ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெல்ல முடியாத வீரம்!

2 posters

Go down

வெல்ல முடியாத வீரம்! Empty வெல்ல முடியாத வீரம்!

Post by kirikasan Mon Nov 15, 2010 4:21 pm

எதிர்வரும் 27 நவம்பர் அன்று ஈழத்தமிழ் மக்களின், போரில் இழந்த வீரமைந்தர் நினைவு நாளைக் குறித்து இது அமைகிறது. இதைபற்றிய கருத்துக்கள் குறை நிறை விரும்பின் தாருங்கள். .


மானாடி மயிலாடி மரம்மீது குயில்கூவி
மகிழுமோர் நாட்டினிலே
தேனோடி சுவைக்கின்ற தீந்தமிழ் மொழிபேசும்
திருநாட்டின் நிலம் காக்கவே
வானோடி நிலமோடி வளையுகடல் நீரோடி
வெல்கின்ற படைகொண்டுமே
தானோடி எல்லோர்க்கும் தமிழர்க்கு முன்னோடி
தலைவனும் இருந்தானங்கே

போராடி வெல்கின்ற தீரமும் நெஞ்சிலே
பொய்மையே அற்ற மறமும்
வீராதிவீரர்கள் விளையாடிக் களம்கண்டு
வெற்றியைக் கொள்ளும் பலமும்
மாறாத நிலைகொண்ட மைந்தரும் கண்டுலகு
மனதிடை பயம் கொண்டதோ
ஊராகி நாடாகி உலகாளும் வீரரென்
றுளம்மீது கிலிகொண்டதோ


கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே
பூநாடிவரும் வண்டு போலாகி தானுண்ணப்
புகுந்ததோ நம்வீட்டிலே
சேய்நாடி வருகின்ற தாயென்றுசொல்லியே
தெரியாமல் விஷம் பற்றியே
வாய்மீது அமுதூட்டும் வழிதன்னில் விசமாக்கி
வா என்று பால் தந்ததே!

போராடி வெல்லாத படையுமோர் படைதானோ
பொய்மையில் கால்கொண்டுமே
தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே
நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே

மார்தட்டிப் பயில்வானும் சண்டைக்கு வருகையில்
ஒருவனுக் கொரு சோடியே
பாரெங்கும் பலம்பார்க்க அவனுக்கு இவனென்று
பார்ப்பது ஒருநீதியே
ஊருக்குத் தமீழீழ உயிருக்கு அதுஇல்லை
நூறுக்கு ஒன்றானதே
யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே

நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே
ஆபத்து ஒன்றல்ல அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே
ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே
கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்

நீதிக்கு நானென்று நிற்பவன் யாவரும்
நெஞ்சத்தில் பொய்கூறியே
பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே
சேதிக்குஅல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமே
பூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்
புதுயுகம் பிறக்கட்டுமே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வெல்ல முடியாத வீரம்! Empty Re: வெல்ல முடியாத வீரம்!

Post by யாதுமானவள் Mon Nov 15, 2010 10:46 pm

சகோதரர் கிரி அவர்களே.... அருமையான படைப்பு.

நடந்த அத்தனையும் கண்முன்னே கொண்டுவந்து என்னை மறுபடி கலங்கச் செய்துவிட்டீர்.

கொடுமைகளின் உச்சமென மிச்சமில்லாமல் செய்த சதிச்செயல்களை செய்வதறியாது ஒட்டுமொத்தத் தமிழினமும் திகைத்து நின்றதே. தமிழினத்தை அழிப்பதையே தனது கொள்கையென கொண்டதை தெளிவாகக் கூறியுள்ளீர் இவ்வரிகளில்....

"கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே"


இலங்கையில் அந்தக் கொடூரம் அரங்கேறிய வேளையில் வல்லரசாக மாறுவதாக மார்தட்டிக் கொண்டு நல்லரசுகளாக நடித்துக் கொண்டிருக்கும்
எல்லாஅரசுகளும் வீரம் செறிந்த படைகொண்டிருந்தும் ஏதும் செய்ய முடியாத திறனற்றதாயிருந்ததை கோபமும் ஆதங்கமும் ஒருசேரக் கூறியுள்ளீர் இங்கு.

"தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே"

தமிழர்களின் வீரத்தை அழகாகக் கூறி நேருக்கு நேர் வெல்லமுடியாமல் மறைந்திருந்து ராமன் வாலியைக் கொன்று அறம் காத்ததாய் கூறியதுபோல் தானே இங்கும் அரங்கேறியது என்று நேரடியாய்க் கூறியுள்ளீர்..

“நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே”


செவிடர் சமுதாயத்தில் சங்கொலி கேட்குமா? எங்கு சென்று நாம் முறையிடுவதென்று அரசாங்கம் கைவிட்ட அநாதைகளாக அலைந்த நேரத்தை அப்படியே பதித்துள்ளீர்

“யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே
நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே



மனதைப் பிசைகின்ற வலிஉணர்கிறேன் இந்த வரிகள் வாசிக்கும்போது

"அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே"


அடுத்த வரிகளைப் படிக்கும்போது கண்ணெதிரே தெரிகிறது மீண்டும் அக்காட்சிகள் கண்ணீரில் மிதக்கிறது மீண்டும் அந்நினைவுகள்.

"ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே

கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்?"



பழுதாகிப்போன மனிதம்
முழுதாகத் தெரிகிறது எனக்கு

பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே"



சேதிக்கு அல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமே
பூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்" -எனக்கூறி
மிகத் தெளிவாகாக முடித்துள்ளீர் இக்கவிதையை...

பாராட்டுக்கள் கூற இது மகிழ்ச்சியான தருணமல்ல.... இவ்வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.


தங்கள் தமிழ்த் தங்கை
யாதுமானவள்


Last edited by Yaadhumanaval on Mon Nov 15, 2010 11:55 pm; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

வெல்ல முடியாத வீரம்! Empty Re: வெல்ல முடியாத வீரம்!

Post by kirikasan Mon Nov 15, 2010 11:20 pm

சகோதரி யாதுமானவளுக்கு,
உங்கள் உணர்வுகளுக்கு தலை வணங்குவதோடு துயரத்தை பங்கிட்டமைக்கு நன்றிகள்! வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வெல்ல முடியாத வீரம்! Empty Re: வெல்ல முடியாத வீரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum