ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது

Go down

மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது Empty மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது

Post by சிவா Sat Nov 06, 2010 11:51 pm

மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது Loh

பள்ளிக்கூட இடைவேளையின்போது உண்பதற்காக பொறித்த சோற்றையும் (fried rice ) பன்றி இறைச்சிக் கறியையும் (sausages )கொண்டு வந்த பத்து வயது பள்ளி மாணவன் ஒருவனுக்கு பள்ளி நிர்வாகி ஒருவர் பிரம்படி கொடுத்ததை மசீச கண்டித்துள்ளது.

“ஹலால் உணவு” கொள்கையை பள்ளிக்கூடங்களில் அமலாக்குவது பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளின் மூத்த உதவியாளர்களின் வேலை அல்ல என்றும் அந்த விஷயம் கவலை அளிக்கிறது என்றும் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் பிரச்சாரப் பிரிவுத் துணைத் தலைவருமான லோ செங் கோக் கூறினார்.

“அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் மூத்த உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தலைமையாசிரியை, மூத்த உதவியாளர் உட்பட அனைத்து பள்ளிக்கூட அதிகாரிகளும் அந்த மாணவனிடமும் அவனுடையப் பெற்றோர்களிடமும் அந்தச் சிறுவன் அடைந்துள்ள சிரமங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.”

“அத்துடன் அந்த விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம் என்றும் முஸ்லிம்களுக்கு அது உணர்ச்சியைத் தூண்டும் விஷயம் என்றும் அந்த மூத்த உதவியாளர் பெற்றோரை எச்சரித்திருப்பது மேலும் கவலை அளிக்கிறது”, என்றும் லோ குறிப்பிட்டார்.

“உணர்ச்சிகளைத் தூண்டக் கூடாது என்பதற்காக மௌனமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் போக்கு ஒருவரின் சமயப் பண்புகளை மற்ற சமயங்கள் மீது திணிப்பதற்கு ஒப்பாகும். அத்துடன் சிறுபான்மை இனங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மறைப்பதற்கும் அது ஒப்பாகும்”, என இன்று விடுத்த அறிக்கையில் அவர் கூறினார்.

தண்டனை விரைவானது அதிகமானது

கூச்சிங்கில் உள்ள செயிண்ட் தாமஸ் தேசியப் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் அந்த சம்பவம் பற்றி விசாரிக்குமாறு கல்வி அமைச்சையும் மாநில கல்வித் துறையையும் லோ கேட்டுக் கொண்டார்.

“அந்தச் சிறுவனின் தாயார் விளக்கம் கோரிய போது பிரம்படி கொடுத்ததையே அந்த மூத்த உதவியாளர் மறுத்திருப்பது இன்னும் வருத்தம் அளிக்கிறது.”

“ஒரு மாணவனை மூத்த உதவியாளர் தண்டிக்கும் போது அந்தத் தண்டனையை நியாயப்படுத்தும் குற்றம், பற்றி பள்ளியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.”

“திடீரென்று தன்னிலை மறந்து அந்தச் சிறுவன் மீது விரைவாகவும் அதிகமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அல்லது ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி பதிவேடுகள் ஏதும் பள்ளிக்கூடத்தில் இல்லையா என்றும் அவர் வினவினார்.

ஆசிரியர்கள் தங்களது சமயப் பண்புகளை மற்றவர்கள் மீது தன்மூப்பாகத் திணிக்கக் கூடாது. அத்துடன் பெற்றோர்களுக்கும் எந்த சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் லோ வலியுறுத்தினார்.

“அத்துடன் ஹலால் அல்லாத உணவு உணர்வுகளைத் தூண்டக் கூடியது என வரையறுப்பது மற்ற சமய உணர்வுகளையும் முழுமையாகக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.”

செயிண்ட் தாமஸ் தேசியப் பள்ளியில் 900 மாணவர்கள் பயிலுகின்றனர். அவர்களில் பாதிப்பேர் முஸ்லிம்கள்.

மலேசியா இன்று!


மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது Empty Re: மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது

Post by சிவா Sun Nov 07, 2010 2:19 pm

“அதனை வருணிப்பதற்கு ‘கவலை அளிக்கிறது’ என்பது பொருத்தமான சொல் அல்ல”

“சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட உதவியாளர் நீக்கப்பட வேண்டும். அவரது வார்த்தைகளும் நடவடிக்கைகளும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

மசீச: ஹலால் உணவு விவகாரம் மீது பிரம்படி “கவலை அளிக்கிறது”

அர்கோனிஸ்ட்: மசீச மத்தியக் குழு உறுப்பினர் லோசெங் கோக்கிற்கு மிக்க நன்றி. நீங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் பேசியுள்ளீர்கள். நான் அதனை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறேன். ஹோட்டல்கள் தனித்தனியான அறைகளையும் ஏன் உணவு விடுதிகளையும் கூட வைத்திருக்க வேண்டும் என நான் யோசனை கூறுகிறேன். அந்தப் பட்டியல் இன்னும் நீளும். இறுதியில் இந்த மண் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என இரண்டாக பிளவுபட்டு நிற்கும்.

அந்த வெறிபிடித்த ஆதிக்க சிந்தனை கொண்ட மக்கள் நம்மை ஒரு மூலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். பிரம்படி கொடுக்கப்பட்ட குழந்தையின் தாயான அஞ்சலா ஜாபிங் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிக்க வேண்டும். அப்போது வெற்றியோ தோல்வியோ “உண்மையான ஆசியா” என மலேசியா பிரச்சாரம் செய்வதின் உண்மை நிலையை உலகம் அறிந்து கொள்ள இயலும்.

விஜய்: லோ உங்கள் அறிக்கை மிகவும் வலிமையானது. பெரும்பாலும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மசீச தலைவர் சுவா சொய் லெக் வெளியில் வந்து தங்களது அறிக்கை தவறாகப் பயன்படுத்தப்பட்டு விட்டது எனக் கூறப் போகிறார். முஸ்லிம்கள் கோரும் வகையில் மற்ற சமயங்களை மதிக்குமாறு முஸ்லிம் வெறியர்களை கேட்டுக் கொள்வது போல நியாயமற்ற கோரிக்கைகளை சிறுபான்மையினர் விடுக்கக்கூடாது என நீங்கள் உண்மையில் கூறியதாக சுவா சொல்லுவார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்தச் சிறுவன் ஒரிரு முறை மட்டும் பிரம்பால் அடிக்கப்பட்டான். அவனுடைய கை வெட்டப்பட்டது போல் கூச்சல் போட வேண்டாம். புதன்கிழமை அதுவும் சரி என்று கூறப்படும்.

குழப்பமில்ல்லாதவன்: கவலை அளிக்கிறது என்ற சொல் அந்த நிகழ்வை வருணிப்பதற்கு பொருத்தமானது அல்ல என நான் கருதுகிறேன். சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட உதவியாளர் நீக்கப்பட வேண்டும். அவரது வார்த்தைகளும் நடவடிக்கைகளும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

அந்தச் சூழ்நிலை பற்றி மசீச வழக்கம்போல் உதட்டளவில் மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதற்கு முதுகெலும்பும் இல்லை. நேர்மையும் இல்லை. ஒருவருடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது அதற்கு தெளிவாகத் தெரியவில்லை.

லவர் பாய்:
லோ செங் கோக், இது அம்னோ முஸ்லிம் விவகாரம். இஸ்லாமிய விவகாரம் மீதும் முஸ்லிம் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எங்கள் பிஎன் பங்காளிகள் கருத்துக் கூறுவதை அம்னோவில் உள்ள நாங்கள் விரும்புவது இல்லை. திங்கட்கிழமை மசீச அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாங்கள் உங்களை உதைத்து வெளியேற்றுவோம்.

குறுகிய கண்கள் (மாத்தா செப்பெட்) உதவி தேவை இல்லை என நமது தித்தி வாங்சா தொகுதித் தலைவர் ஜொஹாரி அப்துல் கனி தெளிவாகக் கூறி விட்டார். பத்து சாப்பியையும் காலாஸையும் பாருங்கள். எங்களுக்கு அனைவருடைய ஆதரவும் கிடைத்துள்ளது அதனால் நாங்கள் வெற்றி பெற்றோம். நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டுமானால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தை புரிந்து கொள்ளுங்கள்.

கேகன்: ஒரே மலேசியா வேரூன்றி வருவதாக நஜிப் ரசாக் கூறுகிறார். அவர் என்ன மலாய்க்காரர் அல்லாதாரை ஏமாற்ற முயலுகிறாரா? இனவாதமும் முஸ்லிம் அல்லாதவர் மீது சமயச் சகிப்புத் தன்மை குறைவதும் பெர்க்காசாவும் தான் வேரூன்றி வருகின்றன. அவருடைய ஒரே மலேசியா சுலோகம் அல்ல. அது பயனற்றது. வெறுமையானது.

ஜோகூரையும் கெடாவையும் சேர்ந்த இரண்டு பள்ளிக்கூடத் தலைமையாசிரியர்களுக்கு எதுவும் நிகழாததைப் போன்று அந்தப் பள்ளிக்கூட மூத்த உதவியாளருக்கும் எதுவும் நேரப் போவதில்லை என நீங்கள் பந்தயம் கட்டலாம்.


மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசிய எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.
» 150 கிலோ நாணயம் கொடுத்து வைர மோதிரம் வாங்கிய சீனர்
» கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன”
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» பிரம்படி தண்டனை பெற்ற பெண்கள்- மலேசியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum