ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

3 posters

Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by balakarthik Sun 5 Dec 2010 - 19:44

ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை பற்றி எழுதும் முன் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். எனக்கு எதிராக நடத்தப்படும் வினைக்கு உடனே எதிர்வினை செய்வதுண்டு. ஆனால் காத்திருந்து பழி வாங்கலில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது மட்டும் இருந்திருந்தால் இந்த படத்தை எடுத்தவரை, பாருடா என்று சொன்ன நண்பனை, வெளி இட்ட திரை அரங்கு , டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை என ஒருவரையும் விடாமல் பழி தீர்த்திருப்பேன்.

ஒரு எம்.எல்.ஏ தனது வலது(1) கையின் பேச்சைக் கேட்டு இடது(2) கையை வெளியே அனுப்புகிறார். இடது(1) கை கொதித்தெழுந்து தனது இன மக்களை தூண்டிவிடுகிறார். விஷயம் கேள்விப்பட்ட வலது(1)கை, இடதுகையின் வலது(2)கையை வைத்தே அவர் கதையை முடிக்கிறார். இறந்தவரின் ஒரு மகனையும் போலீஸ் லாக்கப்பிலே சமாதி கட்டுகிறார்கள். இன்னொரு மகன் என்று ஒருவர் இருந்தால் என்ன செய்வார்? வெகுண்டுழுவார்தானே? அதேதான் நடக்கிறது. அவர் இறக்கவில்லை என்னும்போதே அவர்தான் நாயகன் பிரதாப் ரவி(விவேக் ஓப்ராய்) என்று புரிந்துக் கொண்டீர்களேயானால் வெரிகுட். தன் இன மக்களின் ஆதரவோடு எம்.எல்.ஏ, அவரின் வலது(1) கையென எல்லோரையும் என்ரெட்டி செய்கிறார்.(அந்த ஊரில் ஏது கவுண்டர்?). ஆனந்தபுரம்(?) என்ற அந்த ஊரில் அவர் ஒரு பெரிய சக்தியாக வளர்கிறார். வழக்கம் போல ஒரு அரசியல் கட்சி அவரை அரவணைத்து கொள்கிறது. வார்டு தலைவர் பதவியெல்லாம் இல்லாமல் நேரிடையாக எம்.எல்.ஏவாக்கி மந்திரியும் ஆக்குகிறது. இவர் அரசியலில் இருந்தாலும் தனது நிழற்படை மூலம் யாரெல்லாம் இவருக்கு எதிராக திரும்புவார்கள் என்று நினைக்கிறாரோ, கவனிக்க, நினைக்கிறாரோ எல்லோரையும் போட்டுத் தள்ள சொல்கிறார். இதுதான் முதல் பாகத்தின் சாராம்சம்.

இரண்டாம் பாகம் என்ன சொல்கிறது? அதேதான் சொல்கிறது. இப்போது எம்.எல்.ஏவாக விவேக் ஓப்ராய். அவரால் கொல்லப்படும் குடும்பத்தில் ஒருவராக சூர்யா. முதல் பாகம் போல முதல் ஷெட்யூலில் சூர்யாவின் அப்பா, அடுத்த ஷெட்யூலில் அவரின் மிச்ச குடும்பத்தினர் கொல்லப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமென சூர்யா நினைக்கும் பிரதாப் ரவியை போட்டுத்தள்ள அவர் முறுக்கேறிய உடம்போடும், கண்களில் கொலைவெறியோடும், மனம் முழுவதும் பழி வாங்கும் எண்ணத்தோடும், முகமெங்கும் கரியோடும் அலைகிறார். அவரை கொல்ல முடிந்ததா? எப்படி பழி வாங்குகிறார் என்பதை மீதிப்படம் சொல்கிறது. ஆரம்பத்தில் திரை முழுவதும் ரத்தம் தெறிக்கிறது என்றால் முடிவில் திரையரங்கு முழுவதுமே ரத்தம் தெறிக்கிறது. பார்வையாளர்களில் கைக்குட்டை எடுத்து வந்த புண்ணியவான்கள் கழுத்தில் இருந்து கொட்டும் குருதியை அழுத்தி பிடித்தபடி வெளியேறுகிறார்கள்.

என்னதான் பிரச்சினை படத்தில்? இசையும், ஒளிப்பதிவும்தான். முதல் துளி ரத்தம் காதில் இருந்துதான் வருகிறது நமக்கு. வாயாலே மியூஸீக் போடுவார்கள் தெரியுமா?அது போல ஏதேதோ ஒலிக்கிறது. ஒரு இடத்தில் கூட காட்சியோடும், கதையோடும் சேர்ந்து பயணித்ததாக நினைவிலில்லை. ஒளிப்பதிவும் அப்படியே. தேவையே இல்லாமல் கன்னாபின்னாவென சுற்றுகிறது. ஒரு காட்சியில் அப்படியே 180 டிகிரி சுற்றி மொத்த காட்சியும் தலைகீழாக வருகிறது. அதுவும் இன்னொரு கறிவேப்பிலைக் காட்சிதான். ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் புத்திசாலித்தனமாய் இருந்தாலும் மொத்தத்தில் எரிச்சலைத் தருகிறது என்றுதான் சொல்வேன். அடுத்த பிரச்சினை ஸ்லோ மோஷன் காட்சிகள். ஏற்கனவே விவிஎஸ் லஷ்மண் ஓடும் வேகத்தில் பயணிக்கிறது படம். அது போதாமல் 3 நிமிடங்கள் எல்லாம் ஸ்லோ மோஷனில் சாவடிக்கிறார்கள். தயவு செய்து தியேட்டரிலும் ரிமோட் கொடுங்கப்பா. ம்யூட் போடவும், ஃபார்வர்ட் செய்யவும் இந்தப் படத்தில் நிறைய வேலை இருக்கிறது.

திரைக்கதை குழப்பமாக இல்லையென்றாலும் திருப்பங்கள் இல்லாமல் இருக்கிறது. அரசியல், ரவுடிகள் எல்லாம் இருக்கும்போது அட என நிமிர வைக்கும் திருப்பங்கள் நிறைந்திருக்க வேண்டாமா? ஜெயிலில் இருக்கும் சூர்யாவை இன்னொரு அரசியல்வாதி சந்தித்து எலக்‌ஷனில் நிற்க சொல்கிறார். ஜெயிலில் இருக்கும் நான் எப்படி என்று அவர் கேட்கும்போதே வெளியே வெட்டியாக சுற்றும் ப்ரியாமணி என்ற சூர்யாவின் மனைவி கதாபாத்திரம் நமக்கு நினைவுக்கு வருகிறது.ஆனால் பெரிய திட்டம் என்பது போல அந்தக் காட்சியை மெதுவாக நகர்த்துகிறார் இயக்குனர். அதே போல் டிவி பாம் பற்றி முதலிலே பார்வையாளனுக்கு சொல்லிவிட்ட பிறகு அது வெடிப்பதை சீக்கிரம் காட்டிவிட வேண்டியதுதானே? டிவியை பிரிப்பது, எடுத்து மேஜை மீது வைப்பது, ப்ளகில் மாட்டுவது, அதை ஆன் செய்வது எல்லாம் க்ளோசப்பிலும், ஸ்லோ மோஷனிலும் காட்டி குண்டு வெடிக்கும் முன்பே நம்மை பரலோகத்திற்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள்.

படத்தின் பலம் நடிப்பு. சூர்யாவை அடுத்து பார்ப்போம். விவேக் ஓப்ராயை பாராட்டி 4 பதிவுகள் எழுதினால்தான் என் ஆர்வம் அடங்கும். அவரின் 3 திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இதில் நான் பார்த்தது பிரதாப் ரவி. ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. அவரைக் கொல்ல சூர்யா முயற்சித்து தோற்கும் அந்த முதல் காட்சியில் தப்பித்த பின் ஒரு நடை நடப்பார் பாருங்கள். பாருங்கள். வெளியே நடக்கும் போராட்டங்களையும், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் துல்லியமான உடல்மொழியிலும், முகபாவனைகளிலும் கொண்டுவருகிறாரே! அது நடிப்பு. அவர் நடிகர். சூர்யாவும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால் நந்தாவில் வந்த அதே வெறி அவர் கண்களில் ரத்த சரித்திரம் வரை தொடர்கிறது. எனக்கு என்னவோ அவரின் நடிப்பு அந்தந்த காட்சிகளை கணக்கில் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் எல்லாமே சூர்யாவேவாகவா இருக்கும்? இதில் சூர்யாவின்(பாத்திரத்தின் பெயரே அதேதான்) கோபம், பேரழகினில் வரும் சூர்யாவின் கோபம், ஆதவனில் ஆதவனின் கோபம், காக்க காக்க அன்புச்செல்வனின் கோபம் என எல்லாமே ஒரேவிதமாக இருப்பதாக தோன்றுகிறது.

இப்போதெல்லாம் லாஜிக் என்ற வார்த்தையை எனது திரைப்படங்கள் குறித்த பதிவுகளில் பயன்படுத்துவது இல்லை. இதற்கும் வேண்டாமென நினைக்கிறேன். ஆனால் கேட்க வேண்டுமென்றால் சில விஷயங்கள் இருக்கின்றன. தன் குடும்பத்தை சீக்கிரமே ஆனந்தபுரத்தில் இருந்து அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்லும் சூர்யா 5 வருடம் வரை அழைத்து செல்லாதது ஏன்? தனது குடும்பம் இறக்கும் வரை சூர்யா-ப்ரியாமணிக்கு குழந்தை இல்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு பழி வாங்குவது மட்டுமே யோசித்து குளிக்காமல் கூட சுற்றும் சூர்யாவிற்கு குழந்தைக்கும் முயற்சி செய்யும் எண்ணம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை அந்த வெடிகுண்டு சம்பவத்தின் போதே மூன்று மாதமாக இருக்கலாமே என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆந்திர அரசியலின் கதை, இந்தி டெக்னீசியன்கள், டப்பிங் போன்ற காரணிகளால் நம்பகத்தன்மை குறைந்தது போலிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய? மொத்தமாய் படம் ஒரு வித அயர்ச்சியை தருகிறது. டெக்னிக்கலாகவும் படம் மிரட்டவில்லை. பழிவாங்குதலில் இருக்கும் நிறைவை மட்டும் சொல்லாமல் பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் சொன்ன ஒரு விஷயத்திற்காக மட்டும் பாராட்டலாம். மற்றபடி பாலம் கட்ட அணில் தந்த உதவி போல் இந்த ரத்தசரித்திரத்தை எழுத நம்மிடம் சில துளி ரத்தம் கேட்பதற்காக கண்டித்துக் கொள்கிறேன்.


ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by Guest Sun 5 Dec 2010 - 19:53

சூர்யா தமிழனே இல்ல... அவ...க்கு இந்த மாதிரி படம் தன பொருந்தும்.... இந்த படாத வெளிட கூடாதுன்னு சொனப.. இலங்கை பிரச்சன முடிஞ்சு போன விஷயம் .... அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேன்னா சொன்ன நா... தான இவன்... சிவா சார் என்னை மன்னிக்க...

என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by balakarthik Sun 5 Dec 2010 - 19:58

madhanorigins wrote:சூர்யா தமிழனே இல்ல... அவ...க்கு இந்த மாதிரி படம் தன பொருந்தும்.... இந்த படாத வெளிட கூடாதுன்னு சொனப.. இலங்கை பிரச்சன முடிஞ்சு போன விஷயம் .... அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேன்னா சொன்ன நா... தான இவன்... சிவா சார் என்னை மன்னிக்க...
என்ன கொடுமை சார் இது

அது சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இப்போ எதுக்கு இத சொனீங்க அநியாயம் அநியாயம் அநியாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by balakarthik Sun 5 Dec 2010 - 20:05

madhanorigins wrote: சோகம்

படம் பாக்குரதுக்குமுன்னாடியே இப்படினா பார்த்தபிறகு மதன காம ராசா மதன கோமா ராசா ஆகிடுவிங்க ஜாக்கிரதை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by Aathira Sun 5 Dec 2010 - 20:10

//இந்த படத்தை எடுத்தவரை, பாருடா என்று சொன்ன நண்பனை, வெளி இட்ட திரை அரங்கு, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை என ஒருவரையும் விடாமல் பழிதீர்த்திருப்பேன்.//

அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.. எப்படி பாலா? அடுத்த படத்திற்கு கதை ரெடி.. :afro:

//மற்றபடி பாலம் கட்ட அணில் தந்த உதவி போல் இந்த ரத்தசரித்திரத்தை எழுத நம்மிடம் சில துளி ரத்தம் கேட்பதற்காக கண்டித்துக் கொள்கிறேன்.//
கொசுவுக்கெல்லாம் ரத்தம் கொடுக்கிறீர்கள்... ஒரு தமிழன் கேட்கிறான்.. கொடுக்கக் கூடாதா? ரத்தம் கொதிக்கிறது.. ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  44296


ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Aரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Aரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Tரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Hரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Iரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Rரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Aரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by balakarthik Sun 5 Dec 2010 - 20:17

Aathira wrote:கொசுவுக்கெல்லாம் ரத்தம் கொடுக்கிறீர்கள்... ஒரு தமிழன் கேட்கிறான்.. கொடுக்கக் கூடாதா? ரத்தம் கொதிக்கிறது.. ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  44296

ஒரு தமிழச்சி கேட்டிருந்தால் கொடுக்கலாம் தமிழனுக்கேல்லாம் கொடுக்கமுடியாது அக்கா பொழபத்தவேள


ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by கலைவேந்தன் Mon 6 Dec 2010 - 0:46

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty Re: ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum