உலகறியா கோரம் - மனம்
அஞ்சும் இதை சொல்வதற்கு யாரும்
மாளும் உடல் பட்ட வதை கொஞ்சம் -அல்ல
மரணம் என்ற பெயர் இதற்குமல்ல
பிள்ளைபசி என்றழு மோர் தாய்க்கு -அவள்
பின்னிருந்து குண்டு வெடித்ததிரும்
தள்ளிஒரு பிணம் நடந்து வீழும் -அதன்
தலைசிதறி துண்டெனவே ஓடும்
மெய்சிலிர்த்து அச்சம் உச்சம் ஏறும் அய்யோ
மிரண்டு பிள்ளை நீர்விடுத்துசோரும்
கையில்லாம லொருவர் ஓடக் காணும் - கண்
காட்சி கண்டு பஞ்சடைந்து போகும்
நெஞ்சிடித்து வேகமாக நோகும் -உள்ள
நினைவழிந்து கால்கள் சோர்ந்து சாயும்
கண்ணெதிரே கணவன் உயிர்போகும் -உடன்
கதறியழ குரல் அழிந்துபோகும்
துள்ளியோடி தப்பு என்று கூறும் மனம்
மெல்ல எழ வீடிடிந்து வீழும்
உள்ளிருந்து பிள்ளை அம்மா என்கும் அதில்
வீழ்ந்தசுவர் கால்நசிக்கக் கதறும்
பெண்குழந்தை இன்னொருத்தி ஓடும் முற்றம்
போக ஒரு குண்டு அயல் வீழும்
கண்ணெதிரே புகையெழுந்து மூடும் காணக்
கண்டதுண்டமாகி உடல் சிதறும்
பங்கருக்குள் ஒர்குழந்தை ஓடும் கண்
பாத்திருக்க மண்இழுத்து மூடும்
சிங்க ராச படையும் சேர்ந்த நாடும்
சேர்ந்து மண்ணைமூட பூமி தின்னும்
இத்தனையும் பார்த்து அவள் ஓட உடன்
எங்கிருந்தோ சிங்கமகன் வந்து
குத்தியவள் நெஞ்சு கிழித்தோட செங்
குருதிவழிந் தே நிலத்தில் வீழ்வாள்
பாதிஉயிர் போக யாதும் எண்ணி அவள்
பரிதவித்து உடல்தகித்து நோவாள்
வெயி லெறித்து நிலம்கொதிக்க தாகம் வந்து
விட்டமீதி உயிரெடுத்துப் போகும்
பீதி கொண்டு கத்தும்குரல் கேட்டு செத்த
பிணங்களோடு பிணங்களாக சேர்ந்து
போகுமுயிர் காக்கவென்று வீழ்ந்த - பலர்
பிழைக்கவில்லை குழி பறித்து போட்டான்
பேய் பிடித்த சிங்களமும் - நட்பு
பேசிவந்த அன்னியரும் சேர்ந்து
கை பிடித்து யுத்தவெறியரோடு
கத்தி கொண்டு எம்மை வெட்டி கொல்ல
வாரி இரத்தம் உண்ண விட்டதென்னநீ
வைத்திருக்கும் கண்ணுக்கான தென்ன
தீயிறைக்கும் கண் மறைத்து பாய்ந்து - சதி
செய்ததுண்டோ கங்கை தேசமெண்ணி
கவிபடிக்க குற்றம் கண்ட கீரன் தன்னை
எரித்துவிட்டாய் ஏதும் எண்ணமுன்னே
கொடிய புத்தஅரசு எம்மைக் கொல்ல
கூடி நின்று வேடிக்கையா பார்த்தாய்
முத்தெனவே வீரமுடன் விளைந்த பெரும்
சொத்தினையே இழந்து விட்டோம் இறைவா
ரத்தம் எல்லாம் போனபின்பு தமிழன் - வெறும்
வைக்கல் பொம்மைதானே என்ற நினைவா
இல்லை ஈழமைந்தர் புதைந்தாலும் அவர்
எண்ணியது போவதில்லை என்றும்
வில்லை விட்டு ஏகும் அம்புபோல - இவர்
வீறுகொண்டெழுந்து செயல் கண்டார்
அல்லன போய் ஆதவனாய் ஒளிர்வான் ஈழ
அரசுவரும் ஆட்சியிலே அமர்வான்
வெல்லவென பிறந்தவனாம் விதியே உன்
வினைமுடித்து ஓடு தமிழ்வெல்வான்
என்ன கோபம் எங்கள் மீது இறைவா
ஏது பிழை நாம் இழைத்தோம் இறைவா
சொன்ன மொழி செந்தமிழே தவறா- இதில்
சொல்லரிய குற்ற மென்ன தலைவா
வானமது ஏறி நடந்தோமா - உங்கள்
வானுலகில் தீது புரிந்தோமா
ஆனதொரு கோபுரங்கள் ஏதும்
அழித்திடித்து மோசம் விழைத்தோமா
வேலெடுத்து சூலம் பறித்தோமா -அங்கு
விளையாட உடுக்கை எடுத்தோமா
தேவர்களை கேலி புரிந்தோமா ஒரு
தேவமகள் கூந்தல் இழுத்தோமா
தாவி முகில்ஏறி நடந்தோமா - சிவன்
தலையிலுள்ள நிலவில் நடந்தோமா
ஏனிழைத்த குற்றமென்ன இறைவா நீ
எம் குலத்தை வேரறுத்தல் சரியா
ஏன் புரிந்தாய் சுடலை ஆடும் சிவனே உன
திருநடத்தால் செத்தது எம்இனமே
ஊன் உருகி சாம்பல் மேடு ஆச்சு- இனி
ஓடிவந்து அள்ளி மேனி பூசு
படைத்தவனோ பிரம்மன் பார்க்கவில்லை - கடல்
பள்ளிகொண்டான் எழுந்து காக்க வில்லை
அழித்துவிட்டாய் நீயும் தமிழ் மண்ணை. இப்போ
கொடுத்தென்ன புத்தனுக்கு மண்ணை
கால் மிதித்து கச்சை யுடுத்தாயே வேங்கை
தோல் உடுத்த கோபம் இன்னும் உண்டோ
வேல் விழித்த உமை கொடுத்த பாகா -உன்
கால் உதைக்க நாம் கிடைத்ததேனோ
பாழுமுயிர் தானெடுக்க எண்ணின் அது
பறித்தெடுக்க இது உனக்கு வழியா
ஊழி நடமாடி உயிர் கொள்ள - உனக்
கொருமுறையும் இது விடுத்து இலையா
ஆழிசூழ் உலகறியா கோரம் - மனம்
அஞ்சும் இதை சொல்வதற்கு யாரும்
மாளும் உடல் பட்ட வதை கொஞ்சம் -அல்ல
மரணம் என்ற பெயர் இதற்குமல்ல
பிள்ளைபசி என்றழு மோர் தாய்க்கு -அவள்
பின்னிருந்து குண்டு வெடித்ததிரும்
தள்ளிஒரு பிணம் நடந்து வீழும் -அதன்
தலைசிதறி துண்டெனவே ஓடும்
மெய்சிலிர்த்து அச்சம் உச்சம் ஏறும் அய்யோ
மிரண்டு பிள்ளை நீர்விடுத்துசோரும்
கையில்லாம லொருவர் ஓடக் காணும் - கண்
காட்சி கண்டு பஞ்சடைந்து போகும்
நெஞ்சிடித்து வேகமாக நோகும் -உள்ள
நினைவழிந்து கால்கள் சோர்ந்து சாயும்
கண்ணெதிரே கணவன் உயிர்போகும் -உடன்
கதறியழ குரல் அழிந்துபோகும்
துள்ளியோடி தப்பு என்று கூறும் மனம்
மெல்ல எழ வீடிடிந்து வீழும்
உள்ளிருந்து பிள்ளை அம்மா என்கும் அதில்
வீழ்ந்தசுவர் கால்நசிக்கக் கதறும்
பெண்குழந்தை இன்னொருத்தி ஓடும் முற்றம்
போக ஒரு குண்டு அயல் வீழும்
கண்ணெதிரே புகையெழுந்து மூடும் காணக்
கண்டதுண்டமாகி உடல் சிதறும்
பங்கருக்குள் ஒர்குழந்தை ஓடும் கண்
பாத்திருக்க மண்இழுத்து மூடும்
சிங்க ராச படையும் சேர்ந்த நாடும்
சேர்ந்து மண்ணைமூட பூமி தின்னும்
இத்தனையும் பார்த்து அவள் ஓட உடன்
எங்கிருந்தோ சிங்கமகன் வந்து
குத்தியவள் நெஞ்சு கிழித்தோட செங்
குருதிவழிந் தே நிலத்தில் வீழ்வாள்
பாதிஉயிர் போக யாதும் எண்ணி அவள்
பரிதவித்து உடல்தகித்து நோவாள்
வெயி லெறித்து நிலம்கொதிக்க தாகம் வந்து
விட்டமீதி உயிரெடுத்துப் போகும்
பீதி கொண்டு கத்தும்குரல் கேட்டு செத்த
பிணங்களோடு பிணங்களாக சேர்ந்து
போகுமுயிர் காக்கவென்று வீழ்ந்த - பலர்
பிழைக்கவில்லை குழி பறித்து போட்டான்
பேய் பிடித்த சிங்களமும் - நட்பு
பேசிவந்த அன்னியரும் சேர்ந்து
கை பிடித்து யுத்தவெறியரோடு
கத்தி கொண்டு எம்மை வெட்டி கொல்ல
வாரி இரத்தம் உண்ண விட்டதென்னநீ
வைத்திருக்கும் கண்ணுக்கான தென்ன
தீயிறைக்கும் கண் மறைத்து பாய்ந்து - சதி
செய்ததுண்டோ கங்கை தேசமெண்ணி
கவிபடிக்க குற்றம் கண்ட கீரன் தன்னை
எரித்துவிட்டாய் ஏதும் எண்ணமுன்னே
கொடிய புத்தஅரசு எம்மைக் கொல்ல
கூடி நின்று வேடிக்கையா பார்த்தாய்
முத்தெனவே வீரமுடன் விளைந்த பெரும்
சொத்தினையே இழந்து விட்டோம் இறைவா
ரத்தம் எல்லாம் போனபின்பு தமிழன் - வெறும்
வைக்கல் பொம்மைதானே என்ற நினைவா
இல்லை ஈழமைந்தர் புதைந்தாலும் அவர்
எண்ணியது போவதில்லை என்றும்
வில்லை விட்டு ஏகும் அம்புபோல - இவர்
வீறுகொண்டெழுந்து செயல் கண்டார்
அல்லன போய் ஆதவனாய் ஒளிர்வான் ஈழ
அரசுவரும் ஆட்சியிலே அமர்வான்
வெல்லவென பிறந்தவனாம் விதியே உன்
வினைமுடித்து ஓடு தமிழ்வெல்வான்
Last edited by kirikasan on Wed Dec 15, 2010 2:43 pm; edited 1 time in total
Re: ஏன் அழித்தாய் இறைவா?
நல்லவர்களை ஈசன் கைவிடுவதில்லை வெற்றி கொஞ்சம் தாமதமாக கிடைக்கும் ஆனால் மிக பெரியதாக இருக்கும்
Re: ஏன் அழித்தாய் இறைவா?
ஒவ்வொரு பத்தியாக எடுத்து ஒட்டினேன்..இவை நன்றாக இருக்கிறது என்று கூற.. இறுதியில் எல்லா பத்திகளும் இருக்கின்றன் அந்த ஒட்டிய பகுதியில்.. என்ன சொல்ல... கண்ணீர் வடிய கவிதை மூலம் அந்தக் கொடுமையைக் கண்டுகொண்டு.. இருக்கிறேன்..
Re: ஏன் அழித்தாய் இறைவா?
உங்களுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் மிக அருமை. இது தான் உங்களின் தனிச் சிறப்பு அன்புடன் கவிதைக்காக கந்தவேல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|