ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

3 posters

Go down

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Empty பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

Post by அன்பு தளபதி Fri Dec 03, 2010 2:29 pm

பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கைது செய்வதற்கான நடவடிக்கையை புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்கொண்டதைத் தொடர்ந்தே அவர் தனது பயணத்தை கைவிட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிப்பென்டன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்தா பிரித்தானியா வரும்போது அவரை கைது செய்வதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக புலம்பெயர் தமிழ் சமூகம் விடுத்த அச்சுறுத்தலை தொடர்ந்தே சிறீலங்கா அரச தலைவர் தனது பயணத்தை கைவிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் சபையில் பேசுவதற்கும் மகிந்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் எல்லாம் மிகவும் குறுகிய நேர அறிவுப்புடன் கைவிடப்பட்டுள்ளது. அனைத்துலக சட்டத்தின்; பிரகாரம் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக குற்றம் செய்தவரை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முடியும்.

ஆனால் மகிந்தா வேறு பணிகளில் கவனம்செலுத்தி வருவதால் பிரித்தானியா பயணத்திற்கான காலம் மாற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவருகின்றது. பிரித்தானியாவின் இந்த சட்டமூலம் மாற்றப்பட வேண்டும் என சில நாடுகள் கருத்து தெரிவித்துவருகின்றன.

பிரித்தானியா செல்லும்போது தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சியதால்இஸ்ரேல் அமைச்சர் டான் மெரிடோர் தனது பயணத்தை அண்மையில் கைவிட்டிருந்தார். அதன் பின்னர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரிடம் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல், பிரித்தானியாவுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்களை தாம் அதனால் கைவிட நேர்ந்ததாக தெரிவித்திருந்தது.

சிலி நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒகஸ்ரோர் பினோசற் பிரித்தானியாவுக்கு வருகைதந்தபோது கடந்த 1998 ஆம் ஆண்டு ஸ்கொட்லான்ட்யாட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவ அரசு ஆட்சியில் இருந்தபோது அவர் துன்புறுத்தல்கள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டிருந்தார்.

எனினும் நீண்டகாலம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளின் போது, கொன்சவேட்டிவ் கட்சியின் அமைச்சர் ஒருவரின் தலைமையில் பினோசற்றுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, உடல்நிலையை காரணமாகக்காட்டி பிரித்தானியா அரசு அவரை விடுதலை செய்திருந்தது.

ஆனால் தற்போதைய சட்டத்தின் பிரகாரம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவரை கைது செய்வதற்கான கைது அனுமதியை தனிநபரோ அல்லது மனிதாபிமான அமைப்புக்களோ பிரித்தானியாவின் நீதி மன்றத்தில் பெறுவது சுலபமானது. எனினும் தற்போது பிரித்தானியா அரசு முன்வைத்துள்ள மாற்றங்களில், இந்த சம்பவத்தில் பொது நீதிமன்றத்தின் பணிப்பாளர் உள்ளடக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தின் பிரகாரம் நாட்டின் தலைவர்கள் கூட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட முடியும். ஏனினும் தனிப்பட்ட பயணம், உத்தியோகபூர்வ பயணம் தொடர்பில் சட்டம் தெளிவற்றதாகவே உள்ளது.

தான் விமானத்தை விட்டு இறங்கினால் கைது செய்யப்படலாம், அதற்கான கைது உத்தரவை பலஸ்த்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்றுவிடுவார்கள் என்பதற்காக இஸ்ரேலிய ஜெனரல் ஒருவர் ஹீத்தூறு விமானநிலையத்தில் விமானத்திலேயே தங்கியிருந்த சம்பவமும் உண்டு. இதனால் 2005 ஆம் ஆண்டு பிரித்தானியா பிரதமர் ரொனி பிளேயர் அனுப்பிய அழைப்பை கூட நிராகரிக்குமாறு அண்றைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் சரோனுக்கு தெரிவிக்கப்பட்டது.

நானும் எனது ஜெனரலைப் போலவே இராணுவத்தில் பணியாற்றியவன். நானும் ஜெனரல் தான். பிரித்தானியாவின் சிறை மிகவும் கடுமையானது. எனவே அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை என சரோன் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவில் கடந்த வருடம் இடம்பெற்ற போர் தொடர்பில் சிறீலங்கா அரசு மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அங்கு 10,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரிடம், பிரித்தானியா வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக் கூட அதனைத் தான் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் இரண்டாவது தடவை அரச தலைவர் தேர்தலில் வெற்றியீட்டிய மகிந்தா அங்குள்ள அரசியல் யாப்பையும் மாற்றி அமைத்துள்ளார். அவர் மறு தடவையும் அரச தலைவர் தேர்தலில் பங்குகொள்ளலாம். சுயாதீன விசாரணைகளையும் சிறீலங்கா அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.

சிறீலங்கா அரசு தனது சொந்த விசாரணைக்குழுவை அமைத்துள்ளபோதும், அதன் மீது மனித உரிமை அமைப்புக்கள் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளன. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையும் அதனை விமர்சித்துள்ளார்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களில் பலியாகிய மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தாவும், அவரின் சகோதரர்களும், கையாட்களும் தமது எதிர்காலம் தொடர்பான கவலையுடனே தினமும் படுக்கைக்கு செல்லமுடியும், ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியை விட்டு இறங்கினாலும் இது தான் அவர்களின் கதி. தமிழில் ஒரு வார்த்தை உண்டு, அதாவது அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று. அதனைத்தான் இங்கு கூறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சங்கமம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Empty Re: பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

Post by kirikasan Fri Dec 03, 2010 2:58 pm

மகிந்தவை கைது செய்ய இப்போது முடியாது அவர் பிரித்தானிய மகாராணியிடம் ஏற்கனவே சிறீலங்காவிலிருந்து போன் மூலமாகப் பேசி தன்னை எதுவும் செய்துவிடக்கூடாதென்று உறுதி மொழி வாங்கிய பின்னரே கிளம்பியதாக தகவல் கசிந்திருக்கிறது.
அதைவிட கைது செய்ய ஆதாரங்கள் போதாதென்று போர்குற்றகளில் முடிவை நிர்ணயிக்கும் ஏதோ ஒரு பிரிவு (ஞாபகமில்லை) கூறுவதாக காணொளி ஒன்றில் கண்டேன்

இவ்வளவு ஆதாரங்கள் போதாதா? சனல் 4 ன் செய்தி பிரிவினரோ
போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி பகுதிபகுதியாக வெளியிடுகிறார்கள்.
இனி கைது செய்பவர்கள் மனம் வைக்கவேண்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Empty Re: பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

Post by அன்பு தளபதி Fri Dec 03, 2010 3:06 pm

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அண்ணா இவனுக்கும் இவனுக்கு உதவி செய்த இந்தய அரசியல் வாதிகளுக்கும் நிச்சயம் இறைவன் தண்டனை தருவான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Empty Re: பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

Post by ஷர்மிஅஷாம் Fri Dec 03, 2010 3:13 pm

maniajith007 wrote:அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அண்ணா இவனுக்கும் இவனுக்கு உதவி செய்த இந்தய அரசியல் வாதிகளுக்கும் நிச்சயம் இறைவன் தண்டனை தருவான்
சியர்ஸ் சியர்ஸ்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்  Empty Re: பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்தாவை கைது செய்யுங்கள் - பிரித்தானிய பொலிசாரிடம் தமிழர்கள் முறைப்பாடு
» சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்
»  பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் கொலை சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது..
» எஸ்ஆர் கோபி கடிதத்தை வைத்து அழகிரியை கைது செய்ய முயற்சி?
» ’ஸ்கீம்’- ஐ வைத்து விளையாடும் மத்திய அரசு: காவிரி பிரச்சினை என்ன செய்ய முடியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum