ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியில்லா இந்தியா : செங்கோட்டையில் பிரதமர் உரை

Go down

பசியில்லா இந்தியா : செங்கோட்டையில் பிரதமர் உரை Empty பசியில்லா இந்தியா : செங்கோட்டையில் பிரதமர் உரை

Post by சிவா Sat Aug 15, 2009 11:42 am

புதுடெல்லி: பசியில்லா இந்திய தேசத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக, செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 63-வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் பலத்தப் பாதுகாப்புக்கு இடையே செங்கோட்டையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார், பிரதமர் மன்மோகன் சிங்.

பின்னர், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், "நாட்டில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வறட்சி நிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசியல் உறுதித் தன்மை, வலுவான பொருளாதார நிலை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அரசு முழுவீச்சில் நடைபோடுகிறது.

மதசார்பற்றதன்மையை தாரகமந்திரமாகக் கொண்டு, நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் புதிய அத்தியாயம் துவக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

மக்கள் எங்களை முழுமையாக நம்பலாம். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை.

பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்!

அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மிகுதியாக இருப்பினும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை.

மீண்டும் பசுமைப் புரட்சி!

இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. நாட்டில் வறட்சி நிலையால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பருவமழை பெய்யாததன் காரணமான ஏற்படும் பாதக விளைவுகளை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வேளாண் கடன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பசியில்லா இந்தியா என்ற இலக்கை அடைவோம்.

வேளாண்துறையில் நான்கு சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

சிறுபான்மையினரின் நலன் மற்றும் அவர்களது நலத்திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை

மாநிலங்களில் உள்ள நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முழுவதும் நீக்க, மத்திய அரசு உறுதுணைபுரியும்.

நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு ஒழிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

செங்கோட்டையில் தொடர்ந்து 6வது ஆண்டாக, பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்
» இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum