Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?
3 posters
Page 1 of 1
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?
ஒரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த இந்த காலத்திலே நம்புவதா? என்று கருணாநிதி கூறினார்.
கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் ‘இளைஞன்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்தியம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் கருணாநிதி பேசியதாவது:-
தங்கத்தட்டிலே பிறக்கவில்லை தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு திரையரங்குக்குப் பெயரே கூட “கருணாநிதி” திரையரங்கம் தான். என் பெயரை வைக்கவில்லை – கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட் வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல – தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!
உடனடியாக யாராவது திரைப்படத்துக்கு கூட நுழைவுச்சீட்டு வாங்கக்கூட வசதியில்லாட கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத் தான் கருதுகிறேன்.
செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத்தாம்பாலத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு – தங்கக்கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காகத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை.
நான் ஏழையாகப் பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச்சீமான் வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப்பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத் தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்குப் போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப்பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாகக் கிடக்கும். நாம் தப்பித்தவறி கையை வைத்துத் தடவிப் பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் விழிப்பாக போக வேண்டும். அப்படிப்பட்ட திரையரங்குகளில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.
ரூ.1.76 ஆயிரம் கோடி ஊழலா? பேசா படத்தில், திரைக்கு முன்னால் படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இட்த்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
“அதோ பார், பீமசேனன் வருகிறான். அதோ பார், பகாசூரன் வருகிறான். பீமசேனன் கீசகனை வதைக்கிறான்” என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.”பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்; - என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் “பல்லுக்கு பல் இருகாதம்” என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அளவு இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா – பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?
ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை – ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஓரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் – அன்றைக்கு “பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தைச் செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத் தான் செய்ய முடியும்.
எப்படி “எந்திரன்” படத்திலே இரசினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக – எந்திரமாக வந்து இந்த காரியங்களைச் செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் அதைக் காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் ‘இளைஞன்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்தியம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் கருணாநிதி பேசியதாவது:-
தங்கத்தட்டிலே பிறக்கவில்லை தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு திரையரங்குக்குப் பெயரே கூட “கருணாநிதி” திரையரங்கம் தான். என் பெயரை வைக்கவில்லை – கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட் வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல – தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!
உடனடியாக யாராவது திரைப்படத்துக்கு கூட நுழைவுச்சீட்டு வாங்கக்கூட வசதியில்லாட கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத் தான் கருதுகிறேன்.
செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத்தாம்பாலத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு – தங்கக்கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காகத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை.
நான் ஏழையாகப் பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச்சீமான் வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப்பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத் தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்குப் போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப்பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாகக் கிடக்கும். நாம் தப்பித்தவறி கையை வைத்துத் தடவிப் பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் விழிப்பாக போக வேண்டும். அப்படிப்பட்ட திரையரங்குகளில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.
ரூ.1.76 ஆயிரம் கோடி ஊழலா? பேசா படத்தில், திரைக்கு முன்னால் படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இட்த்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
“அதோ பார், பீமசேனன் வருகிறான். அதோ பார், பகாசூரன் வருகிறான். பீமசேனன் கீசகனை வதைக்கிறான்” என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.”பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்; - என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் “பல்லுக்கு பல் இருகாதம்” என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அளவு இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா – பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?
ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை – ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஓரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் – அன்றைக்கு “பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தைச் செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத் தான் செய்ய முடியும்.
எப்படி “எந்திரன்” படத்திலே இரசினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக – எந்திரமாக வந்து இந்த காரியங்களைச் செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் அதைக் காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?
யப்பா உலக மகா நடிப்பு டா சாமி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?
இன்றைய தலைமுறையை முட்டாள்கள். தான் சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் என மனக் கணக்கு போடுகிறார் கருணாநிதி.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?
நிசாந்தன் wrote:இன்றைய தலைமுறையை முட்டாள்கள். தான் சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் என மனக் கணக்கு போடுகிறார் கருணாநிதி.
Similar topics
» உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு
» சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'
» ஒரே வாரத்தில் 3 இலட்சம் கோடி ?
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
» சவுதி அரேபியாவுக்கு ரூ. 3 இலட்சம் கோடி இராணுவ தளவாடங்கள்
» சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'
» ஒரே வாரத்தில் 3 இலட்சம் கோடி ?
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
» சவுதி அரேபியாவுக்கு ரூ. 3 இலட்சம் கோடி இராணுவ தளவாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|