ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலவையாளர் காந்திஜி

3 posters

Go down

சலவையாளர் காந்திஜி Empty சலவையாளர் காந்திஜி

Post by சிவா Sun Nov 21, 2010 12:22 am

''என்ன காந்தி, உங்கள் காலர் இப்படி விறைத்துக் கொண்டு நிற்கிறதே! அசிங்கமாக இருக்கிறது''.

''பரவாயில்லை. நானே சலவை செய்தேன். ஸ்டார்ச் மாவு கொஞ்சம் அதிகமாகிவிட்டது போல் இருக்கிறது. சலவைப் பெட்டி சூடாகவில்லை. அழுந்தவில்லை. முதல் முயற்சிதானே! போகப் போக நன்றாகக் கற்றுக் கொண்டு விடுவேன். என்னைப் பார்த்துச் சிரிப்பதற்காவது உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே.''

''ஏன், இங்குச் சலவை நிலையங்கள் குறைவாக இருக்கின்றனவா என்ன?''

''இல்லை,சலவைச் செலவு மிகவும் அதிகமாகிறது. காலருக்குக் கொடுக்கும் கூலியில் ஒரு காலரைப் புதிதாக வாங்கிவிடலாம். அது மட்டுமல்ல. சலவைக்காரரையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய துணிமணிகளை நானே துவைத்துக் கொள்ள விரும்புகிறேன்.''

தென் ஆப்பிரிக்காவில் காந்திக்கும் அவரது சக வக்கீல்களுக்கும் இடையே கோர்ட்டில் நடந்த உரையாடல் இது.

காந்திஜிக்கும் மிகவும் சுத்தமாகக் கோர்ட்டுக்கு ஐரோப்பிய உடையில் கால்சராய், சட்டை, கோட்டு, டை, காலர் அணிந்து கொண்டு போக வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடையை மாற்ற வேண்டும். செலவு ஏகமாக ஆகிக் கொண்டிருந்தது.

சலவைப் பாடப் புத்தகம்

சலவைக்கு ஆகும் செலவைக் குறைத்துக் கொள்ள காந்திஜி விரும்பினார். ஒரு நாள் கடைக்குப் போய் சலவைப் பெட்டி, சலவைத்தூள், சோப்பு இவைகளை வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால் எப்படித் துணிகளை வெளுப்பது, எப்படிச் சலவைப் பெட்டி போடுவது என்பது தெரியாது. இதற்காகக் காந்திஜி சலவை செய்வது எப்படி என்ற புத்தகம் ஒன்றை வாங்கி வந்தார். நன்றாகப் படித்துப் பார்த்து சிறப்பாகச் சலவை செய்து பெட்டி போடத் தெரிந்து கொண்டார்.

கோர்ட்டுக்குப் போகும் வேலையுடன் இப்படித் துணிகளைத் துவைத்து பெட்டி போடும் வேலையும் சேர்ந்து கொண்டது. சளைப்பவரா காந்திஜி? எந்தக் காரியமானாலும் பிறரையே நம்பி இருக்காமல் தன்கையே தனக்குதவி என்ற தத்தவத்தைக் கடைப்பிடித்த மகாத்மா துணிகளை வெள்ளை வெளேரென்று, துவைத்துப் பெட்டி போட்டுக் கொண்டு பெருமிதத்தோடு கோர்ட்டுக்குச் செல்வார்.

கோகலேவுக்கு ஆச்சரியம்!

கோபாலகிருஷ்ண கோகலேயைக் காந்திஜி தன் குருநாதராகக் கொண்டவர். அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர். அவர் ஒரு நாள் காந்திஜியின் அறையில் தங்கினார். கோகலேவுக்குத் தேநீர் விருந்துக்குப் போக வேண்டியிருந்தது. சலவைக்காரரிடம் தன்னுடைய அங்கவஸ்திரத்தைக் கொடுத்துச் சலவை செய்து பெட்டி போட்டுக் கொண்டுவரச் சொல்ல நேரமில்லை.

அங்கவஸ்திரம் கசங்கி இருக்கிறதா? நான் பெட்டி போட்டுத்தரட்டுமா?' என்று பாபுஜி வினவினார்.

''நீங்களாவது, பெட்டி போடுவதாவது? உங்கள் வக்கீல் திறமை எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் சலவைத் திறமையை நான் நம்ப முடியாது. துணியைக் கெடுத்துவிட்டால்?''

''அதெல்லாம் ஒன்றும் கெடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொல்லி மிகவும் நன்றாகப் பெட்டி போட்டுக் கொடுத்தார்.

''ஆகா பிரமாதம் - நன்றாகப் பெட்டி போட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் நல்ல சலவையாளர் என்று நான் நற்சான்றிதழ் வழங்குகிறேன்'' என்றார் கோகலே மகிழ்ச்சி பொங்க!

''மிக மிக நல்லது. உலகம் முழுவதும் சேர்ந்து எனக்குச் சான்றிதழ் வழங்க மறுத்தால் கூட நான் கவலைப்படமாட்டேன். சலவைத் தொழில் ஒரு கலை. இதைக் கற்றுக்கொண்ட உங்களுக்கு உதவி செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார் மகாத்மா பணிவன்புடன்.

கஸ்தூரிபாவின் கைக்குட்டையைத் துவைத்தார்

வயதான காலத்தில சிறையில் இருந்த போது கூட தனது இடுப்பு வேட்டி, நாப்கின், கைக்குட்டை இவற்றை எல்லாம் தானே துவைப்பார். தனது சகாக்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்கமாட்டார். ஆகாகான் அரண்மனையில் கஸ்தூரிபா கடைசியாக நோயுற்று இருந்தபோது அவர் உபயோகித்த கைக்குட்டைகளைத் துவைத்தார்.

வாழ்நாள் முழுவதும் தனது உடை விஷயத்தில் காந்திஜி மிகவும் கவனமாக இருந்தார். சிறுவனாக இருந்தபோது மற்ற பிள்ளைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தனது நைசான மில் வேட்டியை வெள்ளைவெளேரென்று துவைத்துக் கட்டுவார். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் துணிகளை நன்றாக அலசுவார். அழுக்கடைந்த, கசங்கிப்போன துணிகளை காந்திஜி வெறுப்பார். தனது துணிமணிகளை வெள்ளை வெளேரென்று படுசுத்தமாகக் கொஞ்சம் கூட சுருக்கமில்லாமல் மடித்து வைத்திருப்பார். சுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் அவர்.


மித்ரஹரி


சலவையாளர் காந்திஜி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சலவையாளர் காந்திஜி Empty Re: சலவையாளர் காந்திஜி

Post by கலைவேந்தன் Sun Nov 21, 2010 12:34 am

அதனால் தான் அவர் உலகம் முழுக்கப் போற்றப்படும் அண்ணலாக விளங்கினார்..!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சலவையாளர் காந்திஜி Empty Re: சலவையாளர் காந்திஜி

Post by Thanjaavooraan Sun Nov 21, 2010 12:42 pm

சலவையாளர் காந்திஜி 677196 அருமையான கட்டுரை சலவையாளர் காந்திஜி 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

சலவையாளர் காந்திஜி Empty Re: சலவையாளர் காந்திஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum