புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
24 Posts - 44%
mini
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
227 Posts - 35%
mohamed nizamudeen
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
20 Posts - 3%
prajai
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
4 Posts - 1%
mini
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
2 Posts - 0%
Saravananj
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_lcapதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_voting_barதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா


   
   
3tamil78
3tamil78
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010

Post3tamil78 Thu Nov 18, 2010 7:50 pm

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா

கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை

முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர்

கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்!

ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வட

மொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்!

கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ,

க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த

எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம் டெல்லியில். அது

குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் "யோசித்து முடிவெடுக்கலாம்" என்று தயவாகத்தான்

எழுதி இருக்கிறாராம்!.

ஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால்,

கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை எதிர்க்காமல்
மறந்திருப்பார்கள் போல.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்!

இந்த எழுத்துகள் எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள் மாட்டிக்கொண்டுவிட்ட

தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி

வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது! ஆனால், வடமொழி

வழக்கிழந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி மட்டும்

ஓயவில்லை!

ஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை!

அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத் தமிழன் உடன்படவில்லை.

மூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே

பேசுவதற்கும் எந்தப் பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்!

ஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே, அந்த ஓசைகளோடு

நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின் அடிப்படைக்கு மாறானது

என்னும்போது, அந்த எழுத்துகள் த்மிழுக்கு எதற்கு?


ஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், செருப்பைக்

கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள் நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன்! "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ" என்பது அவனுடைய கட்டளை நூற்பா!

கம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே! விபீஷணனை வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் மாற்றிவிட்டானே!

என்னுடைய தாயார் "ஜனங்கள்" என்று சொல்ல மாட்டார்கள்..."சனங்கள்" என்றுதான் சொல்லுவார்கள்.

"பஸ் ஸ்டாண்டு" என்று சொல்ல வராது; "காரடி" என்பார்கள்.

ஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: "ஏன் ஆத்தா! காரடியை எப்படி கண்டுபிடித்தாய்?"

"தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம் காரடிதானே?" என்றார். அவர் 78 ஆண்டுகள்

வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு

உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்!

அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும்

எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார்? "அவை பழகிவிட்டன; முன்பே உள்ளன" என்கிறார்.

தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர் இராசேந்திரன்! யாருக்கு பழகிவிட்டது?

தொல்காப்பியனுக்கா? வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா... அவளுக்கா?


"தொல்காப்பியப் பூங்கா" என்னும் நூலைக் கருணாநிதிதானே எழுதினார்? தமிழுக்கு அவன் போட்ட

சட்டங்கள் கருணாநிதிக்குப் பிடிபடாதவையா?

ஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால், மேற்கொண்டு 26 கிரந்த

எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம்! இது எவ்வளவு பெரிய சதி?!

தமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு எந்த மொழிக்கும் இல்லாத

காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே சேர்த்துக்கொண்டு, மீதி

தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்!

தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால் என்ன என்று

கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார்!


அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும்

கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது!


சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன...தமிழ்

மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள்!


ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத்

தகர்த்துவிட்டால், அதற்கு மேல் முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா!


தொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத

எழுத்துகளைச் சுட்டுவிட வேண்டும்.


அதிகாரம் என்பது எதற்கு? குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப்

பாதுகாப்பு உண்டாக்க மட்டும்தானா?

நன்றி: சூனியர் விகடன்

=====

முத்தமிழ்
சென்னை

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Nov 18, 2010 8:47 pm

அருமை - பழ - கருப்பையா அருமையாக வெளிபடுத்தியுள்ளார் ஒருங்குறியில் உள்ள சிக்கலை...



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக