ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன்

Go down

சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Empty சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன்

Post by தாமு Thu Dec 02, 2010 6:56 am

சமையல் குறிப்புகள் பற்றி எழுதிய புத்தகத்திற்கு சர்வதேச விருதான "கோர்மேன்ட் வேர்ல்டு குக் புக்" (Gourmand World Cook Book Awards) விருதைப் பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த விஜி வரதராஜன். ஆஸ்கார் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதன் மூலம், நம்முடைய பாரம்பரிய உணவான தயிர் சாதத்தையும், மாவடுவையும் சர்வதேச "டைனிங் மெனு"வில் இடம் பெறச் செய்துள்ளார். பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருந்த அவரைச் சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில் சந்தித்துப் பேசினோம்.

"நான் எத்திராஜ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தேன். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய கணவருடைய பிசினஸீக்கு உறுதுணையாக இருந்தேன். இடையில் என்னுடைய அம்மா மற்றும் மாமியாரிடம் இருந்து சமையல் கலையைக் கற்றுக் கொண்டேன். அவர்கள் சமையலைப் பற்றி சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. விதவிதமாக சமையல் செய்யத் துவங்கினேன். என்னுடைய சமையலை ருசித்த நண்பர்கள், சமையல் பற்றிய தகவல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் அனைவரும் பயன்பெறுவார்களே என்று யோசனைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, நான் 2001-ம் ஆண்டு "சமையல்-தி பிளஷர்ஸ் ஆஃப் சவுத் இன்டியன் வெஜிடேரியன் குக்கிங்" (Samayal-The Pleasures of South Indian Vegetarian Cooking) என்ற முதல் புத்தகத்தை எழுதினேன். இதையடுத்து, "ஃபெஸ்டிவல் சமையல்-ஆன் ஆஃபரிங் டு தி காட்" (Festival Samayal-An Offering To The Gods) மற்றும் "எ ஹெல்தி டேஸ்ட் ஆஃப் தி இன்டியன் கல்ச்சர்:குக்கிங் வித் யோகர்ட்" (A Healthy Taste of Indian Culture:Cooking with Yoghurt) ஆகிய மூன்று புத்தகங்களை எழுதினேன்.

சமையல் குறிப்புகள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்குச் சர்வதேச அளவில் கோர்மேன்ட் என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. ஃபிரெஞ்சு நாட்டில் பிறந்து தற்போது ஸ்பெயினில் வசித்து வரும் எட்வர்டு காய்ன்டிரியோ என்பவர்தான் இந்த விருதை நிறுவியவர். இவர், 1995-ம் ஆண்டு முதல் சமையல் குறிப்புகள் பற்றி எழுதப்படும் சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறார். திரைப்படத் துறைக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியமான விருதாகக் கருதப்படுகிறதோ, அந்த அளவுக்கு உணவுத் துறையில் இந்த விருது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த விருதைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைக்கும்.

இந்த விருது, நல்ல உணவுகள் தொடர்பான சமையல் குறிப்புகள் பற்றி எழுதுபவர்களைக் கௌரவிப்பதற்காக வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்டுதோறும் சமையல் குறிப்புகள் தொடர்பாக மட்டும் 24,000 புத்தகங்கள் வெளியாகின்றன. இதில் சிறந்த புத்தகங்கள் எவை என்பதைத் தேர்வு செய்யவும் இந்த விருது வாசகர்களுக்கு உதவி புரிகிறது. அத்துடன், சமையல் குறிப்புகள் தொடர்பான புத்தகங்களை மொழிப் பெயர்ப்பு செய்ய பதிப்பாளர்களுக்கு சர்வதேச உரிமையைப் பெறவும், புத்தக நிலையங்கள் சிறந்த புத்தகங்களை தங்கள் கடையில் விற்பனைக்கு வைக்கவும் இந்த விருது பெரிதும் உதவுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது குறித்த தகவலை நான் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதற்கு விண்ணப்பித்தேன். நிபுணர்கள் கொண்ட குழு பரிசுக்குரியதாக இந்தப் புத்தகங்களைத் தேர்வு செய்தது. என்னோடு சேர்த்து இதுவரை இந்தியர்கள் மூன்று பேர் மட்டுமே பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த விருதைப் பெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையும் எனக்குக் கிடைத்துள்ளது. 2005-ம் ஆண்டு ராஷ்மி உதய் சிங் எழுதிய "அரவுன்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி பிளேட்ஸ்" (Around the World In Eighty Plates) என்ற புத்தகமும், ஜிக்யாசா கிரி மற்றும் பிரதிபா ஜெயின் ஆகிய இருவர் எழுதிய "குக்கிங் அட் ஹோம் வித் பெடாதா" (Cooking at home with Pedatha) என்ற புத்தகமும் சர்வதேச அளவில் சிறந்த வெஜிடேரியன் உணவுக்கான விருதைப் பெற்றன.

இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு நான் என்னுடைய மூன்று புத்தகங்களையும் அனுப்பி வைத்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 107 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரம் புத்தகங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. இதில் என்னுடைய மூன்று புத்தகங்களுக்கும் விருது கிடைத்தது. சமையல் புத்தகம் சிறந்த வெஜிடேரியன் உணவுக்கான புத்தகம் என்ற கேட்டகிரியிலும், ஃபெஸ்டிவல் சமையல் புத்தகம் சிறந்த லோக்கல் குக்கரி புத்தகத்துக்கான கேட்டகிரியிலும், குக்கிங் வித் யோகர்ட் புத்தகம் சிறந்த சிங்கிள் சப்ஜெக்ட் மற்றும் சிறந்த ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் புத்தகத்துக்கான கேட்டகிரியிலும் தேர்வு பெற்றன.

என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் தென்னிந்திய சைவ உணவுகள் பற்றி எழுதப்பட்டவை. மேலும், சமையல் குறிப்புகள் அனைத்தும் எளிமையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், எளிய நடையிலும் எழுதப்பட்டுள்ளன. இதனால், என்னுடைய புத்தகத்தைப் பார்த்து யார் வேண்டுமானாலும் எளிதாகவும், ருசியாகவும் சமைக்க முடியும்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களும் சரி, அங்கு சென்று செட்டில் ஆகும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த யுவதிகளும் சரி என்னுடைய புத்தகத்தைப் படித்து பார்த்துதான் சாம்பாரே வைக்கக் கற்றுக் கொள்கின்றனர். நம்முடைய பாரம்பரிய சமையல் என்பது ஒரு மனிதனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒழுங்குபடுத்தும்.

ஆனால், இன்றைய சமையல் முறைகள் இவற்றுக்கு நேர் மாறாக உள்ளன. இவற்றைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய முக்கிய நோக்கம். இந்த விருதைப் பெற்றுள்ளதன் மூலம் நம்முடைய பாரம்பரிய சமையலின் புகழ் உலகமெங்கும் பரவும். அதேபோல், சர்வதேச அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் இடம் பெறும்.

மேலும், இந்தப் புத்தகங்களை சர்வதேச மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான உரிமத்தைப் பெற பதிப்பாளர்களுக்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்தப் புத்தகங்கள் விரைவில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வெளியாக உள்ளது. இதேபோல், தமிழ் பிராமணர்களுடைய சமையல் தொடர்பான புத்தகம் ஒன்றை நானும், பத்மினி நடராஜன் என்பவரும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளோம். இந்த ஆண்டுக்கான விருதுக்கு இப்புத்தகத்தை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளோம்" என்றார்.


--பி.முரளிதரன்
நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum