ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்

4 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down


தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:16 pm

தவிப்பு ....


முகவரி இல்லாமல்
முனங்கிய என்
இதையத்தை இழுத்து
முக்காடிட்டு, முகவரி கொடுத்து
போ... என்றால்
நான்
எந்த முகவரிக்கு போவது ...?
நீ தந்த முகவரிக்கா
அல்லது
தெரியாதே முகவரிக்கா
மகிழ்ச்சி புன்னகை சோகம் :o அதிர்ச்சி 8) சிரி பைத்தியம் :P அழுகை எதிர்ப்பு அநியாயம் ஒன்னும் புரியல
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:17 pm

மானம் தொலைத்து ஒரு வாழ்வா?


தாலியை அறுத்து விட்டோம் - எனினும்
பொட்டை வைத்துக்கொள் என்றது காலம்
வேலியே இல்லாத வேளாண்மைக்குள்
வெள்ளாடுகள் மேய்ச்சலில்

காலி செய்திடயாருளர் என்ற
கங்கணத்தில் துள்ளியபடி
போலிகள் சிலர் கூட
போப்பாண்டவர் வேடமிட்டு

பாலினில் விடத்தைக் கலந்து
பக்குவமாய் ஊட்டியபடி
ஜாலியாய் இருங்கள்
ஐனங்கள் விழிக்கும் வரை

கூலி வாங்கிக் குலம் எரிக்கும்
குருட்டுச் சாமியரே
காலில் வீழ்ந்து நக்கி
கருணை மனுக் கொடுத்தால்

சோலி முடியும் என்ற
சொர்ப்பனத்திலிருந்து மீண்டுவா? - திரி
சூலி அன்னையருள் மீண்டும்
சூழ்ந்து கரம் ஓங்கி

வாலிவதம் புரியும் காலம்
வரலாறாய் மலர்ந்தாலே – தமிழனுக்கு
நீலிக் கண்ணீராளரின் பிடியில் இருந்து
நின்மதியும் வாழ்வுமே!

[img][/img]
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:18 pm

என்னவென்று சொல்வேனடி


என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி

பூவாக இருந்த நான்
காம்பை உதறியதைச்
சொல்லவா?

என் இதயமோ
பள்ளத்தில் பாய்ந்துவிட்டதைச்
சொல்லவா?

கம்பீர சோகமொன்றிற்குள்
இருள் குவியல்கள்
ஒன்று சேர்ந்திருப்பதைச்
சொல்லவா?
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி

எருக்கலம் பூவாக
என் வாழ்வும் பாழாகுமென்று
எப்போதும்
நானோ நினைத்ததில்லை

தாமரையாக நான் மலர்ந்து
வாசமுள்ள மல்லிகையாக
மணம் வீசி நின்றேன்
சூரியப் புலர்வைக் கண்ட
தெருவாக
அந்தத் தெருவே மயங்கும்
தேவதையானேன்

என்னைத் தரிசிப்பதற்காக
தவித்து நிற்கும் இளசுகளில்
இவன் மட்டும் விதிவிலக்கு

இவன் கண்களில் ஊற்றெடுத்த
காதலின் பார்வையோ
சுனாமி அலையாக எழுந்து
என் மனத் தாழ்ப்பாழைப்
பிய்த்தெறிந்து
உட்புகுந்த வேகத்தில்
ஒளியாகக் கலந்து
என்னைத் தீண்டியதால்
எனக்குள் ஒரு பிரளயம்

அதனால் தானோ?
என் உயிர்க் காதல்
உண்மையென்றால்
என் உயிர்
அவன் வசமாக வேண்டும்
என்றான்!

மனமோ மூச்சிரைக்க
விழிப்படலமோ மெல்ல
அவனை நோக்க
என்னைத் தொலைத்து விட்டு
நம்பிக்கைகளைச் சுமந்ததை
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயம் கேளடி

தானாக வந்து
இதயத்தைத் தந்தவன்
இவனோ!
காணாமல் எங்கே? சென்றான்!

கண்ணீரை உகுத்து
கனத்துப் போன விழிகளோ
தினமும் சிரமமாக விரிய
பிரிவின் ஏக்கத்தை
புரிந்து கொண்டேன்

என்னை விட்டுப் பிரிந்து
இவன் சென்றதை
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி

அந்தப் பௌர்ணமி இருளில்
இவனைச் சந்தித்த பின்
என் உடைந்து போன
கை வளையலின்
கண்ணாடித் துண்டுகள்
எப்போதும்
என் சேமிப்பில் இருப்பதை
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி



:suspect: :suspect: :suspect:
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:19 pm

யார் அவள்....... யார் அவள்......!



யார் அவள்....... யார் அவள்......- என்
இதயத்தை ஏற்றவள் யார் அவள்.
வார்த்தைகள் இருந்தும் பேசவில்லை.
வாழ்க்கையின் பாதைக்குப் போகின்றேன்.
கனவில் காட்டும் உன் முகத்தை..
சுவரில் வரைந்து பார்க்கின்றேன்.
சுகமா என்று கேட்கின்றேன்....?

இளமைக் குரலை அறிந்துவிட்டேன்.
இன்பக் கடலில் மூழ்கிவிட்டேன்.
உன்னைக் கண்டா - குயிலும்
கூவப் பழகியது...!
உன்னைக் கண்டா - கிளியும்
பேசப் பழகியது...!
இளமை இனிமை இரண்டும்
என்னைத் தனிமை ஆக்கியது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!

அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன்.
உன்னை எண்ணி அன்னையை
அணைத்துவிட்டேன்.
உன்னைக் கண்டா - மயிலும்
ஆடப் பழகியது.
உன்னைக் கண்டா - அன்னம்
நடை பழகியது.
அழகும் அறிவும் இணைந்து
என்னை அமைதி ஆக்கியது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!

தேவதையை நேரடிப் பார்வையில்
பார்த்து விட்டேன். - அவள்
காலடியில் தரிசனம் ஆகிவிட்டேன்.
உன்னைக் கண்டா - கோயில்ச்சிலைகள்
செதுக்கப் பழகியது.
உன்னைக் கண்டா - புடவைகள்
நெய்யப் பழகியது. - நீ.......
தேவதையா......? தெய்வச்சிலையா......?
என்னைச் சிந்தனையில் மூழ்கவைத்தது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:20 pm

இளமை வசந்தம்
இளமை வசந்தம்
வாடா மலர்களின்
தேன் துளிகள்
இனிமைச் சாரலுக்குள்
இமைகளை நீந்தவைக்கும்
வர்ணம் மாறா வானவில்லை போன்றது

அள்ளி எடுத்தால் ஆனந்தம்
கொடுத்து எடுத்தால் பேரின்பம்
அடுத்து மீண்டும் ஆரம்பம்
அள்ளக் குறைவதில்லை கோடி இன்பம்
இரவுக்குளதான் இங்கே உதயங்கள் ஆரம்பம்

வாசம் போன பூ என்றால்
வண்டுக்கும் அது தெரிவதில்லை
இறக்கை விரிக்கும் பட்டாம் பூச்சிகள்
இருப்பதில்லை ஏனோ ஒரு மலரில்
இதழ்கள் உதிரா மலரானால்
இளமை வசந்தம் என்றும் உன்னிடமே.
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by Tamilzhan Wed Aug 19, 2009 1:20 pm

வாழ்த்துக்கள்....தர்ஷன். மகிழ்ச்சி
உங்கள் இனையதளத்தின் பெயர் என்ன..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:22 pm

மீண்டும் வருமா………..



ஒரு வைகறையின் புலர்வில்
மீண்டும் நான்
குளிர் காய்கிறேன்
ரைகானின் தென்றலில்…

சென்ற வருடத்து
ரமழான் ஊட்டிய
ஆன்மீகப் பயிற்றுவிப்புக்கள்
தெருவோரத்து அநாதையாய்
என் இதய வேக்காட்டில்…

உலகத்து இன்பங்கள்
என் அடிச்சுவடுகளை
மோப்பமிட்டபோது….
ஆறுதல் என நினைத்து
படாடோபத்தை என்
தலையில் தூக்கி வைத்தேன்.

எத்தனை ரமழான்கள்
என் மூச்சுக் காற்றுடன்
கலந்து விட்டன!
பெறப்பட்ட உணர்வுகளோ
உலகத்தின் மடியில்
மீண்டும் மீண்டும்
முருங்கையேறும்
வேதாளமாய்…

என் உணர்வுகளுடன்
அலைமோத காத்துக்கிடக்கிறது
என் வீட்டு முற்றத்தில்
ரமழான்…
அது நன்மைகளின் உறைவிடம்
அமைதியின் இருப்பிடம்
சுவர்க்கத்தின் முகவரி…


என் ஆன்மாவின் அழுகுரல்
இன்னும் என் செவிப்பறைகளில்…
ஈமானிய வரலாறு எழுத
மீண்டும் அசை போடுகிறது
என் பேனாமுனை…
என் சிந்தனைதான் இன்னும்
ஒரு முழத்து ஈமானுடன்
விலாசமற்று அநாமதேயமாய்…

தொலைந்துபோன என்
மார்க்கத்தின் சின்னங்களுக்காய்
ஏங்கித் தவிக்கிறது என் உள்ளம்…
நாளைய சுவனத்தின் சுகந்தத்திற்காய்…
என் தேசமும் இந்த
ரைஹானின் தென்றலில் குளிர் காயட்டும்…
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:22 pm

தாயே உன் சுவாசம் ..


நான் உன்னுள் இருந்தபோது
நான் வளர நீ உண்டாய்,
நான் வெளியேறியதால்
என் வரவுக்காய் நீ காத்திருந்தாய்

என் பிறப்பில் உன் இறப்பு தெரிந்தபோது
என்னை அணைத்து அதை கலைத்தாய்,
என் கண்திரக்க அவதாரம் பல எடுத்து
என்னையே அசரவைத்தாய்

எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
காலத்தின் மோதலில் அவை மாறுபடும்,
தாயே உன் சுவாசம் மட்டும்
என்னை நிலம் மூடும்வரை
வாழ்த்தி வரும்.....
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:23 pm

'நீ என்றும் என் காதலி'


அதிகாலை ஓர் அழைப்பு மணி
அவசரமாய் சென்று யாரது...?
பதில்.. நான் தான்
உன் தேவதை...!
கதவை திறக்கிறேன்
யார் தேவதையா...?
ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....!
அனைத்தையும் அடித்துவிடும்
அழகான ஓர் முகம்...
ஆனாலும் கண்களிலே கண்ணீர்...
கலைந்த கூந்தல்....
மாற்றான் கைபட்டு
கசங்கிய மேலாடை...
மான மறைப்புகளில்
ஆங்காங்கே இரத்தத் துளி.....
கலைந்த கூந்தலையும்
அலங்கரித்த கார்த்திகைப் பூ

என் கண்முன்னே கதறுகிறாள்
ஏன் என்னை கைவிட்டாய்..?
நான் கேட்டென்...?
எப்போ உனை கைவிட்டேன்...?
நான் உன்னைப் பார்த்ததில்லை...!

அட பாதகனே..
எனை பிரிய மனமின்றி
அன்று ஏங்கி அழுது நின்றாய்...
எனை விட்டு பிரிய முதல்
என் காலையே பிடித்து நின்றாய்.....
நீ விட்ட கண்ணீர் துளி
என் மார்பை நனைத்துவிட
என் மார்பு துடித்து நின்று
உன் அன்பை பெற்றதுவே...!
அன்று தான் சொன்னேனே
உன் கடமை வெளியிலே
உனக்காய் காத்திருக்கு
காலம் வரும் போது
நான் வருவேன்; உன்னிடம்
அதுவரை காத்திருப்பாய்...!
அத்தனையும் மறந்தாயா...?
பாவி அடியோடு எனை மறந்தாயா..?

அன்று நான் உன்னை
கவர்ந்திருந்த கட்டழகி....
இன்று நான் உனக்கு
கசக்கப்பட்டு ரோஜாவா...?
சரி என் பெயர்கூட மறந்ததா...?
நான் தான் தமிழீழம்...
எதிரியின் கைபட்டு
உடைந்துவிட்ட உன் ஈழம்...!
சரி நான் வருகிறேன்
என்னை காதலிக்க மறக்காதே...!
காதலிக்க மறந்தாலும்
காக்கவேனும் மறக்காதே...!

ஐயோ என் செல்வமே... நீயா..இது...?
அவளைத் தடுக்க என் கால்கள்
அவசரமாய் அடிவைக்க
முடியவில்லை முயன்றும் முடியவில்லை
அவள் பெயர்சொல்லிக் கதறுகிறேன்...
உடம்பெல்லாம் வியர்த்து
நெஞ்சு பதைபதைக்க
முழிக்கிறென் ..! ஆம் விழிக்கிறேன்
கனவு கலைந்து
கட்டிலில் இருந்து....
ஆம்..! என் கடமை புரிகிறது
என் கால்கலும் செல்கிறது..
ஆம் ..! தவறாமல் என் கடமைக்காய்
என் கால்கள் என் நாளும் செல்கிறது....
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed Aug 19, 2009 1:24 pm

தோழமை


வெட்ட வெளி தனிலே - மனம்
வெதும்பி அழுது நின்றேன்
தொட்ட ணைத்து என்னைத் - தோழன்
தேற்றி அணைத்துக் கொண்டான்

பட்ட மரத்தில் இடி
பாய்ந்து விழுந்தது போல்
சுட்ட சொல் கொண்டு - எனைச்
சுற்றம் தூற்றுகையில் (வெட்டவெளி)

நீச உறவுகளில் - நான்
பாசம் வைக்கவில்லை - மாறு
வேசம் கட்டிக் கொண்டு - அவர்போல்
வாழத் தெரியாததால் (பட்ட மரத்தில்)

அட்டை மனிதர்கள் என்
இரத்தம் குடிக்கையிலே - உடல்
வெட்டப் படுவதைப் போல்
வலி கொன்று தின்னுவதால் (நீச உறவுகள்)
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 3 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum