ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து

2 posters

Go down

நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Empty நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து

Post by சிவா Fri Aug 14, 2009 5:24 pm

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

பரம்பரை பரம்பரையாய் அடிமைத்தளையில் சிக்குண்ட நம் அன்னை பாரதம் சுதந்திரம் பெற்ற நாள் இந்நாள். இந்த நன்னாளில் என தருமைத்தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த எழுச்சித் திருநாளில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, ஊமைகளாய், உரிமைகளை மறந்திருந்த மக்களை தட்டி எழுப்பி, படை பல வந்திடினும், தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்ற வீர உணர்வை ஊட்டி, முதன் முதலில் சுதந்திர விதையை விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையனே வெளியேறு, என்று முதன் முதலாக முழக்கமிட்ட பூலித்தேவன், தீரன் சின்னமலை, செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், தீரர் சத்தியமூர்த்தி, மகாகவி பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதன், புரட்சி வீரர் பகத்சிங், மாவீரர் நேதாஜிசுபாஸ் சந்திரபோஸ், தில்லையாடி வள்ளியம்மை, தேவர் திருமகனார், மருது சகோதரர்கள் போன்ற எண்ணற்ற தியாகச் சீலர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், வறுமை இன்னமும் மக்களை வாட்டிக்கொண்டு தான் இருக்கிறது. ஏழ்மை என்ற நிலை இந்தியாவில் இல்லை என்று சொல்லக்கூடிய நாள் வரவேண்டும். மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமை வரவேண்டும். பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நிலை மாற வேண்டும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் மலருவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும், தமக்கென வாழாமல் மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும் இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம்.

என அன்பிற்கினிய தமிழக மக்களுக்கு மீண்டும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க தமிழகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:-

தமிழகத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் சாதனைகள் வரலாற்றில் முத்தாய்ப்பானவை. இவ்வாறு நாட்டின் விடுதலைக்கு நிகரற்ற தியாகமும், விடுதலை இந்தியாவின் உருவாக்கத்திற்கு மகத்தான சாதனைகளும் புரிந்த தேசியத்தலைவர்களுக்கு இந்த சுதந்திர நன்னாளில் வீரவணக்கம் செலுத்துவோம். சாதி மத இனமொழி கடந்து தேசிய உணர்வோடு நாடுயர ஒன்றுபட்டு உழைப்போம் என உறுதி ஏற்போம்.

ஆர்.எம்.வீரப்பன்

எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தலைசிறந்த இடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திட்டங்களால் மக்கள் விடுதலை பெற்ற பெருமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தா.பாண்டியன், இன்றைய இளம் சந்ததியினர், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க விழித்து எழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நம்நாடு மேலும் வளர்ச்சி அடைந்து அடுத்த ஆண்டு வல்லரசு நாடாக வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Empty Re: நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து

Post by Guest Fri Aug 14, 2009 5:27 pm

நாங்களும் சொல்வோம்லா.

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்

முன்கூட்டிய இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Empty Re: நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து

Post by செரின் Sun Aug 16, 2009 1:38 am

என்ன அண்ணா சுதந்திரம் மகாத்மா காந்தி சுதந்திரம் வேண்டி கொடுத்த மாதிாியே தெரியல ஏனன்றால் மீண்டும் இந்தியா காந்தி குடும்பத்துக்கெல்ல அடிமைப்பட்டு கிடககுது...


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Empty Re: நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum