Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
2.1 அரசனின் இயல்புகள்
ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குச் சில இயல்புகள் இருக்க
வேண்டும். அவனுக்கு உரிய பண்புகளாகச் சில அமைய வேண்டும்.
இவை பொருந்தி இருப்பவனே நாட்டை ஆளும் மன்னனாகத்
திகழ்வதற்கு உரியவன் என்பது வள்ளுவர் கருத்து.
சில இயல்புகள், நம்மிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். சில
நாமாக முயன்று பெறக் கூடியவையாக இருக்கும். பின்னர் அவை
நம் பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. வள்ளுவர்,
மன்னனுக்குரிய பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார் அவை
முறையே அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும்
ஆகும். இவைகளை உடையவனே மன்னனாக ஏற்றுக்
கொள்ளத்தகுந்தவன் என்பது வள்ளுவர் கருத்து.
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
(குறள்: 382)
எதனையும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றலும், பிறருக்குக்
கொடுக்கும் ஈகைத் தன்மையும், நூற்களைக் கற்றுப் பெறும்
அறிவும் ஊக்கமும் மன்னனுக்கு முழுமையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகள்.
நன்றி- Tamil virtual university
2.1.1 அஞ்சாமை
நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்று
பொதுவாகக் குறிப்பிடுவர். இதற்கு என்ன காரணம்? நல்ல
இயல்புகள் ஒருவன் கொண்டிருந்தாலும், அவன் கோழையாக
இருந்தால் அவனால் எதையும் செயல்படுத்த முடியாது. எந்தச்
சூழலாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய மனத்திண்மை
(Boldness) அல்லது வீரம் வேண்டும். அப்பொழுதுதான்
நினைத்ததை ஒருவனால் செய்ய முடியும். இந்தத் மனத்திண்மை
அல்லது வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று
குறிப்பிடுகிறார்.
செய்யும் பணியின் வெற்றி மனத்திண்மையுடன் அஞ்சாமல்
செயல்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு
செயலில் ஈடுபட்டாலும், அஞ்சாத் தன்மையுடன் ஈடுபட வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் செய்யும் வினை அல்லது செயல்
வெற்றிபெறும். மனத்திண்மையில்தான் வினைத் திட்பம்
அமைந்திருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
(குறள்: 661)
ஒருவனது செயல்பாட்டில், அவனது மனத்திண்மையாகிய
அஞ்சாமையே முதன்மையானது. ஏனையவை எல்லாம் அதற்குப்
பின்னர்தான் என்பது வள்ளுவர் கருத்து. இது அரசர்களுக்கு உரிய
இயல்புகளில் முதன்மையானது.
2.1.2 ஈகை
வறுமையைப் பற்றி இன்னோர் இடத்தில் கூறும் பொழுது
வள்ளுவர், பற்றினால் நம்மை அழிக்கக் கூடிய தீயினுள் கூட
ஒருவன் தூங்கலாம், ஆனால் நம் உடலில் பசி என்ற ஒன்று
இருந்தால் தூங்க முடியாது என்று குறிப்பிடுவார். அத்தகைய
கொடுமை வாய்ந்தது பசி. மணிமேகலை என்னும் காப்பியத்தை
இயற்றிய சீத்தலைச் சாத்தனார் கூட பசியின் கொடுமையை
உணர்ந்து, ‘பசிப்பிணி எனும் பாவி’ என்று கூறுவார்.
இத்தகைய துன்பம் மிகுந்த பசியைப் போக்குவது ஒரு சிறந்த
செயல். அவ்வாறு செய்வது வறுமையோடு வருந்தும் ஒருவனை
இறப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதாகும். எனவே சீத்தலைச்
சாத்தனார்.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே’
(மணிமேகலை : 11: 95?96)
என்று குறிப்பிடுகிறார்.
வறுமையின் அல்லது பசியின் கொடுமையை உணர்ந்தவர்
வள்ளுவர். எனவே பிறர் துன்பத்தை நீக்கும் இரக்க உணர்வு,
நாட்டை ஆளும் மன்னனுக்கு இயற்கையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.
இரக்க உணர்வு கொண்டவன்தான் பிறர் துன்பத்தைப் போக்கும்
ஈகை உள்ளம் கொண்டவன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களின்
வறுமையை - துன்பத்தை நீக்க வேண்டியது மன்னனின்
முதன்மையான கடமை. அந்தக் கடமையைத் தனக்கு இருக்கும்
ஈகைக் குணத்தால் அல்லது இயல்பால்தான் நிறைவேற்ற முடியும்.
அந்த ஈகைக் குணம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி
(குறள்: 226)
என்று குறிப்பிடுகிறார்.
(அற்றார் = வறியவர், அழி = அழிவைத் தரக் கூடிய,
வைப்புஉழி = சேமித்து வைக்கும் இடம் (உழி - இடம்) (Savings
Bank)
வறியவர்களது அழிவு தரக்கூடிய பசியை நீக்க வேண்டும்.
இத்தகைய செயல், தான் ஈட்டிய பொருளைத் தனக்கு உதவும்படி
சேமித்து வைக்கும் வைப்பு நிதி போன்றது என்கிறார் வள்ளுவர்.
எனவே, ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு நாட்டிலுள்ள மக்களின்
வறுமையைப் போக்க வேண்டும் என்ற இயல்பு இருக்க வேண்டும்.
அந்த இயல்பு வருங்காலத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்குச்
சேமித்து வைக்கும் செல்வம் போல் பயன்தரும். அது எவ்வாறு?
உலகில் நிகழும் பல்வேறு வகையான தீய செயல்களுக்கும்,
வன்முறைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது? வறுமை.
திருடினவனைப் பார்த்து ‘நீ ஏன் திருடினாய்?’ என்று கேட்டால்
‘வறுமை’ என்று குறிப்பிடுவான். இதைப் போல் பிற தீய
செயல்களில் பலவும் வறுமையின் காரணமாக நிகழ்கின்றன. எனவே
தீமைகளுக்குக் காரணமான வறுமையை ஒரு மன்னன் ஈகை
என்னும் தன் இயல்பால் நீக்கினால், அவன் நாட்டில் நிகழும் தீய
செயல்கள் குறையும் இல்லையா? அதன் காரணமாக அந்த நாடு
நலம் பெறும். அந்த இயல்பு வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு
சேமிப்பு நிதி போன்றது தானே? எனவேதான் வள்ளுவர்,
மன்னனுக்கு இயல்பாக ஈகை செய்யும் இயல்பு இருக்க வேண்டும்
என்கிறார்.
ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குச் சில இயல்புகள் இருக்க
வேண்டும். அவனுக்கு உரிய பண்புகளாகச் சில அமைய வேண்டும்.
இவை பொருந்தி இருப்பவனே நாட்டை ஆளும் மன்னனாகத்
திகழ்வதற்கு உரியவன் என்பது வள்ளுவர் கருத்து.
சில இயல்புகள், நம்மிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். சில
நாமாக முயன்று பெறக் கூடியவையாக இருக்கும். பின்னர் அவை
நம் பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. வள்ளுவர்,
மன்னனுக்குரிய பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார் அவை
முறையே அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும்
ஆகும். இவைகளை உடையவனே மன்னனாக ஏற்றுக்
கொள்ளத்தகுந்தவன் என்பது வள்ளுவர் கருத்து.
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
(குறள்: 382)
எதனையும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றலும், பிறருக்குக்
கொடுக்கும் ஈகைத் தன்மையும், நூற்களைக் கற்றுப் பெறும்
அறிவும் ஊக்கமும் மன்னனுக்கு முழுமையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகள்.
நன்றி- Tamil virtual university
2.1.1 அஞ்சாமை
நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்று
பொதுவாகக் குறிப்பிடுவர். இதற்கு என்ன காரணம்? நல்ல
இயல்புகள் ஒருவன் கொண்டிருந்தாலும், அவன் கோழையாக
இருந்தால் அவனால் எதையும் செயல்படுத்த முடியாது. எந்தச்
சூழலாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய மனத்திண்மை
(Boldness) அல்லது வீரம் வேண்டும். அப்பொழுதுதான்
நினைத்ததை ஒருவனால் செய்ய முடியும். இந்தத் மனத்திண்மை
அல்லது வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று
குறிப்பிடுகிறார்.
செய்யும் பணியின் வெற்றி மனத்திண்மையுடன் அஞ்சாமல்
செயல்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு
செயலில் ஈடுபட்டாலும், அஞ்சாத் தன்மையுடன் ஈடுபட வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் செய்யும் வினை அல்லது செயல்
வெற்றிபெறும். மனத்திண்மையில்தான் வினைத் திட்பம்
அமைந்திருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
(குறள்: 661)
ஒருவனது செயல்பாட்டில், அவனது மனத்திண்மையாகிய
அஞ்சாமையே முதன்மையானது. ஏனையவை எல்லாம் அதற்குப்
பின்னர்தான் என்பது வள்ளுவர் கருத்து. இது அரசர்களுக்கு உரிய
இயல்புகளில் முதன்மையானது.
2.1.2 ஈகை
வறுமையைப் பற்றி இன்னோர் இடத்தில் கூறும் பொழுது
வள்ளுவர், பற்றினால் நம்மை அழிக்கக் கூடிய தீயினுள் கூட
ஒருவன் தூங்கலாம், ஆனால் நம் உடலில் பசி என்ற ஒன்று
இருந்தால் தூங்க முடியாது என்று குறிப்பிடுவார். அத்தகைய
கொடுமை வாய்ந்தது பசி. மணிமேகலை என்னும் காப்பியத்தை
இயற்றிய சீத்தலைச் சாத்தனார் கூட பசியின் கொடுமையை
உணர்ந்து, ‘பசிப்பிணி எனும் பாவி’ என்று கூறுவார்.
இத்தகைய துன்பம் மிகுந்த பசியைப் போக்குவது ஒரு சிறந்த
செயல். அவ்வாறு செய்வது வறுமையோடு வருந்தும் ஒருவனை
இறப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதாகும். எனவே சீத்தலைச்
சாத்தனார்.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே’
(மணிமேகலை : 11: 95?96)
என்று குறிப்பிடுகிறார்.
வறுமையின் அல்லது பசியின் கொடுமையை உணர்ந்தவர்
வள்ளுவர். எனவே பிறர் துன்பத்தை நீக்கும் இரக்க உணர்வு,
நாட்டை ஆளும் மன்னனுக்கு இயற்கையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.
இரக்க உணர்வு கொண்டவன்தான் பிறர் துன்பத்தைப் போக்கும்
ஈகை உள்ளம் கொண்டவன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களின்
வறுமையை - துன்பத்தை நீக்க வேண்டியது மன்னனின்
முதன்மையான கடமை. அந்தக் கடமையைத் தனக்கு இருக்கும்
ஈகைக் குணத்தால் அல்லது இயல்பால்தான் நிறைவேற்ற முடியும்.
அந்த ஈகைக் குணம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி
(குறள்: 226)
என்று குறிப்பிடுகிறார்.
(அற்றார் = வறியவர், அழி = அழிவைத் தரக் கூடிய,
வைப்புஉழி = சேமித்து வைக்கும் இடம் (உழி - இடம்) (Savings
Bank)
வறியவர்களது அழிவு தரக்கூடிய பசியை நீக்க வேண்டும்.
இத்தகைய செயல், தான் ஈட்டிய பொருளைத் தனக்கு உதவும்படி
சேமித்து வைக்கும் வைப்பு நிதி போன்றது என்கிறார் வள்ளுவர்.
எனவே, ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு நாட்டிலுள்ள மக்களின்
வறுமையைப் போக்க வேண்டும் என்ற இயல்பு இருக்க வேண்டும்.
அந்த இயல்பு வருங்காலத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்குச்
சேமித்து வைக்கும் செல்வம் போல் பயன்தரும். அது எவ்வாறு?
உலகில் நிகழும் பல்வேறு வகையான தீய செயல்களுக்கும்,
வன்முறைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது? வறுமை.
திருடினவனைப் பார்த்து ‘நீ ஏன் திருடினாய்?’ என்று கேட்டால்
‘வறுமை’ என்று குறிப்பிடுவான். இதைப் போல் பிற தீய
செயல்களில் பலவும் வறுமையின் காரணமாக நிகழ்கின்றன. எனவே
தீமைகளுக்குக் காரணமான வறுமையை ஒரு மன்னன் ஈகை
என்னும் தன் இயல்பால் நீக்கினால், அவன் நாட்டில் நிகழும் தீய
செயல்கள் குறையும் இல்லையா? அதன் காரணமாக அந்த நாடு
நலம் பெறும். அந்த இயல்பு வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு
சேமிப்பு நிதி போன்றது தானே? எனவேதான் வள்ளுவர்,
மன்னனுக்கு இயல்பாக ஈகை செய்யும் இயல்பு இருக்க வேண்டும்
என்கிறார்.
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
சிறந்த கட்டுடைக்கு நன்றி சாந்தி. ஆனால் இவைகள் எல்லாம் இன்று எழுத்தளவில் மட்டுமே உள்ளது. நடைமுறைப் படுத்த யாருமே விரும்புவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
அருமை அக்கா இன்னொரு விஷயம் இந்த தகுதிகள் எல்லாமே எனக்கு இருக்கு நம்புங்க ப்ளீஸ்
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
இறைவா நான் அரசியலுக்கு வரலான தமிழகத்தை யார் காப்பாற்றுவார்கள் சொல்லுங்க அக்கா சொல்லுங்க
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
தமிழ் உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும்sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
ராஜா wrote:அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும்sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
நம்ம சகோதர ரத்தமல்லவா
Re: அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து
அதானே ......maniajith007 wrote:நம்ம சகோதர ரத்தமல்லவாராஜா wrote:அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும்sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இருக்க வேண்டிய இடம்…!
» தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய பத்து மைண்ட்செட்!
» கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்
» உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய பழங்கள்
» அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#
» தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய பத்து மைண்ட்செட்!
» கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்
» உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய பழங்கள்
» அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|