புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.
புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!
1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.
புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
31. அத்தான் என்றெதிர் வந்தாள்
எண்சீர் விருத்தம்
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று
தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார்
கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.
பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை
வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார்.
மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்;
தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை.
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.
முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக
முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு
முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.
செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல்
திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப்
படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர்.
வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை
தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!
தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான்.
தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை
விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத
மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.
கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள்
காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான்.
விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர்
ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை.
'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.
'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத்
தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்!
'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார்.
'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!
'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்!
மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள்.
'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'
என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்:
'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா!
நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி!
நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே!
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!
தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ
சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை.
அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்.
நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன்.
நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.
'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி
ஊராளும் அரசறிய உலகம் காண
துரையே!நீ ருங்காண அவனின் மார்பில்
சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்!
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'
என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான்.
இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள்
உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்;
'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை.
அமைவான குரலாலே கூறு கின்றாள்;
'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்.
நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால்
நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள்
நற்றமிழக் கையாலே கொன்று போட்டு
திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க!
செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப்
பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு!
பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான்.
பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.
பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை!
உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன்.
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
தனியாக உலவினான் புலியைப் போலே!
எண்சீர் விருத்தம்
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று
தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார்
கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.
பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை
வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார்.
மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்;
தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை.
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.
முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக
முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு
முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.
செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல்
திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப்
படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர்.
வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை
தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!
தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான்.
தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை
விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத
மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.
கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள்
காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான்.
விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர்
ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை.
'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.
'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத்
தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்!
'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார்.
'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!
'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்!
மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள்.
'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'
என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்:
'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா!
நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி!
நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே!
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!
தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ
சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை.
அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்.
நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன்.
நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.
'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி
ஊராளும் அரசறிய உலகம் காண
துரையே!நீ ருங்காண அவனின் மார்பில்
சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்!
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'
என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான்.
இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள்
உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்;
'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை.
அமைவான குரலாலே கூறு கின்றாள்;
'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்.
நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால்
நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள்
நற்றமிழக் கையாலே கொன்று போட்டு
திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க!
செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப்
பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு!
பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான்.
பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.
பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை!
உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன்.
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
தனியாக உலவினான் புலியைப் போலே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
32. மறவர் திறம் பாடு
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம்
கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே!
ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே
ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.
அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே
எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல்
மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை
வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ!
தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே
இன்னார் இனியார் எனயாதும் பாராமல்
பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை
மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!
நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத்
தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்:
கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை
ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!
ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி
ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர்
ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை
ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே!
ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி
பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர்
பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத்
தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே!
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம்
கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே!
ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே
ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.
அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே
எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல்
மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை
வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ!
தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே
இன்னார் இனியார் எனயாதும் பாராமல்
பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை
மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!
நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத்
தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்:
கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை
ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!
ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி
ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர்
ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை
ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே!
ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி
பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர்
பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத்
தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
33. குதிரைவீரர் வருகின்றார்கள்
எண்சீர் விருத்தம்
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம்
தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம்
தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும்
நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை
நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த
கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்;
குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்.
சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும்
செங்கதிரை வயற்புறத்தில் கண்டார்; பின்னர்
ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார்.
ஒருவரும்அங் கில்லையெனில் புதுமை யில்லை.
நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார்
நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில்
ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி
ஒருவனையும் நாம்பிடிக்க விலையே' என்றான்.
பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும்
பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்!
ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை
ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும்
கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில்
கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார்.
தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம்
தக்கபடி சாத்துப்படி' என்று சொன்னான்.
இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர்
இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக்
கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும்
கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல் தீதே'
என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும்
இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும்
புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்!
பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார்.
எண்சீர் விருத்தம்
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம்
தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம்
தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும்
நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை
நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த
கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்;
குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்.
சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும்
செங்கதிரை வயற்புறத்தில் கண்டார்; பின்னர்
ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார்.
ஒருவரும்அங் கில்லையெனில் புதுமை யில்லை.
நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார்
நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில்
ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி
ஒருவனையும் நாம்பிடிக்க விலையே' என்றான்.
பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும்
பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்!
ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை
ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும்
கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில்
கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார்.
தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம்
தக்கபடி சாத்துப்படி' என்று சொன்னான்.
இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர்
இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக்
கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும்
கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல் தீதே'
என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும்
இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும்
புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்!
பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
34. மேற்பார்வையாளன்
தென்பாங்கு -- கண்ணிகள்
ஏறித் - தலைக்
கட்டோடு வந்தனன் சீறி!
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை
ஏங்கிட வைப்பவன் போலே - இமை
கொட்டாமல் பார்த்தனன் மேலே!
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர்
துள்ளிஎ ழுந்தங்குத் தாவிச் - சிரித்
திட்டனர் அன்னோனை மேவி!
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன் என்றே - திம்மன்
பட்டாவை ஏந்தினன் நன்றே!
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென
உற்றுவி ழித்தசுப் பம்மா - அங்குச்
சற்றும்இ ருப்பாளோ சும்மா?
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட
மேற்கிளை விட்டுக் குதித்தாள் - பகை
அற்றிட நெஞ்சம் கொதித்தாள்.
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன மெய்கள் - அங்கே
அற்று விழுந்தன கைகள்
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி காரி - கண்டு
தெற்றென வீழ்ந்தனன் பாரில்
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில்
ஒழிந்தது வேஅவன் ஆவி - கண்ட
ரற்றினர் சிப்பாய்கள் மேவி.
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில் விழுந்து - கண்
ணுற்றனள் இன்பக் கொழுந்து.
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்
தோகை பதைத்ததும் கண்டார் - கைப்
பற்றிட எண்ணமே கொண்டார்.
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள் மேலே - மிகச்
சிற்றின நாய்களைப் போலே!
தென்பாங்கு -- கண்ணிகள்
ஏறித் - தலைக்
கட்டோடு வந்தனன் சீறி!
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை
ஏங்கிட வைப்பவன் போலே - இமை
கொட்டாமல் பார்த்தனன் மேலே!
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர்
துள்ளிஎ ழுந்தங்குத் தாவிச் - சிரித்
திட்டனர் அன்னோனை மேவி!
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன் என்றே - திம்மன்
பட்டாவை ஏந்தினன் நன்றே!
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென
உற்றுவி ழித்தசுப் பம்மா - அங்குச்
சற்றும்இ ருப்பாளோ சும்மா?
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட
மேற்கிளை விட்டுக் குதித்தாள் - பகை
அற்றிட நெஞ்சம் கொதித்தாள்.
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன மெய்கள் - அங்கே
அற்று விழுந்தன கைகள்
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி காரி - கண்டு
தெற்றென வீழ்ந்தனன் பாரில்
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில்
ஒழிந்தது வேஅவன் ஆவி - கண்ட
ரற்றினர் சிப்பாய்கள் மேவி.
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில் விழுந்து - கண்
ணுற்றனள் இன்பக் கொழுந்து.
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்
தோகை பதைத்ததும் கண்டார் - கைப்
பற்றிட எண்ணமே கொண்டார்.
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள் மேலே - மிகச்
சிற்றின நாய்களைப் போலே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
35. அவள் பிடிப்பட்டாள்
எண்சீர் விருத்தம்
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள்
சேயிழையாள் பிடிப்பட்டாள் பகைவ ராலே!
அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே
அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்!
'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும்
வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ?' என்றாள்.
மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்;
முடிவடைந்த தென்பணியும்' என்று சொன்னாள்.
எண்சீர் விருத்தம்
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள்
சேயிழையாள் பிடிப்பட்டாள் பகைவ ராலே!
அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே
அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்!
'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும்
வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ?' என்றாள்.
மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்;
முடிவடைந்த தென்பணியும்' என்று சொன்னாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
36. தேசிங்குக்குச் சேதி எட்டிற்று
தென்பாங்கு -- கண்ணிகள்
செஞ்சிப் பெருங்கோயில் - தன்னிலே
தேசிங்கு வீற்றிருந்தான்.
அஞ்சி அருகினிலே - இருந்தார்
அமைச்சர் மற்றவர்கள்.
பஞ்சு பெருந்தீயைப் - பொசுக்கப்
பார்த்தும் இருப்பீரோ?
செஞ்சிப் படிமிதித்தார் - இங்குள்ள
சிப்பாய் தனைமடித்தார்.
சென்று பிடித்தாரோ? - அல்லது
செத்து மடிந்தாரோ?
ஒன்றும் தெரியவில்லை--நடந்த
தொன்றும் தெரியவில்லை.
என்று துடிதுடித்தான் - தேசிங்கன்.
இருவர் சிப்பாய்கள்
நின்று தலைவணங்கி - அவ்விடம்
நிகழ்ந்தவை உரைப்பார்.
திம்மனும் சுப்பம்மா - எனுமோர்
சேயிழை யும்எதிர்த்தார்.
நம்மவர் சிற்சிலபேர் - இறந்தார்.
நம்அதி காரியின்மேல்
திம்மன் அவன்பாய்ந்தான் - ஒருசொல்
செப்பினன் அப்போது
'செம்மையில் என்னிடமே - சிக்கினாய்
தேசிங்கு மாய்க'என்றான்
என்றுசிப் பாய்உரைத்தார் - தேசிங்கன்
'என்னை மடிப்பதுதான்
அன்னவ னின்நினைப்போ? - சரிதான்
அப்படியா அடடே!
இன்று பிழைத்தேன்நான் - அடடே
என்றுபு கன்றவ னாய்ப்
'பின்னும் நடந்ததென்ன? - இதனைப்
பேசுக' என்றுரைத்தான்.
திம்மன் மடிந்துவிட்டான் - மனைவி
சேயிழை சிக்கிவிட்டாள்.
செம்மையில் அன்னவளின் - இரண்டு
செங்கையைப் பின்இறுக்கி
நம்மவர் இவ்விடத்தை - நோக்கியே
நடத்தி வருகின்றார்.
திம்மன் மனைவியைப்போல் - கண்டிலோம்
திறத்தில் என்றுரைத்தார்.
தென்பாங்கு -- கண்ணிகள்
செஞ்சிப் பெருங்கோயில் - தன்னிலே
தேசிங்கு வீற்றிருந்தான்.
அஞ்சி அருகினிலே - இருந்தார்
அமைச்சர் மற்றவர்கள்.
பஞ்சு பெருந்தீயைப் - பொசுக்கப்
பார்த்தும் இருப்பீரோ?
செஞ்சிப் படிமிதித்தார் - இங்குள்ள
சிப்பாய் தனைமடித்தார்.
சென்று பிடித்தாரோ? - அல்லது
செத்து மடிந்தாரோ?
ஒன்றும் தெரியவில்லை--நடந்த
தொன்றும் தெரியவில்லை.
என்று துடிதுடித்தான் - தேசிங்கன்.
இருவர் சிப்பாய்கள்
நின்று தலைவணங்கி - அவ்விடம்
நிகழ்ந்தவை உரைப்பார்.
திம்மனும் சுப்பம்மா - எனுமோர்
சேயிழை யும்எதிர்த்தார்.
நம்மவர் சிற்சிலபேர் - இறந்தார்.
நம்அதி காரியின்மேல்
திம்மன் அவன்பாய்ந்தான் - ஒருசொல்
செப்பினன் அப்போது
'செம்மையில் என்னிடமே - சிக்கினாய்
தேசிங்கு மாய்க'என்றான்
என்றுசிப் பாய்உரைத்தார் - தேசிங்கன்
'என்னை மடிப்பதுதான்
அன்னவ னின்நினைப்போ? - சரிதான்
அப்படியா அடடே!
இன்று பிழைத்தேன்நான் - அடடே
என்றுபு கன்றவ னாய்ப்
'பின்னும் நடந்ததென்ன? - இதனைப்
பேசுக' என்றுரைத்தான்.
திம்மன் மடிந்துவிட்டான் - மனைவி
சேயிழை சிக்கிவிட்டாள்.
செம்மையில் அன்னவளின் - இரண்டு
செங்கையைப் பின்இறுக்கி
நம்மவர் இவ்விடத்தை - நோக்கியே
நடத்தி வருகின்றார்.
திம்மன் மனைவியைப்போல் - கண்டிலோம்
திறத்தில் என்றுரைத்தார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
37. சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள்
தென்பாங்கு -- கண்ணிகள்
கோட்டைநெடும் வாயிலினைக் குறுகி விட்டார் - அந்தக்
கோதையை நடத்திவரும் கூட்ட மக்களும்!
போட்டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் - முகில்
போற்பரவி மேற்புரளும் நீண்ட குழலும்
தீட்டிவைத்த வேலின்முனை போன்ற விழியும் - வந்து
சீறுகின்ற பாம்பையொத்த உள்ளமும் கொண்டாள்
'கோட்டையினில் யாரிடத்தில் கொண்டு செல்கின்றீர் - என்னைக்
கூறிடுவீர்' என்றவுடன் கூறு கின்றனர்:
'ஆளுபவர் தேசிங்கெனக் கேட்ட தில்லையோ? - அவர்
அவ்விடத்தில் வீற்றிருத்தல் கண்ட தில்லையோ?
தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? - என்று
சொன்னமொழி கேட்டனள் வியப்ப டைந்தனள்.
'ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் - அவன்
அங்குவந்த பேர்வழியை ஒத்தி ருந்ததால்!
வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் - அந்த
மன்னன்நினை வாய்அவனை வெட்டி மடித்தோம்.
செஞ்சியினி லேஇருக்கும் செந்த மிழர்கள் - பெற்ற
தீமையின்னும் தீரவில்லை. என்க ணவரோ
செஞ்ச்ிமன்னன் தீர்ந்தனன் இனித் தமிழர்க்கே - ஒரு
தீங்குமில்லை என்னும்உளப் பாங்கொடு சென்றார்.
செஞ்சியினை ஆளுகின்ற அவ்வ டக்கரை - என்
செவ்விழிகள் காணும்;என்கை காண வசமோ?
மிஞ்சும்என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ? - என
மெல்லிஅவள் நெஞ்சில்வெறி கொண்டு நடந்தாள்.
தென்பாங்கு -- கண்ணிகள்
கோட்டைநெடும் வாயிலினைக் குறுகி விட்டார் - அந்தக்
கோதையை நடத்திவரும் கூட்ட மக்களும்!
போட்டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் - முகில்
போற்பரவி மேற்புரளும் நீண்ட குழலும்
தீட்டிவைத்த வேலின்முனை போன்ற விழியும் - வந்து
சீறுகின்ற பாம்பையொத்த உள்ளமும் கொண்டாள்
'கோட்டையினில் யாரிடத்தில் கொண்டு செல்கின்றீர் - என்னைக்
கூறிடுவீர்' என்றவுடன் கூறு கின்றனர்:
'ஆளுபவர் தேசிங்கெனக் கேட்ட தில்லையோ? - அவர்
அவ்விடத்தில் வீற்றிருத்தல் கண்ட தில்லையோ?
தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? - என்று
சொன்னமொழி கேட்டனள் வியப்ப டைந்தனள்.
'ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் - அவன்
அங்குவந்த பேர்வழியை ஒத்தி ருந்ததால்!
வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் - அந்த
மன்னன்நினை வாய்அவனை வெட்டி மடித்தோம்.
செஞ்சியினி லேஇருக்கும் செந்த மிழர்கள் - பெற்ற
தீமையின்னும் தீரவில்லை. என்க ணவரோ
செஞ்ச்ிமன்னன் தீர்ந்தனன் இனித் தமிழர்க்கே - ஒரு
தீங்குமில்லை என்னும்உளப் பாங்கொடு சென்றார்.
செஞ்சியினை ஆளுகின்ற அவ்வ டக்கரை - என்
செவ்விழிகள் காணும்;என்கை காண வசமோ?
மிஞ்சும்என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ? - என
மெல்லிஅவள் நெஞ்சில்வெறி கொண்டு நடந்தாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
38. தேசிங்கு முன் வந்தாள்
எண்சீர் விருத்தம்
புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த
விடுமூச்சுப் புகைசிந்தக் குறித்துப் பார்த்த
எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல்
இருட்காட்டில் நிலவுமுகம் மறைந்து தோன்றக்
கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல்
கொலுமுன்னே வந்துநின்றாள். அவ்வ டக்கன்
உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான்.
அப்பார்வை அற்றொழிய உறுத்திப் பார்த்தாள்!
எண்சீர் விருத்தம்
புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த
விடுமூச்சுப் புகைசிந்தக் குறித்துப் பார்த்த
எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல்
இருட்காட்டில் நிலவுமுகம் மறைந்து தோன்றக்
கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல்
கொலுமுன்னே வந்துநின்றாள். அவ்வ டக்கன்
உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான்.
அப்பார்வை அற்றொழிய உறுத்திப் பார்த்தாள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
39. முற்றிய பேச்சு
தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான்
உன்னை அனுப்பிவைத்தான்?
மண்ணிடை மாண்டானே - தெரியா
மனிதன் உன்உறவா?
எண்ணும்என் ஆட்சியிலே - செய்ததேன்
இந்தக் கலகமடீ?
திண்மை உனக்குளதோ?' - என்றந்தத்
தேசிங்கு சொன்னவுடன்,
'பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர்
பொய்த்தொழில் செய்வதில்லை.
மெய்யினைச் பேசுதற்கும் - தமிழர்
மெய்பதைத் திட்டதில்லை.
கையினில் வாளாலே - உனது
காவல் தலைவன்தலை
கொய்தவர் யார்எனிலோ - எனையே
கொண்டவர் என்றறிவாய்!
யாரும் அனுப்பவில்லை - எமையே
இட்டுவந் தான்ஒருவன்
சேரியில் ஓர்குடிசை - தந்துமே
தீய இருமாதர்
கோரிய வேலைசெய்வார் - எனவே
கூட இருக்கவிட்டான்.
சீரிய என்துணைக்கே - அவன்ஓர்
சிப்பாய் உடைகொடுத்தான்.
கோட்டைக் கழைத்தேகித் - திரும்பக்
கூட்டிவ ராதிருந்தான்.
வீட்டில்என் சோற்றினிலே - மயக்கம்
மிஞ்சும் மருந்தையிட்டான்.
ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும்
அற்ற நிலையினிலே
காட்டு மனிதன்அவன் - எனது
கற்பை அழித்தானே!
கற்பை அழித்தானே - தன்னைத்தான்
காத்துக்கொள் ளும்திறமை
அற்பனுக் கில்லைஅன்றோ! - திறமை
ஆருக்கி ருக்கவில்லை?
வெற்பை இடித்துவிடும் - உனது
வீரத்தை யும்காணும்
நிற்க மனமிருந்தால் - நின்றுபார்
நெஞ்சைப் பிளக்கும்என்கை!
குற்றம் புரிந்தவர்யார்? - உனது
கோலை இகழ்ந்தவர்யார்?
கற்பை இகழ்ந்தவர்யார்? - உனது
கருத்தை மேற்கொண்டவன்!
சொற்கள் பிழைபுரிந்தாய் - 'அடியே'
என்றெனைச் சொல்லுகின்றாய்.
நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல்
நாவுக்குத் தீமை' என்றாள்.
'சென்றஉன் கற்பினுக்கே - எத்தனை
சிப்பாய்க ளைமடித்தாய்?'
என்று வினவலுற்றான் - அதற்கே
ஏந்திழை கூறுகின்றாள்:
'என்னருங் கற்பினுக்கே - உன்னரும்
இன்னலின் ஆட்சியையும்
உன்னரும் ஆவியையும் - தரினும்
ஒப்பில்லை' என்றுரைத்தாள்.
'இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை
ஆள்வதை ஏனிகழ்ந்தாய்?
இந்து மதத்தவன்நான் - மதத்தின்
எதிரி நானல்லவே!
சொந்த அறிவிழந்தாய் - பிறரின்
சூதையும் நீஅறியாய்.
இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின்
இன்னல் தவிர்ப்பவன்நான்.'
சொல்லினன் இம்மொழிகள் - சுப்பம்மா
சொல்லுகின் றாள்சிரித்தே:
'தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு
திப்புவின் பேரினையும்
சொல்லிஇத் தென்னாட்டைப் - பலபல
தொல்லையில் மாட்டிவிட்டார்;
மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின்
மேன்மைதனை அழித்தார்.
அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல்
ஆரும் தமிழ்நாட்டில்
இன்றும் இருக்கவில்லை - பிறகும்
இருக்கப் போவதில்லை.
அன்று தொடங்கிஇந்தத் - தமிழர்
அன்புறு நாடுபெற்ற
இன்னலெல் லாம்வடக்கர் - இழைத்த
இன்னல்கள்' என்றுரைத்தாள்.
'ஆளும் நவாபினையோ - தமிழர்
ஆரும் புகழுகின்றார்;
தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின்
தேசிங்கின் பேருரைத்தால்!
நாளும் வரும்;வடக்கர் - தொலையும்
நாளும் வரும்;அதைஎம்
கேளும் கிளைஞர்களும் - விரைவில்
கிட்டிட வேண்டும்'என்றாள்.
தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான்
உன்னை அனுப்பிவைத்தான்?
மண்ணிடை மாண்டானே - தெரியா
மனிதன் உன்உறவா?
எண்ணும்என் ஆட்சியிலே - செய்ததேன்
இந்தக் கலகமடீ?
திண்மை உனக்குளதோ?' - என்றந்தத்
தேசிங்கு சொன்னவுடன்,
'பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர்
பொய்த்தொழில் செய்வதில்லை.
மெய்யினைச் பேசுதற்கும் - தமிழர்
மெய்பதைத் திட்டதில்லை.
கையினில் வாளாலே - உனது
காவல் தலைவன்தலை
கொய்தவர் யார்எனிலோ - எனையே
கொண்டவர் என்றறிவாய்!
யாரும் அனுப்பவில்லை - எமையே
இட்டுவந் தான்ஒருவன்
சேரியில் ஓர்குடிசை - தந்துமே
தீய இருமாதர்
கோரிய வேலைசெய்வார் - எனவே
கூட இருக்கவிட்டான்.
சீரிய என்துணைக்கே - அவன்ஓர்
சிப்பாய் உடைகொடுத்தான்.
கோட்டைக் கழைத்தேகித் - திரும்பக்
கூட்டிவ ராதிருந்தான்.
வீட்டில்என் சோற்றினிலே - மயக்கம்
மிஞ்சும் மருந்தையிட்டான்.
ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும்
அற்ற நிலையினிலே
காட்டு மனிதன்அவன் - எனது
கற்பை அழித்தானே!
கற்பை அழித்தானே - தன்னைத்தான்
காத்துக்கொள் ளும்திறமை
அற்பனுக் கில்லைஅன்றோ! - திறமை
ஆருக்கி ருக்கவில்லை?
வெற்பை இடித்துவிடும் - உனது
வீரத்தை யும்காணும்
நிற்க மனமிருந்தால் - நின்றுபார்
நெஞ்சைப் பிளக்கும்என்கை!
குற்றம் புரிந்தவர்யார்? - உனது
கோலை இகழ்ந்தவர்யார்?
கற்பை இகழ்ந்தவர்யார்? - உனது
கருத்தை மேற்கொண்டவன்!
சொற்கள் பிழைபுரிந்தாய் - 'அடியே'
என்றெனைச் சொல்லுகின்றாய்.
நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல்
நாவுக்குத் தீமை' என்றாள்.
'சென்றஉன் கற்பினுக்கே - எத்தனை
சிப்பாய்க ளைமடித்தாய்?'
என்று வினவலுற்றான் - அதற்கே
ஏந்திழை கூறுகின்றாள்:
'என்னருங் கற்பினுக்கே - உன்னரும்
இன்னலின் ஆட்சியையும்
உன்னரும் ஆவியையும் - தரினும்
ஒப்பில்லை' என்றுரைத்தாள்.
'இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை
ஆள்வதை ஏனிகழ்ந்தாய்?
இந்து மதத்தவன்நான் - மதத்தின்
எதிரி நானல்லவே!
சொந்த அறிவிழந்தாய் - பிறரின்
சூதையும் நீஅறியாய்.
இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின்
இன்னல் தவிர்ப்பவன்நான்.'
சொல்லினன் இம்மொழிகள் - சுப்பம்மா
சொல்லுகின் றாள்சிரித்தே:
'தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு
திப்புவின் பேரினையும்
சொல்லிஇத் தென்னாட்டைப் - பலபல
தொல்லையில் மாட்டிவிட்டார்;
மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின்
மேன்மைதனை அழித்தார்.
அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல்
ஆரும் தமிழ்நாட்டில்
இன்றும் இருக்கவில்லை - பிறகும்
இருக்கப் போவதில்லை.
அன்று தொடங்கிஇந்தத் - தமிழர்
அன்புறு நாடுபெற்ற
இன்னலெல் லாம்வடக்கர் - இழைத்த
இன்னல்கள்' என்றுரைத்தாள்.
'ஆளும் நவாபினையோ - தமிழர்
ஆரும் புகழுகின்றார்;
தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின்
தேசிங்கின் பேருரைத்தால்!
நாளும் வரும்;வடக்கர் - தொலையும்
நாளும் வரும்;அதைஎம்
கேளும் கிளைஞர்களும் - விரைவில்
கிட்டிட வேண்டும்'என்றாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
40. தேசிங்கு சினம்
எண்சீர் விருத்தம்
'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த
நலமற்ற தமிழர்மட்டும் வாழ மாட்டார்.
தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை;
சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு!
நாள்வரட்டும் எந்தநாள்? தமிழர் வெல்லும்
நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள்
வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி
மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?' என்றான்.
'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்;
தமிழர்க்கு மறமில்லை; நன்று சொன்னாய்.
இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால்
சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட
உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்!
உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்;
எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.
யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்!
இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்!
நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி
நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்!
தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள்
துளிகூட ஒழுக்கமில்லாப் பாண்டு மக்கள்!
நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால்
நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்!
வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத
வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார். அந்த
வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட
வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்:
நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த
நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய்.
கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும்
கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள்.
ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்!
அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்;
காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான்
கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை!
காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்;
கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி!
தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு
தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை!
அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்!
அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும்.
பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட
பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்!
முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன்
முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே.
சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்
செப்படா' என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.
கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக்
கண்ணாலே எச்சரிக்கை செய்து மன்னன்
'இட்டுவா கொலைஞரைப்போய்! இதையும் கேட்பாய்
எல்லார்க்கும் எதிரினிலே பொது நிலத்தில்
பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து
பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு
வெட்டுவிப்பாய் ஒருகையை; மறுநாட் காலை
வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றா நாளில்
முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர்
மூக்கறுக்க! காதுபின்பு; ஒருகை பின்பு;
கொதிநீரைத் தௌித்திடுக இடைநே ரத்தில்;
கொளுத்துங்கள் குதிகாலை! விட்டு விட்டு
வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை;
மந்திரியே உன்பொறுப்பு நிறைவே றச்செய்!
இதுஎன்றன் முடிவான தீர்ப்பே!' என்றான்.
எதிர்நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்:
'மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன்
முடிவேக மூளுதடா அக்கொ டுந்தீ!
நீளுதடா என்நெஞ்சில் வாள்!வாள்! உன்றன்
நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்!
நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து
நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே!
ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை!
அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை!'
என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்!
எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை
ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில்
ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார்.
குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே!
குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி
நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்!
நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்!
பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்!
பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்!
'ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன்?' என்றான்.
இரக்கத்தை 'வா'என்றான். அன்பை நோக்கி
'ஆச்சியே எனக்கருள்வாய்' என்று கேட்டான்.
'அறமேவா' எனஅழைத்தான்! அங்கே வேறு
பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்!
பிறகென்ன? தேசிங்கு தேசிங்கேதான்.
எண்சீர் விருத்தம்
'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த
நலமற்ற தமிழர்மட்டும் வாழ மாட்டார்.
தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை;
சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு!
நாள்வரட்டும் எந்தநாள்? தமிழர் வெல்லும்
நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள்
வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி
மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?' என்றான்.
'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்;
தமிழர்க்கு மறமில்லை; நன்று சொன்னாய்.
இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால்
சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட
உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்!
உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்;
எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.
யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்!
இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்!
நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி
நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்!
தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள்
துளிகூட ஒழுக்கமில்லாப் பாண்டு மக்கள்!
நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால்
நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்!
வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத
வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார். அந்த
வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட
வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்:
நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த
நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய்.
கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும்
கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள்.
ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்!
அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்;
காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான்
கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை!
காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்;
கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி!
தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு
தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை!
அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்!
அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும்.
பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட
பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்!
முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன்
முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே.
சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்
செப்படா' என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.
கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக்
கண்ணாலே எச்சரிக்கை செய்து மன்னன்
'இட்டுவா கொலைஞரைப்போய்! இதையும் கேட்பாய்
எல்லார்க்கும் எதிரினிலே பொது நிலத்தில்
பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து
பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு
வெட்டுவிப்பாய் ஒருகையை; மறுநாட் காலை
வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றா நாளில்
முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர்
மூக்கறுக்க! காதுபின்பு; ஒருகை பின்பு;
கொதிநீரைத் தௌித்திடுக இடைநே ரத்தில்;
கொளுத்துங்கள் குதிகாலை! விட்டு விட்டு
வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை;
மந்திரியே உன்பொறுப்பு நிறைவே றச்செய்!
இதுஎன்றன் முடிவான தீர்ப்பே!' என்றான்.
எதிர்நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்:
'மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன்
முடிவேக மூளுதடா அக்கொ டுந்தீ!
நீளுதடா என்நெஞ்சில் வாள்!வாள்! உன்றன்
நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்!
நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து
நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே!
ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை!
அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை!'
என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்!
எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை
ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில்
ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார்.
குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே!
குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி
நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்!
நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்!
பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்!
பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்!
'ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன்?' என்றான்.
இரக்கத்தை 'வா'என்றான். அன்பை நோக்கி
'ஆச்சியே எனக்கருள்வாய்' என்று கேட்டான்.
'அறமேவா' எனஅழைத்தான்! அங்கே வேறு
பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்!
பிறகென்ன? தேசிங்கு தேசிங்கேதான்.
தமிழச்சியின் கத்தி - முற்றும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|