புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி
Page 1 of 1 •
- eegaraiviswaஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
நேர்காணல்: சேக்கிழான்
ஹிந்து முன்னணியின் நிறுவனர் திரு.ராம.கோபாலன், ஹிந்துக்களின் ஒற்றுமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாளைய பிரச்சாரகர். ஹிந்துக்களின் தன்மானத்தைக் காக்க, 1980 ல் தமிழகத்தில் ஹிந்து முன்னணியைத் துவக்கினார் திரு. ராம.கோபாலன்.
தன் மீதான கொலைவெறித் தாக்குதலில் (1982) தெய்வாதீனமாக உயிர் தப்பிய ராம.கோபாலன், 80 வயதைத் தாண்டிய நிலையிலும் தளராது, மாநிலத்தின் பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு மாதமாக, சட்டசபை தேர்தலில் ஹிந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று விளக்கி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் பிரசாரம் செய்து வருகிறார். மிகவும் மும்முரமான பிரசாரத்தில் இருந்த ராம.கோபாலன், தமிழ் ஹிந்து நேயர்களுக்கு (தொலைபேசி வழியாக) அளித்த பிரத்யேக நேர்காணல் இது…
கேள்வி: இத்தேர்தலில் ஹிந்துக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன்?
பதில்: இந்தத் தேர்தலில் தமிழக ஹிந்துக்கள் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி பிரசாரம் செய்கிறது. ஏனெனில், இதுவரை பாஜக தவிர வேறு எந்தக் கட்சியும் ஹிந்துக்களின் நலன் காப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளுவதற்காக அவர்களைக் கவர வாக்குறுதிகளை அள்ளி வீசும் எந்தக் கட்சியும் ஹிந்துக்களின் கோரிக்கைகளை மதிக்கவில்லை. ஹிந்துக்களை கிள்ளுக்கீரையாகக் கருதும் இந்த போலி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு படிப்பினை அளிக்கும் விதமாக, ஹிந்துக்களின் கோரிக்கைகளுக்கு தேர்தல் அறிக்கையில் இடம் அளித்துள்ள பாஜகவுக்கே தமிழக ஹிந்துக்கள் வாக்களிக்க வேண்டும்.
கேள்வி: இவ்வாறு கூறுவது மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதாகாதா? பாஜக மீது மதவாத முத்திரை பதிய இது காரணம் ஆகாதா?
பதில்: இந்தக் கேள்வியை ஹிந்துக்களைப் பார்த்துத்தான் அரசியல்வாதிகள் கேட்கின்றனர். உண்மையில் இந்தப் பிரச்னையைத் துவக்கி வைத்தவர்களே மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் தான். திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன.
திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது; அதிமுக கூட்டணியில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. பெயரிலேயே மதத்தைக் கொண்டுள்ள இக்கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்றும், பாஜகவை மதவாதி என்றும் இரு கழகங்களும் பிரசாரம் செய்வது வினோதம்.
குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக தலைவி ஜெயலலிதா, கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு மானிய உதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு, குமரியில் கட்டுப்பாடின்றி சர்ச் கட்ட அனுமதி உள்ளிட்ட பல அபாயகரமான கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக ஜெயலலிதா அறிவித்தார்.
அதே நாளில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார். மதமாற்றத் தடைச் சட்டம் வராது என்றும் அவர் கூறி இருக்கிறார். சிறுபான்மை மாணவர்களுக்கு கடனுதவி வழங்குவதாக அவர் பெருமிதத்துடன் முழங்கினார்.
இந்த காட்சிகளுக்கு மாறாக, அனைத்து மாணவர்களையும் மத வேறுபாடின்றி சமமாகக் கருத வேண்டும்; பொருளாதார அடிப்படையில் பரிசீலித்து அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரி, மாநிலம் முழுவதும் பிரசார யாத்திரை சென்றார் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் மதவாதி; கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் வாக்குகளுக்காக தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களைப் பிளவுபடுத்தும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மதச்சார்பற்றவர்கள்! என்ன முட்டாள்தனம் இது?
கேள்வி: எனினும் இத்தேர்தல் ஊழலுக்கு எதிரான போராட்டமாக உள்ளது. கருணாநிதியின் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலை உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்: உண்மைதான். பல லட்சம் கோடி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டியவர் தான். ஆனால், கருணாநிதிக்கு மாற்றாக முன்னிற்கும் ஜெயலலிதாவும் ஊழல் கறை படியாதவர் அல்லவே? ஊழல் குறித்துப் பேச இரு கழகங்களுக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. தவிர, பாஜக மட்டுமே தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. இரு கழகங்களுக்கும் மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும்; இம்முறை பாஜகவுக்கு வாக்களித்து இரு கழகங்களுக்கும் தமிழக மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.
கேள்வி: இருப்பினும் ஜெயலலிதா கடவுள் நம்பிக்கை உடையவர். கருணாநிதியின் நாத்திகவாத பிரசாரத்திற்கு அவர்தானே சரியான பதிலடியாக இருப்பார்?
பதில்: கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் இந்துக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாக ஆகிவிடாது. ஜெயலலிதா கோயிலுக்குப் போவது அவரது வேண்டுதலுக்காக. கடவுள் நம்பிக்கையுள்ள ஜெயலலிதா ஆட்சியில் தான் ஹிந்துக்களின் பிரதான மடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சுவாமிகள் பொய்யான வழக்கில் (விரைவில் இது நிரூபணமாகும்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலி பகுத்தறிவுவாதியான கருணாநிதி கூட செய்யத் துணியாத காரியம் அது. இதனை ஹிந்துக்கள் மறக்க முடியாது. தவிர ஜெயலலிதா உறுதியான மனநிலை கொண்டவரல்ல என்பதை தனது நடவடிக்கைகளில் நிரூபித்திருக்கிறார். தனது சுயநலனுக்காக எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்காதவர் அவர்.
உண்மையில், கருணாநிதி ஹிந்துக்களின் விரோதி என்றால், ஜெயலலிதா ஹிந்துக்களின் துரோகி. விரோதியைவிட துரோகி மோசமானவர். எனவே தான், ஹிந்துக்களின் வாக்கு விரோதிக்கும் இல்லை; துரோகிக்கும் இல்லை என்று கூறுகிறோம்.
ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கக் கூடிய, ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்கக் கூடிய, ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்பதே ஹிந்து முன்னணியின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் தான், பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுகிறேன்.
தவிர, பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்; கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும்;
ஹிந்துக்களின் கோயில்கள் அனைத்தும் அரசின்கட்டுபாட்டிலிருந்துவிடுவிக்கப்பட்டு, ஆன்மிகப் பெரியோர் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்;
ஹிந்துக்களின் புனித யாத்திரைகளுக்கும் அரசு உதவி வழங்கவேண்டும்.ஆகிய கோரிக்கைகளை ஹிந்து முன்னணி பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது. இக்கோரிக்கைகளை பாஜக மட்டுமே ஏற்று தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. ஹிந்துக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் ஏமாற்றும் இரு கழகங்களுக்கும் வாக்களிக்காது, ஹிந்துக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக அறிவித்துள்ள பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.
கேள்வி: கைலாய யாத்திரைக்கும் நேபாள யாத்திரைக்கும் செல்லும் ஹிந்துக்களின் புனிதப்பயண செலவுகளை அரசு ஏற்கும் என்று ஜெயலலிதா வாக்களித்திருக்கிறாரே?
பதில்: ஹிந்துக்களைப் பொருத்த வரை, கைலாய யாத்திரையும் நேபாள யாத்திரையும் மட்டுமே புனித யாத்திரைகளல்ல. ஹிந்துக்களுக்கு எண்ணற்ற புனிதத் தலங்கள் நாடு முழுவதும் உள்ளன. இஸ்லாமியர் ஹஜ் யாத்திரை செல்வது போலவோ, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வது (இது சமீபகாலமாகத்தான் பிரமாதப்படுத்தப்படுகிறது) போலவோ, ஹிந்துக்களின் புனித யாத்திரையை சில இடங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து தல யாத்திரைகளுக்கும் ஹிந்துக்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்.
மாறாக, புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹிந்துக்களிடம் வரி வசூலிப்பதில்தான் நமது அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சபரிமலை செல்லும் பக்தர்களிடம் வசூலிக்கும் பலகோடி பணத்தில் சிறிதளவு செலவு செய்திருந்தால் கூட புல்மேடு அசம்பாவிதம் நேரிட்டிருக்காது.
ஜெயலலிதாவின் அறிவிப்பு ஒப்புக்கு கூறியிருப்பதாகவே உள்ளது. இது ஏமாற்று வித்தை; இதை நம்ப முடியாது. இது வரையிலும் ஜெயலலிதா ஹிந்துக்களுக்கு எந்த நன்மையையும் செய்ததில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்ததாக கூறிய அதே ஜெயலலிதா, இன்று அதற்கு எதிராகப் பேசுகிறார்.
திமுக, அதிமுக- இரு கட்சிகளுக்குமே சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றன. அவர்களுக்கு பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் வாக்குகள் பற்றிய கவலையில்லை. மக்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று இரு கூறாகப் பிரிக்கும் கட்சிகள் இவை. ஹிந்துக்களின் வாக்குக்களை நாடாத கட்சிகளுக்கு ஹிந்துக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? எனவே, நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.
கேள்வி: இரு கழகங்களின் வலிமை முன்னால் பாஜக எடுபடுமா?
பதில்: மாற்றம் விரும்புபவர்கள், ஜெயிக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தமிழகம் கடந்த 1967 முதல் கழகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சிந்தனைப்போக்கு கொண்ட திராவிட இயக்கங்களால் தமிழகத்தின் இரண்டு தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக தேசிய சிந்தனை கொண்ட கட்சி தமிழகத்தில் வலுவானதாக மாற வேண்டும். இந்தத் தேர்தல் அதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
இரு கழகங்களும் வெறுப்பின் அடிப்படையில் அரசியல் நடத்தி தமிழகத்தின் அரசியல் நாகரிகத்தை நாசமாக்கி விட்டார்கள். இரு கட்சிகளும் விஞ்ஞான ரீதியான ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. இரு கட்சிகளுமே சிறுபான்மை வாக்குகளுக்காக நாட்டுநலனை விலை பேசும் கட்சிகள் தான். எனவே இரு கட்சிகளுமே புறக்கணிக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் பணபலம், அரசியல் பலம், கூட்டணி பலத்தைக் கண்டு மிரண்டு விடக் கூடாது. நாட்டை நேசிக்கும் நல்லவர்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டுமானால், அதிகார பலத்தையும் அநியாய பலத்தையும் மீறிப் போராடித்தான் ஆக வேண்டும். தேர்தல் களத்தில் நாட்டுநலனுக்காகப் போராடும் பாஜகவுக்கு வாக்களிப்பது தமிழ் ஹிந்துக்களின் கடமை.
ஹிந்து முன்னணியின் நிறுவனர் திரு.ராம.கோபாலன், ஹிந்துக்களின் ஒற்றுமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாளைய பிரச்சாரகர். ஹிந்துக்களின் தன்மானத்தைக் காக்க, 1980 ல் தமிழகத்தில் ஹிந்து முன்னணியைத் துவக்கினார் திரு. ராம.கோபாலன்.
தன் மீதான கொலைவெறித் தாக்குதலில் (1982) தெய்வாதீனமாக உயிர் தப்பிய ராம.கோபாலன், 80 வயதைத் தாண்டிய நிலையிலும் தளராது, மாநிலத்தின் பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு மாதமாக, சட்டசபை தேர்தலில் ஹிந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று விளக்கி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் பிரசாரம் செய்து வருகிறார். மிகவும் மும்முரமான பிரசாரத்தில் இருந்த ராம.கோபாலன், தமிழ் ஹிந்து நேயர்களுக்கு (தொலைபேசி வழியாக) அளித்த பிரத்யேக நேர்காணல் இது…
கேள்வி: இத்தேர்தலில் ஹிந்துக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன்?
பதில்: இந்தத் தேர்தலில் தமிழக ஹிந்துக்கள் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி பிரசாரம் செய்கிறது. ஏனெனில், இதுவரை பாஜக தவிர வேறு எந்தக் கட்சியும் ஹிந்துக்களின் நலன் காப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளுவதற்காக அவர்களைக் கவர வாக்குறுதிகளை அள்ளி வீசும் எந்தக் கட்சியும் ஹிந்துக்களின் கோரிக்கைகளை மதிக்கவில்லை. ஹிந்துக்களை கிள்ளுக்கீரையாகக் கருதும் இந்த போலி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு படிப்பினை அளிக்கும் விதமாக, ஹிந்துக்களின் கோரிக்கைகளுக்கு தேர்தல் அறிக்கையில் இடம் அளித்துள்ள பாஜகவுக்கே தமிழக ஹிந்துக்கள் வாக்களிக்க வேண்டும்.
கேள்வி: இவ்வாறு கூறுவது மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதாகாதா? பாஜக மீது மதவாத முத்திரை பதிய இது காரணம் ஆகாதா?
பதில்: இந்தக் கேள்வியை ஹிந்துக்களைப் பார்த்துத்தான் அரசியல்வாதிகள் கேட்கின்றனர். உண்மையில் இந்தப் பிரச்னையைத் துவக்கி வைத்தவர்களே மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் தான். திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன.
திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது; அதிமுக கூட்டணியில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. பெயரிலேயே மதத்தைக் கொண்டுள்ள இக்கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்றும், பாஜகவை மதவாதி என்றும் இரு கழகங்களும் பிரசாரம் செய்வது வினோதம்.
குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக தலைவி ஜெயலலிதா, கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு மானிய உதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு, குமரியில் கட்டுப்பாடின்றி சர்ச் கட்ட அனுமதி உள்ளிட்ட பல அபாயகரமான கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக ஜெயலலிதா அறிவித்தார்.
அதே நாளில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார். மதமாற்றத் தடைச் சட்டம் வராது என்றும் அவர் கூறி இருக்கிறார். சிறுபான்மை மாணவர்களுக்கு கடனுதவி வழங்குவதாக அவர் பெருமிதத்துடன் முழங்கினார்.
இந்த காட்சிகளுக்கு மாறாக, அனைத்து மாணவர்களையும் மத வேறுபாடின்றி சமமாகக் கருத வேண்டும்; பொருளாதார அடிப்படையில் பரிசீலித்து அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரி, மாநிலம் முழுவதும் பிரசார யாத்திரை சென்றார் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் மதவாதி; கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் வாக்குகளுக்காக தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களைப் பிளவுபடுத்தும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மதச்சார்பற்றவர்கள்! என்ன முட்டாள்தனம் இது?
கேள்வி: எனினும் இத்தேர்தல் ஊழலுக்கு எதிரான போராட்டமாக உள்ளது. கருணாநிதியின் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலை உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்: உண்மைதான். பல லட்சம் கோடி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டியவர் தான். ஆனால், கருணாநிதிக்கு மாற்றாக முன்னிற்கும் ஜெயலலிதாவும் ஊழல் கறை படியாதவர் அல்லவே? ஊழல் குறித்துப் பேச இரு கழகங்களுக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. தவிர, பாஜக மட்டுமே தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. இரு கழகங்களுக்கும் மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும்; இம்முறை பாஜகவுக்கு வாக்களித்து இரு கழகங்களுக்கும் தமிழக மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.
கேள்வி: இருப்பினும் ஜெயலலிதா கடவுள் நம்பிக்கை உடையவர். கருணாநிதியின் நாத்திகவாத பிரசாரத்திற்கு அவர்தானே சரியான பதிலடியாக இருப்பார்?
பதில்: கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் இந்துக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாக ஆகிவிடாது. ஜெயலலிதா கோயிலுக்குப் போவது அவரது வேண்டுதலுக்காக. கடவுள் நம்பிக்கையுள்ள ஜெயலலிதா ஆட்சியில் தான் ஹிந்துக்களின் பிரதான மடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சுவாமிகள் பொய்யான வழக்கில் (விரைவில் இது நிரூபணமாகும்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலி பகுத்தறிவுவாதியான கருணாநிதி கூட செய்யத் துணியாத காரியம் அது. இதனை ஹிந்துக்கள் மறக்க முடியாது. தவிர ஜெயலலிதா உறுதியான மனநிலை கொண்டவரல்ல என்பதை தனது நடவடிக்கைகளில் நிரூபித்திருக்கிறார். தனது சுயநலனுக்காக எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்காதவர் அவர்.
உண்மையில், கருணாநிதி ஹிந்துக்களின் விரோதி என்றால், ஜெயலலிதா ஹிந்துக்களின் துரோகி. விரோதியைவிட துரோகி மோசமானவர். எனவே தான், ஹிந்துக்களின் வாக்கு விரோதிக்கும் இல்லை; துரோகிக்கும் இல்லை என்று கூறுகிறோம்.
ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கக் கூடிய, ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்கக் கூடிய, ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்பதே ஹிந்து முன்னணியின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் தான், பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுகிறேன்.
தவிர, பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்; கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும்;
ஹிந்துக்களின் கோயில்கள் அனைத்தும் அரசின்கட்டுபாட்டிலிருந்துவிடுவிக்கப்பட்டு, ஆன்மிகப் பெரியோர் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்;
ஹிந்துக்களின் புனித யாத்திரைகளுக்கும் அரசு உதவி வழங்கவேண்டும்.ஆகிய கோரிக்கைகளை ஹிந்து முன்னணி பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது. இக்கோரிக்கைகளை பாஜக மட்டுமே ஏற்று தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. ஹிந்துக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் ஏமாற்றும் இரு கழகங்களுக்கும் வாக்களிக்காது, ஹிந்துக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக அறிவித்துள்ள பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.
கேள்வி: கைலாய யாத்திரைக்கும் நேபாள யாத்திரைக்கும் செல்லும் ஹிந்துக்களின் புனிதப்பயண செலவுகளை அரசு ஏற்கும் என்று ஜெயலலிதா வாக்களித்திருக்கிறாரே?
பதில்: ஹிந்துக்களைப் பொருத்த வரை, கைலாய யாத்திரையும் நேபாள யாத்திரையும் மட்டுமே புனித யாத்திரைகளல்ல. ஹிந்துக்களுக்கு எண்ணற்ற புனிதத் தலங்கள் நாடு முழுவதும் உள்ளன. இஸ்லாமியர் ஹஜ் யாத்திரை செல்வது போலவோ, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வது (இது சமீபகாலமாகத்தான் பிரமாதப்படுத்தப்படுகிறது) போலவோ, ஹிந்துக்களின் புனித யாத்திரையை சில இடங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து தல யாத்திரைகளுக்கும் ஹிந்துக்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்.
மாறாக, புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹிந்துக்களிடம் வரி வசூலிப்பதில்தான் நமது அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சபரிமலை செல்லும் பக்தர்களிடம் வசூலிக்கும் பலகோடி பணத்தில் சிறிதளவு செலவு செய்திருந்தால் கூட புல்மேடு அசம்பாவிதம் நேரிட்டிருக்காது.
ஜெயலலிதாவின் அறிவிப்பு ஒப்புக்கு கூறியிருப்பதாகவே உள்ளது. இது ஏமாற்று வித்தை; இதை நம்ப முடியாது. இது வரையிலும் ஜெயலலிதா ஹிந்துக்களுக்கு எந்த நன்மையையும் செய்ததில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்ததாக கூறிய அதே ஜெயலலிதா, இன்று அதற்கு எதிராகப் பேசுகிறார்.
திமுக, அதிமுக- இரு கட்சிகளுக்குமே சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றன. அவர்களுக்கு பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் வாக்குகள் பற்றிய கவலையில்லை. மக்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று இரு கூறாகப் பிரிக்கும் கட்சிகள் இவை. ஹிந்துக்களின் வாக்குக்களை நாடாத கட்சிகளுக்கு ஹிந்துக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? எனவே, நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.
கேள்வி: இரு கழகங்களின் வலிமை முன்னால் பாஜக எடுபடுமா?
பதில்: மாற்றம் விரும்புபவர்கள், ஜெயிக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தமிழகம் கடந்த 1967 முதல் கழகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சிந்தனைப்போக்கு கொண்ட திராவிட இயக்கங்களால் தமிழகத்தின் இரண்டு தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக தேசிய சிந்தனை கொண்ட கட்சி தமிழகத்தில் வலுவானதாக மாற வேண்டும். இந்தத் தேர்தல் அதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
இரு கழகங்களும் வெறுப்பின் அடிப்படையில் அரசியல் நடத்தி தமிழகத்தின் அரசியல் நாகரிகத்தை நாசமாக்கி விட்டார்கள். இரு கட்சிகளும் விஞ்ஞான ரீதியான ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. இரு கட்சிகளுமே சிறுபான்மை வாக்குகளுக்காக நாட்டுநலனை விலை பேசும் கட்சிகள் தான். எனவே இரு கட்சிகளுமே புறக்கணிக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் பணபலம், அரசியல் பலம், கூட்டணி பலத்தைக் கண்டு மிரண்டு விடக் கூடாது. நாட்டை நேசிக்கும் நல்லவர்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டுமானால், அதிகார பலத்தையும் அநியாய பலத்தையும் மீறிப் போராடித்தான் ஆக வேண்டும். தேர்தல் களத்தில் நாட்டுநலனுக்காகப் போராடும் பாஜகவுக்கு வாக்களிப்பது தமிழ் ஹிந்துக்களின் கடமை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|