ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசியைப் பிடித்த பேய்!

3 posters

Go down

இளவரசியைப் பிடித்த பேய்! Empty இளவரசியைப் பிடித்த பேய்!

Post by சிவா Wed Aug 19, 2009 12:43 pm

இளவரசியைப் பிடித்த பேய்! Smalarnews_76258486510


எருக்கூரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் மனைவி மிகவும் பொல்லாதவள். தன் கணவனை மிகவும் கொடுமை செய்வாள். தினமும் விளக்குமாற்றால் தன் கணவனை இரண்டு அடி அடித்த பின்பு தான் அவனுக்கு சோறு போடுவாள்.

இப்படியே பலகாலம் நடந்தது. ஒரு நாள் அவனுக்கு மனது வெறுத்துப் போனது. பத்து நாட்களாவது மனைவியிடம் விளக்குமாற்று அடி வாங்காமல், எங்கேயாவது போய் விட ஆசைப்பட்டான்.

""நான் வேலை விஷயமாக பத்து நாட்கள் வெளி ஊருக்கு போகப் போகிறேன்,'' என்றான்.

""அய்யய்யோ! உங்களை விளக்குமாற்றால் அடிக்காமல் இருந்தால் எனக்கு தூக்கமே வராதே,'' என்றாள்.

""இங்கு தோட்டத்தில் நான் வளர்த்த ஒரு மரம் உள்ளது. தினம் ஒரு முறை என்னை அடிப்பது போல நினைத்துக் கொண்டு அடி,'' என்று கூறினான். பின்பு ஊருக்குப் போய்விட்டான்.

மறுநாள் விவசாயியின், மனைவியும் அதே போல மரத்தை விளக்குமாற்றால் அடித்தாள். வெகு நாட்களாக அந்த மரத்தில் தங்கியிருந்த பேயின் மீது அந்த அடிகள் விழுந்தன. அந்த அடி தாங்காத பேய் கதறிக் கொண்டு அந்த மரத்தை விட்டு ஓடியே போய்விட்டது.

அது ஓடிய போது வழியில் விவசாயியைக் கண்டது. அவன் மீது அதிக இரக்கம் கொண்டது. அவனை நெருங்கி, ""நீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி வாங்கினாயோ! உன்னை நினைத்தால் பாவமாக உள்ளது. உனக்கு உதவி செய்ய பிரியம் கொள்கிறேன். இந்த நாட்டு மன்னன் மகளை நான் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்ததும் அவளை விட்டு ஓடி விடுவேன். எனவே, அரசன் தரும் பரிசுகளைப் பெற்று மகிழ்ச்சியாக இரு,'' என்று கூறியது.

விவசாயியும் ஒப்புக் கொண்டான். பேயும் சொன்னபடி அரசன் மகளைப் பிடித்துக் கொண்டது. யாரெல்லாமோ வந்து வைத்தியம் செய்தும். தோற்று விட்டனர். முடிவில் விவசாயி அரண்மனைக்குச் சென்றான். அரசன் மகளிடம் சென்றான். உடனே பேயானது, ""விவசாயியே உன்னிடம் சொன்னபடி உன்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறேன். இனி என் வழியில் நீ மீண்டும் வந்தால் உன்னைக் கொல்வேன்,'' என்றது. பின் இளவரசியை விட்டு ஓடிவிட்டது.

இது கண்ட மன்னன் விவசாயிக்கு அதிக பொன்னும் பொருளும் தந்தான். இளவரசியை விட்டு ஓடிய பேய் பக்கத்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்த இளவரசியைப் பிடித்துக் கொண்டது. அந்த நாட்டு மன்னன் விவசாயி பேய் விரட்டிய கதையை கேள்விப்பட்டான். எனவே, உடன் விவசாயியை வரவழைத்தான். ""என் மகளுக்கு பிடித்துள்ள பேயை நீதான் விரட்ட வேண்டும். அப்படி நீ அந்தப் பேயை விரட்டவில்லை என்றால் நான் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று கூறினார்.

இது கேட்ட விவசாயி திடுக்கிட்டான். பேயை விரட்ட நினைத்தால் பேய் அவனை கொன்றுவிடும். அப்படி பேயை விரட்டாவிட்டால் மன்னன் அவனைக் கொன்று விடுவான். எனவே, சாவை விட்டு எப்படி தப்பிப்பது என்று விவசாயி யோசித்தான்.

முடிவில் ஒரு தந்திரம் செய்தான். அதன்படி பேயும் அவனை கொல்லாமல் இளவரசியிடம் இருந்து ஓடியது. அரசனும் விவசாயியைக் கொல்லாமல் ஏராளமான பணமும் காசும் தந்து அனுப்பினார். அவற்றை கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு புது துடைப்பம் வாங்கி மனைவியை சாத்து சாத்து என சாத்தினான். "இந்த பணம், காசு இல்லை என்றுதானே நீ என்னை அடித்தாய். இனிமேல் வாயை திறந்தால் சாத்திடுவேன் சாத்தி!'' என அடித்தான். வாய் பொத்தி நின்றாள் விவசாயியின் மனைவி!

குட்டீஸ்களே... அப்படி என்ன தந்திரம் செய்து விவசாயி பேயை இளவரசியிடமிருந்து விரட்டி இருப்பான் என்று தெரிந்தால் நன்றாக யோசனை செய்து சொல்லுங்களேன் பார்க்கலாம். அப்படி தெரியாவிட்டால் புத்தகதைத் திருப்பி பாருங்கள். சரியா?

புதிருக்கு விடை:

விவசாயி பேய் பிடித்த இளவரசியிடம் சென்று, ""அடப் பேயே! என் மனைவி விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வருகிறாள். அதனால்தான் நான் தப்பிக்க இங்கு ஓடி வந்தேன்,'' என்றான். உடனே பேய், ""என்ன? விளக்கு மாற்றுடன் உன் மளனைவி ஓடி வருகிறாளா? அய்யய்யோ!'' என்று பயந்து, அலறியபடி இளவரசியை விட்டு விட்டு ஓடியது.

சிறுவர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளவரசியைப் பிடித்த பேய்! Empty Re: இளவரசியைப் பிடித்த பேய்!

Post by VIJAY Wed Aug 19, 2009 2:48 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இளவரசியைப் பிடித்த பேய்! Empty Re: இளவரசியைப் பிடித்த பேய்!

Post by vkjvinoth Sun Aug 30, 2009 2:47 pm

நன்றி - அருமை
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Back to top Go down

இளவரசியைப் பிடித்த பேய்! Empty Re: இளவரசியைப் பிடித்த பேய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum