புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
25 Posts - 51%
heezulia
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
7 Posts - 2%
prajai
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10நீங்கள் எதற்கு அடிமை? Poll_m10நீங்கள் எதற்கு அடிமை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எதற்கு அடிமை?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 08, 2010 11:38 am

'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது!' - கவிஞர் கபீர்.
எங்கே செல்லும் இந்த போதை என்று தடுமாறுபவர்களே இங்கே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு செல்லுங்கள்.

Self medication' எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு மருந்து தேடிக்கொள்வதன் மூலம்தான் போதைக்கு அடிமையாதல் நிகழ்கிறது என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். அகராதிகளோ 'ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுவதுதான் போதை' என் கின்றன. சமூகத்தின் எந்தத் தளத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும், எந்தப் பிரிவினைச் சேர்ந்த வராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போதைக்கு ஆட்படத்தான் செய்கிறார்கள். இங்கு 'போதை' என்பதை புகை, மது என்ற பழக்கத்தில் மட்டும் அடக்க வேண்டாம்.வீடியோ கேம்ஸ், செல்போன், இணையம், அதிகம் சாப்பி டும் பழக்கமான 'ஓவர் ஈட்டிங்', கட்டுப்பாடு இல்லாமல் செலவழிப்பது, வகை தொகை இல்லாமல் காணும் அனைத்து ஆண்கள்/பெண்களிடமும் 'நட்பு' பாராட்டி உறவு வளர்க்க முனைவது எனப் போதை தரும் விஷயங்கள், பட்டியலிட முடியாத அளவுக்கு மகா மெகா நீளமானது. அவற்றில் தொலைந்துபோகாமல் இளம் தலைமுறையினர் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்...

"போதைப் பழக்கம் என்றால், மது அருந்துவது மட்டும்தான் என்ற கருத்து தவறானது. பொருட்களுக்கு அடிமையாகும் 'substance addiction' மற்றும் இயல்பான பழக்கத்துக்கு எதிராகச் செயல்படும் பண்புகளுக்கு அடிமையாதல், அதாவது 'Behaviour addiction' என போதைக்கு அடிமையாவதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம்!" என்று முதல் வரியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் யாமினி கண்ணப்பன். "ஒயிட்னர் போன்ற சிந்தெட்டிக் ட்ரக்ஸ், கொக்கைன் போன்ற பார்ட்டி ட்ரக்ஸ், தூக்க மாத்திரைகள், இருமல் டானிக் போன்ற மருந்துப் பொருட்கள் என கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப, போதையின் வடிவம் மாறி வருகிறது. இந்தப் பொருட்கள் ஒருவிதத்தில் 'பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர்'களாக இருந்து, ஒரு மயக்கத்தை அளிக்கும். மேலும், தேர்வு சமயங்களில் வெகுநேரம் விழித்து இருந்து படிப்பது, ஷிப்ட்களில் வேலை செய்வது போன்ற மன அழுத்தம் தரும் விஷயங்களுக்காக இதுபோன்ற வடி கால்களை நாடுகிறார்கள். சமீபத்தியக்கணக்கு எடுப்பு, 17 வயதில் இருந்தே இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள் என்கிறது. அதாவது, கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே, போதை தரும் விஷயங்கள் அறிமுகமாகி விடுகின்றன.

பண்பியல் சார்ந்த அடிக்ஷன்களை எடுத்துக்கொண்டால், 'withdrawal symptoms இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதாவது, இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஏதோ ஒரு காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 'மீண்டும் எப்போது இணையத்தில் இணைவோம்' என்று வேறு வேலைகளை மறந்து, அதிலேயே அவர்களின் கவனம் இருக்கும். நிஜ வாழ்க்கையில் சாதிக்க முடியாத சில விஷயங்களை விர்ச்சுவல் உலகத்தில் சாதிக்க முடியும் என்று நினைப்பதால்... இணையம், சமூக வலைதளங்கள், கேமிங் சமாசாரங்கள் ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இன்று சுமார் 90 சதவிகித மக்களுக்கு செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல உணர்கிறார்கள். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது, சிக்னல் பிரச்னையால் அது டெலிவரி ஆகவில்லை என்றால், உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு மயக்கத்துக்கு ஆளாகிறார்கள். எப்படி சூதாட்டத்தில் எவ்வளவு இழந்தாலும் ஒரு முறை வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் விளையாடுவார்களோ, அதுபோலவே செல்போனைக் கையில் எடுத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இந்தக் கருவி என் வாழ்க்கையை நல்லதாக மாற்றி இருக்கிறது என்பதைவிட, என் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!" என்கிறார் யாமினி.

"கவலை மறந்து, பொய்யான சந்தோஷத்தில் மிதக்கப் பல போதை விஷயங்கள் இருக்கின்றன. சந்தோஷம் நம் வாழ்க்கையின் ஓர் அம்சம். அதை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். ஆனால், அதைச் சில மணி நேரங்களில் அனுபவித்து முடித்துவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. அதற்கு ஒரு பாதை இந்த போதை!" என வாழ்வியல் உண்மையோடு போதையின் இன்னொரு பக்கம் சுட்டுகிறார் சென்னை, டி.டி.கே. போதை மறுவாழ்வு மையத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"இளைஞர்கள் மதுவைத் தேடி ஓடுகிறார்கள் என் றால், அதை வீதிக்கு வீதி சுலபமாகக் கிடைக்கும்படி நாம் செய்துவிட்டோம். ஐ.டி. இளைஞர்கள் பலர் மன அழுத்தம் குறைய போதையைத் தேடுகின்றனர் என்பது தவறான கருத்து. ஐ.டி. இளைஞர்கள் என்று இல்லை; தேவைக்கு மேல் அதிக பணம் வைத்திருப்பவர்கள் அனைவருமே 'instant pleasure' என்பதை எதிர் பார்க்கிறார்கள். 20 வயதில் பீர் மட்டும் சாப்பிட்டேன் என்பார். ஆறு மாதம் கழித்து, ஒரு பெக் விஸ்கி மட்டும் என்பார். அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு, மூன்று என ரவுண்ட்கள் அதிகரிக்கும். இறுதியில், மருத்துவர் துணைகொண்டு மீட்கும் அளவுக்குச் சென்றுவிடுவார். இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு தவறான சிந்தனை, 'நாம நினைக்கிறபோது வேண்டாம்னு நிறுத்திடலாம்' என்பது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நிறுத்த முடியாது.

மது என்பது அல்ல; வேறு எந்த வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானாலும், மறுவாழ்வு மையச் சேவைகள் மூலம் மீட்டு எடுக்கலாம். டி-டாக்ஸிஃபிகேஷன், சைக்கோ தெரபி, ஃபாலோ-அப்... இந்த மூன்றினால் போதைக்கு அடிமையான ஒரு வரை விடுவிக்க முடியும். ஆனால், நம் நாட் டில் இறுதிக் கட்டமான 'ஃபாலோ-அப்'பை மட்டும் பெரும்பான்மையான மக்கள் தொடர்வது இல்லை. அதிலும் இளைஞர்கள் சுத்தமாகத் தொடர்வது இல்லை. அதனாலேயே மீண்டும் அந்தப் பழக்கங்களில் விழுகிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் போதைக்கு அடிமையான கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவார். இனிமேல் போதையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவிக்கு வகுப் புகள் எடுப்போம். இன்று அப்படி இல்லை. மகன் சிகிச்சைக்காக வருகிறான். அவன் தாய்க்கு நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம்!" என வருத்தத்துடன் தன் கருத்துக்களைச் சொல்கிறார் அனிதா.

"எந்த ஒரு செயலுக்கு ஒருவர் முழுவதுமாகத் தன்னை அடிமையாக்கிக்கொள்கிறாரோ, அது எல்லாமே அவர்களுக்கு ஏற்படக்கூடிய போதைதான்!" என்று தொடங்குகிறார் மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர் ஜான்சி சங்கர். "போதை மருந்துகளை எப்படிப் பயன்படுத்தணும், எங்கெங்கே, என்னவிதமான போதைப் பொருட்கள் கிடைக்கும் போன்ற விஷயங்களை சினிமாவிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மாணவர்களுக்கு 'நாமும் அதைச் செய்து பார்த்தால் என்ன?' என்கிற அடிப்படை ஆசை மனதில் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னைகள் மேலும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு ஒரு வழி கவுன்சிலிங். இன்று, போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பு உணர்ச்சி மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இப்போது எல்லாம் கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். போதை மருந்துத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே ஈடுபடுத்தி, அவர்கள் மூலமா கவே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான், இதை ஓரளவாவது தடுக்க முடியும்.

போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை. யோகா, தியானம் போன்ற மனநலப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் நல்ல புத்தகங்கள், ஆரோக்கியமான நட்பு வட்டம், பெற்றோர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் ஆகியவையும் இருந்தால், போதையின் பிடியில் இளைய சமுதாயம் எப்படிச் சிக்கும்?" என்று கேள்வியுடன் முடிக்கிறார் ஜான்சி.

'யாருக்குத்தான் துன்பம் இல்லை இந்த உலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை!' என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவில் வைத்திருங்கள் தோழர்களே. 'அவன் செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன்!' என்று வழி தவறாதீர்கள். முடிந்தால் அவரைத் திருத்துங்கள். நீங்களும் சகதியில் குதிக்க வேண்டாம்.

தவிர்த்திடு உடனே போதையை
சீராகும் உங்கள் வெற்றிப் பாதையே.

விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 2:20 pm

மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 08, 2010 2:23 pm

நாங்கெல்லாம் அன்புக்கு அடிமை மாமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:02 pm

///போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை///


என்னதான் கவுன்சிலிங் வைத்தாலும், மருத்துவம் பார்த்தாலும், இதுபோன்றவற்றிலிருந்து விடுபட சுயகட்டுப்பாடு இல்லை என்றால் பயனில்லை!



நீங்கள் எதற்கு அடிமை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக