Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
+7
jesifer
கிருஷ்ணா
ஜி என் விஜயா
ரா.ரா3275
சிவா
விமந்தனி
krishnaamma
11 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.
புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே நன்றி
மோர் குழம்பு
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:41 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புளி பேஸ்ட்
குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பருப்பு சாம்பார்
சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.
Here we go........
தேவையானவை:
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும்.
குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.
Here we go........
தேவையானவை:
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும்.
குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.
Last edited by krishnaamma on Sat Dec 11, 2010 12:08 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?
பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?
கீழ் கண்ட காய்கறி லிஸ்ட் லிருந்து எதாவது ஒன்றை போடலாம்.
அவை: குடமிளகாய் (இந்த சாம்பாருக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் அவ்வளோ taste ) முள்ளங்கி, நூல்கோல் , கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், உருளை, காரட் , சௌ சௌ.
இதில் , வெங்காயம், சின்னவெங்காயம், குடமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை தாளித்ததும் போட்டு வதக்கணும்.
முள்ளங்கி, நூல்கோல் ,முருங்கைக்காய், காரட் , சௌ சௌ ஆகியவற்றை பருப்புடன் வேகவைத்து போடணும்.
உருளை யை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.
தனக்கு என் வாசம் இல்லாத காரட் , சௌ சௌ , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து போடலாம்.
கீழ் கண்ட காய்கறி லிஸ்ட் லிருந்து எதாவது ஒன்றை போடலாம்.
அவை: குடமிளகாய் (இந்த சாம்பாருக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் அவ்வளோ taste ) முள்ளங்கி, நூல்கோல் , கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், உருளை, காரட் , சௌ சௌ.
இதில் , வெங்காயம், சின்னவெங்காயம், குடமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை தாளித்ததும் போட்டு வதக்கணும்.
முள்ளங்கி, நூல்கோல் ,முருங்கைக்காய், காரட் , சௌ சௌ ஆகியவற்றை பருப்புடன் வேகவைத்து போடணும்.
உருளை யை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.
தனக்கு என் வாசம் இல்லாத காரட் , சௌ சௌ , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து போடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வத்த குழம்பு
வத்த குழம்பு, குடமிளகாய் சாம்பாருக்கு சொத்து எழுதி வைக்காதவர்கள் இதற்கு எழுதி வைக்கலாம்.
தேவையானவை :
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
2sp புளி பேஸ்ட்
1 /2sp துவரம் பருப்பு
1 /2sp கடலை பருப்பு
4 - 5 குண்டு மிளகாய் வற்றல்
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை துவி இறக்கவும்.
(எண்ணெய் பிரிந்து வரணும் )
சாதத்துடன் பரிமாறவும்.
சுட்ட அப்பளம் நல்லா இருக்கும்.
எல்லா வறுத்த (fried ) காய் களும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.
தேவையானவை :
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
2sp புளி பேஸ்ட்
1 /2sp துவரம் பருப்பு
1 /2sp கடலை பருப்பு
4 - 5 குண்டு மிளகாய் வற்றல்
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை துவி இறக்கவும்.
(எண்ணெய் பிரிந்து வரணும் )
சாதத்துடன் பரிமாறவும்.
சுட்ட அப்பளம் நல்லா இருக்கும்.
எல்லா வறுத்த (fried ) காய் களும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
பூண்டு, முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் போடலாம்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம்.
குழம்பு வடாம் போட்டும் "வற்றல்" குழம்பு வைக்கலாம்.
பூண்டு, முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் போடலாம்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம்.
குழம்பு வடாம் போட்டும் "வற்றல்" குழம்பு வைக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழம்பு வடாம் செய்வது எப்படி?
தேவையானவை:
பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)
இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே.
சுடு சாதத்தில் 'பிரெஷ் ' ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.
சுடு சாதத்தில் 'பிரெஷ் ' ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)
இப்ப தயிர் சாதம் .
இதுக்கு நன்றாக மசித்த சாதத்தில், கெட்டியான எருமை தயிர் விட்டு, உப்பு போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் Try பண்ணி பாருங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» எங்க வீட்டு தோட்டத்தில்
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» எங்க வீட்டு தோட்டத்தில்
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|