புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா : கல்வி அமைச்சரின் கனவுப் பிதற்றல்கள்!
Page 1 of 1 •
நாடு விடுதலை அடைந்து 53 ஆண்டுகள் ஆனபின்னும் நமது கல்விக் கொள்கைகள் இன்னமும் மழலை மொழியிலேயே பேசிக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் கூறலாம். அவற்றுள், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அல்லது அதற்கு முன்பே மாறி வரும் கல்வி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் “இருப்பதில் எதையாவது மாற்றினால்தான் மாற்றியதில் தன் பெயரைப் பொறிக்க முடியும்” என்று கருதிச் செய்து வரும் மாற்றங்கள் முதன்மைக் காரணம் ஆகும்.
1957இல் ரசாக் கல்வித் திட்டம் மலாய் மொழியைக் கல்வி மொழியாக ஆக்கியது. 1961இல் ரஹ்மான் தாலிப் கல்வித் திட்டம் வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் என்ற முக்கிய கல்வித்திறன்களை முன்மொழிந்தது. அது 18 ஆண்டுகளுக்குப் பின்னர் 1979இல் அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தொடக்கப் பள்ளிகளுக்கான 3எம் (வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல்) பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின் இத்திட்டம் தோல்வியைத் தழுவியது என்று கண்டறியப்பட்டு அந்தச் செய்தி கமுக்கமாக்கப்பட்டது. கொஞ்ச காலம் அமைதிக்குப் பின் அண்மையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் அறிவியல், கணிதம் ஆங்கில மொழிக்குப் போய் ஆறு ஆண்டுகளுக்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் தாய்மொழிகளுக்குத் திரும்பியுள்ளது.
இதற்கிடையில் இடைநிலைப் பள்ளிப் பாடங்களிலும் பல கூத்துகள் அரங்கேறியுள்ளன.
ஒரு காலத்தில் பூகோளம் முக்கியமானது. அது மூலைக்குத் தள்ளப்பட்டு வரலாறு அந்த இடத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் தேர்வுக்கு எடுக்கலாம், எடுக்காமலும் விடலாம் என்ற நிலையை அடைந்தது. பாட்டத்தின் முக்கியத்துவம் மட்டுமல்ல அதன் உள்ளடக்கமும் அடிக்கடி மாற்றப்பட்டது.
அறிவியல் தொகுதியிலும் சில பாடங்களுக்கு இதே நிலை. இடையில் வந்த நன்னெறிப் பாடம் ஒரு பயனும் இல்லாமல் இலவசப் புத்தகப் பட்டியலில் உட்கார்ந்து கொண்டு அரசுப் பணத்தைக் கோடிக்கணக்கில் குறிப்பிட்ட சிலருக்குப் பட்டுவாடா பண்ணிக் கொண்டிருக்கிறது. இப்படிக் கடந்த 53 ஆண்டுகளாக நமது கல்வித்திட்டம் “பரீட்சார்த்த” நிலையிலேயே இருந்து வருகிறது.
இப்போது மீண்டும் வரலாற்றுப் பாட்டத்திற்குப் “பொற்காலம்” திரும்புகிறது.
***நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பூமிபுத்ரா சிறப்பு உரிமைகளைக் குறிப்பிடும் அரசமைப்புச் சட்டம் 153 மீது யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்று குரல் கொடுக்க உடனே துணைக்கல்வி அமைச்சர் அரசமைப்புச் சட்டம் 153ஆம் பிரிவு இடைநிலைப்பள்ளிகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று சொல்லிவிட்டார்.
அவருடைய இந்தத் தடாலடி அறிவிப்பில் நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. அதனை வரலாற்றுப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாகத் திட்டம் இருந்ததா? அப்படி இல்லை என்றால் நாடாளு மன்றத்தில் எழுப்பப்படும் விவாதங்களுக்கு ஏற்ப இனி நாள்தோறும் நமது பாடத்திட்டங்கள் மாற்றம் பெறுமா?
நமது நாட்டுக் கல்வித் திட்டம் எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் காலத்தைக் கடத்துகிறது என்பதால் மாற்றங்கள் மாறாது என்பதை ஒப்புக் கொள்ளலாம். என்றாலும் பூமிபுத்ரா சிறப்பு உரிமை மீதிலான அரசமைப்புச் சட்டவிதி 153 வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதன் உள்நோக்கம் குறித்தும் பூமிபுத்ரா அல்லாதாரின் சிந்தனை கிளறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 153இன் வரலாற்றைக் கிண்டிப் பார்ப்பதும் இங்கு அவசியமாகிறது. 1948இல் பிரிட்டீஷ் அரசுக்கும் மலாய் ஆட்சியாளர்க்கும் இடையிலான ஓர் ஒப்பந்தத்தில் மலாய்க்காரர்களுக்கான சிறப்பு உரிமைகள் பற்றிய விதி சேர்க்கப்பட்டது. விதி 191 (d)இன்படி பிரிட்டீஷ் அரசின் பேராளரான உயர் ஆணையர் (ஹைகமிஷனர்) மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகளையும் பிற இனத்தினரின் அடிப்படை உரிமைகளையும் காக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
1956இல் ரீட் கமிஷன் மலாயாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது 1948ஆம் ஆண்டு மலாய்க்காரர்களுக்கான சிறப்பு உரிமைச் சட்டம் தொடர்ந்து இருக்குமானால் அது இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்ற ஜனநாயகப் பண்புக்கு முரணாகிவிடும் என்று கருதியது. ஆனால் இருக்கும் சிறப்பு உரிமைச் சட்டம் அகற்றப்படுமானால் அது மலாய்க்காரர்களுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும் என்றும் கருதியது. அதனால் புதிய சிறப்பு உரிமைகள் பூமிபுத்ராக்களுக்கு உருவாக்கப்படக் கூடாது என்றும் இருக்கும் இந்தச் சிறப்புரிமை போதுமான கால வரையறைக்குப் பின் நிறுத்தப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தது.
இதன்படி, பொதுச் சேவைத் துறை, கல்வி உதவி, வாணிபத்துக்குத் தேவைப்படும் உரிமங்கள் ஆகிய மூன்று துறைகளில் மலாய்க்காரர்களுக்குச் சிறப்பு உரிமை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகளின் காப்பாளராக பேரரசர் நியமிக்கப்பட்டார். இம்மூன்று சிறப்பு உரிமைகளுக்கு மேல் இன்னொரு சிறப்பு உரிமையும் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்படும் புதிய நிலங்களில் 50 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் சிறப்பு உரிமை.
மலாய்க்காரர்கள் பிற சமூகங்களுக்குச் சமமான நிலையை அடைந்துவிட்டாலோ மலாயா மக்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என்ற ஒருமைப்பாட்டு உணர்வை அடைந்துவிட்டாலோ அதன் பின்னர் மலாய்க்காரர்களுக்குச் சிறப்புச் சலுகை தேவைப்படாது என்றும் ரீட் கமிஷன் கூறியது.
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலாய்க்கார்களின் அடைவுநிலையை மதிப்பீடு செய்து சிறப்பு உரிமையை நீட்டிப்பதா நிறுத்துவதா என்பது குறித்தும் விவாதிக்கபட வேண்டும் என்று ரீட் கமிஷன் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகளை உள்ளடக்கி அமைந்ததே அரசமைப்புச் சட்டப் பிரிவு 153. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளின் அரசமைப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டன.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 153 குறிப்பிட்ட பொதுச்சேவைத்துறை, கல்வி உதவி, வாணிக உரிமங்கள் ஆகிய மூன்றிலும் மலாய்க்காரர்கள் இன்னமும் மற்ற இரண்டு இனங்களுக்குச் சமமான நிலையை அடையவில்லையா, அடைந்து அவர்களைக் கடந்து போய்விட்டார்களா என்று யார் சொல்லுவது? புள்ளி விவரங்கள் தெளிவாகச் சொல்லுகின்றன. பொதுச்சேவைத் துறையில் மலாய்க்காரர்கள் 90 விழுக்காட்டைக் கடந்துவிட்டார்கள். கல்வி உதவியிலும் மிக உயர்ந்த அடைவுநிலையை எட்டியிருக்க முடியும். மாரா கல்லூரிகள், பொதுச் சேவைத்துறை, மாநில அரசுகள் இப்படி பல அமைப்புகள் பூமிபுத்ரா சிறப்பு உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படிக்கும் ஆயிரக்கணக்கான பூமிபுத்ராக்களுக்கு உதவி வருகின்றன. வணிக உரிமங்கள் பல அமைச்சர்களைச் சார்ந்தவர்களிடம் குவிந்து கிடக்கின்றன.
இவ்வளவுக்குப் பிறகும் மலாய்க்காரர்கள் இன்னமும் மற்ற இனத்தினரோடு சமநிலையை அடையவில்லை என்று சொல்லிக் கொண்டு 153ஐ தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் அம்னோ அரசியல்வாதிகள்.
வரலாற்றுப் பாடத்தில் 153 இடம் பெறும்போது இந்த வரலாறும் விவரங்களும் இடம் பெறுமா? அல்லது 153 ஐ பற்றி எதிர்காலத்தில் யாருமே வாய் திறக்கக் கூடாது என்று மூளைச்சலவை செய்யப்படுமா? இதனால் மலாய்க்கார மாணவர்கள் தாங்கள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் என்ற செருக்கை அடைவார்கள். பிற இன மாணவர்கள் தாங்கள் இரண்டாம்தர குடிமக்கள் ஆக்கப்பட்டிருப்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்வார்கள். இரு வகையான இப்படிப்பட்ட மாணவர் சமுதாயம் மலேசிய சமுதாயமாக உருவாகும்போது “ஒரே மலேசியா” என்னவாகும்?
- முனைவர் ஆறு. நாகப்பன்
http://www.malaysiaindru.com/?p=56803
1957இல் ரசாக் கல்வித் திட்டம் மலாய் மொழியைக் கல்வி மொழியாக ஆக்கியது. 1961இல் ரஹ்மான் தாலிப் கல்வித் திட்டம் வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் என்ற முக்கிய கல்வித்திறன்களை முன்மொழிந்தது. அது 18 ஆண்டுகளுக்குப் பின்னர் 1979இல் அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தொடக்கப் பள்ளிகளுக்கான 3எம் (வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல்) பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின் இத்திட்டம் தோல்வியைத் தழுவியது என்று கண்டறியப்பட்டு அந்தச் செய்தி கமுக்கமாக்கப்பட்டது. கொஞ்ச காலம் அமைதிக்குப் பின் அண்மையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் அறிவியல், கணிதம் ஆங்கில மொழிக்குப் போய் ஆறு ஆண்டுகளுக்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் தாய்மொழிகளுக்குத் திரும்பியுள்ளது.
இதற்கிடையில் இடைநிலைப் பள்ளிப் பாடங்களிலும் பல கூத்துகள் அரங்கேறியுள்ளன.
ஒரு காலத்தில் பூகோளம் முக்கியமானது. அது மூலைக்குத் தள்ளப்பட்டு வரலாறு அந்த இடத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் தேர்வுக்கு எடுக்கலாம், எடுக்காமலும் விடலாம் என்ற நிலையை அடைந்தது. பாட்டத்தின் முக்கியத்துவம் மட்டுமல்ல அதன் உள்ளடக்கமும் அடிக்கடி மாற்றப்பட்டது.
அறிவியல் தொகுதியிலும் சில பாடங்களுக்கு இதே நிலை. இடையில் வந்த நன்னெறிப் பாடம் ஒரு பயனும் இல்லாமல் இலவசப் புத்தகப் பட்டியலில் உட்கார்ந்து கொண்டு அரசுப் பணத்தைக் கோடிக்கணக்கில் குறிப்பிட்ட சிலருக்குப் பட்டுவாடா பண்ணிக் கொண்டிருக்கிறது. இப்படிக் கடந்த 53 ஆண்டுகளாக நமது கல்வித்திட்டம் “பரீட்சார்த்த” நிலையிலேயே இருந்து வருகிறது.
இப்போது மீண்டும் வரலாற்றுப் பாட்டத்திற்குப் “பொற்காலம்” திரும்புகிறது.
***நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பூமிபுத்ரா சிறப்பு உரிமைகளைக் குறிப்பிடும் அரசமைப்புச் சட்டம் 153 மீது யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்று குரல் கொடுக்க உடனே துணைக்கல்வி அமைச்சர் அரசமைப்புச் சட்டம் 153ஆம் பிரிவு இடைநிலைப்பள்ளிகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று சொல்லிவிட்டார்.
அவருடைய இந்தத் தடாலடி அறிவிப்பில் நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. அதனை வரலாற்றுப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாகத் திட்டம் இருந்ததா? அப்படி இல்லை என்றால் நாடாளு மன்றத்தில் எழுப்பப்படும் விவாதங்களுக்கு ஏற்ப இனி நாள்தோறும் நமது பாடத்திட்டங்கள் மாற்றம் பெறுமா?
நமது நாட்டுக் கல்வித் திட்டம் எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் காலத்தைக் கடத்துகிறது என்பதால் மாற்றங்கள் மாறாது என்பதை ஒப்புக் கொள்ளலாம். என்றாலும் பூமிபுத்ரா சிறப்பு உரிமை மீதிலான அரசமைப்புச் சட்டவிதி 153 வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதன் உள்நோக்கம் குறித்தும் பூமிபுத்ரா அல்லாதாரின் சிந்தனை கிளறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 153இன் வரலாற்றைக் கிண்டிப் பார்ப்பதும் இங்கு அவசியமாகிறது. 1948இல் பிரிட்டீஷ் அரசுக்கும் மலாய் ஆட்சியாளர்க்கும் இடையிலான ஓர் ஒப்பந்தத்தில் மலாய்க்காரர்களுக்கான சிறப்பு உரிமைகள் பற்றிய விதி சேர்க்கப்பட்டது. விதி 191 (d)இன்படி பிரிட்டீஷ் அரசின் பேராளரான உயர் ஆணையர் (ஹைகமிஷனர்) மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகளையும் பிற இனத்தினரின் அடிப்படை உரிமைகளையும் காக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
1956இல் ரீட் கமிஷன் மலாயாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது 1948ஆம் ஆண்டு மலாய்க்காரர்களுக்கான சிறப்பு உரிமைச் சட்டம் தொடர்ந்து இருக்குமானால் அது இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்ற ஜனநாயகப் பண்புக்கு முரணாகிவிடும் என்று கருதியது. ஆனால் இருக்கும் சிறப்பு உரிமைச் சட்டம் அகற்றப்படுமானால் அது மலாய்க்காரர்களுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும் என்றும் கருதியது. அதனால் புதிய சிறப்பு உரிமைகள் பூமிபுத்ராக்களுக்கு உருவாக்கப்படக் கூடாது என்றும் இருக்கும் இந்தச் சிறப்புரிமை போதுமான கால வரையறைக்குப் பின் நிறுத்தப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தது.
இதன்படி, பொதுச் சேவைத் துறை, கல்வி உதவி, வாணிபத்துக்குத் தேவைப்படும் உரிமங்கள் ஆகிய மூன்று துறைகளில் மலாய்க்காரர்களுக்குச் சிறப்பு உரிமை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகளின் காப்பாளராக பேரரசர் நியமிக்கப்பட்டார். இம்மூன்று சிறப்பு உரிமைகளுக்கு மேல் இன்னொரு சிறப்பு உரிமையும் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்படும் புதிய நிலங்களில் 50 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் சிறப்பு உரிமை.
மலாய்க்காரர்கள் பிற சமூகங்களுக்குச் சமமான நிலையை அடைந்துவிட்டாலோ மலாயா மக்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என்ற ஒருமைப்பாட்டு உணர்வை அடைந்துவிட்டாலோ அதன் பின்னர் மலாய்க்காரர்களுக்குச் சிறப்புச் சலுகை தேவைப்படாது என்றும் ரீட் கமிஷன் கூறியது.
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலாய்க்கார்களின் அடைவுநிலையை மதிப்பீடு செய்து சிறப்பு உரிமையை நீட்டிப்பதா நிறுத்துவதா என்பது குறித்தும் விவாதிக்கபட வேண்டும் என்று ரீட் கமிஷன் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகளை உள்ளடக்கி அமைந்ததே அரசமைப்புச் சட்டப் பிரிவு 153. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளின் அரசமைப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டன.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 153 குறிப்பிட்ட பொதுச்சேவைத்துறை, கல்வி உதவி, வாணிக உரிமங்கள் ஆகிய மூன்றிலும் மலாய்க்காரர்கள் இன்னமும் மற்ற இரண்டு இனங்களுக்குச் சமமான நிலையை அடையவில்லையா, அடைந்து அவர்களைக் கடந்து போய்விட்டார்களா என்று யார் சொல்லுவது? புள்ளி விவரங்கள் தெளிவாகச் சொல்லுகின்றன. பொதுச்சேவைத் துறையில் மலாய்க்காரர்கள் 90 விழுக்காட்டைக் கடந்துவிட்டார்கள். கல்வி உதவியிலும் மிக உயர்ந்த அடைவுநிலையை எட்டியிருக்க முடியும். மாரா கல்லூரிகள், பொதுச் சேவைத்துறை, மாநில அரசுகள் இப்படி பல அமைப்புகள் பூமிபுத்ரா சிறப்பு உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படிக்கும் ஆயிரக்கணக்கான பூமிபுத்ராக்களுக்கு உதவி வருகின்றன. வணிக உரிமங்கள் பல அமைச்சர்களைச் சார்ந்தவர்களிடம் குவிந்து கிடக்கின்றன.
இவ்வளவுக்குப் பிறகும் மலாய்க்காரர்கள் இன்னமும் மற்ற இனத்தினரோடு சமநிலையை அடையவில்லை என்று சொல்லிக் கொண்டு 153ஐ தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் அம்னோ அரசியல்வாதிகள்.
வரலாற்றுப் பாடத்தில் 153 இடம் பெறும்போது இந்த வரலாறும் விவரங்களும் இடம் பெறுமா? அல்லது 153 ஐ பற்றி எதிர்காலத்தில் யாருமே வாய் திறக்கக் கூடாது என்று மூளைச்சலவை செய்யப்படுமா? இதனால் மலாய்க்கார மாணவர்கள் தாங்கள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் என்ற செருக்கை அடைவார்கள். பிற இன மாணவர்கள் தாங்கள் இரண்டாம்தர குடிமக்கள் ஆக்கப்பட்டிருப்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்வார்கள். இரு வகையான இப்படிப்பட்ட மாணவர் சமுதாயம் மலேசிய சமுதாயமாக உருவாகும்போது “ஒரே மலேசியா” என்னவாகும்?
- முனைவர் ஆறு. நாகப்பன்
http://www.malaysiaindru.com/?p=56803
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|