புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
62 Posts - 42%
heezulia
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
9 Posts - 6%
prajai
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 1:58 am

First topic message reminder :

1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்


தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.

புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:06 am

21. சேரிக்குள் சென்றாள்

எண்சீர் விருத்தம்

எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள்
இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச் சென்றே
இட்டகனல் வெப்பத்தால் தோழி மாரே
என்நெஞ்சு வெந்ததுண்டு தோழி மாரே
மட்டற்ற நாவறட்சி தோழி மாரே
வாட்டுவதால் நீர்கொடுப்பீர் தோழி மாரே
எட்டுணையும் மறுப்பீரோ தோழி மாரே
என்றுநடு வீதியிலே கூவி நின்றாள்.

சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து
சேதிதெரிந் திடநினைத்த சேரி மக்கள்
ஓரொருவ ராய்வந்தார் வௌியில்; 'அம்மா
உற்றதென்ன உன்றனுக்கே? உரைக்க வேண்டும்.
நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்;
நிலவில்லை; இந்தஇருள் தன்னில் வந்தே
கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக்
கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்!' என்றார்.

'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச்
சிறுதடுக்கும் இட்டுநீர் குடிக்கத் தந்த
பெரியீரே! என்அருமைத் தோழி மாரே!
பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம்
தெருவினிலே கண்டீரே இரங்கி னீரோ?
செயும்உதவி செய்தீரோ? மக்கள் கூட்டம்
ஒருமுனையிற் பெற்றதீ முழுதும் தீர்க்கும்
என்னுமோர் உண்மையினை மறக்க லாமோ?

குளக்கரையின் சிறிதசைவு குளத்த சைவே!
கொல்புலியால் ஒருவன்இடர் பலர்க்கும் அன்றோ?
இளக்காரம் தாராமல் தீமை ஒன்றை
இயற்றியோ ரைஊரார் எதிர்க்க வேண்டும்.
களாப்புதரும் தன்னகத்தே இடங் கொடுத்தால்
கவ்விவிடும் வேரினையே காட்டுப் பன்றி!
விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை;
வௌியானைக் கொட்டும்தே னீக்கள் வாழும்!

சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே
துணைவருக்குச் சிப்பாயின் உத்தி யோகம்
உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே
ஒளித்துவைத்தான்; எனைவிட்டுப் பிரித்து வைத்தான்.
இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை
எடுத்தாள எண்ணமிட்டான். சூழ்ச்சி யெல்லாம்
புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப்
பொசுக்கினான் நான்கலங்கிப் போவே னென்று.

தீஎரியும் நேரத்தில் தீமை வந்து
சீறுகின்ற நேரத்தில் எனைஇ ழுத்துப்
போய்அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை!
புதைத்திருந்தேன் என்இடையில் குத்துக் கத்தி
தோயுமடா உன்மார்பில் என்று காட்டித்
'தொலையில்போ' என்றேன்நான்! சென்றான் அன்னோன்.
நாய்குலைக்க நத்தம்பா ழாமோ சொல்வீர்
நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச் சொன்னேன்.

உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை
உட்புறத்தை நான் அடைய வேண்டும். அங்கே
துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின் றாரா?
துயரின்றி இருக்கின் றாரா துணைவர்?
முயல்வதே என்கடமை; உளவு தன்னை
மொழிவதுதான் நீங்கள்செய்யும் உதவி' என்றாள்.
'துயரோடு வந்திட்ட எம்பி ராட்டி
தூங்கிடுக விடியட்டும்' என்றார் அன்னோர்.

'கண்மூட வழியிலையே! விடியு மட்டும்
காத்திருக்க உயிரேது? தோழி மாரே
விண்மூடும் இருட்டென்றும் பகல்தா னென்றும்
வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே?
மண்மூடி வைத்துள்ள புதுமை யைப்போல்
மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி! இந்தப்
பெண்மூடி வைத்திடவோ என்உ ணர்வை?
பெயர்கின்றேன் வழியுரைப்பீர் பெரியீர்' என்றாள்.

'கையோடு கூட்டிப்போய்க் காட்டு கின்றோம்
காலையிலே ஆகட்டும்; இரவில் போனால்
செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன் றாது;
சிப்பாய்கள் நம்மீதில் ஐயம் கொள்வார்.
மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள
வீட்டையோ கோட்டையையோ அறிவ தெங்கே?
ஐயாவைக் காணுவதும் முடியா' தென்றார்
அரிதான மாண்புடையாள் 'சரிதான்' என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:07 am

22. மன்னனைக்கண்டாள்

தென்பாங்கு -- கண்ணிகள்

தேசிங்கு மன்னன் - சில
சிப்பாய்க ளோடு
பேசிச் சிரித்தே - தன்
பெருவீடு விட்டு
மாசற்ற தான - புனல்
மடுவிற் குளிக்க
வீசுங் கையோடு - மிக
விரைவாய் நடந்தான்!

எதிர்ஓடி வந்தாள் - நல்
எழிலான மங்கை.
'சுதரிசன் சிங்கன் - என்
துணையைப் பிரித்தான்;
மதில்வைத்த கோட்டை - தனில்
வைத்தே மறைத்தான்;
எதைநான் உரைப்பேன்? - அவன்
எனையாள வந்தான்.

குடிபோன வீட்டை - அக்
கொடியோனும் நேற்று
நடுவான இரவில் - அவன்
நாலைந்து பேரால்
முடிவாய்ந்த மன்னா! - அனல்
மூட்டிப் பொசுக்கிக்
கடிதாக என்னை - அவன்
கைப்பற்ற வந்தான்.

தப்பிப் பிழைத்தேன் - இதைத்
தங்கட் குரைக்க
இப்போது வந்தேன் - இனி
என்க ணவரைநான்
தப்பாது காண - நீர்
தயைசெய்ய வேண்டும்
ஒப்பாது போனால் - என்
உயிர்போ கும்'என்றாள்.

'சுதரிசன் சிங்கன் - நம்
சுபேதாரும் ஆவான்;
இதை அவன்பாலே - சொல்
ஏற்பாடு செய்வான்.
இதையெ லாம்சொல்ல - நீ
ஏனிங்கு வந்தாய்?
சதையெலாம் பொய்யே - இத்
தமிழருக்' கென்றான்.

தேசிங்கு போனான் - சில
சிப்பாய்கள் நின்று
'பேசினால் சாவாய் - நீ
பேசாது போடி.
வீசினாய் அரசர் - வரும்
வேலையில் வந்தே
பேசாது போடி' - என்று
பேசியே போனார்.

என்ற சொற்கேட்ட - அவ்
வேந்தி ழைதீயில்
நின்ற வள்போல - ஒரு
நெஞ்சம் கொதித்து
'நன்று காண்நன்று! - மிக
நன்று நின்ஆட்சி!
என்றே இகழ்ந்து - தணல்
இருகண் கள்சிந்த

படைவீடு தன்னை - அவள்
பலவீதி தேடி
கடைசியிற் கண்டு - நீள்
கதவினைத் தட்டி
'அடையாத துன்பம் - இங்
கடைகின்ற என்னை
விடநேர்ந்த தென்ன? - நீர்
விள்ளூவீர்' என்றாள்.

'கொண்டோன் இருக்க - அவன்
கொடுவஞ் சகத்தால்
பெண்டாள எண்ணி - மிகு
பிழைசெய்த தீயன்
உண்டோ என்அத்தான் - அவன்
உம்மோடு கூட?
எண்ணாத தென்ன - எனை?
இயம்புவீர்' என்றாள்.

'உள்ளி ருக்கின்றீர் - என்
உரைகேட் பதுண்டோ?
விள்ளு வீர்'என்றாள் - அங்கு
விடை ஏதுமில்லை.
பிள்ளை போல்விம்மிப் - பெரும்
பேதையாய் மாறி
தெள்ளு நீர்சிந்தும் - கண்
தெருவெ லாம்சுற்ற

கோட்டையை நீங்கி - அக்
கோதையாள் சேரி
வீட்டுக்கு வந்து - தன்
வெறுவாழ் வைநொந்து
மீட்டாத வீணை - தரை
மேலிட் டதைப்போல்
பாட்டொத்த சொல்லாள் - கீழ்ப்
படுத்துக் கிடந்தாள்!





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:07 am

23. இருமாதரும் அழைத்தார்கள்

தென்பாங்கு -- கண்ணிகள்

'எப்படி இங்குவந்தாய்? - சுப்பம்மா
எழுந்திரு விரைவாய்.
இப்படி நீஇளைத்தாய் - அவர்கள்
இன்னல் புரிந்தாரோ?
செப்படி அம்மாநீ - உனக்கோர்
தீமையும் வாராமல்
மெய்ப்படியேகாப்போம் - எமது
வீட்டுக்கு வா'என்றனர்.

முருகியுங் குப்பும் - இப்படி
மொழிந்து நிற்கையிலே
'வருவது சரியா - உங்களின்
வழக்கம் கண்டபின்னும்?
தெரியும் சென்றிடுவீர்' - என்றுமே
சேயிழை சொல்லிடவே
அருகில் நில்லாமல் - அவர்கள்
அகன்று விட்டார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:08 am

24. சேரித்தலைவன் செங்கான்

எண்சீர் விருத்தம்

சேரிவாழ் செங்கானை இரண்டு பேரும்
தெருவினிலே தனியிடத்தில் கூட்டி வந்து
சேரிக்கு நீதலைவன் உன்வீட் டில்தான்
சேயிழையும் இருக்கின்றாள். அவள்இப் போதில்
ஆரையுமே வெறுக்கின்றாள். நல்ல தெல்லாம்
அவளுக்குப் பொல்லாங்காய்த் தோன்றும் போலும்.
நேரில்அவள் கற்பழிக்கச் சிலபேர் செய்த
நெறியற்ற செய்கையினால் வெறிச்சி யானாள்.

இங்கேயே இருக்கட்டும் சமையல் செய்தே
இவ்விடத்தில் அனுப்புகின்றோம்; சாப்பி டட்டும்.
அங்கிருக்கும் அதிகாரி சொன்ன தாலே
அனுப்புவதாய்ச் சம்மதித்தோம். இதையெல் லாம்நீ
மங்கையிடம் சொல்லாதே! சொல்லி விட்டால்
மறுபடிநீ பெருந்துன்பம் அடைய நேரும்.
இங்கேவா இதையும்கேள்; அவள்இ ருக்கும்
இல்லத்தில் மற்றவர்கள் இருக்க வேண்டாம்.'

என்றந்த இருமாதர் சொல்லக் கேட்ட
இணக்கமுறும் செங்கானும் உரைக்க லுற்றான்:
'அன்றைக்கே யாமறிந்தோம் இவைகள் எல்லாம்
அதிகாரி கள்கலந்த செயல்க ளென்று!
நின்றதில்லை அவ்விடத்தில்! நெருங்கி வந்து
நீயார்என் றொருவார்த்தை கேட்ட தில்லை.
சென்றுவரு வீர்;நீங்கள் சொன்ன தைப்போல்
செய்கின்றேன்' என்றுரைத்தான்; சென்றார் தீயர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:08 am

25. செங்கான் உண்ண அழைத்தான்

தென்பாங்கு -- கண்ணிகள்

ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில்
அல்லி மலர்ப் பொய்கையாம்
மேனி முழுக் காட்டியே - வரு வாயம்மா
வெம்பசி தீர்ப்பா யம்மா.
கூனல் அவரைப் பிஞ்சு - பொறித் தோம்;சுரைக்
கூட்டு முடித்தோம் அம்மா;
ஏனம் நிறை வாகவே - கருணைக் கிழங்
கிட்டுக் குழம்பும் வைத்தோம்.

சென்று வருவா யம்மா - புன லாடியே
தின்று துயில்வா யம்மா.
என்றுசெங் கான் சொல்லவே - அந்த ஏந்திழை
ஏகினள் நீரா டினாள்.
அன்னவள் சோறுண் டனள் - அவள் நெஞ்செலாம்
அன்னவன் மேல் வைத்தனள்.
தின்பன தின்றா னதும் - அந்தச் சேயிழை
செங்கா னிடம் கூறுவாள்:

'உண்டு களைப்பா றினோம் - மற வேனையா
உரைப்பது கேட்பீ ரையா.
அண்டி இருந்தேன் உமை - ஒரு நாளுமே
அன்பு மறவே னையா;
சண்டிச் சுதரி சன்சிங்க் - இன்றி ராவிலும்
தையல் எனைத் தேடியே
கொண்டதன் எண்ணத் தையே - நிறை வேற்றிடக்
கூசிட மாட்டா னையா.

அம்மையும் அப்பாவும் நீர் - என எண்ணினேன்
ஆன துணை செய்குவீர்'
இம்மொழி கள்கூறி னாள் - அந்த ஏந்திழை!
இயம்பிடு கின்றான் செங்கான்:
'எம்மைத் துரும் பாகவே - நினைக் கின்றனர்
இங்கே அதிகா ரிகள்
வெம்மைக் கொடும் பாம்புபோல் - அவர் சீறுவார்
வெள்ளையை வெள்ளை என்றால்!

தீய வடநாட் டினர்! - இவர் ஏதுக்கோ
செஞ்சியில் வந்தா ரம்மா.
நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில்
நல்லவர் ஒப்பா ரம்மா.
தீயும் புயற் காற்றுமே - இவர் நெஞ்சிலே
செங்கோல் செலுத்து மம்மா.
ஓயாது மக்கட் கெல்லாம் - இடை யூறுதான்
உண்டாயிற் றம்மா' என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:08 am

26. சோற்றில் நஞ்சு

தென்பாங்கு -- கண்ணிகள்

'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே
உண்ணக் கொடுத்து விடடி! - அடி
கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால்
கொல்லாது; சோற்றில் இடடி!

தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக்
கெண்டை விழிகள் சுழலும்; - அடி
தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி
உண்டாக மண்ணில் உழலும்.

இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி
ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச்
செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து
வந்தே நுழைகுவேன் கண்ணே!'

அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத்
தந்த மயக்க மருந்தைக் - குப்பும்
அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு
வந்தாள் திரும்பி விரைந்தே.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:09 am

27. உண்ண எழுந்தாள்

பஃறொடை வெண்பா

குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட
செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச்
சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான்.
யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால்
நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக்
கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன்
கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும்.
'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது
கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே
உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார்.
சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்!
நங்கை எழுந்தாள் நலிந்து.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:09 am

28. நஞ்சுண்டு வீழ்ந்தாள்

தென்பாங்கு -- கண்ணிகள்

வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான்
வட்டித்துக் கூப்பிட்ட போது
சூழ நடந்தசுப் பம்மா - தன்
துணைவன் நினைப்போடு வந்தாள்!
ஆழும் அலைகட லுக்குள் - சூழல்
ஆயிரம் வாய்த்திடக் கூடும்;
ஏழைத் துணைவனை எண்ணி - நையும்
ஏந்திழை எப்படிக் காண்பாள்?

சோற்றினை உண்டனள் நங்கை - நீர்
தூக்கிப் பருகிய பின்னர்
காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள்
கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம்
மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி
மாறி மயங்கி விழுந்தாள்.
சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று
சொல்லி விழுந்தனள் மண்ணில்!

தன்னிலை தன்னைவிட் டோட - அதைத்
தான்தொடர்ந் தேபற்றி வந்து
மின்னல் அசைவது போலத் - தன்
மேனி தள்ளாட எழுந்தாள்.
சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று
திம்மனை எண்ணி விழுந்தாள்.
பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில்
புக்கு மறைந்திடு முன்னே

மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை
மென்கையி னால்தொட்டுப் பார்த்தாள்.
சொல்லினில் தீயைக் கலந்து - சில
சொற்களைச் சொல்லினள் மெல்ல:
'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற்
காற்றினில் நீர்வேண்டு கின்றான்.
வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன்
வாழ்வினை மீட்பவர் இல்லை!'

இவ்வுரை சொன்ன மறத்தி - மயக்
கேறினள்; மெய்ம்மறந் திட்டாள்!
செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி
தீர்ந்தன! வேர்வையின் நீரில்
அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை
ஆர்ந்தது போற்கருங் கூந்தல்
எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந்
திட்டது கட்டுக் குலைந்தே!

செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன
செய்வதென் றேஅறி யாமல்
அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின்
அக்கம்பக் கம்சொல்லப் போனான்.
சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான்
செல்'என்று கூறினன் சிங்கன்.
செங்கான் பயந்து நடந்தான் - அந்தச்
சின்னக் குடிசையின் பின்னே.

சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற
சேதிகள் யாவும் தெரிந்தான்.
அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன்
அண்டினன்! மற்றவர் இல்லை.
பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல்
பொல்லாங்கு காட்டிற்று! நல்ல
மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும்
வண்ணம் பொழிந்தது மாரி!

காட்டை முறித்திடும் காற்றும் - அவன்
கையை முறிப்பது போலே
தோட்டத்து வாசலி னோடு - சென்று
தூள்பட வைத்தது வீட்டை!
கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம்
கும்பிடத் தக்கஓர் தாயைத்
தீட்டுப் படாத நெருப்பை - விரல்
தீண்டக் கடித்திடும் பாம்பை

ஒட்டுற வில்லா வடக்கன் - உல
கொத்தது காணாத தீயன்
எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர்
'ஏஏ' எனச்சொல்லி ஏசக்
கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக்
கோதை கிடந்திட்ட போது
தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி
சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்!

பொழுது விடிந்திட வில்லை! - இன்னும்
பொற்கோழி கூவிட வில்லை!
எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர்
இருவர் இருந்திடும் வீட்டில்
நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை
நோக்கி யிருந்தஅச் செங்கான்
அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப்
பம்மாவைக் கண்டிட நின்றான்.

போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும்
பொழுதோ வெளுத்திட வில்லை.
போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல்
போயிற்று! நல்லுயிர் தானும்
போயிற்றுப் போவதன் முன்னே - சென்று
போக்கிடு வேன்அவ னாவி!
வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன்
வந்ததுண் டோ?'என்று கேட்டாள்.

'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில்
உருண்டதும் கண்டேன் துடித்தேன்.
கண்டதும் இப்பாழும் கண்தான் - இக்
கையில் வலியில்லை தாயே.
அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர்
அச்சிங்கன் உள்ளே நுழைந்தான்.
அண்டையில் நில்லாது போடா - என்ற
அவன்சொல்லை மீறா திருந்தேன்.

இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன்
இங்கிருந் தேபுறப் பட்டான்.
புரட்டனோ டேகினேன் நானும் - கால்
பொத்தென்ற சத்தமில் லாமல்!
திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு
சென்றனன் நானிங்கு வந்தேன்.
கருத்துக் கலங்கினேன் தாயே! - என்
கடமையை நான்செய்ய வில்லை.

சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர்
சீறிக் குதித்தனர் தாயே!
சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ
தீயெனச் சீறிநிற் கின்றார்.
ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி
ஒன்றுசொல் வீர்இந்த நேரம்
வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த
வடக்கரை' என்றனன் செங்கான்.

ஓடினள் சிங்கனை நோக்கி - உடன்
ஓடினர் சேரியின் மக்கள்!
ஓடினன் செங்கானும் அங்கே - உம்
உம்என்று தட்டினள் கதவை.
நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின்
நடுநின்ற அவன்மார்பு நடுவைச்
சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச்
சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்!

காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான்
கையோடி ருந்திட்ட தாலே
'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு
பழிமாத ரும்தீர்ந்து போனார்.
தேம்பாத அழுகையும், நீரின் - துளி
தெரியாத கண்களும் கொண்டாள்
வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை
விடியாத முன்னமே சேர்ந்தாள்.

கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங்
கொட்டாவி விட்டுக் கிடந்தார்.
பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப்
பாவையும் காவல் கடந்தாள்.
கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக்
கோலமல் லால்விழிப் பில்லை.
பூட்டும் படைவீடு கட்குள் - நெடும்
புன்னை மரத்திற்கு நேரில்

தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும்
சாத்திக் கிடந்ததைக் கண்டாள்.
'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை
இன்னுமோ தூக்கம்என் அத்தான்?
ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும்
உள்ளம் படைத்தனன் கேளீர்!
என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை
ஈடழித் தான்வெறும் பேடி!

செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத்
தீண்டிட்ட தீயனைக் கொன்றேன்.
அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன்
ஆவிதான் போய்ச்சேரு முன்னே!
எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை
என்னென்ன செய்தனன்? காணேன்!
அந்தோ எனக்கூவி மங்கை - அவள்
அங்குமிங் கும்பறக் கின்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:10 am

29. மன்னன் வந்தான்

எண்சீர் விருத்தம்

காட்டுதீப் போலேசு பேதார் சாவு
கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும்
கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே
குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப்
போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள்
புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான்.
கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே
கிட்டஇருந் தோரெல்லாம் 'தெரியா' தென்றார்.

'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால்
படுகொலைசெய் தோன்யாவன்?' என்று கேட்டான்
'படைவீரன் அல்லாது பிறரே என்றால்
பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக்
கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல்
காத்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்?
நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை
நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!

போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப்
புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை
மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்;
விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்;
கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால்
கேடில்லை செப்பிடுவீர் உண்மை தன்னை!
வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ!
மற்றென்ன மற்றென்ன?' எனத்து டித்தான்!

கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு
கூறத்தான் முடியுமோ? 'அந்தோ அந்தோ!
காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக்
கடல்போன்ற அன்புடையான் என்னி டத்தில்!
நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே
நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல
ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில்
உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?

மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார்
வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால்
என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?'
என்றுபல வாறெண்ணி இருக்கும் போது
'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி
வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்:
'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி
என்றனுக்கு தெரிந்தவற்றைக் கூறு கின்றேன்:

திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில்
தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்!
அம்மட்டே அவனோடு வீடு சென்றான்;
அங்கோர்நாள் விருந்துண்டான். அவன் மனைவி
செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில்
சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள்
திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத்
திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க்

திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு
செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித்
திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன
சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான்.
அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை!
அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை!
திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச்
சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!

குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன்
கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு
நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான்.
நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்!
அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான்.
'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத்
துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க்
துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:10 am

30. திம்மன் நான் என்றான்

எண்சீர் விருத்தம்

'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன்.
'தெரியவில்லை' என்றார்கள் சிப்பாய் மார்கள்.
'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன்.
'நான்தான்'என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன்.
'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய்' என்றான்.
திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி.
தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்.

பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப்
போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன்
மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த
மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன்?' என்றான்.
'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்;
செத்திருப்பான். நள்ளிரவில் செஞ்சி வந்தேன்
வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான்.

இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான்.
'உன்மனைவி எங்'கென்றான் தேசிங்க் மன்னன்!
'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்!
'அவளுக்கு வேறுதுணை உண்டோ?' என்றான்.
'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன்.
'பொய்ஒன்றும் கூறாதே' என்றான் மன்னன்.
பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன்.
'பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே

பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன்.
'பலஉறவோர் துணையிருப்பார்' என்றான் திம்மன்.
'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத்
தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்!
*நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர். இன்னோன்
கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
கூத்தியையும் பிடிப்பீர்'என் றுரைத்தான் மன்னன்.

*இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.

'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்!
தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம்
அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை
அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்!
தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்

நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை.
நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன்
தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக
வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத்
தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா?
சாற்றுவாய்" எனத்திம்மன் வாய்ப தைத்தான்.

அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன்
இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார்.
குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள்.
பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ்
தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்
சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக