ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

+2
கலைவேந்தன்
Aathira
6 posters

Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by Aathira Sat Dec 04, 2010 11:08 pm

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

சென்றஇதழில் எட்டு ஒன்பதாம் நூற்றாண்டான சோழர் ஆட்சி காலத்தில், மகப்பேறு அறுவைசிகிச்சை ஒரு துறையாகவே இருந்து வந்துள்ளது என்று பார்த்தோம். இதற்கும்சற்று முந்தைய கி.பி. 600 முதல் 850 வரையிலான காலத்தைப் பக்தி இலக்கியகாலம் என்பர். இதுவும் சோழர்களின் ஆட்சி காலமே. இக்காலத்தில் அறுவைச்சிகிச்சை, படிநிலை வளர்ச்சி அடைந்த நான்கு நிலையில் இருந்து வந்துள்ளது.மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Blank
உடலில்ஏற்படும் கட்டிகளுக்கு இந்த நான்கு முறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சைசெய்துள்ளனர். திசுக்களில் நுன்கிருமிகள் பரவுவதால் அழற்சி ஏற்படுகிறது.அதனால் பக்கத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டுஅப்பகுதியைச் சுற்றி வீக்கமும் அதனால் தாங்க முடியாத வலியும ஏற்படுகின்றன.அவ்வீக்கத்தில் இருக்கும் நுண்மங்கள், வெள்ளை அணுக்களின் ஒரு பாலிமார்ப்அணுக்கள் அவ்விடத்தில் உள்ள புரதப் பொருள்களை நொதிகளாக மாற்றி, அழுகும்திசுக்களை நீர்மமாக்குகிறது. இதுவே சீழ் எனப்படுகிறது.

உடலில் கட்டிகள் தோன்றினால், கட்டிகளை அறுத்தல், அதனுள் தேங்கிய இரத்தத்தைஅகற்றுதல், அப்பகுதியை நன்கு சுத்தப் படுத்துதல், பின்னர் மருந்தை இட்டுக்கட்டுதல் என்ற நான்கு நிலையில் மருத்துவம் செய்யப்படும்.

இந்த நான்கு நிலைகள் அக்காலத்தும் இருந்து வந்திருக்கிறது. இதனை பின்வரும் கம்பராமாணப் பாடலால் அறியலாம்.

“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்”

ஆனால்இன்றைய காலத்தில் சுத்தப்படுத்துவதற்கு டிங்சர். சாவ்லான், அல்லதுடெட்டால் பயன் படுத்துவது போன்றல்லாமல் அக்காலத்தில் நெருப்பால்சுட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இம்மருத்துவம், முறையான சித்த மருத்துவமருத்துவர்களால் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன.

இக்காலத்தில்நோயாளி மருத்துவர் மீதும், மருத்துவர் நோட்டின் மீதும் காதல்கொண்டிருப்பதைப் போல் அல்லாது அக்காலத்தில் மருத்துவர் மீது நோயாளியும்,நோயாளி மீது மருத்துவரும் காதல் கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால்நோயாளிகள் மருத்துவன் மீது பக்தியே கொண்டிருந்தனர் எனலாம்.

பக்திப் பணுவல்களை இயற்றிய வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார், இறைவன்எத்துனை துன்பன்களைத் தந்தாலும் அவனிடம் தனக்கு அன்பு குறையாமல்இருக்கிறது என்பதைக் கூறும் போது, அதற்கு உவமையாக ”மருத்துவன் வாளால்அறுத்து, சுட்டு மருத்துவம் செய்தாலும், அவன்மீது அன்பு குறையாத நோயாளிபோல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். பாடல் இதோ.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”

புண்ணுக்கு மருந்திட்டு அதனைப் பஞ்சால் சுற்றும் வழக்கமும் சங்கம் முதலேஇருந்து வந்துள்ளது. போர்மேல் கொண்ட ஆசையால் போர்க்களத்தில் ஏற்பட்டபுண்ணுக்கு மருந்திட்டு கட்டிய பஞ்சினைக் கூடக் களையாது ஆயுதங்களை ஏந்தித்திரிந்தனராம் வீரர்கள். இதனை

”செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெ•கமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”

என்ற பாடல் சுட்டுகிறது.

ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருந்தபோதுஎதிர் பாராத விதமாக அங்கு ஓடி வந்த காளை கொம்பால் வயிற்றில்குத்திவிட்டது. வயிற்றில் ஏற்பட்ட துளையின் வழியாக குழந்தையின் கையின்ஆள்காட்டி விரல் வெளியில் வந்து விட்டது. அப்பெண் மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்பட்டாள். வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்துதான் கையைஉள்ளே வைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். குழந்தையை வெளியில் எடுக்கமுடியாது. எடுத்தால் குறைமாதக் குழந்தையாகிபரிதவிக்கும். என்றெல்லாம் குழம்பிக்கொண்டு மருத்துவர்கள் நிற்க, தலைமைமருத்துவருக்கு ஒரு சிந்தனைப் பொறி கிளம்பியது. செவிலியிடம் ஒருஊதுபத்தியைக் கொளுத்தி எடுத்துவரச் சொன்னார். அந்த பத்தியால் குழந்தையின்விரலை லேசாகச் சுட்டார் (தொட்டார்). உடனே குழந்தை விரலை வெடுக்கென உள்ளேஇழுத்துக் கொண்டது. பிறகு கொம்பு பாய்ந்த தாயின் வயிற்றை தையல் போட்டுமூடினர். இது ஆங்கில மருத்துவ யுகமான இக்காலத்தில் நடந்தது.

ஒருவரின்மூக்கின் வழியாக மூளைக்குள் சென்று அமர்ந்து விட்டது தேரை ஒன்று. எப்படிஎன்று மூக்கின் மீது விரல் வைக்கிறீர்களா? ஒரு வேளைஉறங்கிக்கொண்டிருக்கும் போது சென்றிருக்கும். அவ்வளவு பெரிய மூக்குத்துவாரமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. தேரை குட்டியாக இருந்திருக்கலாம்இல்லையா?

சரி விஷயத்திற்கு வருவோம. தேரை மூளைப்பகுதியைக்கெட்டியாகக் கெளவிப் பிடித்திருந்தது. அகத்தியரின் அறுவை சிகிச்சைதொடங்கியது. மூளைக்குள் இருக்கமாகப் பற்றியிருந்த தேரையை எடுக்க வழி என்னஎன்று சிந்தித்தார். ஏனெனில் மூளை மிகவும் மென்மையான பகுதி மட்டுமல்ல.உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் முக்கிய பகுதி. உடனே உடனிருந்ததேரையார் உபாயம் ஒன்று கண்டு சொன்னார்.

ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தை எடுத்து வந்து தேரையின் முன் காட்ட, மூளைக்குள் இருந்த தேரை நீருக்குள் தொப்பென்று குதித்தது.

உன்னைப்போற்றுகிறேனடா என் சீடா என்று கட்டியணைத்து கொண்டாராம் அகத்தியர்தேரையாரை. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த நம் மண்ணின்மருத்துவர்களாகிய சித்தர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன சமயோசிதத்தில்?இந்தப் பாடல் சற்று நீளமானாது. ஆனால் சுவையானது. படித்துப் பாருங்களேன்.

“பொருந்தியே தேரையது மூளைதன்னை

பொலிவான நாசிவழி தன்னில் சென்று

வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ

வாகுடனே தேரையது பொருந்தி நிற்க

கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு

கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க

மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க

புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

புகழான தேரையர் முனிவர் தாமும்

சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்

சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே.

சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்

தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு

ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட

அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே

நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்

நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து

போற்றியே என்சீடா பொன்னரங்கா

பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே”

ஒரேகல்லில் இரு மாங்காய். சித்தர் மூளைப்பகுதியைக் கூட அறுவை செய்துள்ளனர்.அத்துடன் இத்தகு சம்யோசித சிந்தனையிலும் சிறந்தே விளங்கிஇருந்திருக்கிறார்கள்.

சரி கத்தியால் மூளையைக் கிழித்தாகள். தைப்பதற்கு எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள். அடுத்த இதழில் பார்க்கலாமே.

அறுவை தொடரும்.. .. ..


ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த்


மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by கலைவேந்தன் Sat Dec 04, 2010 11:29 pm

வியக்கவைக்கும் அருமையான செய்திகள்... தொடருங்க...!

- மூக்கில் விரலைவைத்த படி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by Aathira Mon Dec 06, 2010 2:29 pm

கலை wrote:வியக்கவைக்கும் அருமையான செய்திகள்... தொடருங்க...!

- மூக்கில் விரலைவைத்த படி

இதுக்கே மூக்கில் விரல் வைத்தால் எப்படி? இன்னும் இருக்கே... மிக்க நன்றி கலை. மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550 மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550


மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 3:05 pm

மிக்க நன்றி அக்கா........................
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by Thanjaavooraan Mon Dec 06, 2010 3:47 pm

அரிய தகவல்கள், அறியவேண்டிய தகவல்கள் மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by Aathira Tue Dec 07, 2010 11:26 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:மிக்க நன்றி அக்கா........................
நன்றி ப்ரியன். மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550


மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by உதயசுதா Wed Dec 08, 2010 10:46 am

அக்கா இது எல்லாமே வியக்க கூடிய செய்திகளாக
உள்ளது.ஆனால் எது எல்லாத்தையும் ஒரே பதிவுல தொடர்ந்து கொடுத்தா நல்லா இருக்குமே



மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Uமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Dமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Yமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Sமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Uமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Dமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by சாந்தன் Wed Dec 08, 2010 11:09 am

கொடுப்பாங்க கொடுப்பாங்க ... கடைசியியில் மொத்தமாக ஒரு pdf வடிவில் தயாரித்து கொடுப்பாங்க ... சரியா அக்கா ...
சூப்பர் அக்கா ... நன்றி நன்றி நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by Aathira Wed Dec 08, 2010 10:22 pm

உதயசுதா wrote:அக்கா இது எல்லாமே வியக்க கூடிய செய்திகளாக
உள்ளது.ஆனால் எது எல்லாத்தையும் ஒரே பதிவுல தொடர்ந்து கொடுத்தா நல்லா இருக்குமே

முடிச்சவுடனே மாத்திடலாம் சுதா.. மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 678642 மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550


மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty Re: மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum