ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

+3
சாந்தன்
T.N.Balasubramanian
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by சிவா Tue Nov 16, 2010 5:00 am

First topic message reminder :

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Astrology_ani
குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 GuruHead2011

கணித்தவர்:- `ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Aries குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Taurus குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Gemini குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Cancer குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Leo குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Virgo
குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Libra குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Scorpio குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Sagittarius குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Capricorn குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Aquarius குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Pisces


Last edited by சிவா on Tue Nov 16, 2010 5:27 am; edited 2 times in total


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty மகரம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:17 am

மகரம்

உத்ராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜீ, ஜி, ஜே, ஜோ, கா, க, கி உள்ளவர்களுக்கும்)

உடன்பிறப்பின் உதவி வரும்! உழைப்பிற்கு பலன் கிடைக்கும்!

சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற மகர ராசி நேயர்களே!

இது வரை கும்பத்திற்கும், மீனத்திற்குமாக உருட்டி விளையாடும் பந்து போல, சஞ்சரித்து வந்த குரு இப்பொழுது, முறையாக நவம்பர் 21-ம் தேதி மீன ராசிக்குச் செல்கிறது. வந்த குருவால் வளர்ச்சி எப்படியிருக்கும்? என்ற சிந்தனை, பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்கள் மனதில் இடம்பிடிக்கும். வாழ்க்கை சக்கரத்தை நாம் ஓட்டுவதற்கு வழிகாட்டும் நவக்கிரகங்களில் குரு ஒன்று தான் சுபகிரகமாகும்.

நல்லாரை காண்பதுவும் நன்றே! நல்லாரோடு இருப்பதுவும் நன்றே! என்று சான்றோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை நமக்கு அறி முகம் செய்து வைத்து, நல்ல வாய்ப்புகளை இல்லம் தேடி வரவழைத்துக் கொடுப்பது குருவின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது.

அந்த குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திற்கும், பன்னிரெண்டாமிடத்திற்கும் அதிபதியாவார். விரயாதிபதியின் ஆதிபத்தியத்தைப் பெற்ற குரு உங்கள் ராசியைப் பொறுத்த வரை- பலம் பெறும் பொழுது விரயத்தை அல்லவா? செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதே நேரத்தில் அந்த குரு உங்கள் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். எனவே, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதும் இந்த குருவின் கையில் தான் இருக்கிறது.

மொத்தத்தில் சொல்லப்போனால், இந்த குரு பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும். அதே நேரத்தில், அதைப்போல ஒருமடங்கு கூடுதலாக செலவையும் ஏற்படுத்தலாம். எனவே, தேவையான காரியங்களை தேவையான நேரத்தில் செய்து முடிக்க கற்றுக் கொள்ளுங்கள்.குறிப்பாக, வாகனம் பழுதாகி விட்டால், அதை சரிசெய்ய செலவு வருமே என்று நினைத்து, அப்படியே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்றிருக்க கூடாது. அதற்காக நீங்கள் செலவிட வேண்டிய தொகை, வேறு ஓரு ரூபத்தில் செலவாகி விடலாம். அதுவும் வாராத கடனாகவோ, வீண் விரயமாகவோ மாறலாம். எனவே, பொருளாதார நிலை உயரும் பொழுது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். வேண்டிய ஆடை, ஆபரணங்களை வாங்கி சேர்த்து கொள்ளுங்கள்.

குரு பார்க்கும் இடங்களாக கருதப்படும் 7, 9, 11, ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. களத்திர ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றில் குருவின் பார்வை பதிவதால், அந்தந்த இடங்களுக்குரிய முயற்சிகள் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

குரு உங்கள் ராசியை பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா? குருவின் 5, 7, 9, ஆகிய பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களையும் தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஜந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு- உங்களுடைய சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால், மூத்த சகோதரத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். அவர்கள் வழியே ஏற்படும் சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் உதவிக்கரம் நீட்டுவீர்கள். மூன்றில் இருக்கும் குரு சப்தம ஸ்தானத்தைப் பார்ப்பதால். உடன் பிறப்புகளின் திருமண முயற்சி வெற்றி பெறும்.

இல்லத்தில் சுபகாரிய பேச்சுக்கள் வந்து கொண்டேயிருக்கும். தொழில் கூட்டாளிகளாக கூடப்பிறந்தவர்களே மாறலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதன் மூலம் வியக்கும் அளவு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

தளராத மனதிற்கு சொந்தக்காரர்கள்!

மக்கள் உங்களை தளராத மனமும், தாராளக் குணமும் கொண்டவர்கள் என்று வர்ணிப்பர். ஆனால், சிக்கனத்தின் சிகரமாகவும் சில சமயங்களில் விளங்குவீர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை கேட்டுச் செய்வது உங்கள் பழக்கம். தோற்றத்தை வைத்து உங்களை எடைபோட முடியாது. நிதானத்தைக் கடைபிடிப்பதன் மூலமே நிம்மதியைக் காணலாம் என்றுரைப்பீர்கள்.

ராசிநாதனாக சனி விளங்குகிறார். எனவே, தாமத விவாகமே உங்கள் தாரதோஷ நிவர்த்திக்கு வழி வகுக் கிறது. தகுந்த வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்கிறது. பிடிவாத குணம் உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தான். மற்றவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து கேட்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள் உங்களைப் பற்றிய பிரச்சினைகளை ஒருவரிடமும் சொல்லமாட்டீர்கள். இப்படிபட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை வழங்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மூன்றினில் குருதான் வந்தால்,
முன்னேற்றம் அதிகரிக்கும்!
தூண்டிலில் கிடைத்த மீன்போல்,
தொகைவந்து சேரும் உண்மை!
வேண்டிய காரியங்கள்
விருப்பம் போல் நடப்பதற்கே,
வான்வெளி குருவை நீங்கள்
வணங்குவீர்! வியாழன் தோறும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, வழிபாடு உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும். எழிலான வாழ்க்கை அமைய இல்லத்தில் வியாழன்தோறும் விரதமிருப்பது நல்லது. அயல் நாட்டு அனுகூலம் கிட்டும். நீங்கள் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பர். தொழிலில் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குருவின் பார்வைதான் குழப்பங்களை அகற்றும். குதூகலத்தை வழங்கும். இழப்புகளை ஈடுசெய்யும். இனிய வாழ்க்கையை மலரச் செய்யும். அந்த பார்வை சகோதர ஸ்தானத்தில்இருந்து உங்களுக்கு கிடைக்கிறது. எனவே, சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பிறப்புகள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர்.

பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் பஞ்சாயத்துக்கள் பலமுறை வைத்தும், பங்கெடுத்துக் கொள்ளாத சகோதரர்கள் இப்பொழுது, முன்நின்று முறையாக பிரித்துக் கொடுப்பர். சென்ற சில வருடங்களாக சகோதர கூட்டில் இருந்த தொழில், சமரச பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இப்பொழுது தனித்தொழிலாக அமையும்.

குருவின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் வரன்கள் வாயில் தேடி வந்து கொண்டேயிருக்கும். வாழ்க்கைத்துணை வழியே வரவும் வந்து சேரும். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பெண்வழி ஒத்துழைப்புகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் திருப்திகரமாக அமையும்.

குருவின் பார்வை ஒன்பதில் பதிவதால், பெற்றோர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை வழியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிந்தை மயங்காமல் இனி சிரித்து மகிழ வாய்ப்பு கிட்டும். பங்காளிப் பகை மாறும்.அருளாலர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பொருள் வளத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.

மக்களிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வரும் நேரமிது. புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். பழைய சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அரை குறையாக இருந்த பணிகள் மீண்டும் தொடரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால், பணவரவு திருப்தி தரும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். பலஆண்டுகளாக வசூலாகாத பாக்கிகள் இப்பொழுது வசூலாகலாம். தேக நலன் சீராக அமையும். தெய்வ வழிபாடு உங்களுக்கு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

தொழில் தொடங்க போதுமான வசதியில்லையே என்று நினைத்தவர்களுக்கு அரசு வழி ஒத்துழைப்பும், அருகில் இருக்கும் வங்கியின் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். பங்குதாரர்கள் தானாக வந்திணைவர். ஆனால், விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால், ஜாதக பொருத்தம் பார்த்தே தொழில் பங்குதாரர்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது. ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொண்டால் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே அமையும். இந்த குருப்பெயர்ச்சியைப் பொருத்த வரை அது பார்வை பலத்தால் பலன் கொடுக்கும் பெயர்ச்சியாகவே அமைகிறது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

மூன்றாமிடத்து குருவால் முன்னேற்றங்கள் அதிகரிக்க காரைக்குடி அருகிலுள்ள கோவிலூருக்கு வாருங்கள். அங்குள்ள கொற்றவாளீஸ்வரர், திருநெல்லை அம்மன் மற்றும் குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

மகர ராசிப் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மனக்குழப்பங்களை அகற்றும் பெயர்ச்சியாக அமையப்போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, சிக்கனத்தைக் கடைப்பிடித்த நீங்கள் இனி தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். கல்யாண கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். கூடப்பிறந்தவர்களின் கோபம் நீங்கும். குரு உத்ரட்டாதி நட்சத்திர காலில் சஞ்சரிக்கும் பொழுது, ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது. கணவன் மனைவியரிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வெற்றியை வரவழைத்துக் கொள்ளலாம். கேது- ராகு ப்ரீதி செய்வதன் மூலம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty கும்பம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:18 am

கும்பம்


அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

தனவரவு திருப்தி தரும்! தன்னம்பிக்கை கூடி வரும்!

இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாக பாவிக்கும் கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு, இடையில் மீனத்திற்கு சென்று, மீண்டும் சில நாட்கள் உங்கள் ராசியில் சஞ்சரித்து, பிறகு இப்பொழுது தன ஸ்தானத்தில் தனது சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக்கிறது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், அதை சொந்த வீட்டில் இருந்து குரு பார்த்து பலன் கொடுக்க போவதால், இந்த குருப்பெயர்ச்சி துயரங்கள் அனைத்Ûயும் துள்ளியோட வைக்கப்போகிறது.

அயராது உழைத்த உழைப்பிற்கு அற்புத பலன் கிடைக்கப் போகிறது. ஆதாயமில்லாத அலைச்சல்களையும், ஆரோக்கிய பாதிப்புகளையும் இதுவரை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால், இனி அந்த நிலை மாறும். நல்ல சம்பவங்களை நாளும் சந்திக்க இந்த குரு வழிவகுக்கப் போகிறார்.``குழந்தையும், தெய்வமும் கொண்டாட, கொண்டாடத்தான்'' என்று சொல்வார்கள். நலம் தரும் விதத்தில் குருவை கொண்டாட வேண்டும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு வருவதால், குடும்பத்தினர்கள் அனைவரும் குருப்பெயர்ëச்சிக்கு முன்னதாகவே கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. அப்பொழுது தான் அது பார்க்கும் இடத்தால் பல மடங்கு பலன் கிடைக்கும்.

குறிப்பாக, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங் களில் பதிகிறது. எனவே, ருண ரோக ஸ்தானம், இழப்பு ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவை புனிதமடைகின்றன. எனவே, அந்தந்த இடங்களுக்குஉரிய காரியங்கள் அனைத்தும் இனிதாக நடைபெறத் தொடங்கும். சென்ற சில மாதங்களாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி அன்றாடப் பணிகளை உற்சாகத்தோடு செயல்பட தொடங்குவீர்கள்.

குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா? குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களையும் தன் பார்வை பலம் மூலம் சேர்த்து வழங்கும்.

சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இனிய பலன்களை உங்களுக்குள் வழங்குவார் என்றாலும், இடையிடையே பார்க்கும் சனியால் எதிர்பார்த்த காரியங்களில் சில தடைகளும் ஏற்படலாம். எனவே சனீஸ்வர வழிபாடும் உங்களுக்குத் தேவை, குரு தெட்சிணாமூர்த்தி வழிபாடும் உங்களுக்குத் தேவை. குரு, பணவரவைக் கொடுக்கும் தன்மையுடையது. சனி அதைச் சந்தோஷமாக செலவிடும் விதத்தில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உருவாகலாம். எனவே நோய்க்கான அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

உதவும் மனப்பான்மையை உள்ளத்தில் பதித்தவர்கள்!

எல்லோரும் பதவிக்கு ஆசைப்படுவார்கள்! நீங்களோ `உதவி' செய்ய ஆசைப்படுவீர்கள்! உதவும் மனப்பான்மை உங்களிடம் இருப்பதால்தான் ஒவ்வொருவர் மனதிலும் இடம் பிடிக் கிறீர்கள். நாட்டுப்பற்று உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். நல்லவர்களோடு மட்டுமே சினேகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்கள்.

எந்தக் காரியத்தை எப்பொழுது செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள். வேடிக்கையாகப் பேசும் சுபாவம் உங்களுக்கு உண்டு. சொந்தக்காரியங்களை விட்டு விட்டு மற்றவர்களின் காரியங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள், தர்மசிந்தனை அதிகம் பெற்றவர். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாகச் சூரியன் அமைவதால் திருமணம் நடைபெறும் சமயத்தில் நல்ல பொருத்தம் பார்த்துத் தாரத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமே இல்லறத்தை இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

`உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வோம்' என்று சொல்வீர்கள். மற்றவர்களின் பார்வைக்கு ஆடம்பரமாகக் காட்சியளிப்பது உங்களுக்குப் பிடிக்காது. ராசிநாதன் சனியை `மந்தன்' என்று அழைப்பது வழக்கம். எனவே எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து நிம்மதியைத் தேடிக்கொள்வீர்கள். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்துக் கொடுக்காமல் ஓய்வெடுக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இரண்டினில் குருதான் வந்தால்
எதிர்பார்ப்பு வெற்றி யாகும்!
திரண்டதோர் செல்வம் சேரும்!
தித்திக்கும் தொழில்கள் வாய்க்கும்!
வறண்டதோர் வாழ்க்கை மாறும்!
வசதிகள் பெருகி நிற்கும்!
அருள்தரும் குருவின் ஆற்றல்
அகிலத்தில் புகழைச் சேர்க்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். எனவே, நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

குரு பார்வை குழப்பத்தைப்போக்கி, குதூகலத்தை வழங்கும். எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகி உள்ள குரு, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். எனவே, கடன்சுமை குறைவது முதல், காரியங்களில் வெற்றி கிடைப்பது வரை குருவின் அருட் பார்வையால் கிடைக்கப்போகிறது. மூடிக் கிடந்த தொழிலில் கூட திறப்பு விழா காண்பீர்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் ஒவ்வொன்றாகத் தோன்றும்.

குறிப்பாக, எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, விரயம், தொழில் போன்ற ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அந்த இடங்களில் எல்லாம் இனி நல்ல பலன்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ளலாம். எனவே, எதிர்ப்புகள் விலகும். லாப நோக்கத்தோடு பழகியவர்கள் விலகுவர். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று கருத்துடையோர் மனம் மாற வழி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரலாம்.

சுய ஜாதகத்தில் தெசா புத்தி பலம் பெற்றவர்கள் வரும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் அஷ்டமத்துச் சனி விலகும் வரை பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இதுவரை ரண சிகிச்சை தான் செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் இனி சாதாரண மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலே, குணமாகும் என்று கூறுவர்.

இழப்புகள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டும் வாய்ப்பு கிட்டும். நீண்டதூரப் பயணங்களுக்காக எடுத்த முடிவை மாற்றிக் கொள்வீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். இடம், பூமிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்களை சரியாக பராமரிக்க முடியவில்லையே என்று அதை மற்றவர்களிடம் ஒப்படைத்தும், அவர் களும் சரியாக கவனிக்கவில்லையே என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும்.

அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். புதிதாக பழக்கமானவர்கள் மூலமாக, நீங்கள் யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்திருந்தால் அது வரவில்லையே என்று இதுவரை கவலைப்பட்டிருப்பீர்கள். பலமுறை நடையாய் நடந்தும் பாக்கியை வசூலிக்க முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். பாசம் காட்டாத நண்பர்கள் இனி பாசம் காட்டுவர்.

தொழில் வளர்ச்சி கூடும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொன்னான, எதிர்காலம் அமைய அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கிளைத்தொழில்கள் தொடங்க புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்யோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு, விரும்பியபடியே வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வர்.

தெசா புத்தி பலம் பெற்றவர்கள் உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை காண்பர். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பிரச்சினைக்குரிய இடத்தை பங்கிட்டுக் கொண்டு, வீடு கட்டும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

இரண்டாமிடத்து குருவால் இனிய பலன்கள் வந்து சேரவும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறவும், ஆலங்குடி குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். அருகிலுள்ள திருக்கருகாவூர், முல்லை வனநாதர், கர்ப்பரட்சகாம்பிகை மற்றும் குரு பகவானையும் வழிபட்டு மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கும்ப ராசிப் பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும்!

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி குடும்ப பிரச்சினைகளைக்கு தீர்வு காணும் விதத்தில் அமையப்போகிறது. வருமானம் திருப்தி தரும். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்ப ஸ்தானத்தில் குரு பலம் பெறுவதால், வாழ்க்கைத் துணை அமையாதவர்களுக்கு வாழ்க்கைத்துணை அமையும். வாரிசுகள் இல்லாதவர்களுக்கு வாரிசுகள் உருவாகும். உங்கள் பெயரிலேயே உங்கள் கணவர், இடம், வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்க முன்வருவார். அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுய ஜாதகத்தில் தெசா புத்தியின் பலம் அறிந்து பரிகாரங்களை செய்து பலன்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty மீனம்

Post by சிவா Tue Nov 16, 2010 5:19 am

மீனம்


பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

சிந்தித்தால் வெற்றி வரும்! சீக்கிரத்தில் மாற்றம் வரும்!

எல்லோரிடத்திலும் நல்லவர் என்று பெயர் எடுத்துக் கொள்ளும் மீன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதனான குரு இப்பொழுது உங்கள் ராசியிலேயே பலம் பெறப்போகிறார். நவம்பர் 21 முதல் குரு சஞ்சரிக்கப்போவதால், `நடுக்கமோ, கலக்கமோ' கொள்ள வேண்டாம். நாம் நமது வீட்டில் இருக்கும் பொழுது, சவுகரியமாக இருப்பதைப் போல, கிரகங்களும் அதனதன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, அந்தந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளி வழங்கும்.

அதிலும் குருவை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள், பூர்வ புண்ணியம் செய்தவர்கள். சொந்த வீட்டில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சுகங்களையும், சந்தோஷங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும். அதிலும் அவர் பத்தாமிடத்திற்கு அதிபதியாக அல்லவா? விளங்குகிறார். எனவே, முத்தான வாழ்க்கையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அகற்றும். முகமலர்ச்சியோடு செயல்படுவீர்கள்.

புத்தாடை, அணிகலன்கள் ஏராளமாக வந்து சேரும். புயல் வீசிய வாழ்க்கையில் இனி தென்றல் வீசும். மத்தளம், நாதஸ்வரம், முழங்கும் மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும். எத்தகைய நிலையில் இருந்தாலும், இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்துத் தராமல் போகாது.

நமது ஊருக்கு சான்றோர்கள், அமைச்சர்கள் வரும் பொழுது, வால்போஸ்டர் அடித்து வரவேற்புக் கொடுப்போம். நமது இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்தால், வாயிலில் நின்று வரவேற்பு கொடுப்போம். அதேபோல, உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கு வரும் பொழுதும் வரவேற்பு கொடுக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.54 மணிக்கு உங்கள் ராசிக்குள் குரு அடியெடுத்து வைக்க போவதால், அன்று மாலையே நீங்கள் ஆலயத்திற்குச் சென்று சுண்டல் நைவேத்யம் செய்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து முல்லைப் பூ மாலை சூட்டி, அபிஷேக ஆராதனைகள் செய்து, சந்நிதியில் குரு கவசம் பாடி, கொண்டாடி மகிழுங்கள். குரு பார்வை உங்கள் மீது பதிந்தால் குருவருளோடு, திருவருளும் கிடைக்கும். சிறப்பான வாழ்க்கையும்

அமையும்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை. ஆனால், குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறது. அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அதன் பார்வை பதியும் இடங் களெல்லாம் புனிதமடையும் அல்லவா. அது ஜென்ம ராசியில் இருந்து கொண்டு பார்ப்பதால் உங்கள் ராசிக்கே முழுப் பலனும் கிடைக்கப் போகிறது.

சுமார் 51/2 மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு திடீர் வீடு மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றங்களை ஒரு சிலருக்குக் கொடுக்கலாம். வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்வது நன்மைதான். என்றாலும், மீண்டும் மறு மாற்றங்கள் மேஷத்திற்கு வரும் பொழுது ஏற்படலாம்.

எனவே தெசாபுத்தியின் பலமறிந்து வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும் விரய வியாழன் மாறியதால் விரயங்கள் குறையும். வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும். அரை, குறையாக நின்ற பணிகளைத் தொடர்வீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உல்லாசப்பயணங்கள் அதிகரிக்கும். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கையும் கூடும். நல்லவர்களின் தொடர்பால் தொழில் வளர்ச்சி காண்பீர்கள்.

போய்ச் சேர்ந்த இடத்திற்கு நன்மை!

எந்தக் காரியத்தையும் நீங்கள் யோசித்துச் செய்வதால் தான் யோகங்கள் வந்து சேர்கின்றன. உங்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளப் பலரும் முன்வருவர். பார்ப்ப

தற்கு சாதுவாக இருக்கும் நீங்கள் சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. என்றாலும், உறவினர்களை நம்பி ஒரு சில சமயங்களில் ஏமாந்து விட்டு, `மாட்டிக் கொண்டு விட்டோமே' என்று பிறகு கவலைப்படுவீர்கள். தேக நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தெய்வத் திருப்பணிகளுக்கு நன்றாகச் செலவிடுவீர்கள்.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஒரு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களிடம் உங்கள் ரகசியங்கள் அனைத்தையும் சொல்லி விடுவீர்கள். வாழ்வின் ஒவ்வொரு அங்குலம் முன்னேறும் பொழுதும், அனைத்தும் இறையருளால்தான் என்பதை மற்றவர்

களுக்கு எடுத்துரைப்பீர்கள். உங்கள் ராசிநாதனுக்குச் சுக்ரன் பகைவன் என்பதால், குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாகவே இருக்கும். திருமணப்பொருத்தம் தித்திப்பாத இருந்தால் தான் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். மற்ற ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு நல்ல பலன்களை வழங்காது. ஆனால் உங்கள் ராசிக்கும், விருச்சிக ராசிக்கும் மட்டும் ஜென்ம குரு சிறப்புகளை வழங்கும்.

ஜென்மத்தில் குருதான் வந்தால்
சிறப்பான வாழ்க்கை சேரும்!
பொன் பொருள் வந்து கூடும்!
புகழும் தான் அதிகரிக்கும்!
இன்பத்தைக் குடும்பத்தார்கள்
இயல்பாகப் பகிர்ந்து கொள்வார்!
அன்போடு குருவைப் பார்க்க
ஆலயம் நோக்கிச் செல்வீர்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஜென்ம குரு உங்களைப் பொறுத்தவரை சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். செல்வ நிலையும் உயர்த்திக்காட்டும்.

விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வை!

`குரு பார்க்க கோடி நன்மை' என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப் படையில் குரு உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். குறிப்பாக பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவை எல்லாம் இந்த 51/2 மாதத்தில் கிடைக்கப்போகிறது.

மக்கள் போற்றும் அளவிற்கு செல்வாக்கும், மகத்தான பதவி வாய்ப்புகளும் கூட ஒருசிலருக்கு கிடைக்கலாம். குறிப்பாக முன்னோர் சொத்துக்களில் முறையான பலன்கள் கிடைக்கும். பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகும். பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கை

கூடும். அவர்களுக்கு தகுந்த வேலைகிடைத்து வரும் வருமானத்தை உங்களுக்கு உதிரி வருமானமாகக் கொண்டு வந்து கொடுப்பர்.

உங்கள் குணமறிந்து குழந்தைகள் நடக்கவில்லையே என்ற கவலை இனி மாறும். அவைகள் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு உங்கள் நோக்கத்திற்காக தங்கள் கீழ்படிந்து நடப்பதாக ஒப்புக் கொள்வர். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாகும். சப்தம பார்வையாக குரு பார்ப்பதால் சுபகாரியங்கள் இக்காலத்தில் ஏராளமாக நடைபெறும். கல்யாணங்கள் மட்டுமில்லாமல் பவள விழா, முத்து விழா, மணி விழா போன்ற மகத்தான விழாக்களையும், பெண்களின் பூப்புனித நீராட்டு விழாக்களையும் கண்டு மகிழ்வீர்கள்.

இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குண்டுமணி அளவு கூடத் தங்கம் இல்லையே, குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் தொகைகள் வந்து ஆபரணங்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

எதிரிகள் விலகி உதிரிகளாவர். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பொது நலத்தில் ஈடுபட்டு இருப்பவர் களுக்குப் புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும். அருளாளர்களின் ஆலோசனைகளை அடிக்கடி கேட்டு நடந்து கொண்டால் பொருள்வளம் பெருக வழி பிறக்கும். பொன்னான எதிர்காலமும் உருவாகும். மண், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உடன்பிறப்புகள் முதல் உறவினர் வரை பகையாக இருந்தவர்கள் இனிப் பாசம் காட்டுவர்.

ஒன்பதாம் இடத்தைக் குரு பார்ப்பதால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். ஆன்மிகத்திற்காக அதிகத் தொகையைச் செலவிடுவீர்கள். தந்தை வழி ஆதரவு பெருகும். பங்காளிகளின் பகை மாறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஈர மனம் கொண்ட பலர் உங்களுக்கு உதவக் காத்திருப்பர். அயல்நாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.

புதிய வாகன யோகமும், பயணங்களால் பலனும் கிடைக்கும் நேரமிது. ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன்கருதிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். வளர்ச்சி அதிகரிக்க சிறப்பு வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்வது நல்லது. சிவகங்கை மாவட்டம் இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவி சந்நிதிக்கு உத்திரட்டாதி அன்று சென்று வந்தால் உன்னதமான வாழ்க்கை அமையும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

சிறப்பான வாழ்க்கை அமைய திருச்செந்தூருக்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானையும், மேதா தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்.

மீன ராசிப் பெண்களுக்கு மிகப்பெரிய மாற்றம் வரும்!

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரப்போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் சீராக்கிக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியரிடையே கனிவு கூடும். வாரிசுகள் உருவாகும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்குவர். சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால் சந்தோஷம் வந்து சேரும்.


குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by T.N.Balasubramanian Tue Nov 16, 2010 7:37 am

கடைத் தேடி பெற நினைத்த புத்தகம்,
எமைத் தேடி வந்ததே!

நன்றி,சிவா! அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by சாந்தன் Tue Nov 16, 2010 8:27 am

மேஷமும் , ரிஷபமும் அருமையாக உள்ளது ....
பாலா ஐயா சொன்னது போல கடைக்கு போய் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா .....

உண்மையிலேயே இதிலே சொன்ன மாதிரி நடக்குமா ????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by அன்பு தளபதி Tue Nov 16, 2010 1:41 pm

நான் நம்புறேன் ஜோசியத்தை என் ராசிக்கு நல விதமா இருக்கறதால
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by கோவை ராம் Tue Nov 16, 2010 2:12 pm

நன்றிகள் தலைவரே .நல்ல விதமா நாலு வார்த்தை இருக்கு .இத்தனை நாள் ஏழரை நம்மள ஆட்டி வச்சி இருந்தது

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by புவனா Tue Nov 16, 2010 3:47 pm

என்னோட ராசிக்கு நல்ல தான் இருக்கு...
அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by மனோஜ் Tue Nov 16, 2010 6:58 pm

நன்றி அன்பு மலர்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை - Page 2 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 21-11-2010 முதல் 07-05-2011 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum