Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்-பெண் சமத்துவம்
Page 1 of 1
ஆண்-பெண் சமத்துவம்
இன்று பெரும்பாலான பெண்களிடம், "நாம் முன்னேற வேண்டும்" என்ற மனநிலையே காணப்படுகிறது. பெண்கள் முன்னேற வேண்டும் என்பது உண்மையே. அதேசமயம், இடையிடையே பின்னால் திரும்பியும் பார்க்க வேண்டும். காரணம், அவர்களுக்குப் பின்னால் அவர்களின் குழந்தை தொடர்ந்து வருகிறது. தாய் தனது குழந்தைக்காக சிறிது பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். குழந்தைக்கு அவளது வயிற்றில் இடம் கொடுப்பது மட்டும் போதாது, இதயத்திலும் இடமளிக்க வேண்டும்.
எதிர்கால சமுதாயத்தின் உறுதியும், அழகும், நறுமணமும் உண்மையில் தாய் மூலமே வெளிப்பட வேண்டும். தாயே முதல் குரு. குழந்தைகள் மீது அதிகமான செல்வாக்கு செலுத்த ஒரு தாயால்தான் முடியும். தாயின் செயல்களையே குழந்தைகள் அதிகமாக கிரகிக்கின்றன. தாய்ப்பாலானது குழந்தையின் உடலை மட்டும் வளர்க்கவில்லை. அது குழந்தையின் மனம், புத்தி மற்றும் இதயத்தின் வளர்ச்சிக்கும் கூடக் காரணமாகிறது.
அதேபோல், தாய் மூலம் வழங்கப்படும் வாழ்க்கைப் பண்பும், முன்னுதாரணமுமே குழந்தையின் எதிர்கால வாழ்வுக்குத் தேவையான ஆற்றலையும், தைரியத்தையும் வழங்குகிறது. ஆணுக்குப் பிறப்பளிப்பதும், அவனை வளர்த்து ஆளாக்குவதும் ஒரு பெண் எனும்போது, ஆணுக்கும் பிறப்பளித்த பெண்ணுக்கு நிச்சயமாக ஆணுக்கு சமமான இடத்தை அளிக்க வேண்டும். தாய்மார்கள் விழித்தெழுந்து செயல்பட்டால் மட்டுமே அன்பு, கருணை, செழிப்பு நிறைந்த ஒரு புதிய யுகம் மலர இயலும்.
வெகுகாலத்திற்கு முன்பு ஒரு அரசி (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சோழ அரசர் சுபதேவரின் மனைவி கமலவதி) கருவுற்றாள். அவளுக்கு பிரசவ வேதனை எடுத்தது. ஆஸ்தான ஜோதிடர் கிரக நிலைகளை நோக்கிய பின், "இன்னும் ஒரு முகூர்த்தத்திற்குப் பிறகு பிரசவத்திற்கு மிகவும் உத்தமமான லக்னம் வருவதாகவும், அப்போது குழந்தை பிறந்தால், அனைத்து நற்குணங்களின் இருப்பிடமான மகன் பிறப்பான். அவன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை புரிவான். நற்புகழுடன் விளங்குவான்" என்றும் கூறினார்.
இதைக்கேட்ட அரசி, அந்த லக்னம் வருவதற்கு முன்பே குழந்தை பிறந்துவிடாமல் இருப்பதற்காகத் தனது கால்களை கட்டித் தலைகீழாகத் தொங்கவிடச் சொன்னாள். சகிக்க முடியாத கஷ்டத்தை அவள் குழந்தையின் மேன்மையின் பொருட்டுத் தாங்கிக் கொண்டாள். அவளது விருப்பப்படியே நல்ல லக்னத்தில் குழந்தை பிறந்தது. ஆனால், அரசி இறந்துவிட்டாள். (தாயைத் தலைகீழாகக் கட்டித் தொடங்கவிட்டதால் குழந்தை முகமெல்லாம் ரத்தம் ஏறியிருந்தது. குறிப்பாகக் கண்களில் ரத்தக் கட்டிச் சிவப்பாக இருந்த காரணத்தால் அவனுக்கு கோச்செங்கண் எனப் பெயர் சூட்டினர்.) அவன் வளர்ந்து பின்னர் அரசனாக ஆனபோது, நாட்டின், நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டான். அவன் பல அழகு வாய்ந்த ஆலயங்களைக் கட்டினான். பூமி செழித்தது. மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர். (இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார்.)
"எனக்கு என்ன கிடைக்கும்?" என்றே இன்று அனைவரும் சிந்திக்கிறார்கள். நான் எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூக நலனிற்காக என்னால் எதை வழங்க முடியும் என்றே சிந்திக்க வேண்டும்.
பெண்ணின் ஆத்மசக்தி பெருகிச் செல்லும் நதியைப் போன்றது. நதி செல்லும் வழியில் மலை தடையாக நின்றால், நதியானது மலையைச் சுற்றி வளைந்து செல்லும். கற்பாறைகள் காணப்பட்டால், தடைப்பட்டு நின்றுவிடாமல் அவற்றிற்கு இடையில் நுழைந்து செல்லும். சில சமயங்களில் நதியானது பாறைகளின் மீதும், பாறைகளுக்கு அடியிலும் செல்லும். அதேபோல், பெண்ணிடம் எந்தத் தடையையும் கடந்து சென்று இலட்சியத்தை அடையும் ஆற்றல் உள்ளது. பெண்ணிடம் காணப்படும் இந்த சக்திக்குத் தகுந்த மதிப்பு கொடுக்க ஆண்கள் முன்வர வேண்டும். சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்காக, ஆண்கள் பெண்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும், அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.
எதிர்கால சமுதாயத்தின் உறுதியும், அழகும், நறுமணமும் உண்மையில் தாய் மூலமே வெளிப்பட வேண்டும். தாயே முதல் குரு. குழந்தைகள் மீது அதிகமான செல்வாக்கு செலுத்த ஒரு தாயால்தான் முடியும். தாயின் செயல்களையே குழந்தைகள் அதிகமாக கிரகிக்கின்றன. தாய்ப்பாலானது குழந்தையின் உடலை மட்டும் வளர்க்கவில்லை. அது குழந்தையின் மனம், புத்தி மற்றும் இதயத்தின் வளர்ச்சிக்கும் கூடக் காரணமாகிறது.
அதேபோல், தாய் மூலம் வழங்கப்படும் வாழ்க்கைப் பண்பும், முன்னுதாரணமுமே குழந்தையின் எதிர்கால வாழ்வுக்குத் தேவையான ஆற்றலையும், தைரியத்தையும் வழங்குகிறது. ஆணுக்குப் பிறப்பளிப்பதும், அவனை வளர்த்து ஆளாக்குவதும் ஒரு பெண் எனும்போது, ஆணுக்கும் பிறப்பளித்த பெண்ணுக்கு நிச்சயமாக ஆணுக்கு சமமான இடத்தை அளிக்க வேண்டும். தாய்மார்கள் விழித்தெழுந்து செயல்பட்டால் மட்டுமே அன்பு, கருணை, செழிப்பு நிறைந்த ஒரு புதிய யுகம் மலர இயலும்.
வெகுகாலத்திற்கு முன்பு ஒரு அரசி (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சோழ அரசர் சுபதேவரின் மனைவி கமலவதி) கருவுற்றாள். அவளுக்கு பிரசவ வேதனை எடுத்தது. ஆஸ்தான ஜோதிடர் கிரக நிலைகளை நோக்கிய பின், "இன்னும் ஒரு முகூர்த்தத்திற்குப் பிறகு பிரசவத்திற்கு மிகவும் உத்தமமான லக்னம் வருவதாகவும், அப்போது குழந்தை பிறந்தால், அனைத்து நற்குணங்களின் இருப்பிடமான மகன் பிறப்பான். அவன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை புரிவான். நற்புகழுடன் விளங்குவான்" என்றும் கூறினார்.
இதைக்கேட்ட அரசி, அந்த லக்னம் வருவதற்கு முன்பே குழந்தை பிறந்துவிடாமல் இருப்பதற்காகத் தனது கால்களை கட்டித் தலைகீழாகத் தொங்கவிடச் சொன்னாள். சகிக்க முடியாத கஷ்டத்தை அவள் குழந்தையின் மேன்மையின் பொருட்டுத் தாங்கிக் கொண்டாள். அவளது விருப்பப்படியே நல்ல லக்னத்தில் குழந்தை பிறந்தது. ஆனால், அரசி இறந்துவிட்டாள். (தாயைத் தலைகீழாகக் கட்டித் தொடங்கவிட்டதால் குழந்தை முகமெல்லாம் ரத்தம் ஏறியிருந்தது. குறிப்பாகக் கண்களில் ரத்தக் கட்டிச் சிவப்பாக இருந்த காரணத்தால் அவனுக்கு கோச்செங்கண் எனப் பெயர் சூட்டினர்.) அவன் வளர்ந்து பின்னர் அரசனாக ஆனபோது, நாட்டின், நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டான். அவன் பல அழகு வாய்ந்த ஆலயங்களைக் கட்டினான். பூமி செழித்தது. மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர். (இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார்.)
"எனக்கு என்ன கிடைக்கும்?" என்றே இன்று அனைவரும் சிந்திக்கிறார்கள். நான் எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூக நலனிற்காக என்னால் எதை வழங்க முடியும் என்றே சிந்திக்க வேண்டும்.
பெண்ணின் ஆத்மசக்தி பெருகிச் செல்லும் நதியைப் போன்றது. நதி செல்லும் வழியில் மலை தடையாக நின்றால், நதியானது மலையைச் சுற்றி வளைந்து செல்லும். கற்பாறைகள் காணப்பட்டால், தடைப்பட்டு நின்றுவிடாமல் அவற்றிற்கு இடையில் நுழைந்து செல்லும். சில சமயங்களில் நதியானது பாறைகளின் மீதும், பாறைகளுக்கு அடியிலும் செல்லும். அதேபோல், பெண்ணிடம் எந்தத் தடையையும் கடந்து சென்று இலட்சியத்தை அடையும் ஆற்றல் உள்ளது. பெண்ணிடம் காணப்படும் இந்த சக்திக்குத் தகுந்த மதிப்பு கொடுக்க ஆண்கள் முன்வர வேண்டும். சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்காக, ஆண்கள் பெண்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும், அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஆண்-பெண் சமத்துவம்
பழங்காலத்தில் ஆண்கள் ஒருவழிப் பாதையைப் போல் இருந்தார்கள். அப்படி ஆகாமல், அவர்கள் ஒரு நெடுஞ்சாலையைப் போல் ஆகவேண்டும். பெண்கள் முன்னேறுவதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுப்பது மட்டுமல்ல, வழிவிட்டுக் கொடுக்கவும் முன்வர வேண்டும். ஆண்களுக்கு பெண்களைவிட தசையும், உடல் பலமும் அதிகம் உண்டு. ஆனால் அந்த பலத்தை உபயோகித்து பெண்களை கீழ்ப்படுத்தாமல், அவர்களுக்கு உதவ வேண்டும்.
பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர் பதவிகளை அளிப்பதைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். சமத்துவம் என்பது அதிகாரம் மற்றும் பதவியால் வருவதல்ல, அது இதயம் சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு மனோபாவமாகும். ஆணும்-பெண்ணும் புத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே இதயத்திற்கும் முக்கிய இடமளிக்க வேண்டும். இதயத்தையும், புத்தியையும் இணைத்து செயல்படுத்தவும், ஒருவர் மற்றவருக்கு நல் உதாரணமாக அமையவும் முயற்சிக்க வேண்டும். அப்போது சமத்துவமும், இசைவும் இயல்பாக வந்து சேரும்.
வெளிப்படையாக யாரும் யாருக்கும் சமமாக முடியாது. கோழியால் சேவலைப் போல கூவ முடியாது. அதேசயமம், சேவலால் முட்டை இட முடியுமா? ஆனால், வெளிப்படையான வேறுபாடுகள் இருந்த போதிலும், மனதால் ஆணும், பெண்ணும் ஒன்றாக முடியும். மின்சாரமானது குளிர்சாதனப் பெட்டியின் மூலம் குளிர்ச்சியாகவும், ஹீட்டரின் மூலம் வெப்பமாகவும், மின் விளக்கின் மூலம் ஒளியாகவும் வெளிப்படுகிறது.
தொலைக்காட்சியின் இயல்பு மின் விளக்கிலோ மின் விளக்கின் இயல்பு தொலைக்காட்சியிலோ காணப்படுவதில்லை. குளிர்சாதனப் பெட்டி ஹீட்டரின் இயல்பையே, ஹீட்டர் குளிர்சாதனப் பெட்டியின் இயல்பையோ வெளிப்படுத்த முடியாது. இருப்பினும், எல்லா உபகரணங்களின் மூலமும் செயல்படும் மின்சாரம் ஒன்றாகும். அதுபோலவே, வெளிப்படையான வேறுபாடுகள் ஆண்-பெண்ணுக்கு இடையில் காணப்பட்டாலும், அவர்களுக்குள் குடியிருக்கும் ஆத்ம சைதன்யம் (இறையுணர்வு) ஒன்றே ஆகும்.
இயற்கையிலுள்ள அனைத்திற்கும் அவற்றிற்கே உரிய இடம் உண்டு. பொருளற்றதாக எதுவுமில்லை. அனைத்திலும் சைதன்யம் உண்டு. ஒரு பொருள் சிறியதாயினும், பெரியதாயினும் அவற்றிற்கே உரிய தனித்தன்மை உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதிரவனில் வெப்பமும், கடலில் அலையும், காற்றில் குளிர்ச்சியும் இருப்பது அவற்றின் இயல்பாகும். மானிற்கு சாந்த குணத்தையும், சிங்கத்திற்கு கொடிய குணத்தையும் அளிப்பது இந்த அடிப்படை இயல்பே ஆகும். அதேபோல், ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுக்கே உரிய இயல்பு உண்டு. அதுவே ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதை மறந்துவிட்டு ஆணும், பெண்ணும் செயல்படக்கூடாது.
ஆண்களைத் தோல்வியுறச் செய்யும் முயற்சியில், பெண் தனக்குக் கிடைத்துள்ள தாய்மை எனும் வரப்பிரசாதத்தை மறந்து, புகைபிடிக்கவும், மதுவருந்தவும் செய்தால், அது அவளுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
பெண்களை விட ஆணோ, ஆணைவிடப் பெண்ணோ மேலானவர் அல்ல. படைப்பில், யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பதே உண்மையாகும்.
மேன்மையான இடத்தை இறைவனுக்கு மட்டும் அளித்து, ஆணும், பெண்ணும் அந்த ஒப்பற்ற சக்திக்கு சேவை செய்யும் வெறும் கருவிகளாக மாறவேண்டும். இந்த மனோபாவத்திலிருந்து தான் ஆண்-பெண்ணுக்கிடையில் சரியான சமத்துவம் உருவாகிறது.
பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர் பதவிகளை அளிப்பதைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். சமத்துவம் என்பது அதிகாரம் மற்றும் பதவியால் வருவதல்ல, அது இதயம் சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு மனோபாவமாகும். ஆணும்-பெண்ணும் புத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே இதயத்திற்கும் முக்கிய இடமளிக்க வேண்டும். இதயத்தையும், புத்தியையும் இணைத்து செயல்படுத்தவும், ஒருவர் மற்றவருக்கு நல் உதாரணமாக அமையவும் முயற்சிக்க வேண்டும். அப்போது சமத்துவமும், இசைவும் இயல்பாக வந்து சேரும்.
வெளிப்படையாக யாரும் யாருக்கும் சமமாக முடியாது. கோழியால் சேவலைப் போல கூவ முடியாது. அதேசயமம், சேவலால் முட்டை இட முடியுமா? ஆனால், வெளிப்படையான வேறுபாடுகள் இருந்த போதிலும், மனதால் ஆணும், பெண்ணும் ஒன்றாக முடியும். மின்சாரமானது குளிர்சாதனப் பெட்டியின் மூலம் குளிர்ச்சியாகவும், ஹீட்டரின் மூலம் வெப்பமாகவும், மின் விளக்கின் மூலம் ஒளியாகவும் வெளிப்படுகிறது.
தொலைக்காட்சியின் இயல்பு மின் விளக்கிலோ மின் விளக்கின் இயல்பு தொலைக்காட்சியிலோ காணப்படுவதில்லை. குளிர்சாதனப் பெட்டி ஹீட்டரின் இயல்பையே, ஹீட்டர் குளிர்சாதனப் பெட்டியின் இயல்பையோ வெளிப்படுத்த முடியாது. இருப்பினும், எல்லா உபகரணங்களின் மூலமும் செயல்படும் மின்சாரம் ஒன்றாகும். அதுபோலவே, வெளிப்படையான வேறுபாடுகள் ஆண்-பெண்ணுக்கு இடையில் காணப்பட்டாலும், அவர்களுக்குள் குடியிருக்கும் ஆத்ம சைதன்யம் (இறையுணர்வு) ஒன்றே ஆகும்.
இயற்கையிலுள்ள அனைத்திற்கும் அவற்றிற்கே உரிய இடம் உண்டு. பொருளற்றதாக எதுவுமில்லை. அனைத்திலும் சைதன்யம் உண்டு. ஒரு பொருள் சிறியதாயினும், பெரியதாயினும் அவற்றிற்கே உரிய தனித்தன்மை உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதிரவனில் வெப்பமும், கடலில் அலையும், காற்றில் குளிர்ச்சியும் இருப்பது அவற்றின் இயல்பாகும். மானிற்கு சாந்த குணத்தையும், சிங்கத்திற்கு கொடிய குணத்தையும் அளிப்பது இந்த அடிப்படை இயல்பே ஆகும். அதேபோல், ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுக்கே உரிய இயல்பு உண்டு. அதுவே ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதை மறந்துவிட்டு ஆணும், பெண்ணும் செயல்படக்கூடாது.
ஆண்களைத் தோல்வியுறச் செய்யும் முயற்சியில், பெண் தனக்குக் கிடைத்துள்ள தாய்மை எனும் வரப்பிரசாதத்தை மறந்து, புகைபிடிக்கவும், மதுவருந்தவும் செய்தால், அது அவளுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
பெண்களை விட ஆணோ, ஆணைவிடப் பெண்ணோ மேலானவர் அல்ல. படைப்பில், யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பதே உண்மையாகும்.
மேன்மையான இடத்தை இறைவனுக்கு மட்டும் அளித்து, ஆணும், பெண்ணும் அந்த ஒப்பற்ற சக்திக்கு சேவை செய்யும் வெறும் கருவிகளாக மாறவேண்டும். இந்த மனோபாவத்திலிருந்து தான் ஆண்-பெண்ணுக்கிடையில் சரியான சமத்துவம் உருவாகிறது.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» தமிழ்நாட்டுச் சிற்பங்களில் பெண் சமத்துவம்
» சமத்துவம்.
» சமத்துவம்
» சமத்துவம்−−ப.வீரக்குமார்
» இது தான் சமத்துவம்
» சமத்துவம்.
» சமத்துவம்
» சமத்துவம்−−ப.வீரக்குமார்
» இது தான் சமத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|