புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
32 Posts - 52%
heezulia
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
32 Posts - 52%
heezulia
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனிந்த வஞ்சனை? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 19, 2010 7:10 pm

(ஈழ அகதிமுகாமில் உள்ள சிறுவன் ஒருவனின் ஆதங்கமாக எழுதப்பட்டது).

கவிதை 1

சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ

சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே

வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே

எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்

கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது

இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்

மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்

அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்

கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?

விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ

தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 19, 2010 7:13 pm

(அதையே ஒரு இளைஞனின் உணர்வு வெளிப்பாடாக இது.)

கவிதை 2

இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை

கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை

மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு

ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு

விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்

குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்

ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்

வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்

தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்

உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 19, 2010 10:44 pm

மரபுக்கவிதைகள் இக்காலத்தில் எழுதுவது மறைந்து கொண்டு இருக்கும் நிலையில் மிக அருமையான சந்தக்கவிதைகளை மிக அனாயாசமாய் எழுதியுள்ளமைக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்..!

ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!

மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 20, 2010 2:13 am

கலை wrote:மரபுக்கவிதைகள் இக்காலத்தில் எழுதுவது மறைந்து கொண்டு இருக்கும் நிலையில் மிக அருமையான சந்தக்கவிதைகளை மிக அனாயாசமாய் எழுதியுள்ளமைக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்..!

ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!

மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!

நன்றிகள்! தங்களிடமிருந்து பாராட்டு பெறுவதில் பெருமகிழ்ச்சி!
இன்னும் மரபுப்பா பயிலரங்க மாணவன்.நான். நிறைய கற்க உள்ளது. கற்று நல்ல வகையில் கவி இயற்ற வேண்டுமென்பது பேரவா!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:21 am

அனைத்தையும் கற்றுத் தெளிந்த தாங்கள் இன்னும் மாணவன்தான் என்ற தன்னடக்கம் உங்கள் மீதுள்ள மரியாதையை மேலும் அதிகரிக்கிறது அண்ணா!



ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 7:31 pm

கவிதைகள் கண்டேன், அனைத்தும் செந்தேன் ஏனிந்த வஞ்சனை? (கவிதை) 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக