ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை

3 posters

Go down

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை Empty நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை

Post by சிவா Sat Aug 15, 2009 3:27 am

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை Tblfpnnews_11492556334


புதுடில்லி : இன்று நாட்டின் 63வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது, பயங்கரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால், நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவு நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இருந்தாலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக பல உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பிரதமர் மன்மோகன் சிங், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக டில்லி செங்கோட்டையில் இன்று கொடியேற்றி, சுதந்திர தின உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வி.ஐ.பி.,களும் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு நிறுவனங்கள் மிகுந்த உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றன. செங்கோட்டையை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர்களாக உள்ள வீரர்கள், செங்கோட்டையை சுற்றிலும் உள்ள உயரமான கட்டடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தின விழா நடைபெறும் போது, ராணுவ ஹெலிகாப்டர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடும். விழா நடக்கும் 90 நிமிடமும் செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை மட்டுமின்றி, பார்லிமென்ட் வளாகம், சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், வெளிமாநில பஸ்கள் வந்து செல்லும் பஸ் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றிலும், டில்லி நகர தெருக்களிலும் ஏராளமான போலீசார் துப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரைவு அதிரடிப்படையினர் உட்பட விரைவாக தாக்குதல் நடத்துவதில் கைதேர்ந்த படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டில்லி நகரின் எல்லைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல், சரக்கு வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவிவிடக்கூடாது என்பதற்காக நேபாளத்தை ஒட்டிய 1,751 கி.மீ., நீள எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உட்பட பல வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில், பயங்கரவாதிகளின் எந்தத் தாக்குதலையும் சமாளிக்க நாடு முழுவதும் போலீசார் முழு தயார் நிலையில் உள்ளனர்.

ஜனாதிபதி உரை: நாட்டின் 63வது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியதாவது:தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பலமான, ஒன்றுபட்ட, வளர்ச்சியுடன் கூடிய இந்தியாவை உருவாக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அப்பாவி மக்களுக்கு எதிராகவே பயங்கரவாதம் நிகழ்த்தப்படுகிறது. அமைதிக்கு எதிரான அந்த பயங்கரவாதம், ஒவ்வொரு மதம் மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், அதை ஒழிக்க வேண்டும்.அமைதியான உலகம் மற்றும் சமூகத்தை உருவாக்க, மனித இனத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சிகள் உட்பட அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாடு முன்னேற்றம் பெற வேண்டும் எனில், சமூக ஒற்றுமை அவசியம். நாம் பிரியாமல் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை Empty Re: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை

Post by சுடர் வீ Sat Aug 15, 2009 6:04 am

ஆண்டுக்கு ஆண்டு சுதந்திரம் அதிகரிக்கும்முன்னு பார்த்தல்,
பாதுகாப்பு செய்யரது தான் அதிகரிகிறது. என்ன செய்யரது. நம்ம தலவிதி அப்படி.
இருந்தாலும் சந்தோசமா கொண்டாடுவோம்.
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை Empty Re: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை

Post by ராஜா Sat Aug 15, 2009 1:28 pm

ஹா ஹா ஹா ....... பயங்கரவாதிகளுக்கு தான் நாம கருப்பு பூனை , Z Wing பாதுகாப்புன்னு கொடுத்து கண்ணும் கருத்துமா பாத்துகுறோமே. (நம்ம மாண்பு மிகுக்களை சொன்னேன் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை Empty Re: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு
» நாடு முழுவதும் 19 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயார்!
» நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர்
» நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு
» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum