புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
21 Posts - 70%
heezulia
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
1 Post - 3%
viyasan
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
213 Posts - 42%
heezulia
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_m10கொலையாளியை கண்டுபிடியுங்கள்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையாளியை கண்டுபிடியுங்கள்..


   
   
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 3:32 pm


சென்னையின் மத்தியில் இருந்தது அந்த அப்பார்ட்மெண்ட்.மிகப் பிரம்மாண்ட கட்டிடத்திற்குள் சின்னச் சின்ன பிரம்மாண்டங்களைக் கொண்டிருந்த அப்பார்ட்மெண்ட்கள். மழையின் கைங்கர்யத்தால் பளிச்சென துடைத்து விடப்பட்டது போல் இருந்தது வெளிப்புறம்.

நச நசப்புகளுக்கிடையில் ஆங்காங்கே சிறு கூட்டமாக நின்று பயம் ஆச்சர்யம் பரிதாபம் கோபம் என கலவையான உணர்ச்சிகளை புருவத்தின் இடுக்குகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள் அங்கே வசிக்கும் வாசிகள்.


மனோ.இன்ஸ்பெக்டர்.இந்தக் கதையின் நாயகன்.எனவே நேர்மையானவன் என்பது அடிப்படை தகுதி.

எதுவும் கேட்காமலே அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் மனோவிற்கு வழிகாட்டிக் கொண்டு முன்னே நடக்கத் துவங்கினான்.மனோவின் மிடுக்கு அப்படி.

B பிளாக்கை அடைந்து,லிஃப்ட் நோக்கி நடந்து, அதன் வழியே 4 வது மாடியை அடைந்தனர்.அழுகைச் சத்தம்.

V 4 என்று சாக்லேட் நிறத்தில் எழுதப்பட்டிருந்த கதவு லேசாக ஆடிக்கொண்டிருந்த வீட்டின் முன்னும் கொத்துக் கொத்தாக மனிதர்கள்.

பெண்கள் புடவைத் தலைப்பை சின்னப் பந்தாக உருட்டி வாயில் வைத்து துக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

மனோவைப் பார்த்ததும் அங்கே இருந்த கான்ஸ்டபிள் லாவகமாகி, சகஜமானார்.

“என்ன சந்திரன்? எதாவது தட்டுப்பட்டதா?”

கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மனோவின் பார்வையில் மனோதான் தெரிந்தான்.ஆளுயரக் கண்ணாடி.அதன் அருகில் கோகுல் சாண்டில் கிருஷ்ணர் இலையில் அமர்ந்திருந்தார்.அதற்கு கொஞ்சம் தள்ளி,வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுத்திருந்தாள்.செத்துப் போயிருந்தாள்.

கைக்கு அடக்கமான பிஸ்டலை இடது கை இறுக்கமாகப் பிடித்திருந்தது.வலது கை கோணலாக அலைந்திருந்தது.

இடுப்பு ஆரம்பிக்கும் இடத்திலேயே முடிந்திருந்த ஸார்ட் சைஸ் டாப்ஸும், தொள தொளப்பான பாட்டமும் கனுக்காலில் டைட்டும் என அப்டேட்டட் ஃபேசனில் மரணித்திருந்தாள்.

ஒருக்களித்து இருந்தவளின் முகத்தை கையுறை அணிந்த டிப்பார்ட்மெண்ட் ஆள் திருப்பிய உடன்,இடது நெற்றிப் பொட்டில் இருந்து இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்தியது.

“க்ளியர் சூயிசைடு சார்.பேஸிக்ஸ் ப்ரூவ் பண்ணுது”

சொன்ன சந்திரனை பார்க்காமல் வீட்டைப் பார்த்துக் கொண்டே கேட்டான் மனோ.

“என்ன பேஸிக்ஸ் சந்திரன்?”

“டோர் வாஸ் லாக்ட் இன்சைட் சார். எந்த வழியும் இருக்குற மாதிரி தெரியல.அப்புறம் ரீசன் ஸ்ட்ராங்கா இருக்கு சார்.”

எதுவும் பதில் சொல்லாமல் கிச்சன் பக்கம் வந்திருந்தான் மனோ.பளபள தான் எல்லாமே.கிச்சனின் மரவேலைப்பாடுகள் எல்லாம் ‘கிச்’சென்று இருந்தது.அதை ஒட்டி பால்கனி.அந்தப் பக்கம் வீடு.அங்கேயும் கிச்சன்.கொத்தாக நான்கு பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.‘தம்’ பிடித்துத் தாவிவிடலாமோ, என்று யோசித்தவாறே ஒரு சிகரெட்டை உருவினான் அனிச்சையாக.

“கேட்டுட்டுத்தான் இருக்கேன் சந்திரன் சொல்லுங்க..என்ன ரீசன்?அவ்ளோ ஸ்ட்ராங்கா?”

“சார்..”

“ம்”

“பொண்ணு பெரு பூர்ணா.”

அதுக்காகவா சுட்டுக்கிட்டாங்க? அதுவும் இத்தன வருஷம் கழிச்சு?”

“அதில்லை சார்.அவங்களுக்கும் புருஷனுக்கும் ரொம்ப நாளா சண்டை நடந்திட்டு இருக்கு சார்.டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்காங்க.இவங்க நடத்தைப் பத்தி அந்தாளு கேவலமா பேசிட்டாராம் கோர்ட்ல?”

“ம்”

கேட்டுக்கொண்டே அந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டை சுத்தமாக கண்களுக்குள் போட்டிருந்தான் மனோ.அப்பர் மிடிள் கிளாஸ் வீட்டிற்குண்டான பொருட்கள் அத்தனையும்.மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களுமே.

தற்போதைய தமிழ் படத்தில் இருந்து பழைய ஆர்மர் ஆஃப் காட்,போலிஸ் ஸ்டோரி போன்ற ஆங்கிலப் படங்கள் வரையிலான சிடிக்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

டிவியின் மேல் இருந்த டிவிடி கவரில் உன்னைப் போல் ஒருவன் கையில் துப்பாக்கியோடு கமலும், லால் அங்ங்கிளும்.

“ஹும்ம்..சொல்லுங்க சந்திரன்..எப்போ கோர்ட்ல இவங்கள அசிங்கமா பேசினாராம்?”

“முந்தாநாள் சார்”

”ஓ.குட்.அப்போ ரெண்டு நாளா யோசிச்சுத் தான் செத்திருக்காங்க.ம்.போஸ்ட் மார்ட்டம் சொல்லிடுங்க.யார் மொதல்ல இன்ஃபார்ம் பண்ணது?”

சந்திரன் அழைத்து வந்த நபர் நடுத்தர வயதில் ஸ்லிம்மாக இருந்தார்.காதில் லேசாக கருப்பு அப்பி இருந்தது.சாயம்.

”சொல்லுங்க..மிஸ்ட்டர்“

”என் பேரு ரவி சார். எதிர் பிளாக்ல இருக்கேன்.அங்கே இருந்து பார்த்தா இந்த பால்கனி,ஜன்னல் எல்லாமே நல்லாத் தெரியும் சார்.”

”ம்ம்”

“அழுதிட்டே நின்னுட்டு இருந்தாங்க பால்கனில,திடீர்னு உள்ளப் போனாங்க, கொஞ்ச நேரத்துல ட்டமால்னு சத்தம்.எனக்கு ஒரு மாதிரி இருந்தது.கொஞ்ச நேரம் நின்னுப் பார்த்துட்டே இருந்தேன்.அப்புறம் தான் அவங்க கோர்ட் மேட்டர் ஞாபகம் வந்து ஓடிப்போய்ப் பார்த்தேன்.கதவு பூட்டி இருந்தது.நான் நினைச்ச மாதிரியே ஆகிடுச்சு சார்.”

இவர்கிட்ட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிக்கோங்க.

இவங்கல்லாம் யாரு?

“அக்கம் பக்கம் இருக்குறவங்க சார்.என்கொயரிக்கு..”

முதலில் நின்றிந்த பெண் நன்றாக அழுதிருந்தாள்.

“பக்..கத்து வீடு சார்.ரொம்ப நல்லப் பொண்ணு சார்.அந்தப் படுபாவி அபாண்டமா பழிப் போட்டுட்டான் சார்.”அழத் தொடங்கினாள்

“சரி..உங்களுக்கு சத்தம் கேட்டுதா?”

“இல்ல சார் நான் அப்போ மார்க்கெட் போய்ட்டேன்.வந்துப் பார்த்தா ஒரே கூட்டம் சார்”

“யாராவது அடிக்கடி வருவாங்களா?”

“இல்ல சார்.எனக்குத் தெரிஞ்சு யாருமே வரமாட்டாங்க சார்?”

எழுதி வாங்கிக்கோங்க சந்திரன்.

”ம்..நீங்க சார்?”

”சணக்கம் வார்., ஸாரி,என் பேரு வாசு ஸார் . நான் போனவாரம் தான் எதிர் பிளாக்ல இருந்து இங்க மாறினேன்.அங்க ஹவுஸ் ஓனரே வந்துட்டாங்க.இதனால அங்க வந்தேன்.ச்சே,இங்க வந்தேன்.இந்த வீட்ட சொன்னதே பூர்ணா மேடம் தான் ஸார்.ஒரு ’ஹாய்’ அவ்வளவுதான் சொல்லுவாங்க.அதுக்கு மேல ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டாங்க”

“ம்..”

கிட்டத்தட்ட எல்லோருடைய பதில்களும் பூர்ணா நல்லவள் பாவம் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்றே இருந்தது.

மனோ,ஸ்டேட்மெண்டுகளை ஒரு பார்வை பார்த்தான்.

முதலில் பார்த்தவன் கே.ரவியில் ஆரம்பித்து எஸ்.சாந்தி,ஆர்.கோதண்டம்,வி.பாசு,என அனைவரும் சொன்னதைச் சரியாக எழுதிக் கொடுத்திருந்தார்கள்.

முதலில் பார்த்ததாகச் சொன்ன ரவியிடம் ஏதோ பொய் இருப்பதாக மனோவுக்குத் தோன்றியதும் அவரோடு அந்த எதிர் பிளாக்கான ’V’ஐ அடைந்து அவன் காட்டிய இடத்தில் இருந்து பார்த்தான்.

உண்மை தான். நன்றாகத் தெரிந்தது.சத்தமும் கேட்கும். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“உங்கள்ல யாருக்காவது அவங்களோட பழக்கமா?”

மொத்தமாக இல்லை என்ற திசையில் தலை ஆட்டினார்கள்.ஒரு பெண் தவிர.

“என்னோட பேசுவாங்க சார். நானும் டிவோர்ஸ் ஆனவள்ன்றதால அதைப் பத்தின டீட்டெய்ல்ஸ்,கேஸ் எப்பிடி மூவ் பண்றதுன்னு கேட்க ஆரம்பிச்சு ஓரளவு நல்லா பேச ஆரம்பிச்சாங்க.எங்க பக்கத்து வீட்ல இருந்த வாசுவுக்கு வீடு வேணும்னு சொன்னதும் உடனே அந்த பிளாக் காலியா இருக்குன்னு முடிச்சுக் கொடுத்தாங்க. ரொம்ப நல்ல டைப் சார்.”

“அவங்க ஹஸ்பெண்ட் பத்தி ஏதாவது சொல்லி இருக்காங்களா?”

“ரொம்ப சொல்ல மாட்டாங்க..ஆனா அந்தாளு வேற ஒரு பொண்ணோட இருக்கிறதுனால மீச்சுவல் அண்டர்ஸ்டேங்கிங்ல பிரியறதா முடிவு பண்ணி இருந்தாங்க.கோர்ட்ல அவர் தப்பா சொன்னதெல்லாம் ஒரு காரணம்தான்னு ஈஸியாத் தான் சொன்னாங்க,ப்ச்”

”அந்த வீடு யார் பேர்ல இருக்கு?”

“வாடகை வீடு தான் ஸார்,”

“ஹும்..அவங்க சாவுல யாருக்கும் லாபம் இல்லைன்னு சொல்றீங்க?”

“ப்ச்”

“என்னை மாதிரி போல்ட் ஆன ஆளா அவங்க இல்லாதது தான் ஸார் தப்பாப் போச்சு.என்கிட்ட யாராவது வால் ஆட்டினா அவ்வளவுதான்.ஓரளவு நான் தான் அவங்களுக்கு தைரியம் சொல்லி வச்சிருந்தேன்.இது ரொம்ப கஷ்டமா இருக்கு ஸார்”

“ஆமா..மிஸ்டர் ரவி எப்பிடி?” கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் கேட்டான் மனோ.

தோள்கைளைக் குலுக்கிச் சொன்னால்.சிம்ப்பிள் அண்ட் குட்.தட்ஸ் இட் ஸார்.ஏன்?”

”கேட்டேன். இங்கே இருந்து போனாரே..மிஸ்டர் ”

“வாசுவா?”

“ம்ம்..வாசு..அவர் எப்பிடி?எத்தன நாளாத் தெரியும்?”

”அவர் என் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட்.லிமிட்ல இருப்பாரு.நான் க்ளியரா இருப்பேன் சார்.எனக்கும் ஹஸ்பெண்ட்டுக்கும் ஒத்து வரலைன்னு தெரிஞ்சதுமே கட் பண்ணிக்கிட்டேன்.அவ்ளோ பிரச்சனை பண்ண என் ஹஸ்பண்டையே நான் சமாளிச்சேன்.இவ ஏன் இப்பிடி பண்ணிக்கிட்டானுதான் ஸார் வருத்தமா இருக்கு.

லிஃப்டில் இறங்கும் பொழுது மனோவிற்கு ரவி சொன்னதில் ஏதோ இன்னமும் பொய் இருப்பதாகவேப் பட்டது.காதுச் சாயம் அவனோடதா அல்லது அவளோடதா?.

வாசு பேசும்போதே உளறுகிறான்.ஆனால் விசாரித்தவரையில் அவனுக்கும் பூர்ணாவிற்கும் எள்ளவும் எள்ளுத் தண்ணியளவும் எந்த விதத்திலும் தொடர்பில்லை.

எதிர் பிளாக் பெண் உதவி தான் செய்திருக்கிறாள்.

பூர்ணா பெயரில் சொத்தும் இல்லை.

கணவன் தான் கொன்றிருக்க வேண்டும்.அல்லது தற்கொலைதான்.

பல யோசனைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது மனோவிற்கு.

மதியம் தன் அலுவகலத்தில், ரிப்போர்ட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் மனோ.


போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிக அருகாமையில் சுடப்பட்டதையும் நேரத்தையும் உறுதிப் படுத்தியது.குண்டு மிக அதிநவீன பிஸ்டலினுடையது.சைலன்ஸர் இல்லாமலா இருக்கும்? என்ற முதல் கேள்வி அதைப் படிக்கும் போதே தொக்கி நின்றது மனோவிற்கு.
ரவியின் கண்களும் மூளைக்குள் ஃப்ளாஸ் அடித்துப் போனது.

“ஸார் ஒன் மோர் பேட் நியூஸ்”

“சொல்லுங்க”

“அந்தப் பொண்ணோட ஹஸ்பெண்ட்..அங்க வந்துப் பார்த்துட்டு அழுதுட்டே எல்லார் முன்னாடி அந்த மாடில இருந்து குதிச்சு ஸ்பாட் அவுட் சார்”

“ஷிட்..”

“ஆமா சார்.புலம்பி இருந்திருக்காரு.தப்பு என் மேல தான்.நான் என்ன சொன்னாலும் கேட்டா.”அப்பிடின்னு சொல்லிட்டே செத்து இருக்கான்.

”சந்திரன்”

“ஸார்”

“சொல்லிட்டே வர்றேன்..கேளுங்க”

”எஸ் ஸார்”

“புருஷன் பொண்டாட்டி சண்டை.ஆனா மீச்சுவல் அண்டர்ஸ்டேங்.ஆனாலும் கோர்ட்ல தப்பா சொன்னத நினைச்சு வருத்தப்பட்டு இருக்காங்க பூர்ணா”

“எஸ் ஸார்”

“அழுதுட்டு இருந்திருக்காங்க..அத ரவி எதிர் ப்ளாக்ல இருந்து பார்த்திருக்காரு.உள்ள போயி கதவ சாத்திட்டு சுட்டுகிட்டு செத்திருக்காங்க.சத்தம் கேட்டு இவரு போய் பார்திருக்காரு”

“ஆமா ஸார்.ஆனா ஸ்டேட்மெண்ட்ல கதவ மூடின மாதிரி சொல்லல ஸார்”

“யோவ் அதெல்லாம் அண்டர்ஸ்டுட் பண்ணிக்கனும்யா”

“எஸ் ஸார்”

அப்புறம் பக்கத்துவீட்டு லேடி மார்கெட் போய்ட்டு வந்து பார்த்திருக்காங்க.அவங்களும் இவங்கள நல்லவங்கன்னு சொல்றாங்க.

அப்புறம் கோதண்ட ராமனா என்ன பேரு?”

“இந்தாங்க ஸார் ஸ்டேட்மெண்ட்”

“ம்,அப்புறம் பாசு”

“வாசு ஸார்”

“ம்ம்..இதுல பாசுன்னு இருக்கு..சரி..இவங்க எல்லாருமே பூர்ணா ரொம்ப நல்லப் பொண்ணுந்தான் சொல்றாங்க.ஸோ அந்த வார்த்தைகள் தாங்காம தற்கொலைப் பண்ணிக்கிட்டாங்க”

“ஆமா சார்”

“பிஸ்டல் டீடெய்ல்ஸ்?”

“அது இன்னும் தெரியல ஸார்,அப்புறம் யார் யார் அன்னிக்கு எண்ட்ரி ஆகி இருக்காங்கன்னு லிஸ்ட் கேட்டீங்களே ஸார்”

“குட், வந்துடுச்சா?”

“புதுசா யாரும் இல்லை ஸார்.இவங்க இருக்குற பிளாக்குக்கு ’புருஷோத்தமன்’அப்பிடின்றவர் மட்டும் முதல் தடவையா வந்திருக்காரு.ஆனா அவர் வாசுவுக்கு தெரிஞ்சவராம்.அவர பார்த்திட்டுப் போனதா வாசுவே கன்ஃபார்ம் பண்ணிட்டாரு.”

“அப்போ யாரும் சந்தேகப்படும்படி புதுசா அன்னிக்குப் போகலை”

“ஆமா ஸார்.”

“ஒரு குடும்பம் தற்கொலை பண்ணிக்கொண்டதுன்னு கேஸத் தூக்கிப் போடுங்க.”

“டன் சார்”

மனோ ஒரு காஃபியை அடிவரை சுவைத்துக் குடித்தான்.எழுந்தான்.காஃபியின் காரணமாக சுரந்த அமிலங்கள் அவசரப்படுத்தியது அவனை.

“சந்திரன்”

“சொல்லுங்க ஸார்”

“வாசுவை தூக்கிட்டு வாங்க.ஹி இஸ் த மேன் வி ஆர் லுக்கிங் ஃபார்.”

“சார்..அவனுக்கு பூர்ணாவுக்கும் எந்தவிதத்துலயும் தொடர்பே இல்லை சார்,நல்லாத் துளாவிப் பார்த்துட்டேன் ஸார்”

“அது எனக்கும் தெரியும்..அவனுக்கு ஒரு வியாதி இருக்கு.,தெளியவைப்போம்,”

“புரியல சார்”

“கூட்டிட்டு வாங்க சந்திரன்.ஸ்பூன் ஃபீடிங்கா பண்ணச் சொல்றீங்க என்னை”

என்ற மனோ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை விசிலில் பாடிக்கொண்டே சிரித்தான்.

********

கொலையை யார் பண்ணினார்கள் என்பதையும் கூடவே காரணம் யூகிக்க முடிகிறதா என்பதும்,கூடவே இதில் வேறு என்ன காரணங்கள் அல்லது கோணங்கள் இருக்கலாம் என்பதும் தான் கேள்வி.

இது ஒரு புது முயற்சி.சாதாரணமான க்ளூ கொடுக்காதீர்கள் என்று எல்லோருமே சொன்னதால் இந்தக் கதை.

ஒரு வேளை நிறைய பேர் சொல்லிவிடலாம்.அல்லது சுத்தமாக லாஜிக்கே இல்லை இதெல்லாம் க்ளூவா,கதையா,காரணமா என்றும் கேள்விகள் எழலாம்.

என்றாலும்..மழை நேரத்தில் மூளைக்கு வேலை.

நீங்கள் சரியாக விடையைச் சொல்ல வில்லை என்றால் தோற்றது நான் தான்.ஆம் சரியாக சொல்லத் தெரியாதது கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.

சரியான விடைகள் கடைசியில் ரிலீஸ் செய்யப்படும்.

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Jun 10, 2011 12:30 am

நான் நினைப்பது , வாசு சொன்னது ,அவங்க ஒரு hai,மட்டும் தான் சொல்லுவாங்க என்று ,ஆனால் அந்த பெண் சொன்னது ,அபர்ணா ,வாசுவிற்கு வீடு வேண்டும் என்று கேட்டதால் முடித்து கொடுதேன் என்று போலீசிடிம் கூறி உள்ளால்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக