புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:24 pm

எல்லாம் அவள் செயல்


கண் இழந்த உறக்கம்
மனம் தொலைத்த சந்தோஷம்
ஊன் இழந்த உடல்
எல்லாம் அவள் செயல்

அவள் தரிசனத்துக்காய் அலையவிட்டு
தரிசனம் தரும் நேரம் ஏங்கவிட்டு
ஏக்கத்திலே பெருமூச்சு எழுவது
எல்லாம் அவள் செயல்

கறுப்பு தோலை வெள்ளையாக்க
சோப்பு போட்டு போராடுவதும்
எண்ணை தலையில்
தண்ணீர் போட்டு
படியா சிகையை
படிய வைப்பதும்
எல்லாம் அவள் செயல்

இன்று அவளோடு
பேசியே தீர்வதென்று
வீர முடிவு எடுப்பதும்
அவளை பார்த்த மாத்திரத்தில்
வேர்த்து விறுவிறுத்து
வெடவெடத்து போவதும்
எல்லாம் அவள் செயல்

சிந்தையில் சிறகடித்து
நெஞ்சத்தில் நிரம்பி நின்று
மஞ்சத்தில் கனவு தருவது
எல்லாம் அவள் செயல்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:25 pm

காதலணை இட்டுவிடு


வெள்ளைத் தாளாக வெறுமையாய் இருந்த
என் உள்ளப் புத்தகத்தில் உன் முதல்பார்வைமூலம்
முன்னுரை கொடுத்தவளே!
இனி என்னுரை நானெழுத உன் புன்னகை வேண்டாமா?

ஆவலுடன் நான் எழுதும் காதல் புத்தகத்தில்
உன்னழகே பொதிந்த உட்பொருளாகிக்கொண்டதனால்
அப் பொருளடக்கத்தில்
பெண்ணே என் உயிரடக்கம்.

முன்னுரையும் கொடுத்தாய்,
புன்னகையும் கொடுத்துவிட்டாய்,
போதாதென்று இன்னும் வருவேன்.
நிறைவினிலே முடிவுரை எழுத……
தடைகள் பல தாண்டியேனும் நான் வருவேன்.

ஆம் என்ற ஒற்றை வார்த்தை
வாய்மொழியில் இல்லாவிடினும்
உன் விழிமொழியிலேனும் கொடுத்துவிடு.

ஏனெனில்
உன் நீள்நுதலில் ஒளிர்திலகம்
எந்தனுக்கோர் புலர்பகலோன்.
புதிர்போடும் விழிகளிலே
சதிராடும் பார்வைகளே
புசித்துவிடப் பகலுணவு.

மாலைக் கறுக்கலிலே
உன் நினைவுப் பெருக்கல்களால்
கிறுக்குகின்ற கவிதைகள் என் “டீ டைம்”.

இதமான இரவுகளில்
வருடிச் செல்லுமுன்
நினைவுகள் என் இதயராகம்,
கனவுகளே நிலாத் தூக்கம்.

இவ்வாறு என் ஒவ்வொரு நாளும்
உன் நினைவுகளில் உதயமாகி
கனவுகளில் அஸ்தமிக்கிறது.

ஆதலால்
“நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”

என்றுரைத்த பாரதியை
நன்றுணர்ந்த புதுமைப் பெண்ணே……
ஒன்றுரைத்து என் மனதை வென்றிடத்தான் வேண்டாமோ?

கன்றினைத் தாய் பிரிந்திடுமோ?
மென்றிடப்பால் நீர் விஞ்சிடுமோ?
ஒன்றித்தவோரிதயம் அருகிச் செல்ல மற்றிதயம் கருகிடுமோ?
அன்றி மாற்றிதயம் பொருந்திடுமோ?

ஊற்றெடுத்த காதலது காட்டாற்றாய் மாறி
கரையைக் கடக்கமுன்பே
காதலியே காதலணை இட்டுவிடு.
உன் இதயமதில் இக்காதலனை நட்டுவிடு.

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:26 pm

இதுதான் காதலா?



இதயம் உன்பெயர் சொல்கிறதே
இதுதான் காதலா?
இளமை உன்பின் செல்கிறதே
இதுதான் காதலா?

கண்தூங்கினால் கனவுக்குள் நீயடி
இதுதான் காதலா?
கண்தேடினால் என்முன்னே நீயடி
இதுதான் காதலா?

ஆயிரம் கோடியில் பெண்ணினம் பார்க்கிறேன்
உன் முகம் தெரியுதடி இதுதான் காதலா?
கொலுசொலி கேட்கையில் உன் வரவு அறிகிறேன்
என் ஜீவன் நாடுதடி இதுதான் காதலா?

உன் கூந்தல் பூவொன்று மண்மீது சாய்ந்தாலே
என் கரம் தாங்குதடி இதுதான் காதலா?
நீ பதித்த தடத்தினிலே என் பாதம் வைத்தேனே
என் மேனி சுடுகுதடி இதுதான் காதலா?

'நீயின்றி நானில்லை நீதானே என் ஜீவன்
என் சுவாசம் சொல்கிறதே"
இரவும் தூங்கவே தலையணை சாய்ந்தேனே
நீ தூக்கத்தை பறித்தாயே இதுதான் காதலா?

நிலவுடன் பேசவே தனிமையில் நடந்தேனே
நீ நிழலிலே வந்தாயே இதுதான் காதலா?
தென்றலை காண்கையில் வார்த்தைகள் பேசவே
கவிதையாக மாறியதே இதுதான் காதலா?

நெஞ்சம் வாடினால் உன்நினைவுகள் சேரவே
மனசும் துளிர்த்ததே இதுதான் காதலா?
'வாழ்ந்தாலும் உன்னோடு பிரிந்தாலும் மண்ணோடு
என் ஜீவன் சொல்கிறதே"

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:26 pm

பொய்



ஊடகங்கள் உண்மையை
விலத்தி உரைகளை விதைக்க

மெய்யினைப் புறந்தள்ளி
பொய்யுக்குள் ஒழியுமா ?

கற்பகதருவுக்கீழ் கள் பருகின்
பாலொன்று வாதிடப் பழமொழியுதவுமோ ?

நட்பினை நினைப்பதைவிட
துன்பவியல் தந்தவர்களை

அன்பர்களை அநுட்டிப்பதை விட
வன்முறையாளர்களையும்

உறவுகளை உரித்தாக்குவதை விட
துரோகிகளை நிறுத்துவதிலும்

தன்மானம் தக்க வைத்தவர்களை விட
அவமானந்தந்தவர்களை

பேராதரவு தந்தவர்களை விட
அலட்சியம் செய்தவர்களை

வேதம் போதித்தவர்களை விட
விஷமாய் தூஷித்தவர்களையும்

பெரியார் சுயமரியாதையைவிட
அவமரியாதை செய்தவர்களையும் தான்

அகிம்சை அகிலத்தைவிட
இன்றைய இம்சையாளர்களையும் தானே

மனத்தில் வித்திட்டு
நினைவு நாட்டுகிறது
நல்லன எல்லாம் நழுவிட
பொய்யன யாவும் புகுந்து
மெய்க்குள் விளையாடும் மேதினி

புரட்டுகளும் புண் தரப்போகும்
கண்ணாடி ஓடுகளுக்கும் நடுவில்

அந்த வெள்ளித் தாம்பாளங்கள் விலைபோகும்
பொய்யாகிப் போகும் பொழுதுகளோடு நாமும்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:27 pm

காதல்

எமது
காதல் சந்திப்பில்
கண்ணிமைப்பும் கூட
ஒரு நிமிடத் தடங்கலே!

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:27 pm

ரசனை..!


உரையாடலின் இடையே
சிணுங்கினாய்
நீ

இதுவரை கேட்டிடாத
இன்னிசையை
கேட்டது போல்
ரசித்து
என் மனம்...

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:28 pm

நீ காதலிக்கிறாயா?

உனக்கு இப்போது
என்மீது காதல் இருக்கிறதா?
சந்தேகம் வருகிறது எனக்கு!!!!!

சட்டென சில மாற்றங்களை காட்டுகிறாய்!!!
உண்மை புரியாமல் கண்கள்
சந்தத்துடன் கண்ணீருக்கு
விடைகொடுக்கின்றன

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:28 pm

அழுக்கு சமுதாயம்


அந்திவானம் மொதுவாக
அழுதுகொண்டிருந்தது!

இரண்டு கம்புகளின் நடுவே
இணைக்கப்பட்ட
கயிற்றின் மேல்
சின்ன மலர் ஒன்று
சித்திரம் வரைந்து கொண்டிருந்தது!

சைக்கிள் வளையத்துள்
சாகசச் சரித்திரம்
செய்து கொண்டிருந்தது.

கயிற்றின் கீழ் தாய்
தாளத்தோடு
கயிற்றின் மேல் மகள்
சோகத்தோடு
வயலின் வரப்பைப்போல
நடுவில் வறுமைக்கோடு
கூட்டம்
கூடி நின்று
ஆட்டம் பார்த்தது

அவ்வப்போது
விரித்திருந்த துண்டில்
விழுந்தன
சில
சில்லறைக் காசுகள்.

கயிற்றில் இருந்து
இறங்கி
கூட்டத்தை நோக்கி
வாட்டத்தோடு
தட்டை நீட்டினாள்
அந்த பிஞ்சு மலர்.

கூடி நின்ற கூட்டத்தில்
பல கால்கள்
பின்னோக்கிச் சென்றன
கைதட்டி ரசித்த
கூட்டம்
கைவிட்டுப் போவதை
அவளால் தாங்கமுடியவில்லை

திடீரென்று
கூட்டத்தின் நடுவில்
ஒருவன் நுழைந்தான்
எச்சில் சோற்றோடு
பழைய தட்டோடு....

நிமிர்ந்து பார்த்தான்
சிறுமியின் தட்டு
சில்லறையின்றி
சிரித்தது

தயக்கம் ஏதும் இன்றி
தன் தட்டைப்
பார்த்தான்
எச்சில் சோறும்
ஏழெட்டு ரூபாயும்
இருந்தது....
ஏழெட்டு சில்லறையையும்
ஏழைச் சிறுமியின்
தட்டில்,,
போட்டுவிட்டு அந்த
பிச்சைக்காரன்
அழகாய் சிரித்தவாறு
அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சிரிப்பில்
ஆயிரம்
அர்த்தங்கள்
தெரிந்தன என்பதெல்லாம் பொய்!
ஒரே ஒரு
அர்த்தம் தெரிந்தது
"இந்த அழுக்கு சமுதாயம்
எப்போது அழகாகப் போகிறது"

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:29 pm

ஒரு சொந்தம்

நீ எங்கே ..! ....?
நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா?

அன்பே!
என்னை தனிமைப்படுத்தி
அகன்று விடாதே!
உன்னைத்தவிர
வேறொருவரையும்
நான் நேசிக்கவில்லை

ஏனெனில்
எனக்கு இருக்கும்
ஒரு சொந்தம் நீ தானே.

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:29 pm

தீக்குள் விழுந்த மலர்



மனசோ
கொடிவிட்ட துயரத்தில்
ஆனாலும்
கற்றுக்கொண்ட அனுபவத்தால்
இறுகிக்கொண்ட மனத் தெளிவு
எனக்குள் பற்றிக்கொண்ட
தீயதை அணைக்கத் துடித்தது

இருந்தாலும்
காலக் கணக்குகளில்
எனக்குள் காத்திருந்த
இருட் குகைக்குள்
ஒளித் தெறிப்புத் தோன்றியதோ?
என்று தடுமாறியதுண்டு

இவன் மின்னல் சிரிப்புகளால்
மனசுக்குள் மாயக் கனவுகள்
பல விந்தைகளை தோற்றி
புரிய வைத்தபோது
சிறகுகள் விரித்து
தாவிப் பறந்த
நினைவுகளால்
என்னை
நான் தொலைத்துவிட்டு
காதல் பெருவெளிக்குள்
சிக்கித் தவித்தேன்

அப்போதெல்லாம்
இவன்
தரிசனம் ஒன்றிற்காக
ஐன்னலோரம்
கன்னம் தாங்கி நின்று
கை வியர்த்த பொழுதுகள்
இன்றும் என் இதயத்துள்
ஓலப் பெருக்கெடுக்கும்
கடலாக ஓங்கிக் குரலெழுப்பி
மேலெழுந்து கீழ் விழுகின்றன

காதல் கனிந்தபோது
கரம்கோர்த்து நடைபயின்ற
பொழுதுகள் எத்தனை?
அவன் மோகத்துன்
நான் சிக்குண்ட பொழுதெல்லாம்
நம்பிக்கைப் பயிரதை
என் மனசுக்குள் விதைத்தான்
மனம்கொண்ட மான் நானோ
அவன் பசிக்கு இரையானேன்.

துணைவனாவான் என்று
துணிந்த நினைவுகளோடு
தடுமாறித் தடுமாறிக் கேட்டேன்
துணிவில்லை
என்னைச் சுமக்கவென்று
காரணம் பல கூறி
தூர விலகியதால்
தீக்குள் விழுந்த மலராகத்
துடித்தேன்

காத்திருந்தே
கனவுகளைத் தாங்கிய
என் எண்ணக் குவியல்கள்
மணல் கயிறாக அறுந்து
விழுந்தபோது
உயிர்ச் சுனைக்குள்
எண்ணங்கள் வற்றிவிட்டன

வாடிவிட்ட பயிராகினேன்
கண்கள் மாரியாகி
போராடிப் போராடியே
ஒரு நீண்ட பயணக் களைப்பில்
பேசா மௌனத்தோடு
தீக்குள் விழுந்த மலராக
இவன் நினைவுகளோடு
உயிரைத் தாங்கியபடி
காத்திருக்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக