Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
4 posters
Page 1 of 1
பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
சொந்த ஊரில் இருக்கும்போது ஏனோதானோ என்று சுற்றிக்கொண்டிருந்தாலும், குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலை வந்துவிட்டால் இந்தியர்கள் மிகுந்த பொறுப்பானவர்களாக மாறிவிடுவதை நிரூபிக்கும்விதமாக, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சிந்தாமல் சிதறாமல் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியர்கள் உலக அளவில் முதலிடத்தில் இடத்தில் இருப்பது உலகவங்கி அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
இந்த புள்ளிவிவரங்களெல்லாம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டதால் கிடைக்கப்பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வமற்ற முறையில் - அதாவது கணக்கில் பதிவு செய்யப்படாதது -
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
takavalukku nandri
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
உண்மைதான்.வெளிநாடுகளில் வேலை பார்க்கும் எத்தனையோ பேர் தன்னோட எல்லா சவுகரியங்களையும் குறைத்து கொண்டு ஊருக்கு பணம் அனுப்புகிறார்கள்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
ஆம்மாம், சரியாக சொன்னிர்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
இந்தியர்களின் பண்பாடு & பொறுப்புணர்ச்சி இன்னும் குறையவில்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Similar topics
» தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|