புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
48 Posts - 43%
heezulia
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
2 Posts - 2%
prajai
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
414 Posts - 49%
heezulia
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
28 Posts - 3%
prajai
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_m10அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 9:11 am

அன்றும் இன்றும் அறுவை



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 220px-Caesarian_section_-_Pull_out

ஒரு மருத்துவமனையில், பலர் அறுவை சிகிச்சைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் தியேட்டர் முன்பு அமரவைத்திருந்தனர் அம்மருத்துவ மனையின் மருத்துவர்கள். பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் சிறு சிறு அறுவை சிகிச்சைகள் இவ்வாறு ஒரே நேரத்தில் அடுத்தடுத்துப் பலருக்குச் செய்வது வழக்கம். முதலில் மயக்க மருந்து கொடுத்து அமரவைத்திருப்பர். உள்ளே அழைத்துச் சென்ற பின்பு அப்பகுதி மட்டும் மறத்துப் போகும் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்து விடுவர்.

அம்மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு அமர்ந்தவர்களில் ராமனும் ரஹ்மானும் அடங்குவர். உள்ளிருந்து ஆப்ரேஷனுக்காக ரஹ்மானை அழைக்க, பாதி மயக்க நிலையில் இருந்த ராமன் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து உள்ளெ சென்று விட்டார். அதிவிரைவில் அமோகமாக அறுவை சிகிச்சை முடிந்தது. பின்னர் தான் தெரிந்தது அவர் ராமன் என்று. அறுவை சிகிச்சையில் ஒரு சிறு வித்தியாசமே. ராமன் வந்திருந்தது விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு. ரஹ்மான் வந்திருந்தது சுன்னத் அறுவை சிகிச்சைக்கு. என்ன நடந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இது கட்டுக்கதை அல்ல. உண்மைச் சம்பவம். ஆந்திர மாநிலத்தில் நடந்தது.


ஏன் நடிகை ஷ்ரிதேவியின் தாயாருக்கு நடை பெற்ற அறுவை சிகிச்சைபற்றி பக்கம் பக்கமாக எல்லா இதழ்களூம் கிழித்துத் தள்ளியதை நம்மால் மறக்கத்தான் முடியுமா? இத்தனைக்கும் ஷ்ரிதேவியின் தாயாருக்கு மருத்துவம் அளித்தது அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு பெரிய மருத்துவமனை.


இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், அறுவை சிகிச்சை அத்துனை எளிதாக, விரைவாக, அதிகமாக இக்காலங்களில் நடைபெறுகிறது. யாராவது கிடைப்பார்களா, என்று உடல் உறுப்புகளை வெட்டி எறிய கத்தியுடன் காத்திருக்கும் மருத்துவர்கள் பெருகிவிட்டனர். அதனால் ஒரு சில தவறுகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்ல போகிற போக்கில் உறுப்புகளைத் திருடிப் பிழைக்கும் சதிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரி முந்தய காலங்களில் அறுவை முறை இருந்து இருக்குமா? அவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு இருந்தார்களா? என்பதை அறிய வேண்டாவா?


பண்டைய காலங்களில் அறுவை சிகிச்சை நடக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் வீரயுகம் என்று அழைக்கப் பட்ட போர்க்காலங்களில் இது போன்ற சிகிச்சைகள் நிச்சயமாக இருந்து இருக்க வேண்டும்.


கூர்மையான நகங்களை உடைய கழுகின் தாக்குதலால், புண் எய்தி தன்னிடம் தஞ்சம் அடைந்த ஒரு புறாவுக்காகத் தன் தசையைத் தந்தான் ஒரு மன்னன். கானகத்தில் கண்களில் குருதி வழிய அமர்ந்து இருந்த ஒரு தெய்வக் கற்சிலைக்கு, தன் கண்ணை எடுத்து அப்பினான் ஒரு வேடன். இச்செய்திகள் எதனைக் குறிக்கின்றன? இக்காலத்து உடல் உறுப்புக் கொடைக்கு முன்னோடிகளாக இவர்கள் இருந்து உள்ளனரோ என்று என்று எண்ணத் தோன்றுகிறது. சிபி சக்கரவர்த்தி புறாவுக்குத் தன் தசையைத் தந்தது, இன்றைய தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. ஆய்வு நோக்கில் சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மையாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் புறாவைக்காக்க வேடனுக்கு ஏன் தசையைக் கொடுக்க வேண்டும் சிபி. அங்கு என்ன நடந்து இருக்கும்? ஒரு வேளை அம்புப் பட்டுச் சிதைந்து போன தசைக்குப் பதிலாகத் தன் தசையை வைத்து தைத்திருப்பானோ மன்னன். இதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் புறாவுக்குத் தன் உடலின் தசையை அறுத்துக் கொடுத்தான் சிபிச்சக்கரவர்த்தி என்று இன்றும் கூறிக் கொண்டிருக்கிறோமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இது கர்ண பரம்பரை கதை.


ஆனால் இரண்டாவதை, மருத்துவ அடிப்படையில் நோக்கினாலும், ஆன்மீக அடிப்படையில் நோக்கினாலும், இன்றைய கண் படல மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டிய பாமரன் கண்ணப்பன் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 300px-Uganda_cesarean_section
ப்ண்டைய காலத்தில் அறுவை செய்வதற்கு செம்பினால் ஆன கத்தியைப் பயன் படுத்தினர் என்கிறது அகழ்வாய்வு அறிக்கை. சிந்து வெளி ஆய்வில் கிடைக்கப்பட்ட ஆயுதங்களில் மடுத்துத்துவத்துக்குரிய கத்திகள் கிடைத்துள்ளன். இதன் சிறப்பு என்ன என்றால பக்க விளைவுகளை ஏற்படுத்தாத உலோகம் செம்பு என்பதை அவர்கள் அறிந்து இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

அக்காலத்தில் தசையைச் சேர்த்துத் தைப்பதற்கு வெள்ளூசியைப் பயன் படுத்தினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தையல் போடுவதற்கு செந்தலை எறும்புகள் என்ற ஒரு வகை எறும்புகளையும் பயன்படுத்தினர் என்பர். எப்படி என்று கேட்கிறீர்களா? தையல் போட வேண்டிய தோலில் இவ்வெறும்புகளை விடுவர். அவை சதையை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ளும்போது (அதாவது கடிக்கும் போது) அதன் உடல் படுதியை வெட்டி எடுத்து விடுவார்களாம். எத்தனை தையல் போட வேண்டுமோ அத்தனை எறும்புகளை பயன் படுத்துவார்களாம். (இச்செவிவழிச் செய்தியை வழங்கியவர் ஆசிரியர். முனைவர் சி. வெ. சுந்தரம்)

சாதாரனமாகத் திருவள்ளுவர் ஒருவரைப் பாராட்டி விடுவாரா என்பதையும் இங்கு நாம் சிந்திக்க வேண்டும். ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று கூறுகிறார், என்றால் யாரோ ஒருவர் பிறருக்கு எலும்பைத் தந்திருக்கிறார் என்றுதானே பொருள். அதுமட்டுமல்ல ‘என்பும்’ என்று கூறும்போது அச்சொல்லுக்கு முன்னாலோ பின்னாலோ மற்றொரு சொல்லையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் சொற்கள் பெரும்பாலும் இரட்டைச் சொற்கள். நன்மையும் தீமையும், இரவும் பகலும், கையும் காலும், என்பது போல எலும்புடன் இணையும் மற்றொரு சொல் தோல். எலும்பும் தோலும் என்பது இணைச் சொற்கள். இதற்கும் சான்று திருவள்ளுவரே தருகிறார், ‘என்பு தோல் போர்த்திய உடம்பு’ என்ற மற்றொரு திருக்குறளில். எனவே எலும்பையும் தோலையும் திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே கொடையாகத் தந்தவர்களோ அல்லது தந்தவரோ இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா? யார் அவர் என்பதைத் தெரிந்து கொள்ள பரிமேலழகரின் திருக்குறள் உரையைப் பார்த்தால், சங்கப் பாடல் ஒன்றைச் சான்று காட்டுகிறார். அப்பாடலில் பேசப்படுவது சிபி மன்னனின் கொடைப் பண்பைப் (தசை தானத்தை) பற்றியே. எனவே சிபி தசையைக் கொடுத்தார் என்பது தெளிவு. யாருக்கு என்பதில் தான் ஐயம். இந்த ஆய்வை பிறகு பார்ப்போம். இப்பொழுது அந்த சங்கப் பாடலைப் பார்ப்போமா?



“கால்உணவு ஆகச் சுடரொடு கொட்கும்


அவிர்சடை முனிவரும் மருள, கொடுஞ்சிறைக்


கூர்உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து, ஒரீஇ,


தன்அகம் புக்க குறுனடைப் புறவின்


தபுதி அஞ்சிச் சீரை புக்க


வரையா ஈகை உரவோன்”


அறுவை மருத்துவ முறை பற்றி ஒவ்வொரு குறிப்புகள்ஒவ்வொரு நூலில் காணப்படுகின்றன. அறுவை மருத்துவத்தில் என்னென்ன முறைகள்செய்யப்பட்டன என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவக சிந்தாமணி.


சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்ததினால், விரிவான செய்திகளைத் தருவதாக அமைந்து' அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

”முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே''

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்தமருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று உரைப்பதினால், புண்பட்டார்க்குச்செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.

” நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்'

உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால்அறுத்தெடுத்துள்ளனர் என்று இப்பாடலடிகள் விளக்குகின்றன. நெய்யில்தோய்த்த துணியைப் இரும்புத்துண்டு நுழைந்த உடற்பகுதியின் மேல் போர்த்துவர். புண்பட்டாரை நெய்ப்பத்தலில்கிடத்துவர்; உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால்அறுத்தெடுப்பர்;

கால அடிப்படையில் இடைக்காலத்துக்கும் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போம். சோழர்கள் ஆட்சி காலத்தை, இலக்கிய அடிப்படையில் சிற்றிலக்கிய காலம் என குறிப்பர். சோழர்கள் ஆட்சி காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த ஒன்பதாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை இருந்திருக்கிறது என்பதற்கு ஊர் பெயருடன் சான்று உள்ளது. கொங்கு மண்டலத்தில், மகப்பேற்று அறுவை சிகிச்சை முறை ஒரு துறையாக வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. அதனைப் பெண் மருத்துவர் (மருத்துவச்சி) செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செய்தி ‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தால் அறியலாகிறது. காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல், பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள். அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.


“குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்


இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்


துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்


மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே”



இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து (கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. ஏனெனில் ‘வகிர்வழி’ என்று கூறியிருந்தால் சாதாரனமாக வகிர்ந்து எடுத்தாள் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ‘வகிர் துறைவழி’ என்ற சொல்லாட்சி அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.


அறுவை தொடரும்....



ஆதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்.









அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Empty
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 28, 2010 12:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வு சகோதரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 2:15 pm

vmrmohan wrote: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196 நல்ல பகிர்வு சகோதரி அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196
மிக்க நன்றி மோகன். அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 154550



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Empty
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 2:29 pm

அருமையான பதிவு.நன்றிகள் அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:31 pm

Thanjaavooraan wrote:அருமையான பதிவு.நன்றிகள் அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196
நன்றி தஞ்சாவூரன். அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 678642 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 154550



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 28, 2010 4:44 pm

தமிழர்கள் எதற்கும் எவர்க்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு எடுத்துகாட்டு இந்த கட்டுரை அக்கா.
பகிர்ந்தமைக்கு நன்றி




அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Uஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Dஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Yஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Sஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Uஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Dஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 5:04 pm

உதயசுதா wrote:தமிழர்கள் எதற்கும் எவர்க்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு எடுத்துகாட்டு இந்த கட்டுரை அக்கா.
பகிர்ந்தமைக்கு நன்றி
ஆமாம் சுதா. நம்ம செய்ததற்கெல்லாம் பெயர் அவங்க வெச்சுட்டாங்க.. அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 440806 இதனோட தொடர்ச்சி இதைவிட இன்னும் செய்திகள் இருக்கு சுதா.
பதிவிடுகிறேன் விரைவில்.
கருத்துக்கு நன்றி சுதா.. அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 154550



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 28, 2010 7:20 pm

அருமையான பகிர்வு நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:26 pm

Thanjaavooraan wrote:அருமையான பதிவு.நன்றிகள் அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 677196
நன்றி தஞ்சாவூரன் அவர்களே.. அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 154550



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 06, 2010 2:33 pm

ஹாசிம் wrote:அருமையான பகிர்வு நன்றி அக்கா

மிக்க நன்றி ஹாசிம் அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை 154550



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக