ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

2 posters

Go down

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  Empty மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

Post by krishnaamma Wed Dec 08, 2010 1:52 pm

விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்தியாவின் ஐ.டி. முதலைகள்தான் அயல்நாடுகளில் கிளைகள் தொடங்கவேண்டுமா... எங்களாலும் முடியுமே என்று சிறிய ஐ.டி. நிறுவனங்களும் கச்சைக்கட்டிக்கொண்டு களமிறங்கிவிட்டதால், இந்திய ஐ.டி. துறை மீண்டும் கிடு கிடு வளர்ச்சியை எட்டிபிடித்துக்கொண்டிருக்கிறது.

ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் மீண்டும் புத்துயிர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து புதிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகள் நடுத்தர மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளதாக இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் மகா பெரிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிப்பதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 'புராஜக்ட்'கள் மேற்கூறிய நடுத்தர ஐ.டி. நிறுவனங்களை தேடி வரத் தொடங்கிவிட்டன.

இதனால் நடுத்தர இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கூட, வெளிநாடுகளில் தைரியமாக கடைவிரிக்க தொடங்கிவிட்டன.இதற்கு தோதாக வெளிநாடுகளிலேயே அந்நிறுவனங்களுக்கு ஏற்ற செலவில் பணியாளர்களும் கிடைக்கத் தொடங்கிவிட்டதும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இதனால் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் இலாபம் போன்றவை நிச்சயம் 2009 ஆம் ஆண்டைவிட நடப்பு காலண்டர் ஆண்டான 2010 ல் முன்னேற்றமாகவே காணப்படும்.அதேப்போன்று வருகிற 2011 ஆம் ஆண்டு, 2010 ல் காணப்பட்டதைவிட இன்னமும் சிறப்பாக இருக்கும்" என்று கூறுகிறார் இத்துறை நிபுணரான ஹிதேஷ் ஷா!

ஜியோமெட்ரிக் போன்ற ஏராளமான நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கனவே அயல்நாடுகளில் கிளைகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், மெபாசிஸ் போன்ற நிறுவனங்கள் அயல்நாடுகளில் கால் பதிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.

இதனை அந்த நிறுவனங்கள் தடம் பதிக்க விரும்பும் நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறிய ஐ.டி. நிறுவனங்களை கையகப்படுத்துவது மூலமாகவோ அல்லது புதிதாக தொடங்குவதன் மூலமாகவே நிறைவேற்ற நினைக்கின்றன.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  Empty Re: மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

Post by krishnaamma Wed Dec 08, 2010 1:53 pm

இதற்கு உதாரணமாக கூறுவதென்றால், தானியங்கி மற்றும் கனரக தொழில்துறைகளில் மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் ஜியோமெட்ரிக் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது கிளை பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 300 லிருந்து 500 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டலாம்.

மேலும் சீனா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலும் கிளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரவிசங்கர்.

மேலும் அமெரிக்காவில் உள்ள தங்களது நிறுவனத்திற்கு பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பணியாளர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே அமெரிக்காவில் அமர்த்திய பணியாளர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதுதான் என்றும், இதனால் விசா பிரச்சனைகள் போன்றவை தங்களுக்கு ஏற்படவில்லை என்றும், 2008 ல் நிகழ்ந்த சர்வதேச பொருளாதார சரிவுக்கு பின்னர் "அவுட்சோர்சிங்' கில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரவிசங்கர் கூறுகிறார்.

பொருளாதார சரிவுதான் பல வெளிநாட்டு நிறுவனங்களை தங்களது பணிகளை குறைந்த செலவாகும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்து "அவுட்சோர்சிங்" செய்யும் நிலைக்கு தள்ளியது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்நிலையில் ஜியோமெட்ரிக்கை போன்றே, "ஜென்ஸார் டெக்னாலஜிஸ் லிமிடெட்" நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான "அகிபியா" என்ற நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளது.

அயல்நாட்டில் தனது தடத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்திலேயே "ஜென்ஸார்" இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதேப்போன்று மாஸ்டெக் லிமிடெட் நிறுவனமும் எஸ்இஜி என்ற அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

இவை தவிர மேலும் பல நடுத்தர நிறுவனங்களும் பல வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ வரிசை கட்டி நிற்கின்றன என்பதால், ஐ.டி. துறை மீண்டும் உச்சாணியில் ஏறத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  Empty Re: மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

Post by கவிக்காதலன் Wed Dec 08, 2010 2:04 pm

நல்ல செய்திதானே... குதூகலம் குதூகலம் குதூகலம்


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  Empty Re: மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

Post by krishnaamma Wed Dec 08, 2010 2:11 pm

கவிக்காதலன் wrote:நல்ல செய்திதானே... குதூகலம் குதூகலம் குதூகலம்

ஆமாம் ரொம்ப நல்ல செய்தி தான்; நமக்கு, நம் நாட்டுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  Empty Re: மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum