புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சஞ்சிகைகளின் பார்வை (கவிஞர் தாமரையைக் குறிவைத்த கருணாவின் ஆட்கள்)
Page 1 of 1 •
உயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே! லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்.. - ஜூனியர் விகடன் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க...உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார். |
இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. காட்சி:1 இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகுப்புறத் தள்ளப்படுகிறார்கள். சிங்கள ஷூக்கள் அவர்களின் முதுகுகளை வெறித்தனமாக மிதிக்கின்றன. அடுத்த கணமே போராளிகளின் தலைகளைக் குறிவைத்து சிங்களர்கள் கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள். தலை சிதறி, குலுங்கக்கூட சக்தியற்று போராளிகள் செத்து விழ... நம் ஈரக்குலையே இற்றுப்போகிறது. காட்சி:2 சுட்டுக் கொல்லப்பட்ட பல போராளிகளின் உடல்கள் அலங்கோலமாகக் கிடக்கின்றன. விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியாவின் உடலும் அங்கே கிடக்கிறது. ஆடைகள் கிழிக்கப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கும் இசைப்பிரியாவின் உடலைக் கைகாட்டும் சிங்கள அதிகாரிகள் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களின் வக்கிர உரையாடலைக் கேட்டால்... கொல்வதற்கு முன் அந்தப் பெண் போராளிகளை சிங்கள வெறி எப்படி எல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது அப்பட்டமாக நம் நெஞ்சை அறுக்கிறது. காட்சி:3 இரு போராளிகளைக் கொன்று அவர்களின் உடல்களைத் தலை மட்டுமே வெளியே தெரியும்படி மண்ணுக்குள் நட்டுவைத்து இருக்கிறார்கள். அந்தப் போராளிகள் யார் எனத் தெரியக் கூடாது என்பதற்காக அவர்களின் முகம் தீயால் கருக்கப்பட்டு இருக்கிறது. நாடு கேட்டுப் போராடியவர்கள் பிணமாக நட்டுவைக்கப்பட்டு இருக்கும் காட்சி, இனவெறிக் கொடூரத்தின் உச்சபட்ச சாட்சியாய் உலுக்குகிறது. இங்கிலாந்தில் உள்ள 'சேனல் 4’ சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ஷே லண்டனுக்கு வர ஆயத்த மான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய 'சேனல் 4’ தொலைக்காட்சி, ''ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!'' என்று அறிவித்தது. அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது 'சேனல் 4’. ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே 'சேனல் 4’ தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவு களையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. ''அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!'' என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது. போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதறவைக்கிறது. இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், ''இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!'' என வலியுறுத்தி இருக்கிறார். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற் காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜ பக்ஷே தங்கி இருந்த 'டோசெஸ்டர்’ ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபக்ஷேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயார் ஆனார்கள். இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, ''பிரிட்டனிலேயே ராஜபக்ஷே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!'' என அறிவிக்க... பதறிப்போனார் ராஜபக்ஷே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க... உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்ஷே. லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்ஷேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபக்ஷே, அனைத்து மீடியாக் களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். 'ராஜபக்ஷே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!’ என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க... ராஜபக்ஷே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார். எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?! ஜூனியர் விகடன் |
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இதெற்கெல்லாம் தமிழக மக்கள் வரும் தேர்தலில் பதில் சொல்ல வேண்டும் .... சொல்வார்களா ????
என்று தான் திருந்த போகிறோமோ நாம் (தமிழக மக்கள்) எல்லாம் ..
என்று தான் திருந்த போகிறோமோ நாம் (தமிழக மக்கள்) எல்லாம் ..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
என்னைப்போல் உள்ள எத்தனை தமிழ் உள்ளங்கள் இன்னும் என்ன நடக்குமோ என்ற பயத்தில் அனுபவித்தால் வலி தெரியும்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
பாடலாசிரியர் தாமரையை சுவிஸில் குறிவைத்த கருணா கும்பல்?! -ஜூனியர் விகடன் லண்டனில் ராஜபக்ஷ திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷ மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன. |
இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லாந்து போன தாமரை, மூன்று நாட்களாக புலம்பெயர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மூன்றாவது நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு கும்பலை, சுவிட்சர்லாந்து பொலிஸ் சந்தேகத்தின் பேரில் வளைக்க... கத்தி, நச்சு வாயுவைப் பாய்ச்சக்கூடிய ஸ்ப்ரே போன்றவை இருந்திருக்கின்றன. அடுத்த கணமே அவர்களை கஸ்டடிக்கு எடுத்தது பொலிஸ். இதற்கிடையில் தாமரைக்கு திடீரென இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவிஸ் பொலிஸ் செய்ய... அவருக்கு ஏதும் விளங்கவில்லை. 'நான் ஒரு பாடலாசிரியர். எனக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு? தமிழ்க் குடும்பங்களைச் சந்திப்பதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். உங்களின் பாதுகாப்பே எனக்கு இடைஞ்சலாக இருக்கிறதே...’ எனப் பாதுகாப்பு பொலிஸாரிடம் அவர் முறையிட... அதன் பிறகுதான் மர்ம கும்பல் குறித்த பின்னணியைச் சொல்லி இருக்கிறார்கள் சுவிஸ் பொலிஸார். இதற்கிடையில் கருணாவின் கும்பல் தாமரையை டார்கெட் வைத்தே அந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகச் செய்தி கசிய... நாம் அவரை போனில் தொடர்புகொண்டு பேசினோம். கடந்த வருட மாவீரர் தின நிகழ்வைக் காட்டிலும், இந்த முறை தமிழர்களின் ஒருங்கிணைப்பும் முன்னெடுப்பும் அபரிமிதமாக இருக்கிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் தென் ஆபிரிக்காவை எப்படிப் புறக்கணித்தனவோ... அதேபோல் ஸ்ரீலங்கா அரசையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற முன்னெடுப்பு உலகம் முழுக்கக் கிளம்பி இருக்கிறது. அதன் ஆரம்பமாகத்தான் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஒருங்கிணைந்து லண்டனில் ராஜபக்ஷவைத் துரத்தி அடித்து இருக்கிறார்கள். மேலும் இத்தகைய ஒருங்கிணைவு உண்டாகிவிடக் கூடாது என எண்ணி சிங்கள உளவாளிகள் உலகம் முழுக்க அலைகிறார்கள். சுவிஸில் பிடிபட்டவர்கள் அந்த நிகழ்ச்சியைக் குலைக்கும் நோக்கிலோ, இல்லை... தனிப்பட்ட யாரையாவது குறிவைத்தோதான் வந்திருக்க வேண்டும். மாவீரர் நாளுக்காக தமிழகத்தில் இருந்து யார் யார் எங்கெங்கு போகிறார்கள்... அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்ன என்கிற விவரங்களை எல்லாம் கருணாவின் ஆட்கள் முன்கூட்டியே அறிந்துவைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வருகிற யாரையாவது ஒருவரைத் தாக்குவதன் மூலமாக, தமிழக உணர்வாளர்களை அச்சுறுத்தி அடங்கவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். பிடிபட்டவர்கள் கருணாவின் ஆட்கள்தான் என்பது அவர்களிடம் இருக்கும் டி கார்டு மூலமாகவே உறுதியாகி இருக்கின்றன. அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்படுவதைப்போல, சுவிஸில் ஏழு வருடங்கள் வாழ்பவர்களுக்கு டி கார்டு வழங்கப்படும். ஆனால், பொலிஸில் பிடிபட்ட கும்பல் சில மாதங்களுக்கு முன்புதான் சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கின்றன. பெரிய அளவில் பணத்தை இறைத்து கருணா தரப்பு அந்தக் கும்பலுக்கு டி கார்டு வாங்கிக் கொடுத்து இருக்கிறது...'' எனச் சொன்னவர் சுவிஸில் நடந்த சந்திப்புகள் குறித்தும் சொல்லத் தொடங்கினார். ஜேர்மனியில் நடந்த மாவீரர் நிகழ்ச்சிக்குப் போய் இருந்தபோது அங்கே போரில் இறந்த கரும் புலிகளுக்காக நினைவு கோபுரங்களை எழுப்பி இருந்தார்கள். 'கரும் புலிகள்தான் எங்களின் கடவுள்கள்!’ என அவர்கள் சொன்னபோது சிலிர்த்துப் போனேன். 'இலங்கைக்கு எதிரான போரில் ஈழம் தோற்று இருக்கலாம்; ஆனால், போரில் மடிந்த வீரர்களுக்காக நீங்கள் நினைவு கோபுரங்கள் எழுப்பி இருக்கிறீர்கள். கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் போரில் மடிந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட வீட்டைக்கூட இந்திய அரசால் முறையாகக் கொடுக்க முடியவில்லை. வீழ்ந்தாலும் ஈழத்தின் சிறப்பு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வல்லரசுக்கு நிகராக உயர்ந்தாலும் இந்தியாவின் சிறப்பு நாறிக்கொண்டுதான் இருக்கிறது!’ என என் மனக் கருத்தை கொஞ்சமும் தயங்காமல் உடைத்துப் பேசினேன். ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மக்களின் உணர்ச்சிப் பேரொலி அடங்க வெகு நேரம் ஆனது. அங்கே செல்லும் யாரும், ஈழ விடிவுக்கும் சிங்கள அரசைப் போர்க்குற்ற வழக்கில் சிக்கவைக்கும் முடிவுக்கும் ஒருமித்துப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் வெளியே வந்து போராடத் தயங்குவார்கள். ஏனென்றால், அப்படிப் போராடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கள அரசு சம்பந்தப்பட்டவர்களை மறுபடியும் இலங்கைக்குள் நுழையவிடாது. ஆனால், இப்போது அத்தகைய மிரட்டல் உருட்டல்களை எல்லாம் சட்டை செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை. உலகத் தமிழர்களே ஒன்று திரண்டு நிற்கும் இந்த வேளையிலும் தமிழக முதல்வர் கருணாநிதி, 'ராஜபக்ஷ, ஐ.நா-வின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட முன்வரவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பெண் என்று சொல்லிக்கொள்ளவே கூசுகிறது! என்றார் சலிப்பும் வெறுப்புமாக! நன்றி: ஜூனியர் விகடன் |
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
தமிழனே தமிழனே தலை நிமிர்த்து!
தணிந்த விழிகளில் தணல் சேர்த்து!!
தணிந்த விழிகளில் தணல் சேர்த்து!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|