புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
75 Posts - 40%
T.N.Balasubramanian
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Harriz
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_lcapகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_voting_barகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 12, 2010 10:23 am

First topic message reminder :

காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Kagirahoo+1

இன்று வலைத்தளத்தில் கண்ட ஒரு செய்தி. இல்லை.இல்லை.. பரவலாகப் பல வலைத்தளங்களில் பல்வேறு தலைப்பின் கீழ் உலா வந்து கொண்டிருக்கின்ற செய்தி இது. உங்கள் பார்வைக்காக.

சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ்பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Clip_image001

ஒருவர்ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன
அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப் பட்டுள்ளது.

இதைத்தான் நம் நவரச நாயகன் அன்றே படம்போட்டுக் கூறிவிட்டாரே என்று சிந்திப்பது புரிகிறது.

அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து விட்டனர்.இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரொம்பப்பழசு என்று ஜீரிஜ் பல்கலைக் கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம் இன்று ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு யார் செப்புவது?

கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய் தம்பதிகளுக்குவருகிறது? அதற்கு என்ன காரணம்? ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே இந்தமனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் மருத்துவமும் பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.

சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைல் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.

இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக்குகுளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே புணர்தல் என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர்.
ஆதலால் இருத்தல் என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ஊடல் என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோகடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள் தலைவி. அதனால் இரங்கல் என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு பிரிதல் என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.

பாலைத் திணையில் அமைந்த பாடல்கள்பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது.மனவியல் வல்லுநராகத் திகழ்ந்த தமிழ்ர்கள் நோய், நோக்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன என்பதை இலக்கியம் படைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் பசலை நோய் என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பசலை என்பது உணவு,உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன்நமக்கே கூட சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி,மேனி இளைத்து, கருத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர் சங்கத்தமிழர்.நம் மேனி கருத்து இளைப்பதற்கும் காதலரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால்அவர்களது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய்.மற்றது உண்டு, உறங்கிக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரைஅனுபவத்தவருக்கு நன்கு புரியும். இதற்கு நீர் இறைக்காத கேணியின் நீரின் மீது படர்ந்துஇருக்கும் பாசியைப் போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.

“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விழுவுழி பரத்த லானே

சரி காதல் என்பது நோயா? என்று புருவங்களைஉயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்து இரண்டும் ஆவது காதல். அதனால்தான்திருவள்ளுவரும்

நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய்.இதைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார். சான்றுக்கு, “காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்று தலைவி கூறுவது. குறள் இதோ,

“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“

மற்றொன்று, “ அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார். இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது“ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை படம் பிடிப்பாள். குறள் பின்வருவது.

“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது“

மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது இன்னும் சுவையானது. விளக்கு மறைவினைப் பார்த்துக்கவியக் காத்திருக்கிற இருளைப் போல, தலைவனுடைய தழுவதலின் சோர்வைப் பார்த்து என் உடலைத்தழுவ, பசலைக் காத்திருக்கிறது என்று தலைவி வருந்துவது. இந்தக் குறளையும் பார்க்க.
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

அதுமட்டுமா? புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த)தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே என்றெல்லாம் தலைவியைப் புலம்பவைத்ததென்றால் அது நோய்தானே? இது நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல். இன்னும் சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான புலம்பலை பாருங்கள். என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது என்று ஒருத்தி “ உயிர்த்தவ சிறிது; காமமோ பெரிது” , “அது கொள் தோழி காம நோயே என்று ஒருத்தி, நோய் தந்தனனே தோழிஎன்று ஒருத்தி, வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்றுஇந்நோய்என்று ஒருத்தி அதாவதுவெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்ததாம்,

“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி என்று பெருங்கதைக் கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? உள்ள நோய், வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆனனா நோய், ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய், என்றெல்லாம் கடுமையாயகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.

ஒரு சங்கத்தலைவி கிட்டத்தட்ட ஹிஸ்டீரியாபோலவே அலறிக்கொண்டு, தலையில் முட்டிக்கொண்டு, மார்பில் அடித்துக் கொண்டு, ஐயோ! எந்நோயைஅறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே என்று புலம்பிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்துரூபமாகக்காட்ட முடியுமா என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.

“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கடவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும்உளர்க்கே

மெல்ல மெல்ல உயிரைப் போக்கும் மன நோய்இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன்தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி விடும் நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.
இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை,
மருந்துபிறி தில்லையவர்மணந்த மார்பே என்று கூறியுள்ளது அன்றே தமிழ் மருத்துவ ஆய்வு அன்றே. இதை இன்றுதான்நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக்கழகம்.

உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்குவெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ்இலக்கியம். இதோ,

“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டுமாம்..

பிரிந்தோர் புணர்க்கும்பண்பின்
மருந்தும் உண்டோ

பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறுஉண்டா என்கிறது இச்சங்கப்பாடல். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Clip_image002

காற்றுக்குகூடஇடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு).

இன்னும் கூறப்போனால் சங்கத்தமிழன் காதலுக்குமுக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உறக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடன்.. எம் ஆதித்தமிழன் சிறந்த மன நல மருத்துவனே..

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல... நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம்.




நன்றி குமுதம் ஹெல்த்.

ஆதிரா.



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Empty

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 12, 2010 12:07 pm

ராஜா wrote:
அது பழைய போட்டோ , அதுதான் அப்படி ...... காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 755837[/quote]

நல்லா பண்றாங்கய்யா காமெடி ஹையோ ஹய்யோ

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 12, 2010 12:15 pm

காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 56funny-pictures16


ஆமாம் அது அவர் பழைய போட்டோ இதுதான் அவருடைய புது போட்டோ..!



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 12, 2010 12:34 pm

Tamilzhan wrote:காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 56funny-pictures16


ஆமாம் அது அவர் பழைய போட்டோ இதுதான் அவருடைய புது போட்டோ..!

ஓ அவரா(ளா) ராஜாகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 168300 காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 168300 காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 168300



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 12:34 pm

Tamilzhan wrote:காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 56funny-pictures16


ஆமாம் அது அவர் பழைய போட்டோ இதுதான் அவருடைய புது போட்டோ..!
தல இத எங்க பிடிச்சிங்க , ஜூமைராவுலயா ??? காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 755837 காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 705463

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:39 pm

பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.




காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 1:02 pm

அப்புகுட்டி wrote:பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.

சியர்ஸ் சியர்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 20, 2010 10:35 pm

அப்புகுட்டி wrote:பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.
மிக்க நன்றி அப்பு.. அரட்டை...ம்ம்ம்ம் கலை சார் வர்ராங்க...



காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Tகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Hகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Iகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Rகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Aகாம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 21, 2010 5:21 am

சிறப்பான தகவலுக்கு நன்றி அக்கா காம நோய்க்குக் கண்கண்ட மருந்து... - Page 3 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 21, 2010 6:38 am

நன்றி அக்கா

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 6:38 pm

அப்புகுட்டி wrote:பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக